16
அ
தலைவனும் தலைவியும் களவும் கற்புமாக நிகழ்த்தும் நல்லற வாழ்வாம் இல்லறமாகிய அகப்பொருளில் மிகுதியாகப் பயின்றுவரும் சுவைகளாகிய உவகை, நகை, மருட்கை என்பன அகச்சுவையாம். (ம. சூ. பக்.6)
சுப்பிரயோகம், விப்பிரயோகம், சோகம், மோகம் என்னும் நான்கு நிலைகளை விளைக்கும் மன்மதபாணங்களால் உடல் வருந்துதலால் நிகழ்வன அகமெய்ப்பாடுகள்.
விளர்ப்பு, பசப்பு, மெலிவு, விதிர்ப்பு, துளக்கம், துயர்தல், தும்மல், சோர்தல், வேர்த்தல், வெருவுதல், விம்முதல், விரும் புதல், ஒப்பிலாமை உருகுதல், மயங்குதல், மூரி, உயிர்ப்பு, மூர்ச்சனை, முறுவல், காரிகை கடத்தல், கழிகண்ணோட்டம், இருந்துழி இராமை, இராகம் இகழ்தல், வருந்திக் காட்டுதல், வாய்நனி உறுதல், சிந்தனை கூர்தல், சேர்துயிலின்மை, கண்டது மறுத்தல், காட்சி விரும்பல், உண்டி விரும்பாமை, உரைத்தது மறுத்தல், கண்ணீர் வழிதல், கனவு நனி காண்டல் - என்பனவாக முப்பத்திரண்டு துறைகளாம். (‘அகமெய்ப் பாடு’ என்பது அகப்பொருளினுக்கு உரை இருபத்தேழனுள் ஒன்றாம். கா. 90) (வீ. சோ. 96. உரை மேற்.)
அச்சத்தைத் தோற்றுவிக்கும் பொருள்களைக் கண்டவழி, மனத்தில் விளையும் பொருளாவது அச்சம். அணங்கு, விலங்கு, கள்வர், தம் இறை என்னும் நான்கு பகுதி பற்றியும் அச்சம் பிறக்கும் (தொ. பொ. 256 பேரா.)
அச்சம் எப்பொழுதும் பிறிது பொருள் பற்றியே வரும். (பேரா.)
‘என்னைப் பார்த்தால் அச்சமாக உள்ளது’ என்ற கூற்றில் உடலையும், உயிரையும் வேறாகக் கருதி, உடலைக் கண்டு அவ்வுடலகத்துள்ள உயிர் அஞ்சுவதாகக் கோடல் வேண்டும்.
இந்நான்கு குறிப்பேயன்றிப் புலவி முதலியன பொருளாகவும் அச்சம் பிறக்கும்.
வீரசோழியவுரையுள், அச்சக்குறிப்பு, மாற்றலர் விலங்கு மன்னவர் சோரர் என்னும் நான்கு பொருள் பற்றியும் நிகழும் எனக் கூறப்பட்டுள்ளது. (அச்சுப்பிழை திருத்தப்பட்டுள்ளது) இச் சொற்கள், அணங்கு விலங்கு தம்இறை கள்வர் என்பவற்றையே குறிப்பன. (வீ. சோ. 96 உரை. மேற்.)
கூரிய பற்களையுடைய சிங்கம், வேங்கைப்புலி, முள் போன்ற விடம் பில்கும் பற்களையுடைய அரவு, கொடிய தீ, ஈன்றணிமை யுடைய பசு, மதம் பிடித்த யானை, ஒற்றைக்கால் பூதம், யமதூதர்கள், பிற கொடிய விலங்கு போல்வன.
(தொ. பொ. 249. பேரா.)
(வடநூலார் சுவைப்பொருளை விபாவம் என்ப)
களவுக்காலத்தில் தலைவி தலைவன் இரவுக்குறிக்கு வரும் போது அவன் வரும் வழிகளில் உள்ள தீங்குகளை நினைத்து, அவற்றால் அவனுக்கு ஊறு நேருமோ என்று அஞ்சி, அவன் இரவுக்குறிக்கு வாராத வகை அவனை நீக்குதற்கு எழுந்த மெய்ப்பாடு இது. (தொ. பொ. 271. பேரா.)
இவ்வொழுக்கம் பிறர்க்குப் புலனாகும் என்னும் அலர் அச்சத்தால் தலைவனுடைய கூட்டத்தின் அகன்று ஒழுகுதல்.
(தொ. பொ. 267 இள.)
இஃது ஒளியாது ஒழியாது உடனுறையும் கற்புக்காதல் கூட்ட வேட்கைக் குறிப்பை வெளியிடும் மெய்ப்பாடு எட்டனுள் ஒன்று. (பேரா. பாரதி.)
இது நடுவண் ஐந்திணையுள் மனம் அழியாவழி நிகழும் மெய்ப்பாடு எட்டனுள் ஒன்று. (பேரா. 267. இள.)
‘தலைவற்கு வரும் தொழிலால் ஊறு நேருமோ? ‘எனத் தலைவி அஞ்சிக் குறியிடத்துச் செல்லாது சேயளாய் ஒழுகுதல்.
இது பெருமிதத்திற்குப் பொருளாக அமைவது.
(தொ. மெய்ப். 23. ச.பால.)
தெய்வம், விலங்குகள், கள்வர், தமக்குத் தெய்வம் போன்ற தந்தை தாய் அரசன் போன்ற காரணங்களால் தம் உயிர்க்கும் பொருட்கும் துன்பம் நேருமோ என நடுங்கிக் கலங்குதல் ஆகிய சுவையுணர்வு. (நாடக. 53.)
இஃது அழுகை என்னும் மெய்ப்பாட்டுக்குரிய குறிப்பு நான்கனுள் மூன்றாவது. அசைவு - தளர்ச்சி ; அது தன் நிலையில் தாழ்தல். (தொல்.மெய்ப். 5 இள.)
எ-டு : ‘பொருளும் மனஎழுச்சியும் குறைந்து போதல், சாபம் எய்துதல்,
பற்றுக்கோடாவாரை இழந்து
கலங்குதல்,
கயவர்களால் மனம் நோவத் துன்புறுத்தப்படுதல், காவல் இன்றிக் கலக்கமொடு திரிதல்,’
என்பன (செயிற்றியம்). அசைவு - பண்டைநிலை கெட்டு வேறொருவாறாகி வருந்துதல்.
மடலேறப் போகும் தலைவன், தன் தலைவி மின்னலைப் போலத் தோன்றித் தன் ஒளியையும் வடிவத்தையும் அவனுக்குக் காட்டி அவன் மனத்தைக் கவர்ந்ததால், தான் உறக்கமின்றி வருந்துகின்ற நிலையினைக் கூறுதல் (கலி. 139) தன்கண் தோன்றிய அசைவு பற்றிய அழுகை.
மகளிர் மனத்தைப் பிணிக்குமாறு இளமை அழகொடு கூடியிருந்தவன் இப்போது தவம் செய்வோனாகி, நீர்பலகால் மூழ்கித் தலைமயிர் செந்நிறச் சடையாக, உணவுக்காகத் தாளிச்செடியின் இலைகளைக் கொய்கிறான் - என்பதனைப் பார்த்த மக்கள் வருந்துதல், பிறன்கண் தோன்றிய அசைவு பற்றிய அழுகை. (புறநா. 252) (தொல்.பொ.253. பேரா.)
அடக்கம் என்பது மனம்மொழிமெய்யின் அடங்குதல். அது பணிந்த மொழியும் தணிந்த நடையும், உடையைக் காற்றில் பறக்காமல் ஒதுக்கிக் கொள்ளுதலும், வாயைக் கையால் பொத்திக்கொண்டு பேசுதலும் முதலாயின.
‘ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல்’ (குறள். 126)
‘யாகாவா ராயினும் நாகாக்க’ (குறள். 127)
‘நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்’ (குறள். 124)
என்றாற் போல்வன. (தொ. பொ.256. இள.)
அடக்கம் என்பது உயர்ந்தோர்முன் அடங்கி ஒழுகும் ஒழுக்கம். அவை பணிந்த மொழியும், தணிந்த நடையும் தானை மடக்கலும், வாய் புதைத்தலும் போல்வன. (தொ. பொ. 260 பேரா.)
இது மனத்தின் நிகழ்ச்சியை வெளிப்படுத்தலான் மெய்ப் பாடாயிற்று. இது துணைமெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று.
அடக்கவுணர்ச்சி மெய்ப்பாடாகும். (247 குழ.)
அடக்கமாவது தன்னறிவு அடங்கி ஒடுங்கும் நிலை. உயர்ந்தோர்முன் அடங்கி ஒழுகுவது தேசாசாரம் அல்லது மெய்ப்பாடு ஆகாது. இது வடநூலுள் ‘நிர்வேதம்’ எனப்படும். (தமிழ் வரலாறு. பக். 285.)
அச்சம் என்னும் மெய்ப்பாட்டிற்குரிய குறிப்பு நான்கனுள் ஒன்று.
அணங்கு - பேயும், பூதமும், பாம்பும், பதினெண் தேவ கணங்களும், நரகத்துத் தலைவர்களும், துன்புறுத்தும் பிணந் தின்னும் பெண்டிர் முதலாயினோரும், இடியோசை முதலி யனவும் ஆம்.
எ-டு : ‘யானை தாக்க வரினும், பாம்பு தம்மை நோக்கி வரினும், வானத்தே இடி இரவில் அமைதியான நேரத்தே இடிக்கத்தொடங்கினும் கருக்கொண்ட மகளிர் நடுங்குதல், அணங்கு பொருளான அச்சத்தினாலேயாம்.’ (பெரும் : 134 - 136)
(தொ. மெய்ப். 8 பேரா.)
காட்சியளவில் காரணம் கூறமுடியாத இடத்துக் கார- ணத்தைக் கடவுள்மேல் ஏற்றிக் கூறுவது உலகியல். அம் முறையில் மலையில் உறையும் தெய்வங்கள் தீண்டி வருத்தும் என்ற நம்பிக்கையால், அணங்கு பொருளாக அச்சம் பிறக்கும். (மெய். 8 பாரதி)
தலைவன் தலைவியைத் தீண்டியவழி ஏற்பட்ட மன நெகிழ் வான் உடை நெகிழ, அதனைத் தலைவி கையால் தடுத்துக் கடிசூத்திரம் (-அரைஞாண்) முதலாயினவற்றை அவ்வுடைக் குப் பாதுகாப்பாக மேலே இறுக்கி அணிதல். (தொ. பொ. 263 பேரா.)
அரைஞாண் தோள்ஆடை முதலியவற்றை நெகிழ்ச்சி போற்றி இறுக்கி அணிதல் என்றவாறு.
இது மூன்றாம் அவத்தையின் இரண்டாம் மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர் (259)
களவில் புணர்ச்சிக்கு முற்பட்ட முக்கூற்று மெய்ப்பாடுகளில் இது மூன்றாம் கூற்றின் இரண்டாம் மெய்ப்பாடு என்பர் ஏனையோர்.
தலைவன் பிரியப்போவதைக் குறிப்பான் அறிந்த தலைவி, தன் மங்கலஅணி நீங்கலான அணிகலன்களையும் பட்டாடையை யும் நீக்கி எளிய உடை உடுத்து அவன்முன் தோன்றுதல்.
இது காம நுகர்ச்சியிடத்து வேட்கையான் செய்யும் குறிப் பான செயல்களுள் ஒன்று.
இஃது அகத்திணை உரை இருபத்தேழனுள் குறிப்பு என்பதன் பாற்படும். (வீ. சோ. 90) (வீ. சோ. 96 உரை மேற்.)
அஃதாவது மனக்கருத்தைக் குறிப்பால் விளக்கும் அங்கச் செய்கை. ‘மகளிர் தங்கள் அபிநயம்’ (இரகு. தசரதன் சா. 30) (L)
அரற்றாவது உறக்கத்தில் தன்னை மறந்து பிதற்றல். அது சாதாரண நிலையிற் பேசும் ஏனைய சொற்களினின்று வேறு படுதலின் அரற்று என ஒரு மெய்ப்பாடாயிற்று. அரற்று என்பது ஒரு பொருளைப் பலகால் கூறுதல். அஃது அப்பொருளின்மேலுள்ள காதலால் கூறலின், அதுவும் ஒரு மெய்ப்பாடாயிற்று. (தொ. பொ. 256 இள.)
அரற்று என்பது அழுகையைப் போலாது, தனக்குள்ள குறையைப் பல சொல் வாயிலாகக் கூறிப் புலம்புதல். அது பரணியில் காளிதேவியிடம் பேய்கள் தம் பசிக்கொடுமை பற்றி முறையிடுவது போல வழக்கிலுள்ளோர் கூறுவன. இது துணைமெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று. (தொ. பொ. 260 பேரா.)
இதனை வடநூலார் ‘க்லானி’ என்பர்.
தலைவன் தலைவி ஆகிய இருவருக்கும் கூறப்படும் பத்து வகை ஒப்பினுள் ஒன்று.
பிறர் வருத்தத்துக்குப் பரியும் கருணையே அருளாகும். (தொ. பொ. 90 இள. உரை)
எல்லா உயிர்க்கும் இடுக்கண் செய்யாத அருள் உடையராய் இருத்தல். அதுவும் காமத்துக்கு இன்றியமையாததோர் உறுப்பு. (273 பேரா. உரை)
அருள் - பிறர் வருத்தம் பொறாப் பரிவுடைமை.
(தொ. மெய்ப். 25 பாரதி)
பொருள்முற்றி மீளும் தலைவன், தன் தேர்மணி ஒலி இணை யாக இருக்கும் வண்டுகளை அஞ்சுவித்துப் பிரித்துவிடும் என்று கருதி மணிகளின் நாக்களைக் கட்டிவிட்டு ஒலியின்றி வந்தான் (அகநா. 4) என்பது அருளுடைமை.
தலைமகள்மாட்டு அருள் புலப்பட நிற்கும் நிலை. அஃது இரவுக்குறிக்கு வந்து மீண்ட தலைவன் இடையூறின்றித் தன்னூர் மீண்டு சென்றானோ என்று கவலை கூர்தல் (அகநா. 88) போல்வன. (தொ. பொ. 268 இள.)
தலைவி களவுக்காலத்துப் போலத் துன்பம் மிகுதலின்றி அருள் மிகத் தோன்றிய நெஞ்சினளாய்த் தன் கணவர்
‘நின்ற சொல்லர், நீடுதோன்று இனியர்
என்றும் என்தோள் பிரிபு அறியலரே’ (நற். 1)
என்றாற் போலக் கருதி மகிழ்தல் (272. பேரா.)
கற்பிற்கே சிறந்த பத்து மெய்ப்பாடுகளுள் இதுவும் ஒன்று. முன்பு களவில் தலைவன் அருளை வேண்டிநின்ற தலைவி, கற்பில் தான், கணவனை அவன் செய்த தவறுகளையும் புறக்கணித்து அருளொடு பேணும் பெற்றி.(மெய்ப். 24 பாரதி)
அஃதாவது எல்லா உயிர்க்கும் அளிசெய்தல். ‘அரிதாய அற னெய்தி அருளியோர்க்கு அளித்தலும்’ (கலி. 11) என்றாற் போல வருவது. (அருளியோர் - நம்மால் அருள் செய்யத் தக்கவர்) (தொ. பொ. இள. 256)
மக்கள் முதலிய சுற்றத்தாரை அருளுதல். கருணை அழுகை யின்பாற்படும் ஆதலின், அருள் கருணையின் வேறாகும்.
(260 பேரா.)
இது மனத்தின் நிகழ்ச்சியை வெளிப்படுத்தலான் மெய்ப் பாடாயிற்று. துணைமெய்ப்பாடு 32இல் இதுவும் ஒன்று.
இதனை அருளால் விளையும் துக்கமாகிய ‘விஷாதம்’ என்பர்.
மக்கள் முதலிய சுற்றத்தார்துயர் கண்டு வருந்தி அதனைப் போக்க முயலுதல்; அவ்வருத்தத்தால் பிறந்த வேறுபாடு இங்கு மெய்ப்பாடாகும். (247 குழ.)
தலைவியைத் தலைவன் தீண்டியவழித் தலைவி மனம் நெகிழ்தலின் அதன் செயலாகத் தலைமுடி அவிழ, காதணி ஒன்று கழல, வளையல்கள் நெகிழ, உடையும் சிறிது நெகிழ, அதனைப் பலகாலும் இறுக்கி உடுத்து உடைநெகிழாதவாறு தன்கையால் அதனைப் பாதுகாத்துக் கொள்ளுதல்.
வயிற்றின் அடிப்பகுதியில் உடுக்கப்பட்ட ஆடை நெகிழாத வாறு கைகளால் போற்றிக் கொள்ளுதல்.
இது மூன்றாம் அவத்தையின் முதல் மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர். (தொ. பொ. 259)
களவிற் புணர்ச்சிக்கு முற்பட்ட மூன்று பகுதியவாகிய மெய்ப் பாடுகளுள் இது மூன்றாம் பகுதியின் முதல் மெய்ப்பாடு என்பர் ஏனையோர். (தொ. பொ. 263 பேரா.)
நெகிழ்ச்சி போற்றி உடுத்த ஆடை உடம்பொடு படியுமாறு இடைக்கீழ் அவ்வுடை உடம்பொடு பொருந்தும் இருப்புறுப் பைத் தடவி உடையின் மடிப்புக்கள் நன்கு படியச் செய்தல்.
(தொ. பொ. மெய்ப். 15 பாரதி)
துன்பம் நீங்கிய உவகை எனவே, பிறர் துன்பம் கண்டு வரும் உவகை உண்மை உவகை ஆகாது.
பிறருக்குத் தீங்கு செய்து பெறும் மகிழ்ச்சி எதுவும் அழுகை இளிவரல் முதலிய உணர்வின்வழித்தாம் ஆகலின் அதனை விலக்கி, யாண்டும் எக்காலத்தும் துன்பம் தீர்ந்த இன்ப உவகையே உவகையாகும் என்பதனை ‘அல்லல் நீத்த உவகை’ என்பதனான் பெற வைத்தார். (தொ. பொ. 259 பேரா.)
வெகுளி என்னும் மெய்ப்பாட்டிற்குரிய குறிப்பு நான்கனுள் மூன்றாவதாகும்.
அலை - வைதலும் புடைத்தலும் என்பர் இளம்பூரணர். (தொ. பொ. 254.) கோல்கொண்டு அலைத்தல் முதலாயின என்பர் பேராசிரியர். (258)
புலியால் துன்புறுத்தப்பட்ட யானை புலியொடு பொருது வென்ற பின்னும் அப்போரிடுதலை நினைத்துக் கோபம் கொண்டமை போல, அதிகமான் தன்னூர் வந்து தனக்குப் பிறந்த புதல்வனைக் கண்டபோதும் தான் பகைவருடன் போரிட்ட செயலை நினைத்த கோபம் மாறாமல் கண் சிவந்து காணப்பட்டான் என்பது இதற்கு எடுத்துக்காட்டு. (புறநா. 100)
பிறரால் இகழப்பட்டு எளியவனாகும் இளிவும், தந்தை தாய் சுற்றத்தார் போல்வாரை இழந்து வருந்தும் இழவும், பண்டை நல்ல நிலைகெட்டு வருந்தும் அசைவும், வறுமையும் என்னும் இவை காரணமாகத் துயரம் உண்டானபோது, விம்முதலும் ஏங்குதலும், புலம்பி அரற்றுதலும், கண்ணீர்விட்டு அழுத லும், மயங்கி விழுதலும் அவலச் சுவை என்பர்.
தலைவனைப் பிரிந்து இரங்கும் தலைவியின் துயர் அவலம் ஆகாது. (நாடக. 51, 52)
அவலமாவது சோகம். இனிய சுற்றமும் பொருளும் இழந்தத னால் வரும் உள்ளத்தின் உளைவு அவலம் எனப்படும். இஃது அவலச்சுவையின் நிலைக்கருத்து. (நாடக. 54)
தலைவி தலைவன் சுற்றத்தையும், அவன் நாடு மலை ஊர் இவற்றின் தொடர்புடைய உயர்திணை அஃறிணைப் பொருள்களையும் தனிப்பட்ட முறையில் மகிழ்வொடு விரும்புதல்.
தலைவன்புதல்வனை வழிமுறைத்தாய் கண்டு மகிழ்ந்து வரவேற்றலும் (கலி. 82), தெருவில் செல்லும் பாணன் தலைவ னது ஊரைச் சார்ந்தவன் என்பதனால் தலைவி அவனிடத்தே தனிப்பட்ட கருணை காட்டுதலும், தலைவனது மலையி னின்று அடித்து வரப்பட்ட காந்தள் செடியின் கிழங்கைத் தன்மனைத் தோட்டத்தே வைத்து வளர்த்தலும் (குறுந். 34) போல்வன அவன்தமர் உவத்தலாம்.
இதனைப் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு என்பர் இளம் பூரணர். (தொ. பொ. 266)
அன்புத் திணையில் தனிப்படர்மெலிவின் துனி நனி விளக்கும் இம்மெய்ப்பாடு கற்பிற்குச் சிறந்து, களவிற்கும் கொள்ளப் படும் என்பர் ஏனையோர். பிரிவிடை நிகழும் இம்மெய்ப்பாடு ஆராய்ந் துணரின் புணர்ச்சிக்கு நிமித்தமாம். (270 பேரா.)
தலைவி அறத்தொடு நின்றபின் தமரை அஞ்சிப் பகற்குறியும் இரவுக்குறியும் மறுத்த ‘திளைப்பு வினை மறுத்தல்’ என்ற மெய்ப்பாடு போலன்றி, வரைதல் வேட்கையால் இரவுக்குறி யையும் பகற்குறியையும் மறுத்தல். இங்ஙனம் மறுக்கவே, களவொழுக்கம் தவிர்த்துத் தலைவன் தலைவியை விரைவில் மணப்பான் என்பது பயன். (தொ. பொ. 271. பேரா.)
தலைவன் புணர்ச்சிக்கு வாராதவழி, முன்பு போல அன்றி, தலைவிதானும் மனம் வருந்தாது நிற்கும் நிலை என்பர் இளம்பூரணர் (பொ. 267)
இஃது ஒளியாது ஒழியாது உடனுறையும் கற்புக் காதற் கூட்ட வேட்கைக் குறிப்பை வெளியிடும் மெய்ப்பாடு எட்டனுள் ஒன்று என்பர் பாரதி (271).
இது நடுவண் ஐந்திணையுள் மனம் அழியாவழி நிகழும் மெய்ப்பாடு எட்டனுள் ஒன்று என்பர் இளம்பூரணர் (267).
அழிவில் கூட்டம் - பின் கெடுதல் இல்லாத கூட்டம். திருமணம் ஆகாமல் நிகழ்த்தும் களவுக்கூட்டம், இடையூறுக ளான் அழிவுறுமோ என்று அஞ்சிக் கூடும் கூட்டம் ஆதலின், வரைந்து எய்தும் கூட்டம் எவ்வித இடையூறுமின்றிக் கூடும் கூட்டம் என்பது புலப்பட, ‘அழிவில் கூட்டம்’ எனப்பட்டது. தான் வரைந்தெய்தும் கூட்டத்தை விரும்பும் வேட்கை புலப் படத் தலைவியின்பால் நிகழும் மெய்ப்பாடுகள் அழிவில் கூட்ட மெய்ப்பாடுகள் எனப்பட்டன. அவை முட்டுவயின் கழறல், முனிவு மெய் நிறுத்தல், அச்சத்தின் அகறல், அவன் புணர்வு மறத்தல், தூது முனிவின்மை, துஞ்சிச் சேர்தல், காதல் கைம்மிகல், கட்டுரையின்மை என்பனவாம். இவற்றை வரைதல்வேட்கையைப் புலப்படுத்தும் மெய்ப்பாடுகள் என்றும் கூறலாம். (தொ. பொ. 271 பேரா.)
அழுகை - அழுகையைத் தோற்றுவிக்கும் பொருள்களைக் கண்டவழித் துயரத்தொடு மனச்சோர்வைத் தருவது. இளிவு, இழவு, அசைவு, வறுமை என்னும் நான்கு குறிப்புப் பற்றியும் அழுகை நிகழும்.
இவை, தன்னைப் பிறர் இகழ்ந்தவழி வருந்துதல், ஒருவர் மற்றவரால் இகழப்பட்டதைத் தான் கண்டு வருந்துதல், அரிய பொருள்களைத் தான் இழந்து வருந்துதல், பிறர் இழந்ததைக் கண்டு தான் வருந்துதல், தன்னிலையில் தாழ்ந்த தளர்ச்சி யால் தான் வருந்துதல், பிறர்தளர்ச்சி கண்டு தான் வருந்துதல், தன் நல்குரவு கண்டு தான் வருந்துதல், பிறர் துயர்உறும் நல்குரவு கண்டு தான் வருந்துதல் - எனத் தன்கண் தோன்றுவன, பிறர்கண் தோன்றுவன என்ற பாகுபாடு பற்றி எட்டாதலும் உரிய.
இவையேயன்றி வீரம்பற்றி உவகைக் கண்ணீர் வடித்தலும் அழுகையின்பாற்படும். (தொ. பொ. 253 பேரா.)
தன்கண் தோன்றிய துயரம் பற்றிய சுவையை அழுகை எனவும், பிறன்கண் தோன்றிய துயரம் பற்றித் தன்கண் நிகழும் சுவையைக் கருணை அல்லது இரக்கம் எனவும் கொண்டு சுவையை ஒன்பது கூறாகக் கருதலும் உண்டு. (251 பேரா.)
வருத்தம் இகழ்வு வலியின்மை வறுமை என்ற நான்கனையும் இரக்கத்திற்குரிய குறிப்புக்களாக வீரசோழியம் கூறும்.
(வீ.சோ. 96 உரை மேற்.)
தன் செல்வ நிலைமையையும் இழந்து துணைவர்களையும் பிரிதல், மேம்பாடு பொருந்திய தன் தகுதி நீங்குதல், சிறை யிலடைக்கப்பட்டுச் செயலற்றிருத்தல், தேவையான பொருள் களும் இன்றி வாடியிருத்தல், சாபம் எய்துதல், சேர்ந்தவர் களுக்குத் தவறிழைத்து வருந்துதல், மனத்தை அடக்க இயலாது கலக்கமொடு தடுமாறுதல், கடகம் அணிந்த கையில் வெறும் மஞ்சட் கயிற்றோடிருத்தல், முடி சூடிய தலையால் பிறருடைய அடிகளில் வீழ்ந்து வணங்குதல், களிறும் பரியும் ஊர்ந்தவன் கால்கள் விலங்கிடப்பட்டு வருந்துதல், பொன் னணி அணிந்த மார்பு புழுதிபடத் தரையிற் கிடத்தல், கயவர் களால் மனம் நோவுமாறு துன்புறுத்தப்படுதல், கொலைக் களம் போர்முனை இவற்றால் வருந்துதல், பிறர் துன்புற்று அழும் அழுகுரல் கேட்டல், பிறர் தம் குறைகளைக் கூறி வருந்தும் புலம்பலைக் கேட்டல் - ஆகிய செய்திகள் அவலத் தைத் தோற்றுவிப்பனவாம் (செயிற்றியம்). (தொ.பொ. 249 இள.)
பிரிவிடைத் தலைவி அறத்தினை அழித்துக் கூறுதல். பிரிந்த தலைவன் கூறிய பருவம் வந்தவழியும் அவனிடமிருந்து தூதுகூட வரக் காணாது வருந்தும் தலைவி, தன்னை ஆற்று விக்க வந்த தோழியிடம், “முன்பெல்லாம் ‘நாமிருவரும் வேறு அல்லம்’ என்று சொல்லிய தலைவர் இப்பொழுது என்னி டம் சிறிதும் அன்பில்லாது பிரிந்து கவலையின்றி இருக்கும் நிலையினை எண்ணி என்னுயிர் கழிகின்றது” (குறள். 1209) என்று கூறி, தலைவன் வருந்துணையும் ஆற்றி இல்லின்கண் இருந்து நல்லறம் செய்யும் மகளிர்க்கு உரிய அறத்தினை அழித்து உயிர் போவதாகக் குறிப்பிடுவது இம்மெய்ப்பாடு. இது பெருந்திணைக்கு உரிய மெய்ப்பாடுகளில் ஒன்று. (தொ. பொ. 266 இள.)
களவினும் கற்பினும் பிரிவிடைத் தலைவி காதல் மிகுதியால் அறன் அழிய வெறுப்பது போலத் தலைவனை
‘ஏதி லாள ன் இவண்வரின்
.......................................................................
எம்மும் தொடாஅல் என்குவெம் மன்னே!’ (குறுந். 191)
எனவும்‘யாரும் இல்லை தானே கள்வன்’ (குறுந். 25) எனவும் ‘அளித்(து) அஞ்சல் என்றவர் நீத்ததால் அவர்க்கே தவறு’ (குறள். 1154) எனவும், ‘வேறல்லம் என்பார், அளியிலர்’ (குறள். 1209) எனவும் கூறுவனவும், தாயை ‘அறனில் யாய்’ (ஐங். 385) எனவும் ‘அறனில் அ ன்னை’ (குறுந். 262) எனவும் கூறுவன வும், அறன் அழிவது போலக் கூறினும், காதன்மையால் எழுதலான் மெய்யாக அறனழிக்கும் நோக்குடையன ஆகாதனவாகக் கூறுதல். (தொ. பொ. மெய்ப். 22 பாரதி)
அறனழித்துரைத்தல் : பிரிவுத் துன்பத்தால் உளம் நொந்த தலைவி தலைவன் முதலானோரிடத்தில் அறமில்லை என்று வெறுத்துப் பேசுதல். (தொ. மெய்ப். 22 ச.பால.)
