(38.) | இமையவில் வாங்கிய வீர்ஞ்சடை யந்தண னுமையமர்ந் துயர்மலை யிருந்தன னாக வையிரு தலையி னரக்கர் கோமான் றொடிப்பொலிதடக்கையிற் கீழ்புகுத் தம்மலை | 5 | யெடுக்கல்செல்லா துழப்பவன் போல வுறுபுலி யுருவேய்ப்பப்பூத்த வேங்கையைக் கறுவுகொண் டதன்முதற்குத்திய மதயானை நீடிரு விடரகஞ் சிலம்பக்கூய்த்தன் கோடுபுய்க் கல்லா துழக்கு நாடகேள்; | 10 | ஆரிடையென்னாய்நீ யரவஞ்சாய் வந்தக்கா னீரற்ற புலமேபோற்புல்லென்றாள் வைகறை கார்பெற்ற புலமேபோற்கவின்பெறு மக்கவின் றீராமற் காப்பதோர்திறனுண்டே லுரைத்தைக்காண்; | 14 | இருளிடையென்னாய்நீ யிரவஞ்சாய் வந்தக்காற் பொருளில்லானிளமைபோற் புல்லென்றாள் வைகறை யருள்வல்லானாக்கம்போ லணிபெறு மவ்வணி தெருளாமற்காப்பதோர் திறனுண்டே லுரைத்தைக்காண்; | 18 | மறந்திருந்தாரென்னாய்நீ மலையிடை வந்தக்கா லறஞ்சாரான்மூப்பேபோ லழிதக்காள் வைகறை திறஞ்சேர்ந்தானாக்கம்போற் றிருத்தகு மத்திருப் புறங்கூற்றுத்தீர்ப்பதோர்பொருளுண்டே லுரைத்தைக்காண்; எனவாங்கு; | 23 | நின்னுறுவிழுமங் கூறக் கேட்டு வருமே தோழி நன்மலை நாடன் வேங்கைவிரிவிட நோக்கி வீங்கிறைப் பணைத்தோள்வரைந்தனன் கொளற்கே. |
இஃதுஇரவுக்குறிவந்து நீங்குந் தலைவனை எதிர்ப்பட்டுத் தோழி தலைவியது நிலைமைகூறி அவனை வரைவுகடாவ, அவன் வரைய வருகின்றமை தோழி தலைவிக்கு வரைவுமலிந்துகூறியது.
தினந்தீர் களிற்றிற் பெயர்ந்தோ னின்றுந், தோலாவா றில்லை தோழிநாஞ் சென்மோ, சாயிறைப்பிணைத் தோட் கிழமை தனக்கே, மாசின் றாதலு மாறியா னேசற், றென்குறைப் புறனிலைமுயலு, மண்கணாளனை நகுகம் யாமே''. அகம். 32.
|