(9). | (1). | எறித்தருகதிர்தாங்கி யேந்தய குடைநீழ லுறித்தாழ்ந்தகரகமு முரைசான்ற முக்கோலு நெறிப்படச் சுவலசைஇவேறோரா நெஞ்சத்துக் குறிப்பேவல் செயன்மாலைக்கொளைநடை யந்தணீர் | | 5. | வெவ்விடைச்செலன்மாலை யொழுக்கத்தீ ரிவ்விடை யென்மகளொருத்தியும் பிறண்மக னொருவனுந் தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சிய ரன்னா ரிருவரைக் காணிரோ பெரும | | 9. | காணேமல்லேங் கண்டனங் கடத்திடை யாணெழி லண்ணலோ டருஞ்சுர முன்னிய மாணிழை மடவர றாயிர்நீர் போறிர்; | | 12. | பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை மலையுளே பிறப்பினு மலைக்கவைதா மென்செய்யு நினையுங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே; | | 15. | சீர்கெழுவெண்முத்த மணிபவர்க் கல்லதை நீருளே பிறப்பினு நீர்க்கவைதா மென்செய்யுந் தேருங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே; | | 18. | ஏழ்புண ரின்னிசை முரல்பவர்க் கல்லதை யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதா மென்செய்யுஞ் சூழுங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே; எனவாங்கு | | 22. | இறந்தகற்பினாட் கெவ்வம் படரன்மின் சிறந்தானைவழிபடீஇச் சென்றன ளறந்தலை பிரியா வாறுமற் றதுவே. |
இஃது உடன்போய தலைவிபின் சென்ற செவிலி இடைச்சுரத்து முக்கோற்பகவரைக்கண்டு இவ்வகைப்பட்டாரை ஆண்டுக்காணீரோவென வினவியாட்கு, அவரைக் கண்டு அஃதறமெனவே கருதிப் 1பேர்ந்தேம், நீரும் அவர் திறத்து 2 எவ்வம்பட வேண்டாவென 3எடுத்துக்காட்டி அவர் தெருட்டியது,
சூழிற் பழியின்று' எனத்தாழிசைப் பொருளைக்கொண்டு பின்பு 'மன்னவன் புறந்தர வருவிருந் தோம்பி, நன்னகர் விழையக் கூடி, னின்னுறல் வியன்மார்ப வதுமனும் பொருளே' எனப் போக்கியற் பொருளையும் கொண்டிற்றது" என்பர், நச்; தொல், செய். சூ, 137) 1. 'எறித்தரு...மற்றதுவே' என்பது, செவிலிவரவின்கட் கூறியதற்கும். தொல். அகத். சூ. 40. நச். இடைச் சுரத்துப் புலம்புஞ் செவிலியை எதிர் வருவார் கண்டு தெருட்டியதற்கும் இறை. சூ. 23; மேற்கோள்.
|