2

11.கொலையுழுவைத் தோலசைஇக் கொன்றைத்தார் சுவற்புரவத்
தலையங்கைகொண்டுநீ காபால மாடுங்கான்
முலையணிந்த முறுவலாண்முற்பாணி தருவாளோ;
எனவாங்கு;
15.பாணியுந் தூக்குஞ் சீரு மென்றிவை
மாணிழையரிவை காப்ப
வாணமில் பொருளெமக் கமர்ந்தனை யாடி.

என்பது. ‘‘வாழ்த் தியல் வகையே 1 நாற் பாக்கு முரித்தே’’ (1) என்றதின்கண் வகையென்றதனாற் கொண்ட (2) அறுமுறைவாழ்த்தன்றித் (3) தனக்குப் பயன்படும்படி முன்னிலையாகக் கடவுளை வாழ்த்துதலிற் கடவுள்வாழ்த்து எனப் பெயர் பெற்றது.

இதன் பொருள்.

(4) ஆறறி யந்தணர்க் கருமறை பலபகர்ந்து
தேறுநீர் சடைக்கரந்து திரிபுரந் தீமடுத்துக்


1. தொல். செய். சூ. 109.

2. அறுமறை வாழ்த்து:- முனிவரும் பசுவும் பார்ப்பாரும் அரசரும் மழையும் நாடுமென்பவற்றை வாழ்த்துதல்.

3. உலகிற்குப் பயன்படும்படியாகவும் படர்க்கையாகவும் கடவுளை வாழ்த்துதலுமுண்டு.

4. (அ) ‘‘ஆறறிமுனிவரன்’’ கந்த. அசுரர் தோற்று. 15. (ஆ) ‘‘ஆறறிமுனிவன்’’ பிரமோத். உமாமகேசுவர பூசாபல. 27. (இ) ‘‘ஆறறி முனிவிர்காள்’’ வாயுசங். சிவானுக்கிரக. 1. (ஈ)‘‘ஆறறி முனிவர்க்கெல்லாமருமறை தெரித்தபின்னர்’’ 2என்பவை ஈண்டு ஒப்புநோக்கற்பாலன. (உ) ‘‘வகையறிமுனிவிர்’’ விநாயக. நைமிச. 25 என்பதும் கருதத்தக்கது. (ஊ)‘‘ஆறறி......கூளி’’ என்னும் பகுதி வருக்கவெதுகைக்கு மேற்கோள். தொல். செய். சூ. 89. ‘ஆயிரு’ இளம். மதுரைத் தமிழ்ச்சங்கப் பதிப்பில் ஓரடி குறைந்தும் வேறொரு கையெழுத்துப் பிரதியில் ஓரடி மிகுந்து முள்ளது.


1. இவ்விடத்தும் பிறவிடத்தும் குறிக்கப்படாதஆகரமும் ஆங்காங்கு இடமின்மை முதலிய காரணங்களாற்சேர்க்காது விடுபவையும் பின்பு இடைவிடுபட்டவை யென்னும்தலைப்புப்பெயரிட்டு இயன்ற அளவு விளக்கப்பெறும்.

(பிரதிபேதம்) 1. நாற்பாற்கும். 2. நின்றவன் வீமனே