பிரிவிடைத் தலைவி தலைவன்வரவு குறித்து நினைத் திருக்கையில், பல்லி நல்ல இடத்திலிருந்து நன்னிமித்தமாக ஒலித்தல் முதலிய சகுனம் கண்டு, தனக்கு அச்சகுனங்கள் வாயிலாக அருள் செய்யும் தருமதேவதையை வழிபட்டுப் பரவுதல். அறனளித்து உரைத்தல் - அறக்கிழவனை அன்பு செய்து வழிபாடு கூறல். (தொ. பொ. 270 பேரா.)
அறன் - ஞாயிறு திங்கள் முதலியனவும், பல்லி சொல்லல், காக்கை கரைதல் முதலியனவும் ஆம். தலைவி, ஞாயிறு திங்கள் முதலியவற்றைத் தலைவன் வரும் வழியை இனிது செய்யும்படி வேண்டுதலும், தனது ஆற்றாமையால் தலைவன் விரைவில் வரவேண்டுமெனப் பல்லியைச் சொல்லும்படியும் காக்கையைக் கரையும்படியும் வேண்டுதலும் ஆம். அளித்துரைத்தல் - அன்புடன் பரவுதல். (பொ. 257 குழ.)
இம்மெய்ப்பாடு கற்பிற்குச் சிறந்து களவிற்கும் கொள்ளப் படும். (பேரா.)
ஒரு பொருளையே பற்றி நிற்கும் அறிவுடையராம் தன்மை. விளையாடும் பருவத்து நிகழ்ந்த அறிமடம் என்றது, விளை யாட்டைப் பற்றியே நிற்கும் அறிவுடையளாயிருத்தலை.
(தொ. பொ. 264 பேரா.)
அன்பு என்பது பயின்றார்மாட்டுச் செல்லும் காதல். அஃது உடம்பிலுள்ள ஏனைய புறத்துறுப்புக்கள் போலாது, உடம் பின் அகத்து உறுப்பாய் நல்வாழ்விற்கு இன்றியமையாதது.
(தொ. பொ. 256 இள.)
அன்பு என்பது அருளுக்கு அடிப்படையாய் மனத்தின்கண் நிகழும் நேயம். அன்புடையார்க்குப் பிறரிடம் துன்பம் கண்ட வழிக் கண்ணீர் சொரிதலினால் அவரிடத்துள்ள அன்பு டைமை வெளிப்படும். இது மனத்தின் நிகழ்ச்சியை வெளிப் படுத்தலால் மெய்ப்பாடாயிற்று. (தொ. பொ. 260 பேரா.)
இது துணை மெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று. இதனை வடநூலார் சபலதை என்ப.
குடத்துள் விளக்கும் உறையினுள் வாளும் போல அன்பு காட்டலாகாப் பொருள். அன்புடையார்கண் நிகழும் சாவின் சாதல், நோவின் நோதல், ஒண்பொருள் கொடுத்தல், நன்கி னிது மொழிதல், புணர்வுநனி வேட்டல், பிரிவு நனி இரங்கல் முதலிய செயல்களைக் கொண்டே அவர்மாட்டு அன்பு உள்ளது என்பதனை அறிந்துகொள்ளல் வேண்டும். (இறை. அ. 1 உரை)
தலைவன் தவறு செய்தானாகத் தோழி கூறியவழியும், தலைவி, “கொடியன் ஆயினும் ஆக, அவனே தோழிஎன் உயிர்கா வலனே” (சிற்றெட்டகம்) என்றாற் போலத் தலைவ னிடம் தான் கொண்டுள்ள அன்பு புலப்பட இருத்தல். ‘அன்புமிக’ என்பதும் பாடம். (தொ. பொ. 268 இள.)
விரிந்த அன்பெல்லாம் ஒருங்கு கூடிநிற்றல். அஃதாவது களவுக்காலத்து விரிந்த அன்பெல்லாம் கற்புக்காலத்துத் தலைவியிடம் இல்லறம் பேணிப் புதல்வற்பயந்து விருந்தோம் புதற்கண் பெருகிய விருப்பினாலே ஒருங்கு தொக நிற்றல்.
(தொ. பொ. 272 பேரா.)
தலைவன் செய்த கொடுமைகளையும் தவறுகளையும் மனம் கொள்ளாமல் அவன்பால் காதல் குறையாது ஒழுகுதல்.
(தொ. மெய்ப். 24 பாரதி)
இது கற்பிற்கே சிறந்த பத்து மெய்ப்பாடுகளுள் ஒன்று.
புரையறம் தெளிந்த அறிவினளாயினும், புலவியானது புணர்ச்சி வகையைத் தோற்றுவித்தலின், தலைவன்மாட்டுச் செல்லும் தன் பேரன்பினைத் தலைவி அவற்குப் புலப்படாது மறைத்தல். இதுவும் உவகைக்குப் பொருள்.
(தொ. மெய்ப். 24 ச. பால.)
ஆ
இது மருட்கை என்னும் மெய்ப்பாட்டிற்குரிய குறிப்பு நான்கனுள் இறுதியானது. (தொ. மெய். 7)
ஆக்கமாவது ஒன்றன் வளர்ச்சி கண்டு வியத்தல்.
எ-டு : நன்னிலம் சார்பாகத் தோன்றும் மரம் முதலாயின தம் அளவின் மீறி வளர்ந்தவழி வியத்தலும், யாதொன்றும் இல்லாத வறியவன் செல்வனாயவழி அதற்குக் காரணம் உணராதான் வியத்தலும், இளையான் வீரம் கண்டு வியத்த லும், பிறவும் உலகியலில் வியக்கத் தகுவன கண்டு வியத்தலும் போல்வன.
வினைமுடித்து மீண்ட தலைவன், தேரினைப் பாகன் விரை வில் செலுத்தி ஊர் அடைந்தமை கண்டு வியத்தல் போல்வன. (அகநா. 384 இள.)
ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்ட அளவில் தம் நோய் நீங்கி நரிவெரூஉத்தலையார் தம் பழைய உடம்பு பெற்றமை தன்கண் தோன்றிய ஆக்கம் பற்றிய வியப்பாகும். சிறிய ஆலம்விதை பெரிய மரமாதல் (நாலடி. 38) பிறபொருட்கண் தோன்றிய ஆக்கம் பற்றிய வியப்பு. (பேரா.)
ஆக்கம் - அறிவுடை மக்கள் சமைப்பாலாவது. ஆக்க மருட்கை செயற்கையில் தோன்றும் அரும்பொருள்கள் விளைக்கும் வியப்பாகும். வானஊர்தி, பேசும்படம், வானொலி போல்வன ஆக்க மருட்கை. (பாரதி.)
தலைவி அறத்தினை அழித்துக் கூறுமிடத்து, “என் நெஞ்சம் தலைவன் வாராவிடில் ‘வரவில்லையே’ என்றும், வந்தால் ‘பிரிந்துவிடுவானே’ என்றும் எப்பொழுதும் துன்பப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.” (குறள் 1295) என்றாற் போலத் தன்வாழ்க்கை துன்பமாகிவிட்டமை நினைந்து மனம் நோதல். (பொ. 266 இள.)
களவிலும் கற்பிலும் பிரிவிடைத் தெய்வத்தை வழிபட்டு உரைக்குங்கால், “ஞாயிறே! என்னை வருந்துமாறு விடுத்துப் பிரிந்த என் தலைவனைத் துன்புறுத்துவது உன் கருத்தாயின், அவனோடு சேர்த்து என்னையும் துன்புறுத்தி அழித்துவிடு” எனத் தலைவி தன் நிலை கலங்கிப் பேசுதல். (கலி. 143) (தொ. பொ. 270 பேரா.)
சொல்லளவில் அறன் அழிவது போலக் கூறிய தலைவி, பின் அங்ஙனம் கூறியதற்கு மனம் வருந்தி, “தோழி! நமக்கு நம்தலைவர் நம்தாயும் தந்தையும் போல்வார். நம் உயிர் போவதாயினும் அவரைக் குறை கூறுதல் கூடாது.” (குறுந். 93) என்றாற் போலக் கூறுதல். (மெய்ப். 22. பாரதி)
இது பெருந்திணை மெய்ப்பாடு என்பது இளம்பூரணர் கருத்து. களவிற்கும் கற்பிற்கும் பொதுவாகப் பிரிவிடை நிகழும் மெய்ப்பாடு என்பது ஏனையோர் கருத்து.
ஹாஸ்யம் என்னும் நகைச்சுவை. (L)
தலைவன் தலைவி ஆகிய இருவர்க்கும் கூறப்படும் பத்துவகை ஒப்பினுள் ஒன்று.
ஆண்டு என்பது ஒருவரின் ஒருவர் மூத்தவர் ஆகாமல் ஒத்த பருவத்தர் ஆதல். அது பதினாறு பிராயத்தானும் பன்னி ரண்டு பிராயத்தாளும் ஆதல். (தொ. பொ. 90 இள. உரை))
யாண்டு என்பது ஒத்தவாறு என்னையெனில், பன்னிரண்டு ஆண்டும் பதினாறு ஆண்டுமே பெண்மையும், ஆண்மையும் பிறக்கும் பருவம் என்பது வேத முடிவு ஆதலின், அதுவும் ‘ஒப்பு’ எனவேபடும். (தொ. பொ. 273 பேரா.)
ஆண்டு - காமக்குறிப்புத் தோன்றிய பருவம். பொ.260 குழ.
‘என்தோள் எழுதிய தொய்யிலும்’ (கலி. 18)
என்பதனால், தலைவி தொய்யில் எழுதிக்கொள்ளும் பருவத் தாள் எனவும் தலைவன் அவள்தோளில் தொய்யில் எழுதும் பருவத்தான் எனவும் இளமைச்செவ்வி ஒத்தவாறு.
(தொ. பொ. நச். உரை)
தலைவன் தலைவி ஆகிய இருவருக்கும் கூறப்படும் பத்து வகை ஒப்பினுள் ஒன்று.
ஆண்மையாவது ஆள்வினையுடைமையும் வலி பெயராமை யும் ஆம். தலைவிமாட்டுப் பெண்மையும் கொள்ளப்படும். அது பெண்டிருக்கு இயல்பாகிய நாணம் முதலாயினவும் பெண்ணீர்மையும். (தொ. பொ. 90 இள. உரை)
ஆண்மை - ஆள்வினை; அஃது ஆண்பாற்கு உரியது. குடி யாண்மை என்புழி, ஆண்மை இருபாலார்க்கும் உரித்து. (273 பேரா.)
ஆண்மை - ஆளும் திறம். இது காதலர்க்கு இன்றியமையா ஒப்புவகையுள் ஒன்று எனப்படுதலின், இருபாலார்க்கும் பொது. மனையாட்டி, அயலில்லாட்டி, பெண்டாட்டி, வினையாட்டி என்பவற்றாலும் பெண்பாலார்க்கு ஆளும் தொழில் உண்டென்பது தெளியப்படும். (தொ. பொ. மெய்ப். 25 பாரதி)
தலைவன் ஊக்கத்தொடு பொருள் தேடப் பிரிய அவன் வருமளவும் தலைவி இல்லிருந்து நல்லறம் செய்தல் இருவ ருக்கு முரிய ஆண்மைச் செயல்களாம். (அகநா. 93)
ஆண்மையாவது ஆளுந்தன்மை. அஃது ‘ஆயிடை இரு பேராண்மை செய்த பூசல்’ (குறுந். 43) என இருபாலையும் உணர்த்திற்று. எனவே, ஆண்மை தலைவற்கும் தலைவிக்கும் ஒப்ப உரித்து. (தொ. சொ. 57 நச்.)
ஆராய்ச்சி என்பது ஒருபொருளைக் குறித்து அதன் இயல்பு எத்தன்மைத்தென ஆராய்தல்.
ஆராய்தல் எனினும், தெரிதல் எனினும், தேர்தல் எனினும், நாடல் எனினும் ஒக்கும்.
‘நன்மையும் தீமையும் நாடி’ (குறள். 511)
‘ஆயும் அறிவினர்’ (குறள். 918)
என ‘ஆராய்தல்’ தோன்றியவாறு. (தொ. பொ. 256 இள.)
ஆராய்ச்சி என்பது ஒரு பொருளை நன்றென்றும் தீதென்றும் ஆராய்தல். அவ்வாராயும் உள்ளக்குறிப்புப் புறத்தே புலனா வது மெய்ப்பாடாம். இது துணைமெய்ப்பாடு முப்பத்திரண் டனுள் ஒன்று. (260 பேரா.)
காட்சி, வேட்கை முதலாகச் சாக்காடு ஈறாகச் சொல்லப் பட்ட பத்து அவத்தையுள் ஆறாம் அவத்தையாகும் நாணு வரை இறத்தல் என்பதன்கண் தலைமகட்கு நிகழும் மெய்ப் பாடுகள் புறம்செயச் சிதைதல், புலம்பித்தோன்றல், கலங்கி மொழிதல், கையறவுரைத்தல் என்னும் நான்குமாம். (தொ. பொ. 262 இள.)
இவற்றைக் களவில் புணர்ச்சிக்குப் பின் தலைவிபால் நிகழும் மூன்று பகுதியவான மெய்ப்பாடுகளுள் மூன்றாம் பகுதிக்கு உரியனவும், பொதுவாகக் களவின் ஆறாம் பகுதிக்கு உரியன வும் ஆகிய மெய்ப்பாடுகள் என்பர் பேராசிரியர். (266 பேரா., 253 குழ.)
இவை நான்கும் மாறாக் காதலின் ஆறாங்கூறு பற்றிய மெய்ப்பாடுகள் என்பர் பாரதியார். (மெய்ப். 18)
இ
இது பெருமிதம் என்னும் மெய்ப்பாட்டுக்குரிய குறிப்பு நான்கனுள் மூன்றாவது. இசைமையாவது இன்பமும் பொருளும் மிகுதியாகக் கிட்டுவன ஆயினும், பழியைத் தரும் செயல்களைச் செய்யாமை.
‘கழியக் காதலர் ஆயினும் சான்றோர்
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்’ (அகநா. 112 : 11, 12)
என இவ்வெஃகாமைக்கு ஏதுவாகிய பெருமிதக் குறிப்பு இவ்வடிகளில் இசைமை எனப்பட்டமை காண்க. (தொ. பொ. 257 பேரா.)
கைம்மிகல் முதல் கனவு ஈறாகிய எட்டும் இடந்தலைப் பாட்டுக்கு உதவும் துணை மெய்ப்பாடுகள் என்பது சோம சுந்தர பாரதியார் கருத்து.
கைம்மிகல் : அடங்காத காதல் பெருக்கு. ‘காதல் கைம்மிக’ ‘காதல் கைம்மிகல்’ (பொ. 115 நச், 271 பேரா.) என்பன தொல்காப்பியம்.
நலிதல் : மெலிவு : அஃதாவது வலிஅழிவு.
சூழ்ச்சி : நேராக் கூட்டம் (-முன்பு இடையீடுபட்ட களவுப் புணர்ச்சி) நிகழ, வழி ஆராய்தல்.
வாழ்த்தல் : காதலால் நெஞ்சையும் பிறவற்றையும் வாழ்த்தல்.
‘வாழி என் நெஞ்சே’ (குறள் 1242)
‘நீ வாழி பொழுது’ (குறள் 1221)
‘வாழி அனிச்சமே’ (குறள் 1111)
‘காதலை வாழி மதி’ (குறள் 1118)
‘புன்கண்ணை வாழி மருள்மாலை’ (குறள் 1222)
என்பன போல வருவன காண்க.
நாணுதல் : வெள்குதல்
‘காமமும் நாணும்’ (குறள் 1163)
‘காண வந்து நாணப் பெயரும்’ (குறுந். 212)
என்பன காண்க.
துஞ்சல் : காதல் கனவுற உறங்கல்
‘கயலுண்கண் யான்இரப்பத் துஞ்சின்’ (குறள் 1272)
‘துஞ்சுங்கால் தோள்மேல ராகி’ (குறள் 1218)
அரற்று : வாய்விடல்; அஃதாவது உறக்கத்தில் தன்னை அறியாது மனத்துள்ள மறைவான கருத்தினை வெளியிடல்.
கனவு : தூக்கத்தில் தோன்றுவது; இதுவும் காதலின் கனிவினால் உண்டாவதாம்.
‘இன்துயில் எடுப்புதி கனவே’ (குறுந். 147)
எனத் தலைவன் கனாக் காண்டலும்;
‘கனவினான் என் எம்மைப் பீழிப்பது’ (குறள் 1217)
எனத் தலைவி கனாக் காண்டலும் போல்வன.
இவை எட்டும் இடந்தலைப்பாடு என்னும் இரண்டாம் காதல் நிலைக்குச் சிறப்பாக உரியனவாம். (தொ. பொ. மெய்ப். 12 பாரதி)
இடுக்கண் என்பது துன்புறுதல். கையாறு என்பது இன்பம் பெறாமையால் வரும் துன்பம். இடுக்கண் - துன்பமாயின ஒருவனை வந்தடைதல்.
‘இடுக்கண் அடுக்கி வரினும்’ (குறள் 625) என்பதனால் துன்பம் பலவாகத் தொடர்ந்தும் ஒருவனை வந்தடைதல் பெறப்படும். (256. இள.)
இடுக்கண் என்பது மலர்ந்த பார்வையின்றி மயங்கிய பார்வை யோடு இருக்குமாறு துன்புறுதலால் உள்ள, பரிதாபமான நிலை. துன்பம் தாக்கியதால் கண் இடுங்கியதால் இடுக்கண் எனப்பட்டது.
இது துணைமெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று.
(260 பேரா.)
கையாறு மனத்தின்கண் நிகழ்வது; இடுக்கண் உடம்பினும் மனத்தினும் சேர்ந்து நிகழ்வது. (தொ. பொ. இள)
வடநூலார் இதனைச் ‘சிரமம்’ என்பர்.
இடுக்கண் - பெருநோக்கின்றிக் குறுகிய நோக்கத்தால் வரும் இரக்கம். (247 குழ.)
உடைமை முதல் அன்பு ஈறாகிய எட்டும் இயற்கைப் புணர்ச் சிக்குதவும் துணை மெய்ப்பாடுகள் என்பது சோமசுந்தர பாரதியார் கருத்து.
உடைமை : அன்பின் வழித்தாகும் உரிமை உணர்வு. தலைவன் தலைவி இருவரும் ஒருவர் மற்றவர்க்குப் பொரு ளாதல் காதலின் முதற்படி.
இன்புறல் : ஒருவர் மற்றவர்க்கு உடைமையாகும் உரிமை யுணர்வால் விளையும் மகிழ்ச்சி.
நடுவுநிலை : காதலும் கடமையும் ஒன்றோடொன்று மோது மாறு இடம் கொடுக்காத மனச்செம்மை; தன்னை மறக்கும் கற்புக் காதலின் உணர்வு இது.
அருளல் : தவறு உணரா அன்பின் பெருக்கம். ‘காணுங்கால் காணேன் தவறாய’ (குறள் 1286) என்னும் மனநிலை.
தன்மை : தான் அதுவாகும் இயல்பு; ‘நோக்குவ எல்லாம் அவையே போறல்’ என்னும் மனமாட்சி (தொ. பொ. 100: 3 நச்.)
அடக்கம் : தன் தலைமைநிலை மறந்து காதலால் மனமொழி மெய்யால் பணிதல். மறை பிறர் அறியாமல் காக்கும் நிறை எனினுமாம்.
வரைதல் : நாணத்தின் எல்லையைக்கடந்து முன் உவந்தன பலவற்றையும் வெறுத்து விலக்கும் மனநிலை. இது காதலின் எழுவது.
அன்பு : அருட்கு முதலாகி மனத்தின்கண் முற்பட நிகழ் வது.
இவை எட்டும் காதலின் முதல் நிலையாம் இயற்கைப் புணர்ச்சியொடு தொடர்வன.
(தொ. மெய்ப். 12 பாரதி)
காட்சி வேட்கை முதலாகச் சாக்காடு ஈறாகச் சொல்லப்படும் பத்து அவத்தையுள், இரண்டாம் அவத்தையாகும் வேட் கைக்கண் தலைமகளுக்கு நிகழும் மெய்ப்பாடுகள் கூழை விரித்தல், காதொன்று களைதல், ஊழணிதைவரல், உடை பெயர்த்துடுத்தல் என்ற நான்குமாம். (தொ. பொ. 258 இள.)
இவற்றைக் களவில் புணர்ச்சி நிகழுமுன் தலைவிக்கு நிகழும் மூன்று பகுதியவாகிய மெய்ப்பாடுகளுள் இரண்டாம் பகுதிக்குரிய மெய்ப்பாடுகள் என்பார் பேராசிரியர்.
(தொ. பொ. 262 பேரா.)
இவை நான்கும் திரண்டெழும் அன்பின் இரண்டாம் கூறு பற்றிய மெய்ப்பாடுகள் என்பர் பாரதியார். தொ.மெய்ப். 14
தலைவனிடம் உள்ள வேட்கை மிகுதியால் அவன் பிரிந்த விடத்துத் தலைவி தான் பண்டு விரும்பிய பொருள்களை யெல்லாம் இப்பொழுது வெறுத்தல்; பூவும் சாந்தும் அகிலும் ஆரமும் முதலாயின விரும்புதலைத் தவிர்தல். இந்நிலைக்குக் காரணம் தலைவியது உள்ளத்தை உள்ளவாறு உணர்ந்தவர்க்கே புலனாம் ஆதலின் இந்நிலை அகமெய்ப் பாடுகள் 32இல் ஒன்று (கா. 90) (வீ. சோ. 96 உரை மேற்.)
தலைவன் தன்னைத் தீண்டியதால் தன்கண் ஏற்பட்ட மனநெகிழ்வைப் போக்கத் தலைவி மிகமுயன்றும் இயலாது போகவே, நிறையழிதலின், கைகள் தாமே தலைவனைத் தழுவ அமைவாக இருப்பனபோலத் தலைவி இருகைகளையும் முன்பக்கத்தே விரித்து அசைத்தல்.
தலைவனைத் தழுவத் தலைவி இருகைகளையும் விரித்து அசைத்தல். இது மூன்றாம் அவத்தையின் நான்காம் மெய்ப் பாடு என்பர் இளம்பூரணர். களவில் புணர்ச்சிக்கு முற்பட்ட மூன்று பகுதிப்படும் 12 மெய்ப்பாடுகளுள் இது 3ஆம் பகுதி யின் இறுதி மெய்ப்பாடு என்பர் ஏனையோர்.
இம்மெய்ப்பாடு தோன்றிய பிறகு தலைவன் தலைவியரிடை இயற்கைப் புணர்ச்சி நிகழும். (தொ. பொ. 263 பேரா.)
இருகையும் எடுத்தலாவது, தலைவன் தன்னைத் தழுவும் குறிப்பொடு நெருங்குமிடத்து, தலைவி நாணம் மீதூர்தலான் தனது முகத்தினை மறைத்துக்கொள்ளும் கருத்தொடு கைகளை முகம் நோக்கி எடுத்தல். களவியலுள் ‘இடையூறு கிளத்தல்’ என்னும் கிளவிக்கு உரியதாய் நிகழும் மெய்ப் பாட்டுப் பொருள் இஃதாம். இஃது உவகைக்குப் பொருளாக அமையும். இடைக்காலத்தார் இப்பொருளை ‘நாணிக் கண் புதைத்தல்’ என்ற துறையாகக் கூறுவர். (தொ. மெய்ப். 15 ச. பால)
தலைவனிடத்துள்ள வேட்கைமிகவினால் அவனை இன்றி இல்லத்தில் எங்கிருத்தற்கும் அமைதியின்றி எந்த வோரிடத் தும் தொடர்ந்து அமர்ந்திராது அடிக்கடி இடம் பெயர்ந் திருத்தல்.
இந்நிலைக்குக் காரணம் உள்ளத்தை உள்ளவாறு உணர்ந் தார்க்கே புலனாவதாதலின், இஃது அகமெய்ப்பாடுகள் 32இல் ஒன்றாவது. (நா. 90) (வீ. சோ. 96 உரை. மேற்.)
இருவகை நிலன்களாவன சுவைக்கப்படு பொருளும், அதனைச் சுவைக்கும் பொறிகளின் சுவையுணர்வும் ஆம். வேம்பு என்னும் சுவைக்கப்படுபொருளும், அதனைச் சுவைக்க வேண்டிய நா என்னும் பொறியும் தனித்தனி நின்றவழிக் கைப்புச் சுவை பிறவாது, இரண்டும் சேர்ந்தவழியே கைப்புச் சுவை பிறக்கும். அதுபோல, அச்சத்துக்கு முதலாகிய விலங்கும் அதனைக் காணும் கண்ணின் பார்வையும் தனித் தனி நின்றவழி அச்சச்சுவை பிறவாது, அவையிரண்டும் சேர்ந்தவழியே அச்சச்சுவை பிறக்கும் என்பது.
சிலர் அனுபவிப்பவனுடைய அனுபவம் காண்பவர்க்கு எய்துதலே இருவகை நிலம் என்ப.
வேம்பு சுவைத்தவன் அறிந்த கைப்பு உணர்வினை நாவுணர் வினால் பிறன் உணர முடியாது. ஆயின் “இவன் வேம்பு சுவைத்தவன்” என, அவன்முகத்தைப் பார்த்து அதன்கண் காணப்படும் மெய்ப்பாடுகளாலேயே அறிவான். அதுபோல, அச்சத்துக்கு ஏதுவாகிய புலி முதலியன கண்டு அஞ்சி ஓடி வருகின்றவனை மற்றவன் கண்டவழி, “இவன் அஞ்சி வருகின் றான்” என அறிவதல்லது தான் புலியினைக் கண்டான் போல அச்சம் கொள்ளான். ஆகவே, அஞ்சினானைக் கண்டு நகுதலும் கருணை செய்தலும் கண்டோர்க்குப் பிறப்பதன்றி அச்சம் பிறவாதாகலின், சுவைப்போன் நிகழ்த்திய சுவையைக் கண்டு “இவன் சுவைத்தான்” என்று அறிந்தவன் தன் அறிவுத் தன்மையினால் அச்சுவையினைப் பெறான் ஆதலின், சுவைக் கப்படுபொருளும் அதனை நுகர்ந்த பொறியுணர்வுமே இருவகை நிலம் எனப்படும். (தொ. பொ. 249 பேரா.)
தலைவன்பால் இல்லாத குறிப்பினை அவன்மாட்டு உளதாகக் கொண்டு தலைவி வெகுளுதல்.
தலைவன் சான்றோர்களையே கண்டு தங்கினான் ஆயினும், அவன் கூறியதை நம்பாமல் அவன் பரத்தையரிடம் சென்று தங்கினான் என்று (கலி. 93) தலைவி தலைவனிடம் இல்லாத ஒன்றை அவனிடம் உள்ளதாகக் கொண்டு வெறுத்தலைப் புலப்படுத்தும் மெய்ப்பாடு இது. கற்பிற்கே சிறந்த பத்து மெய்ப்பாடுகளுள் இதுவும் ஒன்று. (தொ. பொ. 272 பேரா.)
இல்வலி - தன்பால் இல்லாத வலிமை. தலைவன் தலைவியைத் தீண்டியவழி ஏற்பட்ட மனநெகிழ்வால் தலைவியின் கூந்தல் அணிகலன்கள் ஆடை முதலியன நெகிழவும், தன்னிடம் இல்லாததொரு வலிமையை இருப்பதாகக் கொண்டு தலைவி ஆடை அணி முதலியவற்றை முன்போல் இருக்குமாறு ஏற்ப அமைத்துக் கொள்ள முயலுதல்.
இல்லாத வலிமையினைப் படைத்துக் கொண்டு செயற்படல் இற்பிறப்பால் வந்த வலிமை என்று பொருள் செய்வர் இளம்பூரணர். அது பொருந்தாது, இவ்வளவெல்லை சிதைய இடங்கொடுத்த இற்பிறப்பு இனிமேல் வந்து செய்யக் கூடியது ஒன்றுமில்லை யாதலின். (பேரா.)
இது மூன்றாம் அவத்தையின் மூன்றாம் மெய்ப்பாடு என்பர். இளம்பூரணர் (தொ. பொ. 259.)
களவில் புணர்ச்சிக்கு முற்பட்ட முக்கூற்று மெய்ப்பாடுகளுள் இது மூன்றாம் கூற்றின் மூன்றாம் மெய்ப்பாடு என்பர் ஏனையோர். (தொ. பொ. 263 பேரா.)
இல்வலியுறுத்தலாவது, தலைவன் தனது மெய்தொட்டுப் பயின்று முன்னிலையாக்கி இடம்பெற்றுத் தழுவ முற்பட் டுழி, பாலது ஆணையான் உள்ளம் அவன்வழிச் சேறலைத் தனது மடப்பத்தான் தகைத்தற்பொருட்டு, எதிலார் போலப் பொதுநோக்கு நோக்கித் தனது இற்பிறப்பின் மாண்பினைத் தலைவி வலியுறுத்தலாம். இது பெருமிதத்திற்குப் பொருளாக அமையும். (தொ. மெய்ப். 15 ச. பால.)
