229

றகைகொண்ட வேனலுட் டாழ்குர லுரீஇ
முகைவளர் சாந்துரன் முத்தார் மருப்பின்
வகைசா லுலக்கை வயின்வயி னோச்சிப்
பகையினோய் செய்தான் பயமலை யேத்தி
யகவினம் பாடுவா நாம்;
8ஆய்நுதலணிகூந்த லம்ணைத் தடமென்றோட்
டேனாறு கதுப்பினாயானுமொன் றேத்துகு
வேய்நரல் விடரக நீயொன்றபாடித்தை;
11கொடிச்சியர்கூப்பி வரைதொழு கைபோ
லெடுத்த நறவின் குலையலங்காந்தட்
டொடுத்ததேன் சோரத் தயங்குந்தன்னுற்றே
ரிடுக்கண் டவிர்ப்பான் மலை;
15கல்லாக்கடுவன் கணமலி சுற்றத்து
மெல்விரன் மந்திகுறைகூறுஞ் செம்மற்றே
தொல்லெழி றோய்ந்தார்தொலையி னவரினு
மல்லற் படுவான் மலை;
19 புரிவிரிபுதைதுதை பூத்ததைந்த தாழ்சினைத்
தளிரன்ன வெழின்மேனிதகைவாட நோய்செய்தா
னருவரை யடுக்கநா மழித்தொன்று பாடுவாம்;
22விண்டோய்வரைப்பந் தெறிந்த வயரவிடத்
தண்டா ழருவியரமகளி ராடுபவே
பெண்டிர் நலம்வௌவித் தண்சாரற்றாதுண்ணும்
வண்டிற் றுறப்பான் மலை;
26ஒடுங்காவெழில்வேழம் வீழ்பிடிக் குற்ற
கடுஞ்சூல் வயாவிற்கமர்ந்து நெடுஞ்சினைத்
தீங்கட் கரும்பின்கழைவாங்கு முற்றாரி
னீங்கல மென்பான் மலை;
எனநாம்;
31தன்மலைபாட நயவந்து கேட்டருளி
மெய்ம்மலி புவகையன்புகுதந்தான் புணர்ந்தாரா
மென்முலை யாகங் கவின்பெறச்
செம்மலை யாகிய மலைகிழ வோனே.