4

மென்னும் பெயரெச்சத்தோடு முடிந்தது, 1 அஃது எண்கையாய் என்னுங்(1) குறிப்புப் பெயரோடு முடிந்த்து

இது திருமேனிகொண்டு நின்றாயாயினும் வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாயென்றது.

அவ்வேதந்தனைக் கொண்டே ஆறங்கங்களையும் (2) அறிய வல்லாரென்பது தோன்ற ஆறறியந்தணர் என்றார். (3) அந்தத்தை அணவுவார் அந்தணர்: என்றது, வேதாந்தத்தையே பொருளென்று மேற்கொண்டு பார்ப்பாரென்றவாறு.

ஆறு என்னும் வரையறைப் பண்புப்பெயர் அப்பண்பினையுடைய 2அங்கத்தை உணர்த்திநின்ற ஆகுபெயர். அது ‘‘கிளந்தவல்ல’’ (4) என்பதனுட் கூறினாம்.


யுரையில் செல்லுமென்னும் பெயரெச்சம் கூளி யென்னும் பெயரைக் கொண்டு முடிந்ததென்று கருதும்படி ‘‘கூறாமற்..........கேளினி’’ என்பதை மேற்கோள் காட்டுவர். தக்கயாகப்பரணி யுரையாசிரியர் தக்க. தாழிசை. 330.

1. குறிப்புப் பெயரென்பதற்குக் குறிப்பு வினையாலணையும் பெயரெனப்பொருள் கொள்ளலாமாயினும் எண்கையாயென்பது வினையா லணையும் பெயராகாமலே பெயரடியாகப்பிறந்த பெயராமாதலால், இஃது உறுப்புப் பெயரென்று இருக்கவேண்டியதுபோலும்; உறுப்புப்பெயர் [கையென்னும்] சினையடியாகப்பிறந்த பெயர்.

2. ‘உரைகோளாளர்க்குரைப்பது நூலே’ என்பது இங்கே கருதத்தக்கது.

3. அந்தணரென்பதற்கு மற்றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுகு பவரென்று பொருளெழுதாது இங்கெழுதியிருக்கும் பொருளும் இதற்கிணங்க மது 474-ல் வேதாந்தத்தை எக்காலமும் பார்ப்பாரெனி எழுதியிருக்கும் பொருளும் “அந்தண்மைபூண்ட வருமறையந்தத்துச், சிந்தைசெயந்தணர்’’ [திருமந். அந்தணரொழுக்கம்] என்பதிற் பிற்பகுதியின் அரியபொருளை வெளிப்படுத்தல் கருதிப்போலும். அழகிய தட்பத்தினையுடையாரென ஏதுப் பெயராம் என்பர்; பரிமேலழகர் குறள். 30.

4. (அ) தொல், வேற்-மய. சூ. 35, இச்சூத்திரவுரையில் ஆறறியந்தணரென்பதனை மேற்கோள்காட்டி இக்குறிப்பை எழுதியிருத்தலுமன்றி, (ஆ) சிந்தாமணியிலும் 2734 நூற்றுலாமண்டபமென்பதற்கு நூறடியுலாவு தலையுடையமண்டபமென்று பொருளும் எண்ணுப்பெயர் எண்ணுடைய பொருண்மேல் ஆகுபெயராய் நின்றதென்று இலக்கணமெழுதி இப்பகுதியையே மேற்கோள்காட்டினர், இவ்வுரையாசிரியர்; கல்லாட வுரையாசிரியரும்


(பிரதிபேதம்)1. அது

2. ஆறங்கத்தை யுணர்த்திநின்ற.