இஃது அழுகை என்னும் மெய்ப்பாட்டிற்குரிய குறிப்பு நான்கனுள் இரண்டாவது.
இழவு - உயிரானும் பொருளானும் இழத்தல். (தொ. பொ. 249 இள.)
தந்தை தாய் முதலிய சுற்றத்தாரையும், இன்பம் பயக்கும்
நுகர்ச்சி முதலானவற்றையும் இழத்தல். (53 பேரா.)
எ-டு : ‘தன் நிலைமையையும் இழந்து துணைவர்களையும் நீங்குதல்; பிரிதல் துயரத்தால் நீங்காத அழுகுரலும் ஒலியும்.’ (249 இள.)
கணவனை இழந்த தலைவி அவனுக்குப் பலிக்கொடை நேர்தற்குக் கண்ணீரே நீராக நிலத்தை மெழுகுதல் (புறநா. 249) தன்கண் தோன்றிய இழவுபற்றிப் பிறந்த அவலம்.
தலைவன்பிரிவால் தலைவி வருந்த, அதனைப் பார்த்துத் தோழியும் வருந்துதல் (அகநா. 73) பிறன்கண் தோன்றிய இழவு பற்றிய அவலம். (253 பேரா.)
மூப்பும் பிணியும் துயரமும் காரணமாக வெறுப்பை யுண்டாக்கும் பொருளற்ற செயலும் மொழியும் இச்சுவை பயப்பன. இழிப்பு - இளிவரல் (நாடக. 50)
இழிப்பு - அருவருப்பு. பொருள்களிலும் நிகழ்ச்சிகளிலும் குற்றமும் கூச்சமும் விளைவிக்கும் இயல்புகளைக் காண்பதால் நேரும் அருவருப்பு. இஃது இழிப்பு என்னும் சுவையின் நிலைக்கருத்து. இழிப்பினை வடநூலார் குச்சை என்ப. அது ஜுகுப்ஸை எனவும்படும். (நாடக. 54)
இழிப்பு, இளிவரல், அருவருப்பு, பீபத்ஸம் என்பன ஒரு பொருட் கிளவி. கூச்சத்தால் சுருங்கி நெருங்கிய கண்களுடை மையும், பற்கள் வெளியே தெரிதலும், முகம் கூம்பி வேறுபட லும், கைகால்கள் செயலற்றுப் போதலும், உடற்சோர்வும் உரை குழறுதலும், இவை போன்ற பிறவும் இழிப்பிற்கான அவிநயங்கள். (நாடக. 249)
நகை என்னும் மெய்ப்பாடு தோன்றுதற்குரிய குறிப்பு நான்கனுள் இரண்டாவது.
இளமை - தன் இளமையான் பிறரை நகுதலும், பிறர் இளமை கண்டு தான் நகுதலும் (தொ. பொ. 252 பேரா.)
அறிவு முதிராப் பிள்ளைமை - மெய்ப் 4 பாரதி.
குழவி கூறும் மழலை (248 இள.)
திருமணம் நடந்த அண்மையில் தலைவன் தான் வேற் றூர்க்குப் பிரிந்து செல்லப் போவதாகக் கூறித் தலைவியை நடுங்கவைத்துத் தான் நகுதல், தலைவனிடம் தன் இளமை பொருளாகத் தோன்றிய நகை. (கலி. 13) குழந்தையது இனிய மழலைமொழி கேட்டுத் தாய் நகுதல், பிற பொருட்கண் தோன்றிய இளமை பொருளாகத் தனக்குத் தோன்றிய நகையாம். (அகநா. 16) (252 பேரா.)
இழிப்புச்சுவை. காண்க (தொ. பொ. 251 பேரா.)
இளிவரல் - அருவருப்பைத் தோற்றுவிக்கும் பொருள்களைக் கண்டவழி மனத்தில் விளையும் பொருளாவது.
மூப்பு, பிணி, வருத்தம், மென்மை என்னும் நான்கு குறிப்பும் பற்றி இளிவரல் பிறக்கும்.
இவை தன்கண் தோன்றிய மூப்புப் பற்றிய இளிவரல் பிறன்கண் தோன்றிய மூப்புப் பற்றிய இளிவரல், தன்கண் தோன்றிய பிணி பற்றிய இளிவரல், பிறன்கண் தோன்றிய பிணி பற்றிய இளிவரல், தன்கண் தோன்றிய வருத்தம் பற்றிய இளிவரல், பிறன்கண் தோன்றிய வருத்தம் பற்றிய இளிவரல், தன்கண் தோன்றிய மென்மை பற்றிய இளிவரல் பிறன்கண் தோன்றிய மென்மை பற்றிய இளிவரல் - எனத் தன்கண் தோன்றுவன, பிறன்கண் தோன்றுவன என்ற பாகுபாடு பற்றி எட்டாதலும் உரிய.
இவையே யன்றி, வீரம் பற்றிய இளிவரலும் உண்டு.
(254 பேரா.)
உயிர்வாழ ஒல்லாமல் மானம் குன்ற வரும் இழிநிலையே இளிவரல். (மெய்ப். 6 பாரதி)
இளிவரலானது நாற்றம், சுவை, தோற்றம், ஊறு என்ற நான்கு குறிப்புப் பற்றி வரும் என்பது வீரசோழிய உரை. (கா. 96)
அழுகை என்ற மெய்ப்பாட்டுக்குரிய குறிப்பு நான்கனுள் இது முதலாவது
இளிவு - பிறர் தன்னை எளியன் ஆக்குதலால் பிறப்பது.
(தொ. பொ. 249. இள.)
எ-டு :
‘தலைமை சான்ற தன்நிலை அழிதல், சிறைப்படு
துயரமொடு
செயலற்றிருத்தல், முடியுடைச்
சென்னி பிறர் அடியுறப்
பணிதல், நிறங்கிளர் அகலம் புழுதி படிய இருத்தல்’ இள.
தன்னைத் தலைவன் எள்ளித் தன் தொடர்பினை விட்டு விட்டான் என்பது கருதிப் பரத்தை தன் செயற்கையழகு சிதைய அழுதேங்கிக் கைவிரல்களைத் திருகிக்கொண்டு அவன்பழி தூற்றுதல், அவளுக்குத் தன்கண் தோன்றிய இளிவு பற்றிய அழுகை. (அகநா. 176)
தலைவன் தன்பெருமைக்கு ஏலாமல் நடந்து கொள்வதைப் பார்த்துத் தோழி தானும் துயர்உறுவதாகக் கூறுவது பிறன்- கண் தோன்றிய இளிவரல் பற்றிய அழுகை. (கருணையான் நிகழ்வது) (கலி. 37) (253 பேரா.)
இளிவு - பிறர் இகழ்வால் பிறக்கும் அவலம்; பழியை வெளிப் படுத்தும் இளிவரலன்று. தலைவனைத் தலைவி ‘பன்மாயக் கள்வன்’ (குறள் 1258) என்றும், தன் மகனை ‘மகனல்லான் பெற்ற மகன்’ (கலி. 86) என்றும் கூறுவது போல்வன இதற்கு எடுத்துக்காட்டு. (மெய்ப். 5 பாரதி)
நிலவும், சாந்தும், பூவும் முதலாக இன்பம் தரும் பொருள் களைத் தலைவி வெறுத்தல்
தலைவனுடைய கூட்டத்தின் முன்னும் அவனோடு உடனுiற யும்போதும் தனக்கு இனியவாகிய பொருள்களே தலை வனைப் பிரிந்து களவிலும் கற்பிலும் தனித்திருக்கும் தலைவிக் குத் துன்பம் தருதலின், நிலவு தென்றல் முத்துமாலை கண்ணி முதலிய இன்பப் பொருள்களை வெறுத்துப் பழித்தல். தலைவிமாட்டு நிகழும் இந்நிலை பிரிதல்துன்பமுறும் தலைவற்கும் உண்டு.
இதனைப் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு என்பர் இளம் பூரணர். (தொ. பொ. 266)
அன்புத் திணையில் தனிப்படர்மெலிவின் துனி நனி விளக்கும் இம்மெய்ப்பாடு கற்பிற்குச் சிறந்து களவிற்கும் கொள்ளப் படும் என்பர் ஏனையார். பிரிவிடை நிகழும் இம்மெய்ப்பாடு ஆராய்ந்துணரின் புணர்ச்சிக்கு நிமித்த மாகும். (270 பேரா.)
துன்பம் நீங்கித் தெளிவுற்ற உடம்பும், நிறைந்து வழியும் பெரு மகிழ்ச்சியும், காரணமின்றி அங்குமிங்கும் மிகவும் அதிகமாய் நடமாடலும், அழகுடைய இன்சொல் பேசலும், நறுமண மலர் கொண்டிருத்தலும், தோளிலும் மார்பிலும் அணிந்து நீக்கிய அணிகளுடைமையும் போன்றவை இன்பம் அனுபவிப் பவனுக்குரிய அபிநயங்கள். இவை அடியார்க்கு நல்லார் உரைப்பன. (நாடக. 253)
இது நற்காமத்துக்கு ஆகாத மெய்ப்பாடுகளுள் ஒன்று. இன்புறல் - ஒருவர் ஒருவரின் தாமே இன்புறுகின்றாராக நினைத்தல். இங்ஙனம் நினைக்கும் இன்பம் காதல் இல்லற வாழ்வின் சிறப்பிற்கு ஏதம் பயத்தலின் விலக்கப்பட்டது. (தொ. பொ. 274 பேரா.)
துணை மெய்ப்பாடு 32-இல் இதுவும் ஒன்று. இன்புறல் - நண்பர்களாகிச் சிலகாலம் பிரிந்து மீண்டும் மருவ வந் தோரைக் கண்டவழி நிகழ்வதொரு மன நிகழ்ச்சி போல்வது.
காணாமற்போன பொருள் மீண்டும் கிட்டியக்காலும், எடுத்துக்கொண்ட வினை இடையூறின்றி முடிந்தக்காலும், பிரிந்து சென்ற நண்பரைப் பல ஆண்டுகட்குப் பின்னர்க் கண்டக்காலும் ஏற்படும், காம நுகர்ச்சியின்றி வரும் இன்புறல். (தொ. பொ. 256 இள.)
தான் செலவிடாது ஈட்டிவைத்துள்ள செல்வத்தை அவ்வப் போது நினைத்துப்பார்க்குமிடத்தெல்லாம் பிறக்கும் மனமகிழ்ச்சி. இதுமனத்தின் நிகழ்ச்சியை வெளிப்படுத்தலின் மெய்ப்பாடாயிற்று. (இதனை வடநூலார் ‘ஹர்ஷம்’ என்பர்)
(260 பேரா.)
இன்புறலாவது, தம் உடைமைசெயல்களைப் பற்றித் தாமே மகிழ்தல். (தொ. மெய்ப். 12 ச. பால.))
உ
உணவு உண்ணாமை உயிரைத் தாக்காது உடம்பைத் தாக்க, பிரிதல்துயரோடு உணவின்மையும் வருத்துவதால் உடல் நாளும் மிக மெலிதல்.
இது பிரிதல்துயரால் உணவை வெறுத்து உடல் மெலிய நிற்கும் காதலியல்பு கூறுகிறது.
இதனைப் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர். (தொ. பொ. 266)
அன்புத் திணையின் தனிப்படர் மெலிவின் துனி நனி விளக்கும் இம் மெய்ப்பாடு கற்பிற்குச் சிறந்து களவிற்கும் கொள்ளப் படும் என்பர் ஏனையோர்.
பிரிவிடை நிகழும் இம்மெய்ப்பாடு ஆய்ந்துணரின் புணர்ச் சிக்கு நிமித்தமாகும். (தொ. பொ. 270 பேரா.)
பிறர் தான் செய்ய வேண்டிய செயலைத் தாம் செய்வதாகச் சொல்ல, அதற்கு உடன்பட்டவனுடைய அவிநயங்கள். (இவை அடியார்க்கு நல்லார் காட்டுவன)
1. அச்செயல் தனக்கு முன் நிகழினும், அதன்கண் ஈடுபா டில்லாத மனநிலை,
2. அச்செயல் செய்ய உடன்பட்டவனது கையைப் பிடித்துக் கொண்டு அச்செயல் செய்வதை அவனிடம் ஒப்படைத்து மகிழ்தல்,
3. அச்செயலில் தான் இனி ஈடுபட்டுத் தொடர்ந்து செயற் படாதிருத்தல்.
4. அச்செயல் பற்றி மற்றவர் கூறுவனவற்றை மனத்தில் கொள்ளாதிருத்தல் - ஆகிய நிலைகளாகும். (நாடக. 253 உரை)
முதன்முதல் தலைவன் தன்னைத் தீண்டியவழித் தலைவி அவனது பரிசத்தால் ஏற்பட்ட உள்ள நெகிழ்ச்சியானே மயிர்முடி நெகிழ, காதணிகளுள் ஒன்று கழல, வளையல் முதலியன நெகிழ, அவற்றை ஏற்ப அமைத்துக்கொண்டவள் தன் உடையும் நெகிழ்வது போலத் தோன்ற அந்நெகிழ்ச்சி தீர உடுத்த உடையினைப் பலமுறை இறுக உடுத்தல்.
உடுத்த உடையினை நெகிழ்ச்சி நீங்கப் பலகாலும் இறுக்கி உடுத்துக்கோடலாம். (தொ. பொ. 262 பேரா.)
இஃது அகத்திணைக்கேயுரிய அவத்தை பத்தனுள் இரண்டாம் அவத்தையின் இறுதி மெய்ப்பாடு என்பர் இளம் பூரணர் (258).
களவில் புணர்ச்சிக்கு முற்பட்ட முக்கூற்று மெய்ப்பாடுகளில் இஃது இரண்டாம் கூற்றின் இறுதி மெய்ப்பாடு என்பது ஏனையோர் கருத்து.
இது துணை மெய்ப்பாடுகள் முப்பத்திரண்டனுள் ஒன்று.
உடைமை - யாதானும் ஒரு பொருளை உடையனா யிருத்த லால் வரும் மனநிகழ்ச்சி. அது நால்வகைப்படைகளையும் உடையராயிருத்தல் பற்றி (புறநா. 72) மன்னர் மனத்தில் தோன்றும் மெய்ப்பாடு (தொ. பொ. 256 இள.)
உடைமை - செல்வம்; செல்வத்தை அனுபவிப்பதாயின் அப்பொழுது செல்வம் உவகை என்ற மெய்ப்பாட்டிற்கு உரிய தாகும். செல்வத்தை அனுபவிக்காமல் அதனை நினைத்து நினைத்து இன்புறுதற்கு ஏதுவாகிய பற்று; செல்வம் தன் னிடத்து நிறையவுளது என்னும் நினைப்பால் வரும் மெய் வேறுபாடு இவ்வுடைமையாகும். இது மனத்தின் நிகழ்ச்சியை வெளிப்படுத்தலான் மெய்ப்பாடாயிற்று. (260 பேரா.)
இதனை வடநூலார் ‘ஒளத்சுக்யம்’ என்ப.
பசி அட நிற்றலே யன்றிச் சிறிது உணவு ஊட்டியவழிப் பண்டு போலாது மிகவும் சிறிதுண்ணுதல். அஃதாவது உற்றார் ஊட்டும் உணவை மறுப்பின் அவர்கள் வெகுள்வர் என்று அஞ்சித் தன் வெறுப்பினை மறைத்து உட்கொள்வது போன்ற பாவனையில் மிகக் குறைவாக உண்டுவைத்தல். ‘பசி அட நிற்றல்’ என்பது பிரிதல் துயரான் பசி என்பதனையே உணராத கைகடந்த காதல்நிலையைக் குறிக்கும். இஃது, எல்லைக்குட்பட்ட காதல்துயரால் உணவு சுவைக்காமை யால் மிகக் குறைவாக உண்டலைக் குறிக்கும். (தொ. பொ. 270 பேரா.)
இதனைப் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு என்பர் இளம் பூரணர் . (தொ. பொ. 266)
அன்புத் திணையின் தனிப்படர் மெலிவின் துனி நனி விளக்கும் இம்மெய்ப்பாடு கற்பிற்குச் சிறந்து களவிற்கும் கொள்ளப்படும் என்பர் ஏனையோர். பிரிவிடை நிகழும் இம் மெய்ப்பாடு ஆராய்ந்துணரின் புணர்ச்சிக்கு நிமித்தமாகும்.
(தொ. பொ. 270 பேரா.)
இது தலைவன் தலைவி ஆகிய இருவர்க்கும் கூறப்படும் பத்து வகை ஒப்பினுள் ஒன்று.
உணர்வு - அறிவுடைமை; அஃதாவது உலகியலான் செய்யத் தகுவது அறிதல்.
இரவுக்குறியில் அரிதின் முயன்று வந்த தலைவனைத் தலைவியும் இடையூறுகளைக் கடந்து வந்து சந்தித்துத்
‘தன்நசை உள்ளத்து நம்நசை வாய்ப்ப
இன்னுயிர் குழைய முயங்குதொறும்’ (அகநா. 22)
என்பதன்கண் இருவர் உணர்வும் ஒத்தவாறு.
(தொ. பொ. 273 பேரா.)
உணர்வாவது ஒருவர் ஒருவர்தம் உள்ளக்குறிப்பை அறிந் தொழுகும் நுண்ணுணர்வு. (தொ. மெய்ப். 25 ச. பால.)
முன்பெல்லாம் விடும் அளவு போலன்றி மிகுதியாக மூச்சு விடுதல்.
“தலைவியிடம் உள்ளத்தைச் செலுத்திய தலைவன் தனிமை யிற் கிடக்கும் யானை போல மிகுதியாகப் பெருமூச்சு விடுகின்றான்” (குறுந். 142) என்பதனால், அவன் உள்ளத்திருக் கும் காமநோயை அவன் உயிர்ப்பு வெளிப்படுத்தலின் மெய்ப்பாடாயிற்று. (தொ. பொ. 256 இள.)
உயிர்ப்பாவது வேண்டிய பொருளைப் பெறாதவழிச் செய லற்று நிற்கும் கருத்து. அது நெட்டுயிர்ப்பாகிய பெருமூச்சுக்கு அடிப்படை ஆதலின் அதனை ‘உயிர்ப்பு’ என்றார்.
இது துணைமெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று. (260 பேரா.)
இதனை வடநூலார் ஜடதை என்ப.
1. பெருங்கோபம் 2. வெகுளிச் சுவை. (தண்டி. 69)
இது தலைவன் தலைவி ஆகிய இருவர்க்கும் கூறப்படும் பத்து வகை ஒப்பினுள் ஒன்று.
உரு(வு) என்பது வனப்பு. (தொ. பொ. 90 இள.)
பெண்மை வடிவும் ஆண்மைவடிவும் பிறழ்ச்சியின்றி ஒருவர்க்கு ஒருவர் பொருத்தமாக அமைதல்.
இயற்கையன்பு வடிவு பற்றியல்லது தோன்றாமையானும், குணம் பற்றித் தோன்றுவன செயற்கையன்பு ஆகலானும் உருவமே அன்பிற்கு அடிப்படைக் காரணமாம்.
‘முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன
பல்லும் பணைத்தோளும்’ (கலி. 108)
என்றாற் போல்வன உருவு. (273 பேரா.)
கற்பனையாக வடிவம் கண்முன் தோன்றுதல் என்ற மெய்ப்பாடு.
தலைவன் தலைவி யென்னும் இருவரும் பிரிவிடை ஒவ்வொரு வரும் மனக்கண் முன் மற்றவர் உருவத்தைக் கற்பனை செய்துகொண்டு பிரிவுத்துயரம் மிகுதல். இஃது ‘எதிர்பெய்து பரிதல்’ எனவும் (தொ. பொ. 270 பேரா.) கூறப்படும்.
உவகையைத் தோற்றுவிக்கும் பொருள்களைக் கண்டவழி மனத்தில் விளையும் பொருள்.
செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு என்ற நான்கு குறிப்புப் பற்றியும் உவகை பிறக்கும்.
உவகை தன்கண் தோன்றிய பொருள் பற்றியே வரும்; சிறுபான்மை பிறன்கண் தோன்றிய இன்பம் பற்றி வருதலு முண்டு. பிறன்கண் தோன்றிய துன்பம் பற்றி உவகை கூர்தல் கடையாயினார் இயல்பு. (தொ. பொ. 259 பேரா.)
இவ்வுவகை என்னும் சிருங்காரம், இளமை வனப்பு வளமை கலவி என்ற நாற்குறிப்புப் பற்றி வரும் என்பது வீரசோழிய உரை. (கா. 96 உரைமேற்.)
தலைவன் செய்கின்ற தலையளிiயைத் தலைவி வெறுத்துக் கூறுதல். அஃதாவது தலைமகனான் பெற்ற அன்பு உள்ளதே ஆயினும், அதனை உண்மையென்றே தெளியாது, அதனை அருவருத்து நிற்கும் உள்ள நிகழ்ச்சி.
தலைவன் தலைவிபால் அன்பு கொண்டு இல்லத்துக்கு வரவும், தலைவி அவனை நோக்கி, “பரத்தையரைத் தேர் ஏற்றிக் கொண்டு வருமாறு பாகனை விடுத்து, அவன் வரக் காலதாமதம் ஆயினமையான் என்னையும் பார்த்துச் செல்லலாம் என்று இங்கு வந்துள்ளாய்!” (கலி. 69) என்றாற் போலக் கூறுதல்.
இது கற்பிற்கே சிறந்த பத்து மெய்ப்பாடுகளுள் ஒன்று.
(தொ. பொ. 272 பேரா.)
எள்ளல், இளமை, பேதைமை, மடன் என்னும் நான்கு குறிப் பும் பொருளாகப் பிறந்த நகை உள்ளத்தொடு பொருந்திய நகையாம். உள்ளத்தொடு பொருந்திய நகை எனவே, உள்ளத் தொடு பொருந்தாத நகையும் உண்டு என்பது. அது தலைவன் விரைவில், தன்னை விடுத்துப் பிரியப்போவதனை அறிந்த தலைவி தன் அழுகையை மறைத்துக்கொண்டு தலைவன் முன் பொய்ச்சிரிப்புக்கொண்டு வருதலாம். (அகநா. 5) (தொ. பொ. 252 பேரா.)
இருபுறமும் மாறி மாறிப் படுத்தும் மல்லாந்தும் குப்புறக் கவிழ்ந்தும் உறங்குதலும், மூச்சுப் பெரிதாக விடும் இயல்பும் உறங்கியவனுக்குரிய அபிநயங்கள். இவை அடியார்க்கு நல்லார் காட்டுவன. (நாடக. 253 உரை)
இது வெகுளி என்ற மெய்ப்பாட்டிற்குரிய குறிப்பு நான்கனுள் முதலாவது.
உறுப்பறை - அங்கமாயினவற்றை அறுத்தல். 254 இள. - கை குறைத்தலும் கால் குறைத்தலும் கண்ணை நீக்குதலும் முதலாயின. 258 பேரா. - உறுப்பின் ஊறு. மெய்ப். 10 பாரதி.
எ-டு : தன் பின்புறமாகத் தன் காதுகளின் மறைவைப் பயன்படுத்தித் தன்னைத் தாக்கிய புலியை வெகுண்டு யானை தாக்கிக் கொன்றது. (கலி. 52) என்றவிடத்து, புலி தன் உறுப்புக்களுக்கு ஊறு செய்த காரணத்தான் யானைக்கு வெறுப்பால் சினம் விளைந்தது; புலி யானையின் உறுப்புக்களுக்கு ஊறுசெய்யாவிடில் யானைக்குப் புலியைத் தாக்கவேண்டிய காரணமே இன்று. (தொ. பொ.258பேரா.)
(களவினும் கற்பினும்) தலைவி தலைவனுடைய பீடார் பெரும்புகழைப் பிறர்வாய்க் கேட்டு மகிழ்தல். (தொ. பொ. 270.பேரா.)
எ-டு : நீலமாலை என்னும் தோழி வில்லை வளைத்து முறித்த இராமனைப் பற்றி,
‘மராமரம் இவையென வளர்ந்த தோளினான்
அராவணை அமலனென்(று) அயிர்க்கும் ஆற்றலான்’ (கம்பரா. 724)
என்றாற்போலக் கூறியன கேட்டுச் சீதை மகிழ்ந்தமை போல்வன.
இதனைப் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர். (தொ. பொ. 266)
அன்புத்திணையின் தனிப்படர் மெலிவின் துனி நனி விளக்கும் இம் மெய்ப்பாடு கற்பிற்குச் சிறந்தது; களவிற்கும் கொள்ளப் படும் என்பர் ஏனையார்.
ஊ
நெகிழும் அணிகளை முறையாக மேல் நோக்கிச் செறித்துக் கொள்ளுதல்.
தலைவன் முதன் முதல் தலைவியைத் தீண்டிய அளவிலே அந்தப் பரிசத்தால் அவள் மனம் நெகிழ, அந்நெகிழ்ச்சியான் கூந்தல் அவிழக் காதணி ஒன்று கழன்றமையோடு ஏனைய அணிகளும் நெகிழ்வன போலத் தோன்ற, அந்நெகிழ்ச்சி நீங்கத் தலைவி வளையல் மோதிரம் முதலியவற்றை மேல் நோக்கித் தள்ளி இறுகச் செறித்தலாம்.(தொ. பொ. 262 பேரா.)
இஃது இரண்டாம் அவத்தையின் மூன்றாம் மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர். (258)
களவுப்புணர்ச்சியில், புணர்ச்சிக்கு முற்பட்ட முக்கூற்றுப் பன்னிரண்டு மெய்ப்பாடுகளில் இஃது இரண்டாம் கூற்றின் மூன்றாம் மெய்ப்பாடு என்பர் ஏனையார்.
எ
வீரம் அச்சம் இழிப்பு வியப்பு காமம் அவலம் உருத்திரம் நகை என்ற எண்வகைச் சுவையும், வீரக் குறிப்பு அச்சக்குறிப்பு இழிப்புக்குறிப்பு வியப்புக்குறிப்பு காமக்குறிப்பு அவலக்குறிப்பு உருத்திரக்குறிப்பு நகைக்குறிப்பு என இவ்வெண்வகைக் குறிப்பும் ஆகிய பதினாறும் எள்ளல் முதல் விளையாட்டு ஈறாகச் சொல்லப்பட்ட முப்பத்திரண்டு பொருளையும் (தொ.பொ. 248- 255) குறித்ததன் (குறித்து அவற்றின்) புறத்தே நிகழும். (தொ. பொ. 245 இள.)
சுவைக்கப்படுபொருளும் சுவையுணர்வும் வேறு நின்றவழிச் சுவை பிறவாமையானும், குறிப்பும் சத்துவமும் முறையே மனநிகழ்ச்சியும் உடம்பில் தோன்றும் வேறுபாடும் ஆகலா னும், சுவைப்பொருளையும் சுவையுணர்வையும் ஒன்றாக்கி குறிப்பையும் சத்துவத்தையும் ஒன்றாக்கி, இவற்றை வீரம் அச்சம் முதலிய எட்டனோடும் உறழ, முப்பத்திரண்டு பதினாறு ஆம். (தொ. பொ. 249 பேரா.)
எள்ளல் முதல் விளையாட்டு ஈறாகக் கூறப்பட்ட முப் பத்திரண்டு பொருளும் நான்கு நான்காய்த் தொகுத்து எண்ணப் படும். (மெய்ப். 1 பாரதி.)
வீரம் அச்சம் வியப்பு இழிபு காமம் அவலம் நகை வெகுளி என்னும் எட்டுக்குணங்களும் சுவைப்பொருள் - சுவைப் போன் - அவனது சுவையுணர்வு - அவன் வெளிப்படுத்தும் சத்துவம் - ஆகிய நான்கனோடும் உறழ்தலான் வருவன 32 பொருள்களாம்.
சுவை வெளிப்பாட்டினை விறல் என்னும் தமிழ்ச் சொல்லா னும் சத்துவம் என்னும் வடசொல்லானும் வழங்குவர். ஒருபொருளைச் சுவைத்தவன் வெளிப்படுத்தும் விறல் காண் போரிடத்து எழுப்பும் அவ்வுணர்ச்சியே நாடக நூலார் கூறும் சுவை (ரசம்) ஆகும். (தொ. மெய்ப். 1, 2 ச. பால)
நகை அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்பன. இவற்றுள் நகைக்கு மறுதலை அழுகை; இளிவரலுக்கு மறுதலை மருட்கை; அச்சத்துக்கு மறுதலை பெருமிதம்; வெகுளிக்கு மறுதலை உவகை.
வாழ்க்கைக்கு இன்றியமையாத நகையை முன்னரும் அதற்கு மறுதலையாகிய அழுகையை அதனை அடுத்தும், அழுகை யுடன் இயைபுடைய இளிவரலை அதனை அடுத்தும், தான் இளிவந்து பிறிதொரு பொருளை வியக்குமாதலின் வியப் பினை அதனை அடுத்தும், வியப்புப் பற்றியும் அச்சம் பிறத்த லின் அச்சத்தை அதனை அடுத்தும், அச்சத்திற்கு மறுதலை யாகிய வீரத்தை அதனை அடுத்தும் வீரத்தின் பயனாகப் பிறக்கும் வெகுளியை அதனை அடுத்தும், வெகுளிக்கு மறுதலையாகிச் சுவைகளுள் நகையைப் போலச் சிறந்த உவகையை அதனை அடுத்து இறுதிக்கண் ணும் வைத்தார். (தொ. பொ. 251 பேரா.)
