1

கணபதி துணை.
திருச்சிற்றம்பலம்.

எட்டுத் தொகையுள்
ஆறாவதாகிய

கலித்தொகை
மூலமும்
நச்சினார்க்கினியருரையும்

கடவுள் வாழ்த்து.

(1)(1)ஆறறி யந்தணர்க் கருமறை பலபகர்ந்து
தேறுநீர் சடைக்கரந்து திரிபுரந் தீமடுத்துக்
கூறாமற் குறித்ததன்மேற் செல்லுங் கடுங்கூளி
மாறாப்போர் மணிமிடற் றெண்கையாய் கேளினி;
படுபறைபலவியம்பப் பல்லுருவம் பெயர்த்துநீ
கொடுகொட்டி யாடுங்காற் கோடுயரகலல்குற்
கொடிபுரை நுசுப்பினாள் கொண்டசீர் தருவாளோ;
மண்டமர்பலகடந்து மதுகையா னீறணிந்து
பண்டரங்க மாடுங்காற்பணையெழி லணைமென்றோள்
வண்டரற்றுங் கூந்தலாள்வளர்தூக்குத் தருவாளோ
;

1. இச்செய்யுள், கலிப்பாவான் வாழ்த்துவந்தது; (தொல். செய். சூ. 109. நச்) மூன்றடியாற் சுரிதகம் வந்தது; (தொல். செய். சூ. 131 ‘போக்கியல்’ இளம்) தரவு தாழிசை தனிச்சொல் சுரிதகமென்னும் நான் குறுப்புடையதும் கொச்சகவொருபோகு; (தொல். செய். சூ. 149. பே. நச்) என்பவற்றிற்கு மேற்கோள்.