5

(1) ஆறு அங்கமாவன:- உலகயிற்சொல்லை ஒழித்து வைதிகச் சொல்லை ஆராயும் நிருத்தமும,் அவ்விரண்டையும் உடனாராய்ந்த 1ஐந்திரத்தொடக்கத்து வியாகரணமும், போதாயனீயம் பாரத்துவாசம் 2பரமார்த்தம் பரமாத்திரையம் முதலிய கற்பங்களும், நாராயணீயம் வராகம் முதலிய கணிதமும், எழுத்தாராய்ச்சியாகிய பிரமமும், செய்யுளிலக்கணமாகிய சந்தமுமாம்.

(2) மறையாவன 3 தைத்திரியமும் (3) பவுழியமுந் தலவகாரமுஞ் சாம


(இ) ‘‘இறுதியிற்சலியாதிருத்தலானு, மறுமைதந்துதவு மிருமையானும், பெண்ணிடங்கலந்த புண்ணியனாகியும்’’ என்புழி அறுமையென்று பதம்பிரித்து அதற்கு ஆறென்று பொருள் கூறி இஃது அங்கத்தையுணர்த்தலின் வரையறைக் குணப் பண்புடைப் பொருண்மே னின்றவாகு பெயரென்று இலக்கணமெழுதி அதற்கும் கல். 13 : 18-9; (ஈ) ‘‘நாற்படை’’ என்பதற்கு நான்கு குணத்தினையுடைய படையெனினுமாமென்று பின்னுரையெழுதி அதற்கும் கல். 33 : 6. இப்பகுதியையே மேற்கோள் காட்டினர்.

1. (அ) அங்கம்-அவயவம்; வேதாங்கத்தைக் குறிப்பாக அங்கமென்றார். (ஆ) நிருத்த முதலிய ஆறும் வேதபுருடற்கு இன்ன இன்ன அங்கமென்பதனை. ‘கற்பங்கை’ சந்தங்கா லெண்கண், டெற்றெனிருத்தஞ்செவி சிக்கைமூக், குற்ற வியாகரண முகம்பெற்றுச், சார்பிற்றோன்றா வாரணவேதக்கு’ என மணி. 27. ஆம் காதையிற்காணப்படும் 100-103 ஆம் அடிகளால் உணர்க. (இ) தொல். புறத்திணை 20ஆம் சூத்திரைவுரையில் இவ்வுரைகாரரே இவ்வாறங்கங்களையும் இடையாய ஒத்துவகையுள் ஒன்றென்று கூறி விளக்குமிடத்து, கற்பப் பெயர்களுள் பரமார்த்தம் பரமாத்திரைய மென்னும் பெயர்களின்றி ஆபத்தம்பம் ஆத்திரைய மென்னும் பெயர்கள் காணப்படுகின்றன. (ஈ) இவ்வாறங்களின் பெயர்களும் மந்திரஞ் சந்தோபிசித நிருத்தஞ் சோதிட நிகண்டு வியாகரணமெனச் சில வேறுபட்டும் சில இடத்திற் காணப்படுகின்றன.

2, இங்கே மறையென்றது உபநிடத்தை யென்று சிலர் கூறுவர். அவை விளங்கவில்லை. தலவகாரமென்னுஞ் சொல்லுக்குப் பிரதியாகச் சந்தோகமென்னும் பெயரமைந்து ‘‘சந்தோகா பௌழியா தைத்திரியா சாமவேதியனே’’ என ஒருமுறை நாலாயிர, பெரிய திருமொழி 7 : 8 : 2. இலும் காணப்படுகின்றது.

3. பவுழியமென்பது, இருக்குவேதத்தையுணர்த்தும் ஒருவடமொழியின் மரூஉவென்ப.


(பிரதிபேதம்) 1. ஐந்திரியத்தொடக்கத்து,
2 பரமாத்தம்,
3. இருக்கும் பௌடியமும்.