இவற்றுள், நகை வியப்பு உவகை மூன்றும் அகப் பொரு ளுக்கே சிறந்து புறப்பொருளில் அருகி வரும்; ஏனைய அழுகை, இளிவரல், அச்சம். பெருமிதம், வெகுளி - என்பன புறப்பொருளுக்கே சிறந்து அகப்பொருளில் அருகிவரும்.
(ம. சூ. பக். 6)
கண்முன்னர்க் கற்பனையில் காணும் உருவெளித்தோற்றம். பிரிவிடைத் தலைவி தலைவனுடைய தேர் முதலானவற்றைத் தன் எதிர் கற்பனையால் ஏற்றுக்கொண்டு வருந்திச் செய லறுதலும், தலைவன் தலைவியின் துயர்தோய்ந்த வடிவைத் தன்னெதிர் பெய்துகொண்டு வருந்தலும் ஆம். (தொ. பொ. 270 பேரா.)
இதனைப் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு என்பார் இளம்பூரணர் (தொ.பொ. 266). அன்புத்திணையின் தனிப் படர் மெலிவின் துனி நனி விளக்கும் இம்மெய்ப்பாடு கற்பிற்குச் சிறந்து களவிற்கும் கொள்ளப்படும் எனவும், பிரிவிடை நிகழும் இம்மெய்ப்பாடு ஆராய்ந்துணரின் புணர்ச் சிக்கு நிமித்தமாகும் எனவும் கொள்வர் ஏனையோர்.
1. யாதானும் ஒரு பொருள் காணப்பட்டாலும் அதனைத் தன்னோடு ஒப்புமை கொள்ளுதல். தலைவி மாலைக் காலத்தை நோக்கி “மாலையே! நீ வருந்துகின்றாயே; நின் கணவனும் என்தலைவனைப் போலக் கொடியவனோ?” என்று வினவுதல் (குறள் 1222) போல்வன. (தொ. பொ. 266 இள.)
2. யாதானும் ஒரு பொருளைக் கண்டவிடத்தே அதனைத் தலைவனோடு ஒப்பிட்டு அவனிடம் பேசுதல். (கேட்ட பொருள் பற்றியும் ஒப்புமை கொள்வாள்.)
பிரிய நினையும் தலைவனிடம் “நீவிர் செல்லும் காட்டில் ஆண்மான்கள் பெண்மான்களைப் பிரிந்து வாழ்கின்ற னவா என்பதை நினைத்துப் பாருமின்” (கலி. 20) என்றாற் போலக் கூறல். (270. பேரா.)
3. தலைவி தான் காணும் பொருள் எதுவும் தலைவன் வண்ணம் வடிவு பண்பு வினைகளுள் ஒன்றற்கு ஒப்பெனக் கருதும் காதலியல்பு. அசோகவனத்தில் சீதைக்கு இராம னது வண்ணம் பற்றிய நினைவு மிகுந்தமை போல்வது. (கம்பரா. 5075) (மெய்ப். 22 பாரதி)
இது பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர். ஏனையோர் களவுக்கும் கற்புக்கும் உரிய பிரிவிடை நிகழும் மெய்ப்பாடு என்று கருதுவர்.
எம்மெய்யாயினும் ஒப்புமைகோடல் : பிரிவாற்றாது புலந்த தலைவி நெஞ்சழிந்த நிலையில் தான் காணும் பொரு ளெல்லாம் தன்னைப் போலவே துன்புறுவனவாகக் கருதிக் கோடல். மெய் - பொருள். தலைவன் பிற பொருளைத் தலைவியோடு ஒப்புமை கண்டு கூறுவனவும் இதன்கண் அடங்கும். (தொ. மெய்ப். 22 ச.பால.)
நகை என்னும் மெய்ப்பாடு தோன்றுதற்குரிய குறிப்பு நான்கனுள் முதலாவது.
எள்ளல் - பரிகசித்தல்; தான் பிறரைப் பரிகசித்துச் சிரித்தல்; தான் பிறரால் பரிகசிக்கப்பட்டவழித் தான் சிரித்தல்.
(பழிப்பில்லாப் பரிகாசம் விளையாட்டாக ஏதுவாவது.)
எ-டு : முடவர் செல்லும் செலவு, கூனரும் குறளரும் நடக்கும் நடை, ஊமர் பேச முயலும் ஓசை, செவிடர் பிறர் கூறியதை உணராமல் பேசும் பேச்சு, பேதையர் பேசும் பேச்சு, கல்லார் கூறும் கல்வி, கள்ளுண்டு களித்தோர் செயல், அலி பேடி இவர்கள்தம் நடை உடைகள், ஆரியர் கூறும் தமிழ் போல்வன. ( தொ. பொ. 248 இள. மேற்.)
தன்னைக் குறை நேர்ந்த தலைவனைத் தோழி எள்ளி நகுதல். (கலி. 61) தன்கண் தோன்றிய எள்ளல் பொருட்டாகிய நகை.
தலைவி தன்னை எள்ளித் தலைமைசெய்துகொண்டு களவு ஒழுக்கம் நிகழ்த்துவதை அறிந்த செவிலிக்கு நகை தோன்றல் (அகநா. 248) பிறர் எள்ளியது பொருளாகத் தன்கண் தோன்றிய நகை. (252 பேரா.)
ஏ
தலைவி, தலைவனுடைய கூட்டத்திற்கு வரும் இடையூறு உண்டு என்று பலவும் ஆராய்தல். அவை ஆற்றிடைத் தலைவனது இடையூற்றினுக்கு அழுங்கல், பிரிந்தவர் மறந்து துறந்தார்கொல் எனத் துயர்உறுதல், ஏதிலார்தம் வரைவின் தீதினை அஞ்சல் போல்வனவாம். (தொ. பொ. 270 பேரா.)
இதனைப் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு என்பர் இளம் பூரணர் (266) அன்புத் திணையின் தனிப்படர் மெலிவின் துனி நனி விளக்கும் இம்மெய்ப்பாடு கற்பிற்குச் சிறந்து களவிற்கும் கொள்ளப்படும். பிரிவிடை நிகழும் இம்மெய்ப்பாடு ஆராய்ந்து உணரின் புணர்ச்சிக்கு நிமித்தமாகும்.
நற்காமத்துக்கு ஆகாத மெய்ப்பாடுகளுள் ஒன்று. ஏழைமை - பேதைமை. (தொ. பொ. 270 இள.)
ஏழைமை - நுட்ப உணர்வின்மையால் ஏற்படும் வெண்மை. (274 பேரா.) ஏழைமையான் இல்லறக் கடமைகள் தடைப்படும் ஆதலின் இது விலக்கப்பட்டது.
கிட்டாத பொருளில், கிட்டும் பொருள்மீது வைக்கும் ஆசை யினை வைத்தல். (திருவாய். 2-4-10 உரை)
நற்காமத்துக்கு ஆகாத மெய்ப்பாடுகளுள் ஒன்று. ஏழைமை என்பது எளிமை; அஃதாவது தணிவு. தணிவுஉணர்வினை மறப்பது அன்பொழுக்கத்திற்கு ஆகாத தவறாகும். தலைவி பெருமை அனைத்தும் உடையவளாயினும் தலைவனைத் தணிவொடு பணிதலும், தலைவன் தன்னின் தாழ்ந்தவன் எனினும் தலைவன்உயர்வு தன் உள்ளத்து நிறுத்தலும் வேண் டும். தலைவிக்கு உயர்குடிஉவகை விலக்கியதோடு அமை யாது, தன் பணிவு மறவாது தலைவன்உயர்வு நினைத்தலும் இன்றியமையாதது என்று வற்புறுத்தக் குடிமையின்புறலை அடுத்து ஏழைமைமறப்பும் குறிக்கப்பட்டு இவை விலக்கப் பட்டன. (தொ. மெய்ப். 26 பாரதி.)
ஏழைமை, மறப்பு எனத் தனித்தனி மெய்ப்பாடாகக் கொள்வர் இளம்பூரணர், பேராசிரியர் முதலியோர்.
ஐ
காட்சி வேட்கை முதலாகச் சாக்காடு ஈறாகச் சொல்லப்பட்ட பத்து அவத்தையுள் 5ஆம் அவத்தையாம் ஆக்கம் செப்பல் என்பதன்கண், தலைமகளுக்கு நிகழும் மெய்ப்பாடுகள் தெரிந்துடம்படுதல், திளைப்பு வினை மறுத்தல், கரந்திடத் தொழில், கண்டவழி உவத்தல் என்ற நான்குமாம். (தொ. பொ. 26 இள.)
இவற்றைக் களவில், புணர்ச்சிக்குப் பின் தலைவியிடம் நிகழும் மூன்று பகுதியவாகிய மெய்ப்பாடுகளுள் இரண்டாம் பகுதிக்கு உரியனவும் பொதுவாகக் களவின் ஐந்தாம் பகுதிக்கு உரியனவும் ஆகிய மெய்ப்பாடுகள் என்பர் பேராசிரியர். (தொ. பொ. 265) பிறரெல்லாம் இக்கருத்தினரே. இவை நான்கும் கூட்டம் பெறாமல் நைந்து அழி தலைவியின் ஐந்தாம் காதற் கூறு பற்றிய மெய்ப்பாடுகள் என்பார் பாரதியார். (தொ. மெய்ப். 17)
பிரிவிடைத் தலைவனிடத்துள்ள காதல்மிகுதியால் வீணே ஐயுற்றுத் தலைவி மனம் வருந்துதல்.
பிரிந்த தலைவனிடமிருந்து குறித்த பருவம் வந்தவழியும் தூது வாராமையால் தலைவன் தன்னை அடியொடு மறந்து துறந்து விடுவானோ (கலி. 33) எனவும், தலைவன் தலைவியை வழக்கத்துக்கு மிகையாகப் பாராட்டியவிடத்தே விரைவில் தன்னைப் பிரிந்துபோகின்ற குறிப்பினை இப்படி அளவின்மீறிப் பாராட்டித் தெரிவிக்கின்றானோ (கலி. 4) எனவும் பலவாறாகத் தலைவி தானே ஐயங்களை மனத்தே எழுப்பிக் கொண்டு வருந்துதல். (தொ. பொ. 270 பேரா.)
இதனைப் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு என்பார் இளம்பூரணர். அன்புத் திணையில் தனிப்படர் மெலிவின் துனிநனி விளக்கும் இம்மெய்ப்பாடு கற்பிற்குச் சிறந்து களவிற்கும் கொள்ளப்படும் என்பர் ஏனையோர். பிரிவிடை நிகழும் இம்மெய்ப்பாடு ஆய்ந்து உணரின் புணர்ச்சிக்கு நிமித்தமாகும்.
ஒ
தலைவனது பிரிவின்கண் தலைவி தனக்குத் தோழியர் முதலாயினார் செய்யும் இன்பம்தரும் செயல் எதுவும் அவனிடம் பெறும் இன்பத்துக்கு ஒப்பாகாமையின் அவன் இன்பம் குறித்து மனம் உருகுதல்.
இது தலைவியது உள்ளத்தை உணர்ந்தார்க்கன்றி ஏனை யோர்க்கு உண்மை புலனாகாத நிலையிற்று ஆகலின், அகமெய்ப்பாடு 32இல் ஒன்றாம். (வீ. சோ. 95)
(வீ. சோ. 96 உரை மேற்)
இது நற்காமத்துக்காகாத மெய்ப்பாடுகளில் ஒன்று.
ஒப்புமை - ஆண்பாலாயினும் பெண்பாலாயினும் தான் காதலிக்கப்பட்டாரைப் போல்வாரைக் கண்டவழி அவர் போல்வர் என ஆண்டு நிகழும் உள்ள நிகழ்ச்சி. அஃது உலகத்தே கீழ்மக்கள்மாட்டும் கண்ணிலோர்மாட்டும் நிகழ்தலின் அது தலைமக்கட்கு ஆகாது என விலக்கப்பட்டது. (தொ. பொ. 270 இள.)
“இன்னாளை ஒக்கும் இவள்” என்று தலைவன் தலைவி. மாட்டு அன்பு செய்தல். (தொ.பொ. 274 நச்.) இது தலைமக னுக்கு ஆகாத மெய்ப்பாடுகளுள் ஒன்று.
பிறரொடு தலைவனை ஒப்ப நினைப்பது பெண்மைக்கு ஏலாப் பிழையாதலான் தலைவிக்குக் கடியப்பட்டது. பிறரொடு தலைவியை ஒப்ப நினைப்பது காதல் அறவாழ்வின் முழுப்பயன் கோடலைச் சிதைக்கும் ஆதலின் தலைவற்கும் கடியப்பட்டது. (தொ. பொ. மெய்ப். 26 பாரதி)
‘எம் மெய்யாயினும் ஒப்புமை கோடல்’ என்பது புதல்வனை யும் மலர், மதி போன்ற பொருள்களையும் காதலர் உடல் உறுப்புப் போன்றவற்றோடு ஒப்புமை கோடலின் அது குற்றமற்ற காதற் குறிப்பு; இஃது அன்னதன்று. (மெய்ப். 26 பாரதி)
தலைவனோடு ஒப்புமையுடைய பொருளைக் கண்டவழி மனம் மகிழ்தல்.
எ-டு : தலைவனுடன் வடிவு ஒப்புமையுடைய மகனைக் கண்டு அவனிடம் அன்பு மிகுந்து அவன் தன் தந்தையை வடிவால் ஒத்திருக்கும் செய்தியைக் கூறி மகிழ்தலாம். (கலி. 86) (தொ. பொ. 270. பேரா.)
இதனைப் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு என்பர் இளம் பூரணர் (தொ.பொ. 266). அன்புத் திணையில் தனிப்படர் மெலிவின் துனிநனி விளக்கும் இம்மெய்ப்பாடு கற்பிற்குச் சிறந்து களவிற்கும் கொள்ளப்படும் என்பது ஏனையார் கருத்து.
க
தலைவி வரைதல் வேட்கையான் தலைவனது களவொழுக் கத்தை முனிந்தாள் போலத் தலைவன் வினவுவனவற்றிற்கு மறுமாற்றம் ஏதும் கூறாதிருத்தல்.
கூற்று நிகழ்த்துதலின்றி உள்ளக்கருத்தை மறைத்து அமர்ந் திருத்தல் என்பர் இளம்பூரணர். (தொ. பொ. 267)
‘கையி னால்சொலக் கண்களில் கேட்டிடும்
மொய்கொள் சிந்தையின் மூங்கையும் ஆயினேம்’ (சீவக. 997)
என்ற குணமாலை கூற்றில், காதல் மிக்கவழிப் பேச்சுத் தடைபடும் என்பது புலனாகிறது.
இஃது ஒளியாது ஒழியாது உடன்உறையும் கற்புக் காதற் கூட்டவேட்கைக் குறிப்பை வெளியிடும் மெய்ப்பாடு எட்டனுள் ஒன்று. (271 பேரா.)
இது நடுவண் ஐந்திணையுள் மனம் அழியாவழி நிகழும் மெய்ப்பாடு எட்டனுள் ஒன்று என்பர் இளம்பூரணர்.
துஞ்சி சேர்ந்து கையறவுற்ற நிலையில் பிறரைக் கழறியுரைக் கும் மனஎழுச்சியின்றி வாய்வாளாதிருத்தல்.
இஃது இளிவரலுக்குப் பொருளாக அமைவது.
(தொ. மெய்ப். 23 ச. பால)
நினைப்புத் தலைவனிடத்தே இருத்தலின், தன் கண்முன் நெடு நேரம் இருக்கும் பொருளையும் கண்பொருந்திக் காணாமை யால் அவளால் காணப்பட்டவாக மற்றவர் கருதும் பொருள் களைத் தலைவி தான் காணவில்லை என்று மறுத்துக் கூறுதல்.
இந்நிலைக்குக் காரணம் அவள்அகத்தை நன்குணர்வார்க்கே புலனாம் ஆதலின், இஃது அகமெய்ப்பாடு முப்பத்திரண்ட னுள் ஒன்று. (வீ. சோ.96 உரைமேற்)
தமர்க்கு அறத்தொடு நின்று இற்செறிக்கப்பட்டு இல்லத் துள்ளேயே மறைந்து வாழும் தலைவி, தலைவனை ஒருகால் எதிர்பாராவகையால் கண்டவழிப் பெரிதும் மகிழ்தல்.
இஃது ‘ஆக்கம் செப்பல்’ என்ற ஐந்தாம் அவத்தையின் நான்காம் மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர்.(தொ. பொ. 261)
இது களவுக்காலத்துக்குரிய ஆறு பகுதியவாகிய இருபத்து நான்கு மெய்ப்பாடுகளுள் கூட்டம் பெறாமல் நைந்தழி தலைவியின் ஐந்தாம் காதற் பகுதிக்குரிய நான்காம் மெய்ப் பாடு என்பர் ஏனையோர். (265 பேரா.)
கண்ணில் துளிக்கும் கண்ணீரை அடிக்கடி விரலால் அப்புறப் படுத்துதல், புருவம் வளைதல், முகம்வாடுதல், எப்பொருளையும் நேரே பார்க்க விழிகூசுதல் முதலாயின. இவை அடியார்க்கு நல்லார் காட்டுவன. (நாடக. 253 உரை)
இரவும் பகலும் தண்டாக்காதல் கொண்டார் உறங்காமை யாகிய நிலை. இது தலைவன் தலைவி இருவருக்கும் பிரிவிடையே நிகழ்வது. அது
‘நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே’ (குறுந். 6)
‘பா(டு)இன்றிப் பசந்தகண் பைதல பனிமல்க’ (கலி. 16)
என்றாற் போலப் பிரிவிடைக் கண்துயில் ஒல்லாக் காதல் இயல்பாம்.
இதனைப் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு என்பர் இளம் பூரணர் (தொ. பொ. 266) அன்புத்திணையின் தனிப்படர் மெலிவின் துனி நனி விளக்கும் இம்மெய்ப்பாடு கற்பிற்குச் சிறந்து களவிற்கும் கொள்ளப்படும் என்பர் ஏனையார். (270 பேரா.)
பிரிவிடை நிகழும் இம்மெய்ப்பாடு ஆராய்ந்துணரின் புணர்ச்சிக்கு நிமித்தமாகும்.
அறத்தொடு நின்று, தலைவனொடு திளைத்தலை நீக்கிய தலைவி சுரந்து எழு காதலைக் கரந்து அழியும் தனிமையில், தான் செய்ய வேண்டிய செயல்களைத் தவிர்ந்திருத்தல். (மெய்ப். 17 பாரதி)
அறத்தொடு நின்றபின் இற்செறிக்கப்பட்ட தலைவி தலைவ னொடு கூடுதற்கு மறுத்த தவற்றிற்கு நாணியும் அஞ்சியும் தலைவன் காண வெளிப்படாது இல்லத்துள்ளேயே தங்கி யிருத்தல். (265 பேரா.)
இஃது ஆக்கம் செப்பல் என்ற ஐந்தாம் அவத்தையின் மூன்றாம் மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர். (தொ. பொ. 261)
களவுக்காலத்துக்குரிய ஆறுபகுதியவாகிய இருபத்துநான்கு மெய்ப்பாடுகளுள் இது, கூட்டம் பெறாமல் நைந்து அழி தலைவியின் ஐந்தாம் காதற் பகுதிக்குரிய மூன்றாம் மெய்ப் பாடு என்பர் ஏனையோர்.
இஃது அழுகை என்ற மெய்ப்பாடு; தன் துன்பம் கண்டு வருவது அவலம் எனவும், பிறர் துன்பம் கண்டு வருவது கருணை எனவும் இஃது இருவகைத்து. (தொ. பொ. 351. பேரா)
கருதல் என்பது குறிப்பு.
“தலைவி குறிக்கொண்டு தலைவனை நோக்காது கண்களைச் சுருக்கி நோக்கினாள்” (குறள் 1095) என்றவழி, குறிக்கோள் என்றதொரு மெய்ப்பாடுண்மை அறியப்படுகிறது. (தொ. பொ. 256.இள)
கருதல் என்பது மறந்ததனை நினைத்தல்.
இது துணைமெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று. (260. பேரா.)
இதனை வடநூலார் ‘விபோதம்’ என்ப.
இது பெருமிதம் என்னும் மெய்ப்பாட்டிற்குரிய குறிப்பு நான்கனுள் முதலாவது. (தொ. பொ. 257)
கல்வி - தவ முதலிய விச்சை. பேரா.
நூல் முதலியன பயிறல். (இ. வி. 578 உரை)
மடலேறும் தலைவன் தன் பேச்சாற்றலைப் பற்றி, “கல்வியில் வல்ல சான்றோர்முன் அரிய செய்திகளை எடுத்துக் கூறுத லில் வல்லேன் யான்” (கலி. 141) என்று கூறுவது கல்வி பற்றிய பெருமிதம். (தொ. பொ. 257 பேரா.)
கலக்கம் -
தலைவனுடைய பிரிவைத் தாங்க இயலாத நிலையில் களவிலும் கற்பிலும் தலைவி மனம் கலங்கிக் “கனவில் தோன்றிய கணவனைக் கையால் இறுகப் பற்றி அவனைக் காண்பதற்கு யான் கண்களை விழிக்க அவன் என் கையுள் மறைந்துவிட்டான்”
(கலி. 142) என்றாற் போன்ற செய்திகளைப் பிறர் கேட்பக் கூறுதல்.
தலைவிக்குக் களவிலும் கற்பிலும் பிரிதல் துன்பம் மிக்கவழி நிகழக் கூடிய இறுதி மெய்ப்பாடு இதுவே. இதனைக் கடந்த மெய்ப்பாடுகள் தலைவிக்கு உரிய அல்ல. தலைவனுக்கு இதற்கு மேலே வருவதொரு கலக்கம் உளதாம். அதுபொழுது அவன் மடலேறவும் வரை பாயவும் துணிவன்.
இதனைப் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு என்பர் இளம் பூரணர். (266) (தொ. பொ. 270 பேரா.)
கலக்கப் பொருள் -
கலக்கமாவது தலைவி ஆற்றாமையான் மதி திரிந்து, சொல்லுதற்கு ஆகாதன சொல்லுதலும் செய்தற்கொவ்வா தன செய்தலுமாம். இது சிறுபான்மை தலைவற்கும் உரித்து. (தொ. மெய்ப். 22 ச. பால)
களவில் தலைவன்பிரிவால் வருந்தி இல்லத்துத் தனித்திருக் கும் தலைவியை நோக்கி உறவினர் அவள்துயரின் காரணம் வினவியவழித் தடுமாற்றம் தோன்றத் தன் இரகசியங்களைத் தன்னையும் அறியாது வெளியிடுதல்; சொல்லுவது அறி யாது தடுமாறும் உணர்வால் மறுமொழி கூறல் என்றவாறு. (தொ. பொ. 266 பேரா.)
இது ‘நாணுவரை இறத்தல்’ என்ற ஆறாம் அவத்தையின் மூன்றாம் மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர். (262)
களவுக் காலத்துக்குரிய ஆறு பகுதியவாகிய இருபத்து நான்கு மெய்ப்பாடுகளுள் இது மாறாக் காதலின் ஆறாம் பகுதியின் மூன்றாம் மெய்ப்பாடு என்பர் ஏனையோர்.
தலைவனிடத்துக் கொண்ட அன்பு மீதூர்தலால் தலைவி அவன் ஊரினின்று வந்த அஃறிணைப் பொருள்களிடத்தும் பாணன் முதலியோரிடத்தும் அன்பு செலுத்துதல். இது ‘அவன் தமர் உவத்தல்’ (தொ. பொ. 270 பேரா.) போல்வது.
தலைவியின் இந்நிலைக்குக் காரணம் அவள் உள்ளத்தை உள்ளவாறு உணர்ந்தார்க்கன்றி ஏனையோர்க்குப் புலனாகா நிலையிற்றாகலின் இஃது அகமெய்ப்பாடு முப்பத்திரண்ட னுள் ஒன்று. (வீ. சோ. 90, 96 உரை மேற்.)
இஃது அச்சம் என்னும் மெய்ப்பாட்டிற்குரிய குறிப்பு நான்கனுள் மூன்றாவது.
கள்வர் - தீத்தொழில் புரிவார், அலைத்துப் பொருள் வெளவுவார்.
எ-டு : பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனோடு ஊடிய தலைவி, அவனைக் கள்வர்பாற் சார்த்தி, அவனைக் கண்ட அளவில் தான் நடுங்குவதாகக் கூறல், கள்வர் பொருளாக அச்சம் பிறந்ததாம்.
(கலி. 87) (தொ. பொ. 56 பேரா.)
களவில் தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் கண்டு இயற்கைப் புணர்ச்சி நிகழ்த்திய பின்னர்க் களவு வெளிப்படுந் துணையும் முறையே அமையும் மெய்ப்பாடுகள் பன்னிரண்டு. அவை நந்நான்கு ஒரு பகுதியாய் மூன்று பகுதிப்பட வருவன. ஒவ்வொரு பகுதியிற் கூறப்படும் மெய்ப்பாட்டுக்கும் அடுத்த பகுதி மெய்ப்பாட்டுக்கும் இடையே கால இடையீடு உண்டு. இம்மெய்ப்பாடுகள் களவுப் புணர்ச்சியின் நான்கு ஐந்து ஆறாம் பகுதிகளாகக் கூறப்பட்டுள.
1. பாராட்டெடுத்தல், 2. மடம்தப உரைத்தல், 3. ஈரம் இல் கூற்றம் ஏற்று அலர் நாணல், 4. கொடுப்பவை கோடல் - இவை நான்காம் பகுதி.
5. தெரிந்துடம்படுதல், 6. திளைப்பு வினை மறுத்தல், 7. கரந்த இடத்தொழிதல், 8. கண்டவழி உவத்தல் - இவை ஐந்தாம் பகுதி.
9. புறம்செயச் சிதைதல், 10. புலம்பித்தோன்றல், 11. கலங்கி மொழிதல், 12. கையறவுரைத்தல். இவை ஆறாம் பகுதி
பெருமையும் உரனுமுடைய தலைவன் தன் தழையும் காதலை மறையானாக, அச்சமும் நாணும் மடனும் உடைய தலைவி தன் சுரக்கும் காதலைக் கரக்கும் ஆதலின், இம்மெய்ப் பாடுகள் அவள்மாட்டே பெரும்பாலும் நிகழ்வன. (மெய்ப். 16-18 பாரதி.)
களவின்கண் தலைவன் தலைவியைக் கண்டது முதல் புணர்ச்சி நிகழும் வரை முறையே அமையும் மெய்ப்பாடுகள் பன்னிரண்டு. இவை நந்நான்காய் மூன்று கூறுகளாகக் கொள்ளப்பட்டு ஒன்றை அடுத்து ஒன்றாக நிகழும்.
1. புகுமுகம் புரிதல், 2. பொறி நுதல் வியர்த்தல், 3. நகுநயம் மறைத்தல், 4. சிதைவு பிறர்க்கு இன்மை - என இவை நான்கும் முதற்பகுதி.
5. கூழைவிரித்தல், 6. காது ஒன்று களைதல், 7. ஊழ் அணி தைவரல், 8. உடை பெயர்த்து உடுத்தல் - என இவை நான்கும் இரண்டாம் பகுதி.
9. அல்குல் தைவரல், 10. அணிந்தவை திருத்தல், 11. இல் வலியுறுத்தல், 12. இருகையும் எடுத்தல் - என இவை நான்கும் மூன்றாம் பகுதி.
பெருமையும் உரனும் உடைய தலைவன் தன் தழையும் காதலை மறையானாக, அச்சமும் நாணும் மடனும் உடைய தலைவி தன் சுரக்கும் காதலைக் கரக்கு மாதலின், இம்மெய்ப் பாடுகள் அவள்மாட்டே பெரும்பாலும் நிகழ்வன. (மெய்ப். 13 - 15 பாரதி. தொ. பொ. 261 - 263 பேரா.)
கட்குடித்துக் களி கொண்டோனுக்குரிய அவிநயங்கள்: ஒளிக்கத் தக்கவற்றை ஒளியாது கூறுதலும், ஒரோவழி உரையே இல்லாதிருத்தலும், ஒருகால் குனிந்து தாழ்தலும், மற்றொருகால் சோர்ந்து வீழ்தலும், தளர்ந்து தடுமாறிக் குழறிப் பேசுதலும், சாய்ந்த நடையும் சுழன்று பார்க்கும் பார்வையும் உடைமையும் போன்றவை. அடியார்க்குநல்லார் காட்டுவன இவை. (நாடக. 253 உரை.)
1. தெய்வம் அஞ்சல், 2. புரையறம் தெளிதல், 3. இல்லது காய்தல், 4. உள்ளது உவர்த்தல், 5. புணர்ந்துழி உண்மை, 6. பொழுது மறுப்பு ஆக்கம், 7. அருள்மிக உடைமை, 8. அன்பு தொக நிற்றல், 9. பிரிவு ஆற்றாமை, 10. மறைந்தவை உரைத்தல் என்ற பத்தும் புறஞ்சொல் மாணாக்கிளவி என்பதனொடு கூடக் கற்பிற்கே சிறந்த மெய்ப்பாடுகளாம். (தொ. பொ. 272 பேரா.)
பத்து என்ற எண்ணிக்கை வருதற்கு இளம்பூரணர் ‘மறைந் தவை உரைத்த புறஞ்சொல் மாணாக்கிளவி’ என இரண் டனை ஒன்றாக இணைத்தார். (268 இள.)
