93

எ - து: பொருள்தேடும் 1முறைமையினின்று நீங்கிப் பொருள் தேடுவார்க்கு அப்பொருள் தான் 2அவரைவிட்டு நீங்கி இம்மையிலும் மறுமையிலும் 3பகையாந்தன்மையை அறியாயோ ; எ - று.

4இவளிறந்து படப்போய்ப் பொருடேடலிற் செம்மையினிகந்தென்றாள்.

இவை முன்றும், தாழிசை.

16அதனால்
எம்மையும் பொருளாக மதித்தீத்தை நம்முணாங்
(1) கவவுக்கை விடப்பெறும் பொருட்டிறத்
தவவுக்கை விடுத லதுமனும் பொருளே.

எ - து: பொருள் இத்தன்மைத்தாகையினாலே அப்பொருளே யன்றி எம்மையும் பொருளாக மதிப்பாய்; நம்முண் முயங்கின முயக்கத்தைக் கைவிட்டுப் போகையினாலே பெறுகின்ற பொருட் கூற்றிடத்து அவாவைக் கைவிடுவாயாக, அதுவே நிலைபெறும்பொருள் ; எ - று.

மதித்தீத்தை, மதியென்னும் முன்னிலையேவற் றிரிசொல்.

அவவெனக் (2) குறியதன் இறுதிச்சினை கெட்டு நின்றது. கைவிடுதல் "இற்றெனக்கிளத்தல்" போல (3) நின்றது.

அதனால், தனிச்சொல்; எஞ்சியது, சுரிதகம்.

இதனால், 5தலைவற்கிழிவு பிறந்தது, தோழிக்குச் சூழ்ச்சி பிறந்தது.

இஃது ஒன்பதடித்தரவும் சிறுமைக்கு எல்லைகூறிய ஈரடித்தாழிசையும் பொருள்பெற்ற தனிச்சொல்லும் மூன்றடிச் சுரிதகமும் பெற்ற ஒத்தாழிசைக்கலி. (13)

(15). (4) அரிமா னிடித்தன்ன வஞ்சிலை வல்விற்
புரிநாண் புடையிற் புறங்காண்ட லல்லா
லிணைப்படைத் தானை யரசோ டுறினுங்
கணைத்தொடை நாணுங் கடுந்துடி யார்ப்பி
5னெருத்து வலிய வெறுழ்நோக் கிரலை
மருப்பிற் றிரிந்து மறிந்துவீழ் தாடி
யுருத்த கடுஞ்சினத் தோடா மறவர்
பொருள்கொண்டு புண்செயி னல்லதை யன்போ
டருள்புற மாறிய வாரிடை யத்தம் ;

1. "கழுமிய காதலொடு கவவுக் கைவிடாது" பெருங், (3): 23 : 10

2. தொல், உயிர்மயங்கு, சூ, 32, உரைபார்க்க,

3. தொல், கிளவி, சூ, 19,

4. கலிப்பாவின் கண் ஆசிரியச் சுரிதகத்து ஈற்றயலடி நாற்சீராகியும் வருமென்பதற்கு இச்செய்யுள் (தொல், செய், சூ, 16, 'முச்சீர்' இளம்), மேற்.

(பிரதிபேதம்) 1 முறைமையினீங்கி, 2 தம்மைவிட்டுநீங்கி, 3 பகையாவதை,4 இவளிறந்து படப்பொருடேடலிற்,
5 தலைவற்கிழவும் தோழிக்குச் சூழ்ச்சியும் பிறந்தன.