89

தலைவன் இளமை பொருளாகத் தலைவற்கு 1நகைபிறந்தது. தலைவிக்கு அசைவு பிறந்தது.

இஃது ஒன்பதடித் தரவும் நான்கடித் தாழிசையும் தனிச்சொல்லும் 2ஐயடிச்சுரிதகமும் பெற்ற ஒத்தாழிசைக்கலி. (12))

(14). அணைமரு ளின்றுயி லம்பணைத் தடமென்றோட்
டுணைமல ரெழினீலத் தேந்தெழின் மலருண்கண்
மணமௌவன் முகையன்ன மாவீழ்வா னிரைவெண்பன்
மணநாறு நறுநுதன் மாரிவீழிருங்கூந்த
5லலர்முலையாகத் தகன்ற வல்குற்
சிலநிரை வால்வளைச்செய்யா யோவெனப்
பலபல கட்டுரை பண்டையிற் பாராட்டி
யினிய சொல்லி யின்னாங்குப் பெயர்ப்ப
தினியறிந் தேனது துனியா குதலே;
10பொருளல்லாற் பொருளுமுண் டோவென யாழநின்
மருளிகொண் மடநோக்க மயக்கப்பட் டயர்த்தாயோ;
12காதலாரெவன்செய்ப பொருளில்லா தார்க்கென
வேதிலார் கூறுஞ்சொற் பொருளாக மதித்தாயோ;
14செம்மையினிகந்தொரீஇப் பொருள்செய்வார்க் கப்பொரு
ளிம்மையு மறுமையும் பகையாவ தறியாயோ;
16அதனால்;
எம்மையும் பொருளாக மதித்தீத்தை நம்முணாங்
கவவுக்கை விடப்பெறும் பொருட்டிறத்
தவவுக்கை விடுத லதுமனும் பொருளே.

இது தலைமகனாற் பிரிவுணர்த்தப்பட்டதோழி, தலைமகற்கு முன்னையிற் சிறப்ப 3எம் வயிற் பாராட்டியதெல்லாம் எம்வயிற்பிறந்த வெறுப்பென்பது இப்பொழுதறிந்தேன், இவ்வகைப்பட்ட போக்கு நினக்கு எவ்வகையான் வந்ததென, அவன் செலவழுங்கச் சொல்லியது.

இதன்பொருள்


1. தொல். செய். சூ. 137.

(பிரதிபேதம்) 1 நசை, 2 ஐவடிச், 3 எம்மையிற் பாராட்டிய.