நாவலர் சோமசுந்தர பாரதியார் ‘புணர்ந்துழி உண்மைப் பொழுது மறுப்பாக்கம்’ என இரண்டனை ஒன்றாக்கினார். (மெய்ப். 24)
இவை நடுவண் ஐந்திணைக்குரிய மெய்ப்பாடுகள் என்பர் இளம்பூரணர்.
கனவு - உறக்கத்தினிடையே கனவு காணுதல். அக்கனவில் தன் உள்ளத்தில் பொதிந்து கிடக்கும் செய்தியை வெளியிடுதலும் உண்டு ஆதலின் கனவு மெய்ப்பாடாயிற்று.
(கலி. 24) (தொ. பொ. 256 இள.)
கனவு என்பது உறக்கத்தில் வாய்வெருவுதல். அஃதாவது தன்னை அறியாது, தன் மனத்தில் நினைத்து இரகசியமாக வைத்திருக்கும் செய்தியை வெளியிடுதல். அதனானும் அவள் உள்ளத்து நிகழ்கின்ற இரகசியம் ஒன்று உண்டு என்பது அறியப்படுதலின், கனவு மெய்ப்பாடாயிற்று. இது துணை மெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று. (260 பேரா.)
இதனை வடநூலார் ‘°வப்னம்’ என்ப.
காமம் இடையீடுபட்டகாலை கனவு காண்டல் தலைவன், தலைவி என்ற இருவருக்கும் நிகழும். தலைவன் கனவு காண்டலை அகநானூறு 39ஆம் பாடலிலும், தலைவி கனவு காண்டலை கலித்தொகை 128ஆம் பாடலிலும் காண்க.
கனவானது உறக்கத்தில் நிகழும் உணர்வு வெளிப்பாடு. (தொ. மெய்ப். 12 ச. பால)
பிரிவிடைத் தலைமகனோ தலைமகளோ அரிதின் துயிலெய் தியவழித் தன் துணையைக் கனவில் கண்டு திடீரென்று கண்விழித்துப் பின் துணையைக் காணாது மனம் தடுமாறுதல். (தொ. பொ. 270 பேரா.)
இதுவும் தலைவன் தலைவியர் இருவர்க்கும் நிகழும் மெய்ப்பாடாம்.
இதனைப் பெருந்திணை மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர் (தொ. பொ. 266) அன்புத்திணையில் தனிப்படர் மெலிவின் துனி நனி விளைக்கும் இம்மெய்ப்பாடு கற்பிற்குச் சிறந்து களவிற்கும் கொள்ளப்படும் என்பர் ஏனையார்.
பிரிவிடை நிகழும் இம்மெய்ப்பாடு ஆராய்ந்துணரின் புணர்ச்சிக்கு நிமித்தமாகும்.
தலைவி, தலைவனுடைய புணர்வும் பெறாமல் அவன் தன்னை மணக்கும் காலமும் பாணிப்பவே, ‘உள்ளின் உள்ளம் வேமே; உள்ளா திருப்பின்எம் அளவைத் தன்றே’ (குறுந். 102) என்றாற்போலக் கையிகந்த காதலால் நைந்துரைத்தல். கைமிகல் - எல்லையைக் கடத்தல். (தொ. பொ. 271 பேரா.)
‘இகலும் தோழிநம் காமத்துப் பகையே’ (குறுந். 257)
‘காமம், மறையிறந்து மன்று படும்’ (குறள் 1254)
என்று தலைவி கூறுதற்கு அமைந்த மெய்ப்பாடு இது.
இஃது ஒளியாது ஒழியாது உடன்உறையும் கற்புக்காதற் கூட்ட வேட்கைக் குறிப்பை வெளியிடும் மெய்ப்பாடு எட்டனுள் ஒன்று. (மெய்ப். 23 பாரதி)
இது நடுவண் ஐந்திணையுள் மனம் அழியாவழி நிகழும் மெய்ப்பாடு எட்டனுள் ஒன்று என்பர் இளம்பூரணர். (பொ. 267)
தலைவன் தலைவியைத் தீண்டியவழி இதுகாறும் இல்லாது புதிதாக ஏற்பட்ட பரிசத்தால் நிகழ்ந்த வேறுபாட்டைத் தலைவி அடக்கிக்கொள்ள முயலவும், தலைமயிர்முடி அவள் வயப்படாது நெகிழ, காதில் செருகப்பட்ட காதணிகளுள் ஒன்று கழல்வதாயிற்று. இரண்டு தோடுகளும் கழன்று வீழ்கின்ற அளவுக்கு மனத்தில் நெகிழ்ச்சி நிரம்பத் தோன்ற வில்லை என்பது. (தொ. பொ. 262 பேரா.)
மனநெகிழ்ச்சியால் காதணிகளுள் ஒன்று கழன்று விழுதல்.
(பேரா.)
காதிலணிந்த தொன்றை விழப்பண்ணி அதனைக் தேடுகின் றாள் போலத் தலைவன் முன் நிற்றல். (258 இள.)
இஃது இரண்டாம் அவத்தையின் இரண்டாம் மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர். களவில் புணர்ச்சிக்கு முற்பட்ட மூன்று பகுதியவாகிய மெய்ப்பாடுகளுள் இஃது இரண்டாம் பகுதியின் இரண்டாம் மெய்ப்பாடு என்பர் ஏனையார்.
இது வெகுளி என்னும் மெய்ப்பாட்டுக்கு உரிய குறிப்பு நான்கனுள் இரண்டாவது.
குடிகோளாவது - கீழ்வாழ்வாரை நலிதல் (தொ. பொ. 254 இள)
தாரமும் சுற்றமும் குடிப்பிறப்பும் முதலாயினவற்றுக்கண் கேடு சூழ்தல். (258 பேரா.) சுற்ற நலிவு (மெய்ப். 10 பாரதி)
வீரத்தாயிடம் ஒருத்தி தன் மகன் போரில் புறங்காட்டினான் என்றுகூற, அதுகேட்ட அவ்வீரத்தாய், தன் குடிப்பிறப்பிற்கு மகன் கேடு சூழ்ந்தானோ என்று வெகுண்டு அவனைக் காணப் போர்க்களம் சென்றமை (புறநா. 278) இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
இது தலைவன் தலைவி ஆகிய இருவர்க்கும் கூறப்படும் பத்துவகை ஒப்பினுள் ஒன்று.
குடிமையாவது குலத்திலுள்ளார் எல்லாரும் சிறப்பாக ஒவ்வாமையின் அச்சிறப்பாகிய ஒழுக்கம் பற்றிய நற்குடிவரவு. (தொ. பொ. 90 இள. உரை)
குடிப்பிறத்தலுக்குத் தக்க ஒழுக்கம் குடிமை. (273 பேரா.) குடிப்பிறந்தாரது தன்மை குடிமை. (260 குழ.)
குடிமை - ஒழுக்கநிலை. ‘ஒழுக்கமுடைமை குடிமை’ (குறள் 133) (மெய்ப். 25 பாரதி)
தலைவன் தலைவியை ‘உள்ளிய வினைமுடித் தன்ன இனி யோள்’ (நற்.3) எனத் தனது இல்லறத்தினைத் தலைவிமேல் வைத்துக் கூறுதல் குடிமை. (பேரா.)
குடிமை (2) -
இது நற்காமத்துக்கு ஆகாத மெய்ப்பாடுகளுள் ஒன்று. குடிமை - இவள் இழிந்த பிறப்பினள் என்று தலைவன் தன்னை மதித்தொழுகுதல், தலைவியை இழிந்தாளென்று கருதும் உள்ளம் காதல் இல்லற வாழ்க்கைக்கு ஏதம் தருதலின் ‘குடிமை’ என்பது விலக்கப்பட்டது. (தொ. பொ. 274 பேரா.)
குடிமை -
குடிமையாவது, குலனுடையார்க்கு உரியவை என்று சான்றோர் வகுத்துக் கொண்ட சால்பாகிய பண்பாடு. (தொ. மெய். 25 ச. பால.)
குடிமை இன்புறல் -
இது நற்காமத்துக்கு ஆகாத துறைகளுள் ஒன்று.
குடிமை இன்புறல் - தம் குலத்தினானும் தம் குடிப்பிறப்பா னும் தலைமக்கள் தம்மை மதித்து இன்புறுதல் (தொ. பொ. 270 இள)
குடிமை இன்புறலாவது தலைவி தன்குடி உயர்வு உள்ளி உவத்தல். தலைவனே மிக்கோனாயிருத்தல் வேண்டும் என்று வரையறை செய்தது, தலைவி உயர்ந்தவளாயின், என்றாவது ஒரு நாள் தலைவி தன்னுயர்வை உரைக்கும் நிலை ஏற்படின் அது தலைவனுக்கு இழிவு உணர்த்தி ஏதம் விளைக்கும் ஆதலின், அது மெய்க்காதலுக்கு இழிவாயிற்று. தலைவன் உயர்ந்தோனாயினும் அதனை அவன் அடிக்கடித் தலைவி யிடம் சுட்டுதல் அவள் உள்ளத்தை வருத்தி நற்காமத்துக்கு இழுக்குத் தரும் ஆதலின், அவனுக்கும் அது விலக்கப்பட்டது. (மெய்ப். 26 பாரதி)
இதனைக் குடிமை என்றும் இன்புறல் என்றும் இரண்டாகப் பிரித்துக் கொள்வர், பேராசிரியர் முதலியோர். (261 குழ)
குற்சை -
ஜிகுப்ஸை என்னும் இரசம். அஃதாவது இளிவரல் (அருவருப்பு) என்ற மெய்ப்பாடு. (L)
குறிப்பு -
குறிப்பு என்பது கைப்பின் சுவையுணர்வு பிறந்தவழி வெறுப்பு முதலாயின உள்ளநிகழ்ச்சி போல, அஞ்சத்தக்கன கண்டவழி அவற்றை நோக்காது வெறுக்கும் உள்ள நிகழ்ச்சி. (தொ. பொ. 249 பேரா.)
(உள்ளக்குறிப்பை வடநூலார் ‘அநுபாவம்’ என்ப.)
தலைவன் தன் கண்களால் குறிப்பிட்ட வேட்கையைத் தலைவியும் உணர்ந்து தானும் தன் வேட்கையைத் தன் கண்பார்வையான் குறிப்பிடுவாளாயின், தலைவன் நோக்கிய நோக்கிற்குத் தலைவி தான் எதிர்நோக்கியதனை முதலாவ தாகக் கொண்டு, நுதல் வியர்ப்பொறித்தல் முதல் இருகையும் எடுத்தல் ஈறாக மெய்ப்பாட்டியலில் மூன்று நூற்பாக்களான் கூறப்படும் ஏனைய பதினொரு மெய்ப்பாடுகளும் தலைவிகண் நிகழும். (தொ. பொ. 97 நச்., 261 - 263 பேரா.)
தலைமயிரினைக் குலைத்து அதனை நேர் செய்பவள் போலச் சிறிதுநேரம் தலைவன் முன் நிற்றற்கு வாய்ப்புத் தேடல். (தொ. பொ. 258 இள.)
புகுமுகம் புரிதல் முதலாகக் கையறவுரைத்தல் ஈறாக வரும் இருபத்து நான்கு மெய்ப்பாடுகளும், நடுவண் ஐந்திணை அல்லாத கைக்கிளைக்கண்ணும் பாடாண்பாட்டில் வரும் புறத்திணை பற்றிய கைக்கிளைக்கண்ணும் அருகிவரும் என்பர் இளம்பூரணர்.
கைக்கிளை ஒருதலைக்காமம் எனவே, புகுமுகம் புரிதல் நிகழாதே எனின், தலைவியைத் தலைவன் தான் கண்ட அளவிலேயே தலைவியும் தன்னைப் போலவே தன்னிடம் அன்பு கொண்டிருப்பாள் என்று கருதிக்கொள்வதே ஆண்டுப் புகுமுகம் புரிதலாம்.
புகுமுகம் புரிதல் முதலியன கைக்கிளைக்கண் வரும் என்ற கருத்து இளம்பூரணரைத் தவிர மற்ற உரையாசிரியர்கட்கு உடன்பாடன்று. (தொ. பொ. 265 இள.)
கந்தருவ மணத்தோடு ஒத்து இயற்கைப் புணர்ச்சியில் தலைவன் தலைவியைக் கூடுமுன் அவளைக் கண்ட அளவில் அவனிடம் ஒருதலைக்காமமாகிய கைக்கிளை நிகழும். (ந. அ. 28)
கைம்மிகல் என்பது குற்றமாயினும் குணமாயினும் அளவின் மிகுதல். ‘கை’ என்பது அளவு குறித்ததோர் இடைச்சொல். ‘காதல் கைம்மிகல்’ (தொ. மெய்ப்.23) ‘குணனிலனாய்க் குற்றம் பலவாயின்’ (குறள் 868) என்றாற் போல வருவன. (தொ. பொ. 256 இள.)
கைம்மிகல் ஒழுக்கக்கேடு. அது சாதித் தருமத்தினை நீங்கி யமை தன் உள்ள நிகழ்ச்சியானே மற்றவர் அறியுமாறு நடந்து கொள்ளுதல். இஃது ஒருவன் மனநிகழ்ச்சியை வெளிப்படுத்த லின் மெய்ப்பாடாயிற்று. இது துணைமெய்ப்பாடு முப்பத் திரண்டனுள் ஒன்று. (260. பேரா)
இதனை வடநூலார் வெறிகொண்டார் செயலாகிய ‘உன்மாதம்’ என்ப.
கைம்மிகலாவது, குறையாயினும் நிறையாயினும் அளவில் மிகுதல். (தொ. மெய்ப். 12 ச.பால)
கையற உரைத்தல்; அஃதாவது செயலறவு தோன்றச் சொல்லுதல்.
களவில் தனிமை தாங்காத் தலைவி காதல் கைம்மிகத் தெருமரு நிலையில், வற்புறுத்தி ஆற்றுவிக்கும் தோழிக்கு எதிர் மனம் தளர்ந்து கூறுதல் போல்வன. (தொ. பொ. 266. பேரா.)
இது நாணுவரை யிறத்தல் என்ற ஆறாம் அவத்தையின் நான்காம் மெய்ப்பாடு. (262. இள.)
களவுக்காலத்துக்குரிய ஆறுபகுதியவாகிய இருபத்து நான்கு மெய்ப்பாடுகளுள் இஃது இறுதியானது. இதனைக் கடந்து வரும் மெய்ப்பாடுகள் ஐந்திணைக்கு உரியன அல்ல; பெருந்திணைக்கு உரியன.
கையாறு என்பது காதலர் பிரிந்ததால் வரும் துன்பமும், அத்துன்பம் போன்ற பிற நிலைகளும்.
“யான் பிரியின் தலைவி கையாறு கொள்ளாது இல்லறத்தை நன்கு பாதுகாக்கவல்லளோ?” (கலி.24) என்று தலைவன் உறக்கத்தில் அரற்றிய உரையில் கையாறு என்ற மெய்ப்பாடு சுட்டப்படுகிறது. (தொ. பொ. 256.இள.)
கையாறு என்பது விரைய மூச்செறிந்து வருத்தத்தைத் தெரி விக்கும் நிலையையும் கடந்து செயலற்று அயர்த்திருத்தல். இது துணை மெய்ப்பாடுகள் முப்பத்திரண்டனுள் ஒன்று.
(260 பேரா.)
இதனை வடநூலார் மரணம் என்ப.
இது பெருமிதம் என்ற மெய்ப்பாட்டுக்குரிய குறிப்பு நான்கனுள் இறுதியானது.
கொடை - உடம்பும் உறுப்பும் உயிரும் போல்வன எல்லாப் பொருளும் கொடுத்தல்.
தன்னை அடைக்கலமாக வந்தடைந்த புறாவைக் காப்பதற் காகத் துலைத்தட்டில் சிபிமன்னன் ஏறிய செயல் போல்வன இதற்கு எடுத்துக்காட்டு. (புறநா. 43) (தொ. பொ. 257 பேரா.)
தான் ஒன்றும் வேண்டாச் செல்வ நிலையையுடைய தலைவி தலைவன் தருவனவற்றைப் பொருட்பொருட்டன்றி அன்புக்கு அறிகுறியாக அவன்பொருட்டு ஏற்றல். தரும் தலைவனது உணர்வில் பெறுந் தலைவி உயர்ந்தவள் என்று எண்ணுவது இயல்பாதலின், ஈவன தருவன என்னாது ‘கொடுப்பவை’ என்றார். (தொ. பொ. 264 பேரா.)
இது மெலிதல் என்ற நான்காம் அவத்தையின் நான்காம் மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர். (தொ. பொ. 260) களவின்கண் புணர்ச்சிக்கு முன்னர் மூன்று, பின்னர் மூன்று என ஆறு பகுதியவாகக் கூறப்படும் இருபத்துநான்கு மெய்ப்பாடு களில் இது தோலாக் காதலின் நாலாம் பகுதியின் நாலாம் மெய்ப்பாடு என்பர் ஏனையோர்.
இது நற்காமத்துக்கு ஆகாத மெய்ப்பாடுகளுள் ஒன்று.
கொடுமை - அறன் அழியப் பிறரைச் சூழும் சூழ்ச்சி. (தொ. பொ. 270 இள.)
கேடு சூழ நினையும் தீவினையுள்ளம். (274 பேரா.)
இவ்வுள்ளம் உடையாரிடம் நற்காமம் சிறவாதாகலின் இது விலக்கப்பட்டது.
இது வெகுளி என்னும் மெய்ப்பாட்டுக்குரிய குறிப்பு நான்கனுள் இறுதியானது.
கொலை - கொல்லுதற்கு ஒருப்படுதல். (தொ. பொ. 254 இள.)
அறிவும் புகழும் முதலாயினவற்றைக் கொன்றுரைத்தல். (258 பேரா.)
நெடுஞ்செழியன் தன்னைச் “சிறுவன்” என்று பகைவர் கூறிய சொற்களை நினைத்தே வெகுளிகொண்டு அவர்களை எதிர்த்தமை (புறநா. 72) கொலை பொருளாகத் தோன்றிய வெகுளி பற்றியேயாம்.
‘வெகுளி’ என்ற மெய்ப்பாடு; அது காண்க.
ச
உள்ளத்தில் உள்ள கருத்தைப் பிறர் அறியுமாறு வெளிப் படுத்தும் மெய்ப்பாடு சத்துவம் எனப்படும். சத்துவம் என்பன செந்நூலில் வெண்பளிங்கு கோத்தால் அதன் செம்மை புறம் பொசிந்து தோன்றினாற்போலக் கருதியது புலனாக்கும் குணங்களாம். அவை சொல்தளர்வு, மெய்விதிர்ப்பு, கண்ணீர் நெகிழ்ச்சி, மெய் வெதும்பல், மெய்ம் மயிர் அரும்பல் முதலாயின. (இ. வி. 661 உரை)
(1) வன்மை மென்மை இடைமை இம்மூன்றும் சமமாகக் கலந்துவரத் தொடுக்கும் செய்யுட்குணம் (தண்டி. 18) (L)
(2) சாந்தம் என்னும் சுவை - ‘மற்றிவ் வெட்டனொடும் சமநிலை கூட்டி’ (தொ. பொ. 251 பேரா)
பிறர்க்கென எதையும் செய்யாத கொள்கையும், அறம் செறிந்த மனமும, அமைதி நிறைந்த கண்களும், மயக்கமும் கலக்கமுமான பிறழ்ந்த அறிவு நீங்கிய தூய அறிவுநிலையும், எதையும் முயன்றடையும் குறிப்பில்லாத நிலையும், அச்சமற்ற பெருமித நிலையும், உலகத்துயிர்கள்பால் குளிர்ந்த உள்ளமும் செயலும் படைத்திருத்தலும், அளவிட்டு உரைக்க இயலாத அருமையும், அன்பும், கண்ணில் ஒளியுடைமையும் போன்றவை சமநிலை - சாந்தரசம். (நாடக. 246)
(1) மெய்ப்பாடுகளை ஒன்பது என்று கணக்கிடுவோர் வீரம் அச்சம் முதலிய எண்வகை மெய்ப்பாடுகளொடு நடுவுநிலை யையும் சேர்த்துக் கணக்கிடுவர். நடுவுநிலை மத்திமம் எனவும் சாந்தம் எனவும் கூறப்படும். இதனை நிலையில்லா மெய்ப் பாடுகளில் தொல்காப்பியனார் அடக்கியுள்ளார். (பொ. 260 பேரா.)
நடுவுநிலையாவது, கூறப்பட்ட வீரம் அச்சம் முதலாகிய எண்வகைச் சுவையொடும் தான் கலவாது தனித்திருக்கும் சிறப்பினை உடையது. தன்மேல் சந்தனம் பூசுபவர்மாட்டும் தன் உடலை வாள்கொண்டு துணிப்பவர்மாட்டும் ஒரே வித மனநிலையொடு கூடியிருத்தலே நடுவுநிலையாகும். இந்நிலை காமம் வெகுளி மயக்கம் மூன்றும் நீங்கிய தாபதர் சாரணர் சமணர் மாசற்ற முனிவர் அறிவர் முதலியோர்கண் நிகழ்வது. அவர்களிடம் வீரம் அச்சம் முதலிய எண்வகைச் சுவையும் நிகழா. இன்ப துன்பங்களில் சமநோக்குக் கொள்ளும் இச்சுவை தனித்துக் கூறப்பட்டுள்ளது.(245 இளம். உரைமேற்)
‘சமநிலை உலகியல் நீங்கினார் பெற்றி ஆதலின் உலக வழக்குப் பற்றிய இயற்றமிழ் இலக்கணத்தில் இம்மெய்ப்பாடு ஏனையவற்றொடு கூட்டிச் சிறப்பித்து ஓதப்பட்டிலது. (251 பேரா.)
சமநிலை என்னும் மெய்ப்பாட்டினுள் ஏதேனும் விகாரம் உண்டாயின் அது வீரம் அச்சம் முதலிய ஏனைய எண்வகை மெய்ப்பாட்டினுள் அடங்கும். (தொ. பொ. 251 பேரா.)
நடுவுநிலை என்பது ஒன்பது சுவையுள் ஒன்று என நாடக நிலையுள் வேண்டப்படும் சமநிலை. அஃதாவது செஞ்சந் தனத்தைப் பூசினும் உடலைச் செதுக்கினும் பிளப்பினும் மனம் நிலைபேறு குலையாது இன்பதுன்பங்களில் செல்லாது ஒரு நிலையிலேயே இருக்கும் நிலை. அது காமம் வெகுளி மயக்கம் நீங்கினார்கண்ணே நிகழ்வது. அது சிறுவரவிற்றாக லின் நிலையில்லா மெய்ப்பாடுகளுடன் சேர்த்தெண்ணப் பட்டது. (தொ. பொ. 260 பேரா.)
நடுவுநிலை ஐம்புலன் அடக்கிய அறிவர்பால் நிகழ்வது. இவர் காமவெகுளி மயக்கத்தினின்றும் நீங்கியவராதலால் யாவரும் கண்டஞ்சும் இயமனுக்கும் இவர் அஞ்சார்; எத்துணை இளிவரல் காணினும் இழித்துக் கூறார்; கல்வி நிறைந்திருந் தும் அதனைப் பொருளாகக் கொள்ளாத காரணத்தால் பெருமிதம் காட்டார்; புதுமை பெருமை சிறுமை ஆக்கம் என்பன நிலையில் பொருள்கள் என அறிவராதலின் அவற் றினைக் கண்டு வியப்புறார்; துன்பம் வந்தெய்தாத் தூய உள்ளத்தராகிய இவர் இன்பத்தை விழையார் ஆதலின், சமநிலை எனப்படும் நடுவுநிலை பொருந்தி நிற்கும் நல்லோ ரிடத்து, ‘நகையே அழுகை இளிவரல் மருட்கை, அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று, அப்பா லெட்டே மெய்ப்பா டென்ப’ எனத் தொல்லாசிரியர் வகுத்துக் கூறிய எண்வகை மெய்ப்பாடும் நிகழாவாம்; ஒரோவழி நிகழு மிடத்துக் காமமின்றி அருளே பற்றுக்கோடாக நிகழும் என்பது. (ம. சூ. பக். 5, 6)
இத்தகைய மனநிலையாகிய நடுவுநிலை உலகில் அருகியே காணப்படுதலின், உலகில் பெருவரவிற்றாக நிகழும் நகை அழுகை முதலிய எண்வகை மெய்ப்பாட்டொடும் இதனைச் சேர்க்காது, நிலையில்லா மெய்ப்பாடுகளாகிய ‘உடைமை இன்புறல்’ (தொ. பொ. 260 பேரா.) என்பவற்றொடு தொல் காப்பியனார் சேர்த்துவைத்துள்ளார்.
சமம் (3) -
இது சமநிலை எனவும்படும். ஐம்புலன்களிலும் பற்றற்று விளங்கும் நல்ல நிலைமை. தயையும் பொறுமையும் விளங்கும் இயல்பும் இச்சுவையே. ‘சமநிலை’ எனப்படும் மெய்ப்பாடு காண்க. (நாடக. 46, 47)
சாந்தச் சுவை -
மகிழ்ச்சிக்குரிய செயற்கண் மகிழ்வும், துயரத்திற்கு உரிய செயற்கண் அவலமும் கொள்ளாது இன்பத்தையும் துன்பத் தையும் சமமாக நோக்கும் மனஅமைதியே சாந்தமாவது. தண்டியலங்காரம் (70) சாந்தம் நீங்கலாக ஏனைய எட்டுச் சுவைகளையே கூறிற்றேனும் சாந்தமும் சுவையணியுள் தழுவப்படும்.
எ-டு :
‘மெய்த்தி ருப்பதம் மேவென்ற போதினும்
இத்தி ருத்துறந்(து) ஏகென்ற போதினும்
சித்தி ரத்தின் அலர்ந்தசெய் தாமரை
ஒத்தி ருக்கும் முகத்தினை உன்னுவாள்’ (கம்பரா. 5088)
நாட்டாட்சியைத் தந்தையார் நல்கியபோதும், “காட்டிற்குச் செல்” என்று தாயார் ஆணையிட்டபோதும், இராமன் மகிழ்ச்சியோ வருத்தமோ உற்றிலனாயிருந்தான் என்னும் இதன்கண் சாந்தச் சுவை அமைந்துளது. இதனை மாறனலங் காரம் சாந்தரதம் என்னும் (மா. அ. 198 உரை)
சமநிலை, நடுவுநிலை என்றும் இது பெயர் பெறும்.
சிருங்காரம்; நவரசத்துள் ஒன்றாகிய இன்பச்சுவை. உவகை என்பதும் அது.
தலைவனை நோக்கித் தன்னுள்ளம் சிதைந்த தன்மையினைப் பிறர் அறிவுறாதவாறு தலைவி மறைத்துக் கோடல்.
தலைவனைக் கண்டு அச்சத்தாலும் நாணத்தாலும் நெற்றி யில் வியர்வை துளிக்க, அவனுடைய குறிப்புக்களான் தனது சிரிப்பினை வெளிப்படுத்தற்கு வாய்ப்பு நேர்ந்துழியும் அதனை மறைத்துக்கொண்ட தலைவி, தன்னுள்ளம் சிதைந்து நிறை அழிகின்ற செய்தி புறத்தார்க்குப் புலனாகாமல் நெஞ் சினை அடக்கிவைத்துக்கொள்ளுதல். அவள் தன் மனத்தை அடக்கிக் கொண்டிருக்கும் செய்தி தலைவனறிய வெளிப் படும். தலைவன் தன்மனம் சிதைந்ததைத் தலைவிபோல மறைக்க முயலாது வெளிப்படையாக உணர்த்திவிடுவான். (தொ. பொ. 261 பேரா.)
இது காட்சி என்ற முதல்அவத்தையின் நான்காம் மெய்ப் பாடு என்பர் இளம்பூரணர் (தொ. பொ. 257) களவு என்னும் கைகோளில் புணர்ச்சிக்கு முன் நானான்காக நிகழும் முக்கூற்றுப் பன்னிரு மெய்ப்பாடுகளில் இது முதல் கூற்றின் நான்காம் மெய்ப்பாடு என்பர் பிறர்.
சினம், பேதைமை, சகிப்புத் தன்மை, நல்குரவு என்னும் நான்கும் பொதுவாக மக்களுக்கு ஆகாத மெய்ப்பாடுகள் எனினும், ஒரு பொருளைச் சிறப்பித்துக் கூறும் காரணத்தான் அவை வரின் அமைவுடையன ஆகும்.
எ-டு : ‘தொடிய எமக்குநீ யாரை’ (கலி. 88)
‘என்னருகே வந்து என்னைத் தீண்டுதற்கு நீயார்?’ என்று தலைவி சினம் பற்றிக் கூறுவது, அவளது காதலைச் சிறப்பித்தலான் அமைந்தது.
‘செவ்விய தீவிய சொல்லி அவற்றொடு
பைய முயங்கிய அஞ்ஞான்(று) அவையெல்லாம்
பொய்யாதல் யான்யாங்(கு) அறிகோ?மற்று ஐய!
அகல்நகர் கொள்ளா அலர்தலைத் தந்து
பகல்முனி வெஞ்சுரம் உள்ளல் அறிந்தேன்
மகள்அல்லை மன்ற இனி.’ (கலி. 19)
‘கழிகாதன்மையால் நின்னை உள்ளவாறு அறிந்திலேன்’ என்ற தலைவியது பேதைமை, அவளது காதலைச் சிறப்பித்து வருதலின் அமைந்தது.
