இது (1) பாலைநிலத்திற்கு உரிய செய்தி கூறிற்று. ஆரிடையை உள்ளினி ரென்க. இது தரவு. (9). | (2) | காழ்விரி கவையார மீவரு மிளமுலை | | (3) | போழ்திடைப் 1படாஅமன்முயங்கியு மமையாரென். றாழ்கதுப் பணிகுவர்காதலர் மற்றவர் 2சூழ்வ தை யெவன்கொலறியே னென்னும் |
எ - து: காதலர், முத்துவடங்கள் விரிந்த 3கலத்தை அகத்திட்டுக்கிடக்கின்ற ஆரம் மீதே கிடந்தசையும் இளைய முலையை ஒருபோதும் இடையீடுபடாமற் றழுவியும் அதனானும் வேட்கை தணியாராய், என்னுடைய கூட்டத்தாற் றாழ்ந்த மயிரைக் கோலஞ்செய்வர்; பின்னை, அவர் சூழ்கின்ற காரியம் எத்தன்மையதுகொல்? அதனை யான் அறியேனென்று கூறாநிற்கும்; எ - று. மேற் கலங்களுங் கீழ்ப் பல முத்துவடங்களுமாகிய ஆரம்.
1. ஆறலைத்தலும் சூறைகோடலும். 2. (அ) ‘‘கழூஉவிளங் காரங் கவைஇய மார்பே’’ புற நானூறு. 19. (ஆ) ‘‘காழ்விரிகவையார....லறியேனென்னும்’’ என்பது ஒத்தாழிசைக் கலியில் தாழிசைதோறும் ‘அறியே னென்னும்’ என இரண்டு நேரீற்றியற்சீரும் வந்தமைக்கு மேற்கோள். தொல். செய். சூ. 130. பே. 3. (அ) ‘‘கழுமிய காதலொடு கவவுக் கைவிடா, தொழுகுங் காலை நிகழ் பொருள் கூறுவேன்’’ பெருங். (3) 23: 10-11. (ஆ) ‘‘கங்குலும் பகலும் பிரிவில ராகிக் காதல்வெள் ளத்திடை யழுந்திப், பங்கமில் போக நுகருநாள்’’ இரா. சீதைவனம். 11. (இ) ‘‘இடையறாமலே யெழில் கொண் மைந்தனு, மடமை மாதரு மருவி வைகுநாள்” பிரமோ. பத்திராயுவின். 47. (ஈ) ‘‘மல்லலந் தோளி னானு மழைமதர் நெடுங்க ணாளும், புல்லுவிட் டொழியிலாவி பொன்றிடு மென்னவெண்ணி, யல்லுநண் பகலும் விள்ளா தணிநலம் பருகி யாங்குச், செல்வுழி நிகழ்ந்த வெல்லாஞ் செப்புவான் றொடங்கு கின்றேன்’’ (உ) ‘‘வாம்பரித் தேரி னானு மாழையொண் கண்ணி னாளு, மேம்பலோ டினிது புல்லி யிடைவிடா தொழுகு நாளில்.’’ நைடதம். மணம்புரி. 57. சூதாடு. 1. (ஊ) ‘‘தலைவன் சொல்லாதுபிரியுங்கால் போழ்திடைப் படாமல் முயங்கியும் அதன்றலைத் தாழ்கதுப் பணிந்தும் முள்ளெயிற் றமுதங் கள்ளினு மகிழ் செய்யு மெனவுரைத்தும் இவைமுதலிய தலையளிசெய்து தெருட்டிப்பிரிய, (பிரதிபேதம்) 1 படாமல், 2 சூழ்வகை, 3 அகலத்தை.
|