எ - து: நோய்மிக்க நெஞ்சோடேவருந்தாதேகொள்; தோழி! நாம் அமர்ந்தகாதலர், தனிமையாயின் நாமில்லாத தனிமையாயிருந்தது; காலமாயிற் பிரிந்தார்க்கு நடுக்கஞ்செய்யும் இளவேனிற்காலமாயிருந்தது; ஊரிலுள்ளார் கொண்டாடும்விழவாயிற் காமவேளுக்குச்செய்யும் விழாவாயிருந்தது; ஆதலாற் பெரிதுங் கலங்குவளென்று கருதிப் பகைவர் மயக்கமுறுதற்குக் காரணமான (1) கடிய திண்ணிய தேரை `விரைந்து செலுத்தித் தாம் துணையாந் தன்மையை நமக்குத் தந்தார்காண்! 1 எ - று. இது சுரிதகம். இதனால், தலைவிக்குப் புணர்வாகிய உவகை தோன்றிற்று. இஃது 2 எட்டடித்தரவும் நான்கடித்தாழிசையும் தனிச்சொல்லும் ஐயடிச் சுரிதகமும்பெற்ற ஒத்தாழிசைக்கலிப்பா. (26) 28. | பாடல்சால் சிறப்பிற் சினையவுஞ் சுனையவு நாடினர் கொயல்வேண்டா நயந்துதாங் கொடுப்பபோற் றோடவிழ் கமழ்கண்ணி தையுபு புனைவார்கட் டோடுறத் தாழ்ந்து துறை துறை கவின்பெறச் செய்யவ ளணியகலத் தாரமொ டணிகொள்பு தொய்யகந் தாழ்ந்த கதுப்புப்போற் றுவர்மணல் வையைவா ரவிரற லிடைபோழும் பொழுதினான்; | 8 | விரிந்தானா மலராயின் விளித்தாலுங் குயிலாயிற் பிரிந்துள்ளா ரவராயிற் பேதுறுஉம் பொழுதாயி னரும்பட ரவலநோ யாற்றுவ ளென்னாது வருந்தநோய் மிகு மாயின் வணங்கிறை யளியென்னோ; | 12 | புதலவை மலராயிற் பொங்கரின வண்டாயி னயலதை யலராயி னகன்றுள்ளா ரவராயின் மதலையி னெஞ்சொடு மதனில ளென்னாது நுதலூரும் பசப்பாயி னுணங்கிறை யளியென்னோ; | 16 | தோயின வறலாயிற் சுரும்பார்க்குஞ் சினையாயின் மாவின தளிராயின் மறந்துள்ளா ரவராயிற் பூவெழி லிழந்தகண் புலம்புகொண் டமையாது பாயனோய் மிகுமாயிற் பைந்தொடி யளியென்னொ; எனவாங்கு; | 21 | ஆயிழா யாங்கன முரையாதி சேயார்க்கு நாந்தூது மொழிந்தனம் விடல்வேண்டா நம்மினுந் தாம்பிரிந் துறைத லாற்றலர் பரிந்தெவன் செய்தி வருகுவர் விரைந்தே. |
1. கடுமை - விரைவு (பிரதிபேதம்) 1 என உவகையாற்கூறினாள், 2 ஏழடித்தரவும்.
|