‘உறலியாம் ஒளிவாட உயர்ந்தவன் விழவினுள்
விறலிழை யவரோடு விளையாடு வான்மன்னோ
பெறவரும் பொழுதொடு பிறங்(கு)இணர்த் துருத்திசூழ்ந்(து)
அறல்வாரும் வையைஎன்று அறையுநர் உளராயின்’ (கலி. 30)
“இளையவராம் பரத்தையரொடு வையைத்துறையில் விழாக் காலத்தே நீராட்டு அயர்வானோ?” என்று தலைவனிடத்துத் தலைவி கொள்ளும் இந்நிம்பிரி அவரொடும் விளையாடு வான் எனப் பொறாமை கூறியும், “அவன் இவ்விடத்து என்பால் அடைதல் வேண்டும்” எனக் காதலைச் சிறப்பித்து வருதலின் அமைந்தது.
‘பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால் ... ... ...
ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி ... ... ...
கொண்ட கொழுநன் குடிவற னுற்றெனக்
கொடுத்த தாதை கொழுஞ்சோறு உள்ளாள்
ஒழுகுநீர் நுணங்குஅறல் போலப்
பொழுதுமறுத் துண்ணும் சிறுமது கையளே’ (நற். 110)
தனது குடும்பம் வறுமையுற்றமையான் என நல்குரவு கூறியும், சிறுவன்மையுடையளாய் இல்லறம் நிகழ்த்தும் காதல் வாழ் வினைச் சிறப்பித்து வருதலின் அமைந்தது. (தொ. பொ. 245 நச்.)
இது மருட்கை என்னும் மெய்ப்பாட்டுக் குறிப்பு நான்கனுள் மூன்றாவது.
சிறுமை என்பது கடுகின்கண் பல துளை போலும் மிகவும் நுண்ணியன கண்டு வியத்தல். (தொ. பொ. 251 இள.)
இறப்பச் சிறியன கண்டு வியத்தல். (255 பேரா.)
(எடு) தலைவியின் இடையினைக் கண்ட தலைவன் அது மிகவும் நுண்ணிதாயுள்ளது என்று கருதுவது பிறன்கண் தோன்றிய சிறுமை பற்றிய வியப்பு. (பேரா.)
துன்பம் மிக்க உள்ளத்தொடு தடுமாறுதல், ஈரமாகிய போர்வையை விடுத்துக் காய்ந்த போர்வையை வேண்டல், வெயிலிலும் நெருப்பின் அருகிலும் இருத்தலை விரும்புதல், கைகளை உரசிக் கொள்ளுதல், முனகியும் பெரு மூச்செறிந்து கொண்டும் பேசுதல் முதலாயின. இவை அடியார்க்கு நல்லார் காட்டும் அவிநயம். (நாடக. 253 உரை)
எப்பொழுது எச்சுவை தோன்றும் என்ற காலவரையறை இன்றியும் பிறர் தூண்டுதல் இன்றியும் இயற்கையாகவே ஒருவனுக்குத் தோன்றும் இச்சுவையுணர்வு மனக்கிளர்ச்சி யால் நேர்ந்து எழும். அது பிறர் மனத்தில் உடனே தோன்றும் உணர்ச்சியால் (அநுதாபத்தால்) வெளிப்படும். இதற்கு வியப்பே உயிர் போன்றது.
மனத்தின்கண் தோன்றும் கிளர்ச்சி வெளிப்பட்டுத் தோன்றும் வகையில் சுவை இயலும்.
அஃது உவகை, பெருமிதம், நகை, சமம், வெகுளி, வியப்பு, இழிப்பு, அவலம், அச்சம் என ஒன்பது. இஃது ஆரியப் புலவோர் கருத்து. (நாடக. 38, 39)
இனிச்சுவையென்பது சிருங்காரம் முதலாகவுடைய நாடகச் சுவை ஒன்பதும் எனக் கொள்க. (வீ. சோ. 106 உரை)
உவகை - காமம் முதலிய மகிழ்ச்சி. பெருமிதம் - வீரம்; நகை - சிரிப்பு; சமம் - சமநிலை, சாந்தம்; வெகுளி - கோபம்; வியப்பு - அதிசயம்; இழிப்பு - இளிவரல், அவலம் - அழுகை; அச்சம் - பயம். இவற்றை முறையே சிருங்காரம், வீரம், ஆசியம், சாந்தம், ரௌத்திரம், அற்புதம், குச்சை, சோகம், பயானகம் என்பர் வடநூலார். (நாடக. 39 உரை)
நாவினால் நுகரப்படும் கைப்பு கார்ப்பு புளிப்பு உவர்ப்பு துவர்ப்பு தித்திப்பு என்பன. அன்றிக் கண்ணானும் செவி யானும் உணரப்படும் நகை அழுகை இளிவரல் மருட்கை அச்சம் வீரம் உவகை வெகுளி என்னும் எண்வகைப்பட்ட சுவைகள்; இவற்றொடு நடுவுநிலையைச் சேர்த்துச் சுவை ஒன்பது என்றலும் உண்டு. இச்சுவைகோடல் மனித இனத் திற்கேயுரிய தனிச்சிறப்பு ஆதலின் ஏனைய உயிர்களுக்குரிய நாச்சுவையினின்றும் இச்சுவைகள் பிரித்து ஓதப்பட்டன. செவியான் பெரும்பாலும் செய்யுள்கள் வாயிலாக உணரும் இச்சுவைகளை அறியாதார் ‘செவியின் சுவை யுணரா வாயுணவின் மாக்கள்’ (குறள் 420) என இழிக்கப்பட்டனர்.
சுவையென்பது காணப்படு பொருளால் காண்போர் அகத்தில் வருவதொரு விகாரம். (தொ. பொ. 245. இள.)
சுவையாவது நகைமுதலிய சுவைக்குரிய பொருளும் சுவைப் பேறுடைய பொறியும் கூடியவழி நிகழும் மன உணர்ச்சி என்பார் பேராசிரியர். (தொ. பொ. 249)
வடநூலார் சுவையினை இரசம் என்ப.
உவகை, அழுகை, சாந்தம் என்னும் மூன்றும் மென்மையான சுவைகள்; வெகுளி, இளிவரல், வீரம் என்னும் மூன்றும் வன்மையான சுவைகள்; நகை, வியப்பு, அச்சம் என்னும் மூன்றும் வன்மைக்கும் மென்மைக்கும் இடைப்பட்ட சுவை என்பது ஒரு சாரார் கருத்து.
உவகையும் அழுகையும் மிகுமென்மைச் சுவைகள்; வெகுளி யும் இளிவரலும் மிகு வன்மைச் சுவைகள்; நகையும் நடுவு நிலையும் மருட்கையும் சற்றுமென்மையுடைச் சுவைகள்; பெருமிதமும் அச்சமும் சற்று வன்மையுடைய சுவைகள் என்பது மற்றும் ஒரு சாரார் கருத்தாம். (பேராசிரியர் - கணேசய்யர் முன்னுரை)
இவை பாடல்களில் வருமிடத்து, அவ்வச் சுவைக்கு ஏற்ப வன்மை மென்மை இடைப்பட்டன ஆகிய சொற்களாலேயே அவ்வப் பாடல்கள் இயற்றப்படுவது சிறந்தது. (முன்னுரை)
நகை, வியப்பு (-மருட்கை), உவகை மூன்றும் பெரும்பாலும் அகத்திணையினைச் சாரும். வீரம், வெகுளி, அவலம், அச்சம் இளிவரல் ஐந்தும் பெரும்பாலும் புறத்திணையைச் சாரும்.
(ம. சூ. பக். 6)
உவகை முதலாய ஒன்பான் சுவைக்கும் உரிய அவிநயங்கள். தனித்தனித் தலைப்பிற் காண்க. (நாடக. 242)
சுவைக்கப்படும் பொருளும், சுவைக்கும் பொறியும் ஒன்று சேரின்அன்றி எவ்வகைச் சுவையும் பிறவாது; ஆதலின், சுவைப்பொருள் சுவைக்கும் பொறி என்னும் இரண்டும் சேரும்போது தோன்றுவது சுவை.
சுவை, உள்ளத்தில் எழும் குறிப்பு, அது புறத்தார்க்குப் புலனாம் வகை உண்டாகும் விறல் - என இம்மூன்றும் காரண காரிய முறையில் தோன்றுவன. ஆதலின் மெய்ப்பாடுகள் இவை மூன்றனையும் ஒருங்கே பெறும். (நாடக. 231, 232)
விறல், மெய்ப்பாடு, சுவை - ஒரு பொருளன.
சுவைப்படும் பொருள், சுவைஉணர்வு, குறிப்பு, சத்துவம் என்பன நான்கும் சுவைக்குரிய நிலைக்களன்களாம்.
பேயையோ புலியையோ கண்ட ஒருவன் அஞ்சியவழி, மயக்கமும் கரத்தலும் நடுக்கமும் வியர்ப்பும் உண்டாகின்றன. அச்சத்திற்கு ஏதுவாகிய புலியும் பேயும் சுவைப்படுபொருள்; அவற்றைக் கண்டகாலம்தொட்டு நீங்காது நின்ற அச்சம் சுவையுணர்வு; அதன்கண் வரும் மயக்கமும் கண்ணை மூடிக் கொள்ளுதலும் குறிப்பு; நடுக்கமும் வியர்த்தலும் மெய்ப்பாடு.
இவற்றுள் நடுக்கமும் வியர்த்தலும் ஆகிய மெய்ப்பாடுகளால் ஒருவனுக்கு உண்டான அச்சம் மற்றவர்க்கும் புலப்படும்.
(தொ. பொ. 245 இள.)
சுவைப்படுபொருளும் சுவையுணர்வும் ஒன்று கூடியவழி மனத்தின்கண் தோன்றி மலரும் கிளர்ச்சி சுவையாம்.
சிருங்காரம் முதலாவுள்ளனவே சுவையாவன. அவற்றை வீரக்குறிப்பு, பயக்குறிப்பு, உக்கிரக் குறிப்பு, சிருங்காரக் குறிப்பு, காருணியக் குறிப்பு, அற்புதக் குறிப்பு, புகழ்க் குறிப்பு, நகைக் குறிப்பு, இகழ்ச்சிக் குறிப்பு என ஒன்பதாகக் கூறுவர்.
(வீ. சோ. 106 உரை)
இது சுவையுணர்வு எனப்படும். நகையும் அச்சமும் முதலாகிய உணர்வுகளை முற்காலத்து உலகியலான் அறிவான்ஒருவன் அவற்றுக்கு ஏதுவாகிய பொருள் பிற கண்டவழித் தோன்றிய பொறியுணர்வுகள் சுவை எனப்படும் ஆதலின், சுவைப்படும் பொருளொடு சுவைக்கும் பொறி இணைந்து செயற்படுதல் சுவை கோடல் எனப்படும். வேம்பு என்னும் பொருளும் நா என்னும் பொறியும் சேராதவழிக் கைப்புச்சுவை பிறவாத வாறு போல, அப்பொருள்களைக் கண்டவழியல்லது நகையும் அச்சமும் முதலிய சுவைகள் தோன்றா. ஒழிந்த காமம் முதலாயினவும் அன்ன. இதனான் ‘இருவகை நிலத்தின் இயல்வது சுவையே’ என்றார் செயிற்றியனார். (தொ. பொ. 249 பேரா.)
சுவைப்பொருளை ‘விபாவம்’ எனவும். சுவைநிலை அவி நயத்தை ‘°தாயிபாவம்’ எனவும் வடநூலார் கூறுப. (ம. சூ. பக். 116) சுவைப்படும் பொருள்களை ஐம்பொறிகளான் நுகர்ந்து சுவைக்குமாற்றிற்கு உதாரணங்கள் பின்வருமாறு.
இவள் மேனி அணை போன்றது - இது பரிசத்தால் அறிந்து சுவைத்தது.
இக்கனி அமுதம் போலும் - இது நாவால் உணர்ந்து சுவைத்தது.
இவள் மேனி மாந்தளிர் போலும் - இது கண்ணால் உணர்ந்து சுவைத்தது.
இவள் கூந்தல் பூவின் மணமுடையது - இது மூக்கால் உணர்ந்து சுவைத்தது.
இவள் மொழி யாழிசை போலும் - இது செவியால் உணர்ந்து சுவைத்தது.
சுவைகோடல் பற்றி வடநூல்கள் கூறுவன பின்வருமாறு :
ஒருவன் ஒருபொருளைக் கண்டவிடத்து அப்பொருள் காரணமாக அவன் மனத்தில் நுண்மையாகத் தோன்றும் காதல் முதலிய சுவையின் முளை ‘°தாயிபாவம்’ (நிலையான மனக்கருத்து) எனப்படும்.
அச்சுவை தோன்றுவதற்குக் காரணமான பொருள் ‘விபாவம்’ எனப்படும். அச்சுவைத் தோற்றத்தை வெளியே தெரியப்படுத்தும் உள்ள நிகழ்ச்சியாகிய குறிப்பு ‘அநுபாவம்’ எனப்படும்.
அச்சுவைத் தோற்றத்தின் விரிவாய் உடம்பின் வழியாக வெளிப்படும் மனவிகாரங்களாகிய மெய்ப்பாடுகள் ‘சாத்துவ பாவம்’ என்று பெயர் பெறும். மனவிகாரங்களாகிய மெய்ப் பாடுகள் வளர்வதற்குக் காரணமாய் அவற்றை நிறைவுபடுத்தி நிற்பனவாகும் துணைமெய்ப்பாடுகள் ‘சஞ்சாரிபாவம்’ எனப்படும்.
அச்சுவைத் தோற்றம் வளர்ந்து அவனால் சுவைக்கப்படுத லினால் சுவை ‘இரசம்’ எனப் பெயர் பெறும்.
ஆதலின், ஒருவனிடத்துச் சுவைத்தோற்றமாவது விபாவங்க ளால் தோன்றி, அநுபாவங்களால் வளர்ந்து, சஞ்சாரிபாவங்க ளால் உறுதி பெற்று அவனால் சுவைக்கப்படுதலின் சுவை ஆகின்றது.
°தாயிபாவம் எனப்படும் சுவைத்தோற்றம் ஒன்பது வகைப் படும். அவையாவன காதல், சிரிப்பு, துன்பம், கோபம், எழுச்சி (-முயற்சி) அச்சம், அருவருப்பு, வியப்பு, அடக்கம் என்பன.
காதல்மாத்திரமன்றி உவப்பும் உவகைக்குக் காரணமாகும். இவை ஒருவனுள்ளத்தில் தோன்றியபோது நிலையாய்த் தடைப்படாமல் வளர்ந்து, பால் தயிரானாற் போலச் சுவை யாக மாற்றப்படுகின்றன. சுவையும், சிருங்காரம் (உவகை), ஹா°யம் (நகை), கருணை (அவலம்) உருத்திரம் (வெகுளி), வீரம் (பெருமிதம்), பயானகம் (அச்சம்), பீபத்சம் (இளிவரல்), அற்புதம் (மருட்கை), சாந்தம் (நடுவுநிலை) என ஒன்பது வகைப்படும்.
விபாவமும், ஆலம்பந விபாவம், உத்தீபந விபாவம் என இருவகைத்து.
ஆலம்பந விபாவமாவது, ஒருவன் உள்ளத்தில் தோன்றும் சுவைத் தோற்றத்திற்கு நேரே காரணமாயுள்ள பொருளாகும்.
உத்தீபந விபாவமாவது, சுவைத் தோற்றத்திற்குக் காரணமா யுள்ள அடிப்படைப் பொருளைச் சார்ந்தும் சாராமலும் பொருந்தி நுட்பமான சுவைத்தோற்றத்தை வளர்க்கும் பொருள்.
இளம்பூரணரும் பேராசிரியரும் உள்ளத்தில் நிகழ்வதனைக் குறிப்பு என்றும், குறிப்புக்கள் தோன்றிய உள்ளத்தின் நிகழ்ச்சி யான் உடம்பில் உண்டாகும் வேறுபாடுகளைச் சத்துவம் என்றும் கூறுவர்.
வடநூலாருள் சிலர், உடம்பின் உருவினின்று தோன்றும் மனோதர்மத்தை அநுபாவம் (குறிப்பு) என்றும், உடம்பின் வழியாக வெளிப்படும் மனவிகாரங்களைச் சாத்துவிகம் என்றும் கூறுவர். சாத்துவிகபாவம் அநுபாவத்தினின்று வேறுபட்டதும் வேறுபடாததுமாய் இருத்தலின், அநுபாவத் தினுள் சாத்துவிகபாவம் அடங்கும் என்ற கருத்தும் உண்டாம். ஆகவே வடநூலார் கருத்துப்படி சுவைகோடல் கீழ்க்கண்டவற்றால் நிகழும்.
1. °தாயிபாவம் - மனத்தில் தோன்றும் சுவையின் முளை
2. விபாவம் - சுவை தோன்றுவதற்குக் காரணமான பொருள்
3. அநுபாவம் - சுவையைத் தெரிவிக்கும் உள்ள நிகழ்ச்சி யாகிய குறிப்பு.
4. சாத்துவிக பாவம் - குறிப்பைப் புலப்படுத்தும் மெய்ப்பாடு.
5. சஞ்சாரிபாவம் - மெய்ப்பாடுகளை நிறைவுபடுத்தும் துணைமெய்ப்பாடு
6. இரசம் - சுவைத் தோற்றத்தைச் சுவைக்கும் சுவை.
இவற்றைப் பாடல் ஒன்றில் காணுமாறு :-
எ-டு :
‘ஆளை யாஉனக் கமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை இன்றுபோய்ப் போர்க்கு
நாளை வாஎன நல்கினன் நாகிளங் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்’. (கம்பரா. 7271)
இராமன், இராவணனுடன் நிகழ்த்திய முதல்நாள் போரில் அவன் யாவற்றையும் இழந்து தனியனாய் நின்ற நிலையை நோக்கி “இன்று போய்ப் போர்க்கு நாளை வா!” என்று கூறித் திருப்பியனுப்பிய செய்தி கூறும் இராமாயணப்பாடல் இது. இதன்கண் யாவற்றையும் இழந்து தனியே நின்ற இராவ ணனைக் கொல்லாது இராமன் அவனை மறுநாள் போருக்கு வருமாறு சொல்ல எண்ணியது ‘°தாயிபாவம்’ என்ற சுவையின் முளை.
இராவணன் - ‘ஆலம்பந விபாவம்’ என்ற சுவைக்கு நேர் சார்பான பொருள்.
இராணவன் தனிமை - ‘உத்தீபந விபாவம்’ என்ற சுவைக்கு நேரே சார்பான பொருளைச் சார்ந்தது.
நாளைவா என்றல் - ‘அநுபாவம்’ என்ற உள்ளக்குறிப்பு.
இரக்கம் - ‘சாத்துவிக பாவம்’ என்ற மெய்ப்பாடு.
நீதிநெறியைப் பின்பற்றிய ஆராய்ச்சி - ‘சஞ்சாரிபாவம்’ என்ற துணை மெய்ப்பாடு.
உயிர்க்கொடை பற்றிய வீரம் - ‘இரசம்’ என்ற சுவை. (பேராசிரியம் கணேசய்யர் முன். பக். 4, 5; 7, 8; 12.)
உவகைச் சுவைக்குப் பொருந்தும் துணை களிப்பு (மகிழ்ச்சி); பெருமிதச் சுவைக்குத் துணை சிறுகோபம்; சமநிலைச் சுவைக்குத் துணை வெறுப்பு; பிறவற்றுக்கும் இவ்வாறே ஆய்ந்து கொள்ளுதல் வேண்டும்.
அவிநயத்தின் சிறப்பும், காட்சி நலம் அமைந்த களமும், பொருத்தமான காலமும் சுவையினை மேன்மேலும் ஓங்கி விளங்கச் செய்வன. சுவைகளில் சில ஒன்றோடொன்று இணைந்து இயன்றும் இன்பம் பயக்கும்.
பெருமிதமும் வெகுளியும் இணையும்; வியப்பும் அச்சமும் சேரும்; அவலமும் அச்சமும் கூடும்; உவகையும் நகையும் ஒன்றும். (நாடக. 55-57)
தலைமையான சுவையை ‘அங்கி ரஸம்’ என்றும், இணைந்து வருவதை ‘அங்க ரஸம்’ என்றும் வடநூலார் கூறுப.
மென்சுவையும் வன்சுவையும் என்பன.
1. உவகைச் சுவையும், அவலச் சுவையும் மிகுமென்சுவைகள்.
2. வெகுளியும், இழிப்பும் மிகவும் வன்மையான சுவைகள்.
3. நகை, சமம், வியப்பு இம்மூன்றும் மென்சுவையைச் சார்ந்தன.
4. பெருமிதமும் அச்சமும் வன்சுவையினைச் சார்ந்தவை.
3, 4 ஆகிய பிரிவில் வந்தவற்றை மென்மை வன்மைகட்கு இடைப்பட்டவாகிய நடுவுநிலைச் சுவைகள் எனவும் கொள்ளலாம். (நாடக. 59, 60)
நாவினால் நுகரும் அறுவகைச் சுவைகளுக்கும் முதலாகிய வேம்பும் மிளகும் புளியும் உப்பும் கடுக்காயும் கரும்பும் போல, நகை அச்சம் முதலிய சுவைகள் நிகழ்வதற்கு அடிப்படையான பொருள்கள்.
சூழ்ச்சி - எண்ணம்
‘சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்’ - குறள் 445
என்னும் குறளில் சூழ்தல் எண்ணுதல் என்ற பொருளில் வந்துள்ளது. இதுவும் ஒரு மனநிகழ்ச்சி. (தொ. பொ. 256 இள.)
சூழ்ச்சி என்பது சுழற்சி; அஃதாவது மனத்தடுமாற்றம். உலக வழக்கில் சூழ்வருவானைச் சுழல்வரும் என்று கூறுவதுண்டு. மனத்திலுள்ள சூழ்ச்சி யாதானும் ஒரு குறிப்பான் வெளிப் படுதலின் இதுவும் மெய்ப்பாடாயிற்று. (தொ.பொ. பேரா. 260)
இது துணைமெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று. இதனை வடநூலார் கள் முதலியன உண்டார் செயலாகிய ‘மதம்’ என்பர்.
அச்சமும் இழிப்பும் தரும் நிலையில் கிடத்தலும், பற்கள் இறுகச் சேர்ந்து வெளியே தெரிகின்றமையும், கைகால் முதலிய உறுப்புக்கள் விரைத்து இழுத்துக்கொண்டு இருத்த லும், வயிறு மெலிந்திருத்தலும், வெள்விழி வெளியே தெரியக் கருவிழி மறைந்திருத்தலும் போன்றவை. (நாடக. 253 உரை)
இவை அடியார்க்குநல்லார் காட்டுவன.
இஃது உவகை என்னும் மெய்ப்பாட்டுக்குரிய குறிப்பு நான்கனுள் முதலாவது.
செல்வம் - செல்வநுகர்ச்சி (தொ. பொ. 255 இள.)
செல்வம் என்பது நுகர்ச்சி (259 பேரா.)
“பெரும் பொருளீட்டி அச்செல்வத்தான் இன்புறத்தக்கது இவ்வில்லறம்” (கலி. 12) என்று தலைவன் கூறிய கூற்றில், செல்வம் உவகைப் பொருளாமாறு உணர்த்தப்படுகிறது. (பேரா.)
செல்வமாவது மனத்தை மகிழ்விக்கும் பொருள்களுக்குப் பொதுப்பெயர். எக்காலத்தும் பிறரை வருத்திப் பெறும் செல்வம் உவகைப்பொருள் ஆகாது. (தொ. பொ. மெய்ப். 11 பாரதி)
‘சொல்லப்பட்ட பெருமிதம்’ என்றதனால் காமம் பற்றியும் பெருமிதம் பிறக்கும் என்பது. அது, நலங்கிள்ளி தன் வஞ்சினத்தில் “மாசற்ற நெஞ்சத்தான் காதல் கொள்ளாத பரத்தையர் தொடர்பான் என் மார்பின் மாலை வாடுவதாகுக!” (புறநா. 73) என்ற கூற்றில், அவன் தன்னை உள்ளன்புடன் விழையும் மகளிரின் தொடர்பையே விரும்புபவனாகி அன்புடைக் காம வாழ்க்கையே நடத்தினன் என்று அறியப்படும். (தொ. பொ. 257 பேரா.)
அவலச் சுவை (வீ. சோ. 96 உரைமேற்.)
விரல்களை நொடித்தவண்ணம் மிகுதியாகக் கொட்டாவி விடுதலும், சோம்பல் முரித்தலும் (மூரி நிமிர்தலும்), சிடு சிடுவென இருத்தலும், காரணமின்றி முடங்கிப் படுத்துக் கிடத்தலும், நோய் இல்லாவிடினும் சோர்வுடன் நடத்தலும் போன்றவை சோம்பல் உடையவனுக்குரிய அபிநயங்கள். இவை அடியார்க்குநல்லார் காட்டுவன. (நாடக. 253)
ஞ
ஞஞ்ஞை - மயக்கம்.
பற்கள் இறுகிப் பேச்சிழந்த நிலையும், நுரை வழியும் கூம்பிய வாயும், மற்றவர்க்குச் சொல்லுபவன் போலத் தொடங்கிச் சொல்ல உணரா நிலையும், கண்விழிகள் வெளியே தெரிந் தும் எதையும் காணாத நிலையும், துன்பமுற்றுச் செயலற்ற நிலையும், முகத்தின் ஒளி நீங்கலும், இவை போன்றன பிறவும் மயக்கமுற்று விழுந்தவனுக்குரிய அபிநயங்கள். இவை அடியார்க்குநல்லார் காட்டுவன (நாடக. 253 உரை).
த
இஃது அச்சம் என்னும் மெய்ப்பாட்டிற்குரிய குறிப்பு நான்கனுள் இறுதியாவது.
இறையெனப்படுவார் தந்தையும் ஆசிரியரும் அரசரும் முதலாயினார். (தொ. பொ. 256 பேரா.)
எ-டு : ‘அரசன் தம்மை நிமிர்ந்து பார்க்கும் பார்வைக்கு அஞ்சிக் குறுநில மன்னர்கள் அவனுடைய திருவடி களையே நோக்கி இருக்கின்றனர்’ என்பது தம் இறை பொருளாகிய அச்சம். (பேரா.)
தம் இறை - தவறு செய்தவரைத் தண்டிக்கும் மன்னன். தாம் செய்யும் தவறுகள் பற்றியும், அத்தவற்றான் அரசன் தம்மைத் தண்டிப்பானே என்ற எண்ணம் பற்றியும் அச்சம் நிகழும். (பேரா.)
கொலை களவு கள் காமம் பொய் என்பனவற்றை நிகழ்த்தின வர்களுக்கு அரசனால் அச்சம் வருதலின், அரசன் அஞ்சப் படும் பொருள் ஆயினான். (தொ. எ. 252 இள.)
தம் இறை = அரசன்; தம் மிறை - தம் தவறுகள் என இருவகையாகப் பொருள் கொள்க. (மெய்ப். 8 பாரதி)
(1) ஒரு நிலையில் இல்லாமல் தலை ஆடிக்கொண்டே இருத்தல், (2) எந்த இடத்திலும் நேராக அமர முடியாத நிலை அடைதல், (3) உற்சாகம் தளர்ந்திருத்தல், (4) நெற்றியை விரல் களுக்கு இடையில் கொண்டு நெருக்குதல், (5) கண்கள் நோவி னால் வருந்திச் சுருங்குதல் முதலியன. இவை அடியார்க்கு நல்லார் காட்டுவன. (நாடக. 253)
தலைவன் தலைவியின் உள்ளம் தன்னிடத்து ஈடுபட்டதனை அறிந்து அவள் மெய்யைத் தீண்டியவழி, இதற்கு முன் அறியாத இப்புதிய பரிசத்தால் தன்னுள்ளத்து நிகழ்ந்த வேறுபாட்டைத் தலைவி அடக்கிக் கொள்ள முயல்வாள். அப்பொழுது உடம்பொடு தொடர்புடைமையும் தொடர் பின்மையும் என்ற நிலையிரண்டு முடைய மயிர்முடி மனத்தில் ஏற்பட்ட நெகிழ்ச்சியான் அவிழ்தலாம். (262 பேரா.)
இதனை வேட்கை என்ற இரண்டாம் அவத்தையின் முதல் மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர். களவில் புணர்ச்சிக்கு முற்பட்ட நான்குநான்கு பகுப்பினவாகிய முக்கூற்றுப் பன்னிருமெய்ப்பாடுகளுள் இஃது இரண்டாம் கூற்றின் முதல் மெய்ப்பாடு என்பர் ஏனையோர்.
தலைவன் குறித்த புணர்ச்சி வேட்கையையே தலைவியும் உள்ளத்துக் கொள்வாளாயின் ஒருவரை ஒருவர் சந்தித்த லாகிய புரிமுகம் புரிந்த பின்னர், (1) பொறிநுதல் வியர்த்தல், (2) நகு நயம் மறைத்தல். (3) சிதைவு பிறர்க்கின்மை, (4) கூழை விரித்தல், (5) காதொன்று களைதல், (6) ஊழணி தைவரல், (7) உடை பெயர்த் துடுத்தல், (8) அல்குல் தைவரல், (9) அணிந்தவை திருத்தல், (10) இல்வலியுறுத்தல், (11) இருகையும் எடுத்தல் என்னும் பதினொரு மெய்ப்பாடுகளும் தலைவிக்கு முறையே நிகழும். (தொ. பொ. 97 நச்.)
