(39.): | (1) காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவா டாமரைக் கண்புதைத் தஞ்சித் தளர்ந்ததனோ டொழுகலா னீணாக நறுந்தண்டார் தயங்கப்பாய்ந் தருளினாற் பூணாக முறத்தழீஇப் போதந்தா னகனகலம் வருமுலை புணர்ந்தன வென்பதனா லென்றோழி யருமழை தரல்வேண்டிற் றருகிற்கும் பெருமையளே; |
7 | அவனுந்தான், ஏனலிதணத் தகிற்புகை யுண்டியங்கும் வானூர் மதியம்வரைசேரி னவ்வரைத் தேனி னிறாலென வேணியிழைத்திருக்குங் கானக னாடன் மகன்; |
11 | சிறுகுடி யீரேசிறுகுடி யீரே வள்ளிகீழ் வீழா வரைமிசைத் தேன்றொடா கொல்லைகுரல்வாங்கி யீனா மலைவாழ்ந ரல்ல புரிந்தொழுக லான்; |
15 | காந்தள்கடிகமழுங் கண்வாங் கிருஞ்சிலம்பின் வாங்கமைமென்றோட் குறவர் மடமகளிர் தாம்பிழையார்கேள்வர்த் தொழுதெழலாற் றன்னையருந் தாம்பிழையார்தாந்தொடுத்த கோல்; எனவாங்கு, |
20 | அறத்தொடுநின்றேனைக் கண்டு திறப்பட வென்னையர்க்குய்த்துரைத்தாள் யாய்; |
22 | அவருந்,தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் கண்சேந் தொருபகலெல்லா முருத்தெழுந் தாறி யிருவர்கட் குற்றமுமில்லையா லென்று தெருமந்து சாய்த்தார் தலை; |