தலைவனது குறிப்பறிந்து அதற்கு உடன்பாட்டைத் தன் கண்ணினால் தெரிவித்த பின்னரும், தலைவி பெண்மையால் கூற்று நிகழாது. அவள் தன் வேட்கையைக் கண்ணாலேயே குறிப்பிடுவாள். (94 இள.)
இது பெருமிதம் என்னும் மெய்ப்பாட்டிற்குரிய குறிப்பு நான்கனுள் இரண்டாவது.
தறுகண் - அஞ்சத்தக்கன கண்டவழி அஞ்சாமை. மடலேறும் தலைவன், “யான் போர்க்களத்தில் வலிய யானைமேல் ஏறிப் போர் செய்ய வல்லவன்” (கலி. 141) என்று கூறுவது அவன் தறுகண்மை பற்றிய பெருமிதத்துக்கு எடுத்துக்காட்டு. (தொ. பொ. 257 பேரா.)
தன்மை என்பது சாதி இயல்பு.
பார்ப்பார், அரசர், இடையர், குறவர் என்று இன்னோர் மாட்டு ஒருவரை ஒருவர் ஒவ்வாமல் கிடக்கும் இயல்பு. அது நடை உடை பாவனைகளால் மெய்க்கண் கிடந்து வெளிப் படுதலின் மெய்ப்பாடாயிற்று.
பார்ப்பான் வயலைக்கொடி போன்று வாடிய இடையினை யும், தளர்ந்த நடையினையும் உடையன் (புற நா. 315) எனவும், அரசன் பகைவர் விடுத்த அம்பின் தழும்புபட்ட பரந்த அழகிய மார்பினன் (புறநா. 13) எனவும், இடையன் சாயம் ஏற்றிய ஆடையையும் காயாம் பூவினாலாகிய முடிமாலை யையும் ஆனிரைகளை ஓட்டுதற்குரிய கோலினையும் உடையன் (கலி. 108) எனவும், குறவன் தேனும் மயிற்பீலியும் கொண்டு வருபவன் எனவும் நடைஉடை செயல் முதலியன கொண்டு இன்னான் என்று உணர உதவும் மெய்ப்பாடு.
(தொ. பொ. 256 இள.)
தன்மை சாதித்தன்மை, அது பார்ப்பாராயின் அழுந்த மிதியாது மெல்லென அடியிட்டுக் குறுநடை கொண்டு வந்து சேறலும், அரசராயின் நிமிர்த்திய கழுத்தொடும் முன் னோக்கிய மார்பொடும் நடந்து சேறலும், இடையராயின் ஆடையில் இலை முதலியன இடுதற்கு வளைந்த மடியை விட்டுக் கட்டிக்கொண்டு கையில் மூங்கிற்கோலை ஏந்தி ஆனிரைகளை ஒருங்கு சேர்த்தற்குச் சீழ்க்கை ஒலி எழுப்பிக் கொண்டு வெற்றிலை பாக்கு உண்ணாமையால் காவிக்கறை ஏறாத பற்களுடன் தோன்றுதலும் முதலாக வழக்கு நோக்கிக் கண்டுகொள்ளுதல் (260 பேரா.)
இது மனத்தின் நிகழ்ச்சியை வெளிப்படுத்தலால் மெய்ப் பாடாயிற்று. இது துணை மெய்ப்பாடு முப்பத்திரண் டனுள்ஒன்று.
தன்மை சாதித்தன்மை என்று பொருள் கொள்வது ஆசாரம் ஆவது அல்லது, மெய்ப்பாடு ஆகாது. ஆதலின் ‘தண்மை’ என்று பாடம் கொண்டு எளிமை என்று பொருள் செய்வர் இரா. இராகவய்யங்கார். ‘தண்மை’ வடநூலுள் தைன்யம் எனப்படும்.
இனி, குழந்தை உரைக்குமாறு:
தன்மை அவரவர் நிலைக்கு ஏற்ற தன்மை; செல்வம் கல்வி இவற்றின் உயர்வுக்கு ஏற்றவாறும் அதிகாரத்திற்கு ஏற்ற வாறும் பேசுதல், நடத்தல் முதலியன (247)
தன்மையாவது - குணவியல்பும் குலவியல்பும் தோன்ற நிகழும் இயற்கைப் பண்பு. (தொ. மெய்ப். 12 ச. பால.)
இது தலைவன் தலைவி ஆகிய இருவர்க்கும் கூறப்படும் பத்துவகை ஒப்பினுள் ஒன்று.
திரு - செல்வம் (தொ. பொருள். 269 இள.); தொ. பொ. 90 ஆம் நூற்பா.வில் இப்பத்தும் விளக்கப்பட்டுள.
திரு - செல்வம். இது பொருள் பற்றியதன்று. செல்வம் என்பது சிந்தையின் நிறைவு. (மெய்ப். 25 ராக.)
திரு - பொருள் உடைமையும் பொருள் கொணர்ந்து துய்த்தலுமின்றி எஞ்ஞான்றும் திருத்தகவிற்றாயதோர் உள்ள நிகழ்ச்சி. அது ‘வினையுள் உடைமை’ (தீவினைக் காலத்தும் செல்வம் உடையவர் போன்றிருத்தல்) எனவும்படும். (மெய்ப். 25 பேரா.)
கணவன்குடும்பம் வறுமையுற்றபோதும், தந்தையின் செல்வநிலையைக் கருதாது கணவனொடு தலைவி,
‘கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்’ (நற். 110)
நிறைவொடு வாழ்வது திரு என்ற ஒப்புமை. (பேரா.)
தலைவி தோழிவாயிலாகத் தமர்க்கு அறத்தொடுநின்ற பின்னர்த் தலைவனொடு முன்பு பகலும் இரவும் திளைத்த வாறு திளைத்தலை, அச்சமும் நாணும் மடனும் காரணமாக நீக்குதல்.
தலைவனது பிரிவினால் அழியும் தலைவி முன்பு விரும்பித் திளைத்த விளையாட்டு முதலியவற்றை இப்பொழுது வெறுத்து நிற்றல் என்றுரைப்பினும் ஆம்.
இஃது ‘ஆக்கம் செப்பல்’ என்ற ஐந்தாம் அவத்தையின் இரண்டாம் மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர். (தொ. பொ. 261)
களவுக்காலத்துக்குரிய ஆறு பகுதியவாகிய இருபத்து நான்கு மெய்ப்பாடுகளில் இது கூட்டம் பெறாமல் நைந்து அழி தலைவியின் ஐந்தாம் காதற்பகுதிக்குரிய இரண்டாம் மெய்ப்பாடு என்பர் ஏனையோர். (தொ. பொ. 265 பேரா.)
துஞ்சல் - உறக்கம். உறங்காமையாகிய நிலையினின்று உறக்கம் என்னும் நிலை, மெய்யில் தோன்றும் வேறுபாடுகளால் உரைப்படும். (தொ. பொ. 256 இள.)
துஞ்சல் என்பது உறக்கம். அது நடந்து வருகின்றான்கண்ணும் விளங்கத் தோன்றுதலின், அதுவும் மெய்ப்பாடு எனப் பட்டது. (260 பேரா.)
இது துணை மெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று. இதனை வடநூலார் ‘நித்திரை’ என்பர்.
1. தலைவி, இரவுக்குறியிடத்துத் தலைவன் வரும் வருகையை, வரைதல் வேட்கையான், மகிழ்வோடு ஏலாமல் மனை யகத்துப் பொய்த்துயிலொடு சோம்பிக் கிடத்தல்; தலைவன் தன்னை வரைந்து கொள்ளாத புலவியான் இங்ஙனம் செய்கின்றாள் என்பது. (271 பேரா.)
2. கவலைகொண்டு உறங்காதிருத்தலேயன்றி உரிமை பூண்டமையான் உறக்கம் நிகழ்தல் என்ற கற்புக்காலச் செய்தியைக் கொள்வர், இளம்பூரணர். (267)
3. தலைவன் வரவை மகிழாது வருத்தத்துடன் அவனைக் கூடுதல். (மெய்ப். 23 பாரதி)
இஃது ஒழியாது ஒளியாது உடனுறையும் கற்புக் காதற்கூட்ட வேட்கைக்குறிப்பை வெளியிடும் மெய்ப்பாடு எட்டனுள் ஒன்று. (271 பேரா.)
இது நடுவண் ஐந்திணையுள் மனம் அழியாவழி நிகழும் மெய்ப்பாடு எட்டனுள் ஒன்று. (267 இள.)
வரைதலான் எய்தும் கூட்டம் தான் விரும்பியவாறு நிகழா மல் நீட்டித்தலான் தலைவி உளம் மடிந்து மனை சேர்ந் திருத்தல்.
இஃது இளிவரல் அழுகைகளுக்குப் பொருளாக அமைவது. (தொ. மெய்ப். 23 ச. பால)
சிறு கொட்டாவியும், நெடுமூச்சு விடுதலும், தொங்கும் முகமும், தள்ளாடும் உடம்பும், தெளிவின்மையும் போன் றவை.
இவை அடியார்க்குநல்லார் காட்டுவன. (நாடக. 253 உரை)
1. அறுவகைச் சுவைகளில் ஒன்று; தனிப் பாக்கின் சுவை.
2. ஆசியம், இரதி, அரதி, சோகம், பயம், சுகுச்சை என்னும் குண பேதங்கள். ‘அறுவகைத் துவர்ப்பும் பேசின்’ (சீவக. 3076) (L)
தலைவியும் தலைவனும் களவிலும் கற்பிலும் பிரிவு ஆற்றாது துன்புறுங்காலை, அவ்வாற்றாமை மற்றவர்க்கு இன்றித் தாமே துன்புறுகின்றாராகத் தனிமை தாங்காது படர்மெலிந்து இரங்கல். இது புணர்ச்சியை வெறுத்த குறிப்புப் போலத் தோன்றினும், ஆராய்ந்து உணரின், அக்கூட்டத்திற்கே நிமித்தமாம்.
இதனைப் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு என்பர் இளம் பூரணர் (266). அன்புத் திணையின் தனிப்படர் மெலிவின் துனி நனி விளக்கும் இம்மெய்ப்பாடு கற்பிற்குச் சிறந்து களவிற்கும் கொள்ளப்படும் என்பர் ஏனையார். (தொ. பொ. 270 பேரா.)
தூது விடுத்தற்கண் வெறுப்பு இல்லாமை.
தலைவி விலங்கும் பறவையும் போல்வன கண்டு களவொழுக் கத்தான் தான் படும் துயரங்களைத் தலைவற்குப் பன்முறை- யானும் தூதாகச் சென்று சொல்லுமாறு வேண்டுதல். தூது விடுவதன் பயன், தலைவன் விரைவில் களவொழுக்கத்தைத் தவிர்ந்து வரைய வேண்டும் என்பது.
இஃது ஒளியாது ஒழியாது உடனுறையும் கற்புக்காதற் கூட்ட வேட்கைக் குறிப்பினை வெளியிடும் மெய்ப்பாடு எட்டனுள் ஒன்று. (தொ. பொ. 271 பேரா.)
இது நடுவண் ஐந்திணையுள் மனன் அழியாவழி நிகழும் மெய்ப்பாடு எட்டனுள் ஒன்று. (267 இள.)
தலைவி தெய்வத்தை அஞ்சுதல். (தொ. பொ. 268 இள.)
தெய்வம் அஞ்சல் என்பது தலைவனுடைய குலதெய்வமும் அவனுக்கு ஆசிரியராகிய முனிவரும் இன்னார் என்று அவனான் உணர்த்தப்பட்டு உணர்ந்த தலைவி அத்தெய்வத் தினை அஞ்சி ஒழுகும்போது பிறக்கும் உள்ள நிகழ்ச்சியாம். தலைவிக்குத் தெய்வம் தலைவன்ஆயினும், அவனின் தான் வேறு அல்லளாக மந்திரவிதியோடு அவனான் மணக்கப் பட்டவள் ஆதலின், தலைவன் அஞ்சும் தெய்வத்துக்குத் தலைவியும் அஞ்ச வேண்டியவளே. (தொ. பொ. 272 பேரா.)
சூள் பொய்த்தல், பரத்தையர் கூட்டம் முதலிய தலைவன் தவறுகளுக்குக் கடவுள் வருத்தும் என்று தலைவி அஞ்சுவது. (மெய்ப் 24 பாரதி.)
தலைவி தலைவனான் உணர்த்தப்பட்டு அவன் வழிபடும் தெய்வத்தை அஞ்சி வழிபடுதல். தெய்வமாவது - ஆசிரியர், பெற்றோர், பெரியோர், இறந்துபோன முன்னையோர் முதலானோர். அஞ்சி வழிபடும் உள்ளக்குறிப்பு மெய்ப்பாடு எனப்பட்டது. (தொ. பொ. 259 குழ.)
இது கற்பிற்கே சிறந்த பத்து மெய்ப்பாடுகளுள் ஒன்று.
தெய்வம் வாழ்த்தல். (சாமி. 112)
பழைய பழக்க வழக்கங்களை நீத்துப் புதிதாகக் கொண்ட முறை பற்றிக் கைகளை உதறும் செயலுடைமையும், கலக்க மும், உதடுகளை மடித்துக் கடித்த வாயுடைமையும், புருவங் கள் துடிப்பதும், அசைந்தாடிக்கொண்டே யிருப்பதும், சிவந்த முகமுடைமையும், செருக்கிய நிலையுடைமையும் ஆம். இவை அடியார்க்கு நல்லார் காட்டுவன. (நாடக. 253 உரை)
களவில் புணர்ச்சிக்குப் பின்னர் தலைவன் வழங்கும் அன்புக் கையுறைகளை ஏற்ற தலைவி, ஊரவர் தூற்றும் பழிச்சொற் களுக்கு நாணி, இச்செய்தியைத் தோழி வாயிலாகச் செவி லிக்கு அறிவித்தலே தக்கது என்று தனக்குத் தலைவனொடு தொடர்புண்டாய செய்தியைக்கூற முறையாக அறத்தொடு நிற்றல். (தொ. பொ. 265 பேரா.)
நன்கு ஆராய்ந்து தலைவனொடு தான் கொண்ட தொடர்பினைத் தாய்க்கு அறிவிக்கத் தோழியிடம் கூறுதல்.
இஃது ஆக்கம் செப்பல் என்ற ஐந்தாம் அவத்தையின் முதல் மெய்ப்பாடு. (தொ. பொ. 261 இள.)
களவுக் காலத்துக்குரிய ஆறு பகுதியவாகிய இருபத்து நான்கு மெய்ப்பாடுகளுள் இது கூட்டம் பெறாமல் நைந்து அழி தலைவியின் ஐந்தாம் காதற்பகுதிக்குரிய முதல் மெய்ப்பாடு என்பர் ஏனையோர்.
கையாறு முதல் நடுக்கம் முடியவுள்ள எட்டுத்துணை மெய்ப் பாடுகளும் தோழியிற் கூட்டத்துக்கு உதவுவன என்பது நாவலர் சோமசுந்தர பாரதியார் கருத்து.
1. கையாறு - தன்வசமிழத்தல்; அஃதாவது செயலற்றிருத்தல். இதுவும் முற்றிய காதல் நோயான் வருவது.
2. இடுக்கண் - காதலால் வரும் துன்பம்.
3. பொச்சாப்பு - மறதி; ‘வேட்கை ஒருதலை’ (தொ.பொ.100 நச்.) என்ற நூற்பாவில் கூறப்பட்ட ‘மறத்தல்’ களவு என்னும் கைகோளுக்குச் சிறந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
4. பொறாமை - காதலர் இருவர் தம்முள் ஒருவரைப் பற்றி மற்றவர் பழித்துப் பேசுதலைப் பொறுத்துக் கொள்ள இயலாமை. இயற்பழிக்கும் தோழி கூற்றும் ஏனோர் கூற்றும் தாங்காமல், தலைவி அவற்றை வெறுக்கும் காதலியல்பே பொறாமையாவது.
5. வியர்த்தல் - நாணாலும் நடுக்கத்தாலும் வேர்த்தல். இது காதலர் இயல்பு.
6. ஐயம் - காதல் மிகுதியால் ஐயுறுதல். இது முதற்காட்சி யின்கண் நிகழும் ஐயமன்று;ஊடலில் எழும் ஐய உணர் வாம். திருக்குறளில் ‘புலவி நுணுக்கம்’ என்னும் 132 ஆம் அதிகாரத்து நிகழும் கூற்றெல்லாம் இவ் ஐயத்தால் நிகழ்வன.
7. மிகை - காதல் எல்லை மீறியதால் வரும் நிறையழிவு. தலைவிக்கும் காதல் மிகுதியால் நிறையழிவு தோன்றும்.
8. நடுக்கு - காதலர்க்கு உணர்ச்சி மிகுதலால் உண்டாகும் பனிப்பு. ‘இடமுலைக் கிடந்தும் நடுங்க லானீர்’ (குறுந். 178) எனத் தலைவற்கும், ‘சூர்நசைந் தனையையாய் நடுங்கக் கண்டே’(குறுந். 52) எனத் தலைவிக்கும் நடுக்கம் தோன்றும்.
இவையெட்டும் காதலின் நான்காம் நிலையாம் தோழியிற் கூட்டத்தொடு தொடர்வன. (தொ.பொ. மெய்ப். 12 பாரதி)
ந
புன்னகை புலப்படுதற்குக் காரணமாகிய அன்பினை வெளியே புலப்படாது மறைத்தல்.
தலைவன் தன்னைக் கண்ட அளவில் அச்சமும் நாணமும் கொண்ட தலைவிக்கு நெற்றி வியர்த்ததாக, அதன்பின் தலைவனிடத்துத் தோன்றிய குறிப்புக்களான் முறுவல் செய் தற்கு ஏதுவாகிய அன்புடைமை மனத்துப் பிறந்தவழியும், அவள் முறுவல் செய்யாது நிற்றல். தலைவி போல முறுவலை அடக்கிக் கொள்ளாது, தலைவன் வெளிப்படையாக முறுவலிப்பான். (தொ. பொ. 261 பேரா.)
இது முதல் அவத்தையின் மூன்றாம் மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர்; களவு எனும் கைகோளில் புணர்ச்சிமுன் நந்நான்காக நிகழும் முக்கூற்றுப் பன்னிரு மெய்ப்பாட்டினுள் முதற் கூற்றின் மூன்றாம் மெய்ப்பாடு என்ப ஏனையார்.
எள்ளல் (-இகழ்ச்சி), பகைமை, மயக்கம் என்பன காரணமாகச் சிரிப்பை விளைவிக்கும் செயலும் சொல்லும் பொருந்தியது நகை.
இது புன்னகை, வெளிநகை, பெருநகை, இடிநகை, அழுநகை, வலி நகை என அறுவகைப்படும். (நாடக. 44, 45)
அளவு கடந்த சிரிப்பு, பிறர்க்குச் சிரிப்பூட்டுதல், முகக் கோணல், கன்னம் சுருங்குதல், புருவம் இடைவிட்டு வளை தல், தொடங்கிய செயலை விடுத்து வேறொன்று செய்து பின் முன்னதையே செய்வது - போன்ற வேறுபாடுகள் என்னும் இவையும் இவை போல்வன பிறவும் நகைச்சுவைக்குரிய அபிநயங்களாம். (நாடக. 245)
நகைபடுபொருள் கண்டவழி முறுவலொடு வரும் மகிழ்ச்சிப் பொருளாவது நகை. எள்ளல், இளமை, பேதைமை, மடன் என்னும் நான்கு குறிப்புப் பற்றி நகை நிகழும்.
இவை தான் பிறரை எள்ளி நகுதலும் தான் பிறரான் எள்ளப் பட்டவழித் தான் நகுதலும், தன் இளமையான் நகுதலும், பிறர்இளமை கண்டு தான் நகுதலும், தன்பேதைமையை நினைத்து நகுதலும், பிறர்பேதைமை கண்டு நகுதலும், தன் மடமை (அறியாமை)யை நினைந்து நகுதலும், பிறர்மடமை யை நினைந்து நகுதலும் என, தன்கண் தோன்றுவனவும் பிறன்கண் தோன்றுவனவும் ஆகிய பாகுபாடு பற்றி எட்டாதலும் உரிய.
இந்நால்வகை நகையும் உள்ளத்தொடு பிறப்பனவாம். ஆகவே, உள்ளத்தொடு பிறவாத பொய்நகையும் உண்டு என்பது. (பேரா.)
மயக்கம், பெயர்ப்பு, இகழ்வு, நோக்கம் என்ற நான்கனையும் நகைக்குறிப்பாக வீரசோழிய உரை குறிக்கும் (மயக்கம் - பேதைமை; பெயர்ப்பு-நிகழ்ச்சியைப் பிறழக்கொள்ளும் மடம்; நோக்கம்-நோக்குதற்கு இனிய இளமை; இகழ்வு-எள்ளல். ஆதலின் மயக்கம் முதலிய நான்கும் முற்கூறிய எள்ளல் முதலிய நான்கேயாம்.) (தொ. பொ.252 பேரா; வீ.சோ. 96 உரைமேற்.)
தமிழினத்தொடு சிறிதும் பழகாத ஆரியர் தமிழை நூல்வாயி லாகக் கற்ற அறிவினைக் கொண்டு கூறும் தமிழும், குருடரும் முடவரும் நடந்து செல்லும் நடையும், பித்தரும் களியரும் சுற்றத்தாரை இகழ்தலும், குழவி கூறும் மழலையும் போல்வன. (தொ. பொ. 249 பேரா.)
முடவர் செல்லும் செலவும், கவலை மிகுந்து பேசுவோர் பேச்சும், பித்தர் கூறும் பிதற்றலும், கோபத்தான் பேசுவது இன்னது என்று அறியாது உண்மையான சுற்றத்தாரை இகழ்ந்து பேசுவதும், ஒருவனுக்கு அடங்கி நடப்பவன் அவனில்லாதபோது பேசும் பேச்சும், குழந்தை கூறும் மழலையும், மெலியவர் தம் வலிமைபற்றிப் பேசுவதும், வலியவர் தம் மெலிவு பற்றிப் பேசுவதும், பகைவரை அளவு மீறி மதித்து அவரை உயர்த்திப் பேசுவதும், கல்லாதவர் தம் கல்வியை மிகுத்துப் பேசுவதும், பெண்தன்மையும் உடைய அலி ஆண்வடிவில் வருதலும் ஆண்தன்மையும் உடைய பேடி பெண் வடிவில் வருதலும், கள்ளுண்டார் பேசுவதும், மனம் போனபடி நடப்பவன் பேசுவதும், தெளிவற்றவர் செய்யும் கடவுள்வழிபாட்டுச் சடங்கும், தமிழ்நாட்டில் பயிலாத ஆரியர் கூறும் தமிழும், தாம் விரும்பும் பெண்ணின் உள் ளத்தை அறியாத காமுகர் பேச்சும், கூனர் குறளர் ஆகியோர் தோற்றமும், ஊமர் செவிடர் ஆகியோர் செயல்களும் முதலியன. (செயிற்றியம்) (தொ. பொ. 248. இள. உரைமேற்)
மொழி குழறுதல், பற்களிடையே நாவினை மடித்துக் கொள் ளுதல், வாயில் பனி போலவும் பஞ்சு போலவும் நுரை தோன்றுதல், தன்னைச் சுற்றியுள்ளாரிடம் பேச விரும்பியும் ஏதும் பேச இயலாமை முதலியன. (இவை அடியார்க்கு நல்லார் காட்டுவன.) (நாடக. 253 உரை)
நடுக்காவது யாதானும் ஒருபொருளை இழக்கின்றோம் என வரும் மனநிகழ்ச்சி. ‘நடுங்குதல் காண்மார் நகை குறித்தனரே’ (கலி.13) என்றவழி, தலைவன்பிரிவு நினைந்து தலைவி நடுங்குதல் சுட்டப்பட்டது. (தொ. பொ. 256 இள).
நடுக்கம் என்பது அன்பும் அச்சமும் முதலாயின உடம்பில் வெளிப்படும் வகையில் மனம் நடுங்குதல். மகனுக்கு நோயில் லாத போதும் அவனுக்கு நோய் வந்தால் என் செய்வது என்று மனம் நடுங்குவது அன்பினான் நடுங்குவதாம்; அச்சம் என்னும் சுவை தோன்றிய பின்னர் நடுக்கம் உண்டாயின் அஃது அச்சத்தினான் நடுக்கமாம் (260 பேரா).
இது துணைமெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று; இதனை வடநூலார் ‘திராசம்’ என்ப
இது துணைமெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்றாகக் கூறப்படுகிறது. இஃது ஒன்பான் சுவையுள் ஒன்று என நாடகநிலையுள் வேண்டப்படும் சமநிலையாகும். இது காமம் வெகுளி மயக்கம் இவை நீங்கினார்கண்ணேயே நிகழ்வதாய்ச் சிறுவரவிற்றாகலின் துணைமெய்ப்பாடுகளொடு சேர்த்துக் கூறப்பட்டுள்ளது. (தொ. பொ. 260 பேரா.) ‘சமநிலை’ காண்க.
இதனை வடநூலார் ‘த்ருதி’ என்ப.
நலிதல் -
நலிதலாவது பிறரை நெருக்குதல். அதன்கண் நிகழும் மன நிகழ்ச்சி நலிதல் எனும் மெய்ப்பாடாயிற்று. அரசன் பகைவரை நலிதற்குப் பாசறைக்கண் தங்கியிருத்தல் இதற்கு எடுத்துக்காட்டு. (தொ. பொ. 256 இள).
நலிதல் என்பது பிறர்க்கு இன்னா செய்து நெருக்குதல். அது தீவினை புரியும் கொடியோரிடமே நிகழும் செயலாகும். அக்கொடியோரைக் கண்ட அளவில் அச்சம் எழுந்ததாயின் அஃது அச்சம் என்ற மெய்ப்பாட்டில் அடங்கும்; ஆதலின் நலிதல் அச்சத்தின் வேறுபட்டது. இது மனத்திலுள்ள தீய எண்ணத்தைச் செயலால் வெளிப்படுத்தலின் மெய்ப்பா டாயிற்று. இது துணை மெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று. (260 பேரா)
இதனை வட நூலார் நோயான் வருந்துதலாகிய ‘வியாதி’ என்ப.
நவரசம் -
ஒன்பான் சுவைகளாம் நகை, அழுகை, இளிவரல், வியப்பு, அச்சம், வீரம், வெகுளி, உவகை, சாந்தம் என்னும் நூற் சுவைகள்.
நற்காமத்துக்கு ஆகா மெய்ப்பாடுகள் -
நிம்பிரி, கொடுமை, வியப்பு, புறமொழி, வன்சொல், பொச் சாப்பு, மடிமை, குடிமை, இன்புறல், ஏழைமை, மறப்பு, ஒப்புமை என்பன. இவற்றுள் குடிமை, இன்புறல், ஏழைமை, மறப்பு என்ற நான்கனைக் குடிமை இன்புறல், ஏழைமை மறப்பு எனக் கூட்டி இரண்டாக்கி நற்காமத்துக்கு ஆகாத மெய்ப் பாடுகள் பத்து என்பர் சோமசுந்தரபாரதியார் (மெய்ப். 28)
குடிமை இன்புறலை ஒரு தொடராகக் கொண்டு பதி னொன்று என்று தொகை கொள்வார் இளம்பூரணர். (தொ. பொ. 270)
ஒவ்வொரு சொல்லும் தனித்தனியாகக் கொண்டு பன் னிரண்டு என்று தொகை கொள்வர் பேராசிரியரும் (274), குழந்தையும் (261).
அவையாவன: நிம்பிரி, கொடுமை, வியப்பு, புறமொழி, வன்சொல், மறதி, சோம்புதல், குடிமை இன்புறல், ஏழைமை மறப்பு, ஒப்புமை நோக்கம் - என்பன.
நிம்பிரியாவது நேயமின்மை; அஃதாவது வெறுப்பு.
புறமொழியாவது, தமது உள்ளத்தும் இல்லத்தும் நிகழ்வன வற்றைப் புறத்தார்க்குப் புலனாமாறு பேசுதல்.
குடிமையின்புறலாவது, தத்தம் குடிமைச் சிறப்பினை உயர் வாக எண்ணிச் செருக்குக் கொள்ளுதல். இது மற்றவர் குடிமையை இகழும் குறிப்பாக அமைதலின் காதலுணர்வைச் சிதைக்க வல்லது.
ஏழைமை மறப்பாவது, பணிவுடைமையை மறந்தொழுகுதல். ஈண்டுப் பணிவென்பது அன்பிற்கு எளியராதல். மதிக்கத்தக் கார்மாட்டும் மேலாளர்மாட்டும் தம்மை அடியேன் எளியேன் சிறியேன் எனப் பண்புடையோர் கூறிக்கொண் டொழுகும் வழக்கினைக் காண்க. (தொ. மெய்ப். 26 ச. பால)
நாடக உறுப்பாகிய சுவை, காண்போரின் அறிவொடு கலந்து அவரை அவ்வுணர்வினராகவே ஆக்கிவிடும். நாட்டிய உறுப்பாகிய மெய்ப்பாடு காண்போரின் அறிவினைச் சார்ந்து அவ்வுணர்வினைப் புலப்படுத்தி நிற்கும். அஃதாவது நாடகத் துள் நிகழும் அழுகைக் காட்சியைக் காண்போர், தாமும் அழுவர். நாட்டிய மகள் அவினயத்துக் காட்டும் அழுகை யைக் காண்போர் அறிந்துகொள்ளுதலன்றி அழுதலைச் செய்யார். அதனால் நாடக உணர்வுகள் ‘சுவை’ என்றும் நாட்டிய உணர்வுகள் ‘மெய்ப்பாடு’ என்றும் தொன்னூ லாசிரியர் வேறுபடுத்தினர். (தொ. மெய்ப். பாயிரம். ச.பால.)
தலை கவிழ்ந்திருத்தல், தன்செயலைப் பிறர் அறியாவாறு மறைத்தல், முகம் வாடுதல், உடம்பு கம்பீரமின்றிக் கூனிக் குறுகுதல், உடம்பின்ஒளி நீங்குதல், பார்வையை மேலே செலுத்தாமல் தரையை நோக்கியே செலுத்துதல் முதலியன. (இவை சிலப்பதிகார உரையுள் அடியார்க்குநல்லார் காட்டுவன.) (நாடக. 253 உரை.)
நாணுதல் - தமக்குப் பழி வருவன செய்யாமை.
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாண்ஆள் பவர் (குறள் 1015)
எனவரும். (தொ. பொ. 256 இள.)
நாணுதல் என்பது தான் ஒரு செயல் செய்வது குறித்து உள்ளத்தில் நாணுகின்ற செயல் பிறருக்கு வெளிப்படுமாறு நிகழும் நிகழ்ச்சி (260 பேரா).
இது துணைமெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று. இதனை வடநூலார் ‘வ்ரீடை’ என்ப.
எட்டாகும் பகுதி என்பது பொருள். இத்தொடர் தொல் காப்பிய மெய்ப்பாட்டியல், உவமஇயல் என்ற ஈரிடங்களிலும் வந்துள்ளது.
சுவைக்கப்படு பொருளையும் சுவையுணர்வையும் ஒன்றாக வும், மனத்துக்கண்பட்ட குறிப்பையும், உடல்வாயிலாக வெளிப்படும் மெய்ப்பாட்டையும் ஒன்றாகவும் என இரண் டாக அடக்குதலேயன்றி, எல்லாவற்றையும் சுவை என்ற ஒன்றற்குள் அடக்கிச் சுவைகள், நகை - அழுகை - இளிவரல் - மருட்கை - அச்சம் - பெருமிதம் - வெகுளி - உவகை- என்ற எட்டாகக் கூறுதல். (250 பேரா.)
நந்நான்காய்த் தொகுத்து வழங்குதலன்றி, ‘ஆங்கவை ஒருபாலாக ஒருபால்’ (மெய்ப். 12) என எவ்வெட்டாகத் தொகுத்து வழங்குதலும், ‘புகுமுகம் புரிதல்’ (மெய்ப். 13) முதலிய 24 மெய்ப்பாடுகளையும் ஆறுகூறுகளாகத் தொகுத்து வழங்குதலும் ஆம். (மெய்ப். 2 பாரதி).
சுவைத்தோன் வெளிப்படுத்திய விறல் அரங்கின்கண் இருந்து காண்போரது உணர்வொடு பொருந்தி நிற்பதே சுவையாம் ஆதலின், நாடகக் காட்சியைக் கண்டு சுவைப்போரை அடிப்படையாக வைத்து நோக்குங்கால் அவை பதினாறும் எட்டாக அடங்கி விடும். (‘நானான்கு பொருளாவன’ காண்க.) (தொ. மெய்ப். 1, 2 ச. பால.)
சுவைப் பொருளையும் சுவைப்போனையும் ஒரு கூறாகவும், சுவைப்போன் உணர்வையும் அவன் வெளிப்படுத்தும் விறலை யும் ஒரு கூறாகவும் தொகுத்துக்கொண்டு வீரம் அச்சம் முதலிய எட்டுக்குணங்களோடும் அவற்றை உறழ்வதனால் நானான்கு பொருள் வரும். சுவைத்தோன் சுவைத்த பொரு ளும் சுவைத்தோனது உள்ளஉணர்வும் அரங்கின்கண் அமர்ந்து காண்போர்க்குத் தெற்றெனப் புலப்படாமல், சுவைத்தோனும் அவன் வெளிப்படுத்தும் விற லுமே புலப்படு தலின் அவ்விரண்டுமே கொள்ளப்பட்டன. (தொ. மெய்ப். 1, 2 ச. பால.)
காட்சி, வேட்கை முதலாகச் சாக்காடு ஈறாகச் சொல்லப் பட்ட பத்து அவத்தையுள் நான்காம் அவத்தையாகும் மெலிதல் என்பதன்கண் தலைமகளுக்கு நிகழும் மெய்ப் பாடுகள் பாராட் டெடுத்தல், மடம் தப உரைத்தல், ஈரமில் கூற்றம் ஏற்று அலர் நாணல், கொடுப்பவை கோடல் என்ற நான்குமாம். (260 இள.)
இவற்றைக் களவில் புணர்ச்சிக்குப் பின் தலைவியிடம் நிகழும் மூன்று பகுதியவாகிய மெய்ப்பாடுகளுள் முதற்பகுதிக்கு உரியவும், பொதுவாகக் களவின் நான்காம் பகுதிக்கு உரியவும் ஆகிய மெய்ப்பாடுகள் என்பர் பேராசிரியர். (264)
இவைநான்கும் தோலாக் காதலின் நாலாங்கூறு பற்றிய மெய்ப்பாடுகள் என்பர் சோமசுந்தர பாரதியார். (தொ. பொ. 16)
சுவைப்பொருளையும் சுவைப்போனையும் ஒரு கூறாகவும், சுவைப்போன் உணர்வையும் அவன் வெளிப்படுத்தும் விறலையும் ஒரு கூறாகவும் தொகுத்துக்கொண்டு வீரம் அச்சம் முதலிய எட்டுக்குணங்களோடும் அவற்றை உறழ்வத னால் நானான்கு பொருள் வரும். சுவைத்தோன் சுவைத்த பொருளும் சுவைத் தோனது உள்ளஉணர்வும் அரங்கின்கண் அமர்ந்து காண்போர்க்குத் தெற்றெனப் புலப்படாமல், சுவைத்தோனும் அவன் வெளிப்படுத்தும் விறலுமே புலப்படு தலின் அவ் விரண்டுமே கொள்ளப்பட்டன. (தொ. மெய்ப். 1, 2 ச. பால)
இது நற்காமத்துக்கு ஆகாத மெய்ப்பாடுகளுள் ஒன்று.
நிம்பிரி - அழுக்காறு, அவ்வியம் (தொ. பொ. 270 இள.)
பொறாமை (சகிப்புத்தன்மையின்மை) (274 பேரா.)
நிம்பிரி - பிழை பொறாப் பெற்றியாகிய சகிப்புத் தன்மை யின்மை. அழுக்காறு தனித்தார்மாட்டும் தவறாதலின், நிம்பிரிக்குப் பொருள் அதுவன்று. ‘குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’ யாதலின், தலைவிக்கு இன்றியமையா மடன் என்பது தலைவனது குற்றம் தான் அறியாமையே ஆதலின், தலைவனைக் காணாக்கால் அவனது தவறு அல்லன காணாத் தலைவி அவனைக் காணுங்கால் தவறாய காணாள் எனத் தலைவியின் இலக்கணம் சொல்லப்படுதலின் (கு.1286), நிம்பிரி என்பது அழுக்காறு என்னும் பொருள்படாது பிழைபொறாப் பெற்றியையே குறிப்பதாம். அஃது உளதா யின் காதல்வாழ்வுக்கு ஏதமாதலின் அது விலக்கப்பட்டது. (மெய்ப். 26 பாரதி). (நேம்+பிரி - நிம்பிரி. அண்டி நீங்குதல்)
நிலையில்லா மெய்ப்பாடுகள் -
உடம்பின் வழியாக மனக்குறிப்புக்கள் வெளிப்படுங்கால் அவற்றை வெளிப்படுத்தும் நகை அழுகை முதலிய எண்வகை மெய்ப்பாடுகளின் வளர்வுக்குக் காரணமாய் அவற்றை நிறைவுபடுத்தி நிற்பனவும், தனிப்பட்ட முறையில் நகை அழுகை முதலிய எதற்கும் துணையாகும் உரிமை பூணாது எல்லா மெய்ப்பாடுகளுக்கும் பொதுவாய் இருந்து அவற்றை நிறைவு செய்து நிற்பனவும் ஆகிய மெய்ப்பாடுகள். இவை 32 என்று குறிக்கப்பெறுவன.
உடைமை, இன்புறல், நடுவுநிலை, அருளல், தன்மை, அடக்கம், வரைதல், அன்பு, கைம்மிகல், நலிதல், சூழ்ச்சி, வாழ்தல், நாணுதல், துஞ்சல், அரற்றல், கனவுதல், முனிதல், நினைதல், வெருவுதல், மடிதல், கருதல், ஆராய்தல், விரைதல், உயிர்த் தல், கையறுதல், இடுக்கட்படுதல், பொச்சாத்தல், பொறா திருத்தல், வியர்த்தல், ஐயுறுதல், மிகைத்தல், நடுங்குதல், என்பன அவை.
இவை நகை முதலியவற்றிற்கு உதவியாதலேயன்றித் தனித்து வருதலும் உண்டு. நகை முதலியவற்றொடு வருமிடத்து இவை அவற்றுக்கு அங்கமாகும். (இவை ‘சஞ்சாரிபாவம்’ எனப் படும்.) இவை அகம் புறம் இரண்டற்கும் பொது. (தொ. பொ. 260 பேரா.)
இனி, சோமசுந்தர பாரதியார் கருத்து வருமாறு :
நகை முதலிய எட்டும் புறத்தே மெய்யில் தோன்றும் தன்மை யன. உடைமை முதல் நடுக்கம் ஈறாகச் சொல்லப்பட்ட இத்துணை மெய்ப்பாடுகள் புறக்குறிச்சுட்டின்றிச் செய்யுட் பொருள் சிறக்க வரும் உணர்வுகளாம். நகை முதலிய எட்டும் அகம் புறம் இரண்டற்கும் பொது. இம்முப்பத்திரண்டும் அகத்திற்கே உரியன. இவை எவ்வெட்டாய் முறையே இயற்கைப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கொடுதழாஅல், தோழியிற் புணர்வு என்ற நான்கற்கும் ஏற்பத் தொகுக்கப்பட் டனவாம். ஆகவே, உடைமை முதல் அன்பு ஈறாகிய எட்டும் இயற்கைப் புணர்ச்சிக் குரிய; கைம்மிகல் முதல் கனவு ஈறாகிய எட்டும் இடந்தலைப்பாட்டிற்குரிய; முனிதல் முதல் உயிர்ப்பு ஈறாகிய எட்டும் பாங்கற் கூட்டத்திற்குரிய; கையாறு முதல் நடுக்கு ஈறாகிய எட்டும் தோழியிற் கூட்டத்திற்குரிய. இம் முப்பத்திரண்டு மெய்ப்பாடுகளும் களவுக்கே உரியன. (தொ. மெய்ப். 12)
இது தலைவன் தலைவி ஆகிய இருவருக்கும் கூறப்படும் பத்து வகை ஒப்பினுள் ஒன்று.
நிலைநிறுத்தப்பட்ட புணர்ச்சிக்கு வாயில், அஃதாவது ஒருவர்மாட்டு ஒருவருக்கு அன்பு. (தொ. பொ. 90 இள. உரை)
பொருத்தமான வடிவழகுடையாரிடம் நிகழும் இன்பத்துக்கு வாயிலாகிய அன்பு. (273 பேரா.)
நிலைத்த காதல் நிலை. (மெய்ப். 25 பாரதி)
தலைவன் தலைவியின் கண்களைப் பலகாலும் உற்று நோக்கிச் சென்றானாக, அன்று மாலை தலைவி அவன் சென்று மறைந்த இடத்தை நோக்கியவாறே, தோழியிடம், “மற்று இவன் மகனே தோழி” என்று அவன் நினைப்பாகவே கூறியது நிறுத்த காமவாயில். (அகநா. 48) (பேரா.)
நிறுத்த காமவாயிலாவது, நிலைபேறுடைய காமவொழுக் கத்திற்கு உரிய உள்ளக்கிளர்ச்சி. (தொ. மெய். 25. ச. பால.)
தலைவன் தலைவி இருவருக்குமிடையே கூறப்படும் பத்துவiக ஒப்பினுள் ஒன்று.
நிறை - அடக்கம். (தொ. பொ. 90 இள. உரை).
நிறை - மறை பிறர் அறியாமை நெஞ்சினை நிறுத்துதல். (273 பேரா)
தலைவன் தன்நோயைக் கண்நின்று கூறுதல் ஆற்றான் என்பதும், அவன்நோய் இன்னது என்று வினவுவது தமக்குப் பெண்மை யன்று என்பதும் இருவர்மாட்டும் அமைந்த நிறை என்ற பண்பினை விளக்கும். எ-டு: (கலி.37).
நினைதல் என்பது கழிந்ததனை நினைத்தல். அஃது ஒரு முறை மறந்த அளவிலேயே கழியாது பின்னும் நினைவுக்கு வருத லின் மெய்ப்பாடாயிற்று. (தொ. பொ. 256. இள).
நினைதல் என்பது விருப்புற்று நினைதல். நின்னை மிகவும் நினைத்தேன்’ என்று உலக வழக்கிலும் பேசப்படுகிறது. அந்நினைவுள்ளம் பிறர்க்குப் புலனாதலின் மெய்ப்பாடா யிற்று. இது துணைமெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று.
இதனை வடநூலார் ‘ஸ்மிருதி’என்ப.
ப
கூட்டம் பெறாது ஆற்றாத் தலைவி காதல் நோயால் தன் மாமைக் கவின் இழந்து அவ்விடத்துப் பசலை என்ற நிறவேறுபாடு பரவுமாறு இருத்தல்.
இதனைப் பெருந்திணைக் குரிய மெய்ப்பாடு என்பர் இளம் பூரணர். (266)
அன்புத்திணையில் தனிப்படர் மெலிவின் துனி நனி விளக்கும் இம்மெய்ப்பாடு கற்பிற்குச் சிறந்து களவிற்கும் கொள்ளப் படும் என்பர் ஏனையோர்.
பிரிவிடை நிகழும் இம்மெய்ப்பாடு ஆராய்ந்துணரின் புணர்ச் சிக்கு நிமித்த மாகும். (தொ. பொ. 270 பேரா)
பசி வருத்தவும் அதற்குத் தளராது உணவு மறுத்தல் (பேரா.) தனிமைத் துயரில் வருந்துவார் உணவை வெறுத்துப் பிறரை வருத்தும் பசிப்பிணியைத் தாம் வருத்தி உணவு கொள்ளா மலிருத்தல் என்றலும் ஒன்று.
இதனைப் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு என்பர் இளம் பூரணர் (தொ. பொ. 266)
அன்புத்திணையில் தனிப்படர்மெலிவின் துனி நனி விளக்கும் இம்மெய்ப்பாடு கற்பிற்குச் சிறந்து களவிற்கும் கொள்ளப் படும் என்பர் ஏனையோர்.
பிரிவிடை நிகழும் இம்மெய்ப்பாடு ஆய்ந்துணரின் புணர்ச் சிக்கு நிமித்தமாம்.
விளையாட்டு ஆயத்தின்கண் தோன்றிய 32 பொருள்கள். அவையாவன: வீரம் அச்சம் வியப்பு இழிப்பு காமம் அவலம் உருத்திரம் நகை என்ற எட்டனையும், சுவைக்கப் படு பொருள்-சுவையுணர்வு-குறிப்பு-சத்துவம் என்ற நான்கானும் உறழத் தோன்றுவன. (தொ. பொ. 245 இள.)
முடியுடை வேந்தரும் குறுநிலமன்னரும் முதலாயினோர் நாடக மகளிர் ஆடலும் பாடலும் கண்டும் கேட்டும் காமம் நுகரும் இன்ப விளையாட்டினுள் தோன்றிய முப்பத்திரண்டு பொருள்கள் அம் முப்பத்திரண்டாவன. ஒன்பது சுவையுள் வீரம் அச்சம் வியப்பு இழிப்பு காமம் அவலம் நகை நடுவுநிலை என்று உருத்திரம் ஒழித்த எட்டனையும் கூறுங்கால், சுவைக்கப்படுபொருளும்-அதனை நுகர்ந்த பொறியுணர்வும்-அது மனத்துப்பட்டவழி உள்ளத்து நிகழ்ந்த குறிப்பும்-குறிப்புக்கள் பிறந்த உள்ளத்தால் கண்ணீர் அரும்பலும் மெய்ம்மயிர் சிலிர்த்தலும் முதலாக உடம்பின்கண் வரும் வேறுபாடாகிய சத்துவங்களும் என நான்காக்கி, அச்சுவை எட்டோடும் கூட்டி ஒன்று நான்கு செய்து உறழ, இவை முப்பத்திரண்டு என்பது. பண்ணை-விளையாட்டு. (249 பேரா)
இவை தனிநிலை கருதாமல் ஒரு புறக்குறியால் புலப்படும் இனத் தொகுதியாய் எண்வகை மெய்ப்பாட்டுப் பொருளாகும் உணர்வுகளாகிய எள்ளல் முதல் விளையாட்டு ஈறாகக் குறிப்பிடும் முப்பத்திரண்டாம்.
பண்ணை என்பது தொகுதி. ‘ஒலித்தன முரசின் பண்ணை’ என்றார் கம்பரும். பலமுளை ஒருங்கு கிளைக்கும் ஒரு தட்டைத் தூறும், சுற்றம் செறிந்த ஒரு பெருங்குடியும், உறுப்பினர் நிறைந்த ஒருகழகமும் தொகுதி பற்றிப் ‘பண்ணை’ எனப்படும். (மெய்ப். 1 பாரதி.)
பண்ணை என்பது விளையாட்டு.விளையாட்டாவது அறிவின்பப் பயன் விளைக்கும் ஆடலாகும். இதன் மறுதலை வீணாட்டு. ஆடுதல்-செயலுறுதல். நா அசைத்தலான் பேச்சு நிகழ்தலின் பேசுதலை உரையாட்டு என்பது வழக்கு. எனவே, உடம்பாலும் நாவாலும் ஒருபொருள் விளையுமாறு நிகழும் ஆடல் விளையாட்டு என்பது போதரும்.
வெறியாட்டு, களியாட்டு உண்டாட்டு என்பவை உடம்பு பற்றியன; பாராட்டு, சீராட்டு, கோதாட்டு என்பவை உரை பற்றியன; கொண்டாட்டு, திண்டாட்டு என்பவை உள்ளம் பற்றித் தோன்றி உடம்பாலும், உரையாலும் வெளிப்படுவன. ஈண்டு அவையாவும் தொகுதியாக அடங்கி நிற்றலின் பண்ணை எனப்பட்டது. பண்ணுதல் பண்ணை ஆயிற்று. (தொ. மெய்ப். 1, 2 ச.பால.)
பிறப்பு, குடிமை, ஆண்மை, ஆண்டு, உருவு, நிறுத்த காமவாயில், நிறை, அருள், உணர்வு, திரு என்னும் பத்தும் தலைவனுக்கும் தலைவிக்கும் உரிய ஒப்புக்களாம். இவற்றுள், சிலவற்றான் தலைவன் தலைவியைவிட மேம்பட்டவனாக இருக்கலாம்; ஆயின் தலைவி ஒருவாற்றானும் தலைவனை விட மிக்காளாதல் கூடாது. (தலைவி கல்வியில் மிகக் குறைந்தவளாதலின் இவ்வொப்புக்களுள் கல்வி இடம் பெறவில்லை) (தொ. பொ. 273 பேரா.)
பயம் -
அச்சச்சுவை (பிங். 3042)
பயானக ரஸம் -
அச்சச்சுவை; சுவையணி வகைகளுள் ஒன்று. அது காண்க.
முனிதல் முதல் உயிர்ப்பு முடிய உள்ள எட்டும் ஆம் என்பது சோமசுந்தர பாரதியார் கருத்து.
முனிதல்-முன் விரும்பியவற்றை வெறுத்தல்; அது ‘பாலும் உண்ணாள் பந்துடன் மேவாள்’ (குறுந். 396). என வருவது.
நினைதல் - விருப்புற்று நினைத்தல்; அது ‘நினைப்பவர் போன்று நினையார்கொல்’ (குறள் 1203), ‘உள்ளா திருப்பி னெம் அளவைத் தன்றே’ (குறுந். 102)
எனத் தலைவியும், ‘நினைந்தனென் அல்லனோ பெரிதே’ (குறுந். 99) எனத்தலைவனும் நினைத்தல் போல்வன.
வெரூஉதல்-பிரிவும் ஊறும் அஞ்சுதல். ‘பிரிவு ஆங்கு அஞ்சி’ (குறுந். 177) ‘நீயே, அஞ்சல் என்றஎன் சொல்அஞ் சலையே’ (குறுந். 300)
என்றாற் போல்வன பிரிவச்சம் பற்றியன. ‘இரவுநீ வருதலின் ஊறும் அஞ்சுவல்’ (குறுந். 217), ‘உள்ளினும் பனிக்கும் ஒள்ளிழைக் குறுமகள்’ (நற். 253)
என்றாற்போல்வன, வழியிடை வரும் ஏதம் பற்றித் தலைவி வெருவியதனைப் புலப்படுத்தும்.
மடிமை -ஆற்றாமையின் அயர்வு; அது ‘விளையாடு ஆய மொடு அயர்வோள்’ (குறுந். 396) என்றாற் போல்வது.
கருதல் - குறிப்பு ‘உறாஅர்போன்(று) உற்றார் குறிப்பு’ (குறள் 1097) என்பதனால் குறிப்பு என்பது மனத்தாற் குறித்துணர்வது எனப்படும்.
ஆராய்ச்சி-காதலர் அன்புகளின்வழி சூழ்தல். ‘தோழி, வன்கண் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே’ எனத் தலைவி அன்பு கனிதற்குரிய செய்திகளைத் தான் ஆராய்வ தனைத் தோழிக்குக் கூறுதல் போல்வன.
விரைவு-வேகம்; ஆர்வ மிகுதியான் எழுவது.
உயிர்ப்பு-களவுக்கூட்டம் நிகழாவழிக் காமம் மிகுந்து நெடிதாக மூச்சு விடுதல்.
இவை பாங்கற் கூட்டத்துக்குரிய. (மெய்ப். 12. பாரதி)
களவொழுக்கத்தில், புணர்ச்சி நிகழ்ந்த பின்னர்த் தலைவனும் தலைவியும் ஒருவர் மற்றவரின் நல்லியல்பினைச் சிறப்பாக மனத்துக் கொள்ளுதல்.
தலைவன் தலைவிநலத்தை அவளிடம் நேரே பாராட்டுவான்; ஆயின் தலைவி அவன்நலத்தை அவனில்லாத போது தோழி யிடம் பாராட்டுவாள். (குறுந். 3, 193) (தொ. பொ. 264 பேரா.)
இது ‘மெலிதல்’ என்ற நான்காம் அவத்தையின் முதல் மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர் (260). களவியல் புணர்ச் சிக்குப் பின் நிகழும் மூன்று பகுதியவாகிய பன்னிரண்டு மெய்ப்பாடுகளுள் முதற் பகுதியின் முதல் மெய்ப்பாடு இது என்பர் ஏனையார். இது தோலாக் காதலின் நாலாங்கூற்றின் முதல் மெய்ப்பாடு என்பர் பாரதியார்.
மாறுபடுதல் இல்லாத அச்சம். மாறுபடுதல் நிகழுமாயின் நடுக்கம் முதலியன உளவாகா. அஃதாவது மற்றவர் அஞ்சத் தக்க பொருள்களை எதிர்த்துப் போரிடும் மனநிலை ஒருவ னுக்கு ஏற்பட்டால் அவனுக்கு அச்சம் தோன்றாது. (தொ. பொ. 252 இள.)
‘பிணங்காத அச்சம்’ என்னாது ‘பிணங்கல் சாலா அச்சம்’ என்றதனால், ஊடல் பொருளாகவும் அச்சம் பிறக்கும். புலந்த தலைவியை நோக்கித் தலைவன், “என்னிடத்தினின்று விலகி நின்று, யான் செய்யாத குற்றங்களை என்மேல் ஏற்றிக் கூறாதே. நின் ஆணையை யான் கடப்பதில்லையே” என்று கூறுதல் (கலி. 81) இதற்கு எடுத்துக்காட்டு. (256 பேரா.)
பிணங்கல் சாலா அச்சம் என்பது, பகைமையான் மாறுபடு வதோ, அன்பினால் நெருங்குவதோ இல்லாத அச்சம் என்பது. மாறுபடுதலும் நெருங்குதலும் உளவாயின் அச்சம் இன்றாம். (மெய்ப். 8 பாரதி.)
இஃது இளிவரல் என்ற மெய்ப்பாட்டுக் குரிய குறிப்பு நான்கனுள் இரண்டாவது.
பிணி-பிணியாகிய நோய் ஏற்பட்டிருப்பது கண்டு இழித்தல்; அதனானே உடம்பு தூயதன்று என்று இழித்தலும் ஆம்.
எ-டு : “பேரழகுடையது என்று புகழும் உடம்பில் சிறிதளவு மேல்தோல் நீங்கினாலும், அப்புண்ணைக் கொத்த வரும் காக்கையை வெருட்ட ஒரு கோல் கையில் கொள்ள வேண்டியிருக்கிறது” என உடம்பினை அருவருத்துக் கூறும் பாடல். (நாலடி. 41 ) ( தொ. பொ. மெய்ப். 6 இள.)
தலைவனைப் பிரிந்த தலைவி வாடையை நோக்கி, “மலையை யும் அசைக்கும் ஆற்றலுடைய நீ காமப்பிணியால் வருந்து வாரைத் துன்புறுத்துவது அழகன்று.” என்று கூறற்கண் (குறுந்: 158) தலைவிக்குத் தன்கண் தோன்றிய பிணி பற்றிய இளிவரல் பிறந்தது.
தலைவியின் அருமையை அறிந்த தலைவன் தன் நெஞ்சை வேறாக நிறுத்தி, “மனமே! நமக்குச் சேய்மையிலுள்ளவளும், கிட்டுதற்கு அரியவளுமாகிய தலைவியை நினைத்துக்கொண் டிருப்பதால், நீ நோயால் நலியப்படுகிறாய்” என்று கூறற்கண் (குறுந். 128) பிறன்கண் தோன்றிய பிணி பற்றிய இளிவரல் பிறந்தது. (மெய்ப். 6 பேரா.)
களவுக்காலத்தில் பிறர் அறியாமல் ஒழுகவேண்டுதலின், பிரிவு தேவைப்பட்டது. கற்புக்காலத்தில் பிறர் அறியாது ஒழுகல்வேண்டுவதின்றாகலின், தலைவன் ஓதல் தூது முதலிய குறித்துப் பிரிதலைத் தலைவி ஆற்றாதவளாய்ப் பிரியாதிருத்தலையே வேண்டும் குறிப்பினளாதல்.
இது கற்பிற்கே சிறந்த பத்து மெய்ப்பாடுகளுள் ஒன்று.
(தொ. பொ. 272 பேரா.)
இது தலைவன் தலைவி ஆகிய இருவர்க்கும் கூறப்படும் பத்துவகை ஒப்பினுள் ஒன்று.
பிறப்பாவது அந்தணர், அரசர், வணிகர் வேளாளர், ஆயர், வேட்டுவர், குறவர், நுளையர் என்றாற்போல வரும் குலம்.
(தொ. பொ. 90 இள. உரை)
பிறப்பு - குடிப்பிறத்தல் - தொ.பொ. 273 பேரா.
பிறப்பு - தோன்றிய குடிநிலை - மெய்ப். 25 பாரதி.
பிறப்பு - நற்குடிப் பிறத்தல் - பொ. 260 குழ.
குடி என்பது குடும்பம்; குலம் என்பதும் அது. குலம் என்பது சாதியின் வேறுபட்டது. ஒவ்வொரு சாதியிலும் நல்லகுலம், தீயகுலம் என்ற இரண்டும் உண்டு. (திருவாய். 3-8-1)
‘குலம் தாங்கு சாதிகள் நாலிலும்’ என்றதனால், குலம் வேறு சாதி வேறு என்பது பெறப்படும். இக்கருத்தும் உண்டு.
தோழி அறத்தொடு நிற்கும்போது தலைவனைக் ‘கானக நாடன் மகன்’ என்று கூறுவது பிறப்பொப்புமை. (கலி. 39 பேரா.)
தலைவன் நோக்கிய நோக்கிற்கு எதிரே தான் சென்று புகுதலைத் தலைவி விரும்புதல்.
இதனைக் காட்சி என்ற அவத்தைக்கண் தலைவிக்கு நிகழும் முதல் மெய்ப்பாடாக இளம்பூரணர் கொள்வர்.
ஏனையோர் களவு என்ற ஒழுக்கத்தில் புணர்ச்சிமுன் தலைவிக்கு நிகழும் பன்னிரண்டு மெய்ப்பாடுகளுள் இது முதலாவது என்பர்.
தலைவி தலைவன் பார்வையில் படுமாறு தான் போய் நிற்பாளே யன்றித் தலைவியின் பார்வையில் படுமாறு தலை வன் தான் போய் நிற்பான் அல்லன்; நிற்பது சிறப்பாகாது. அவன் தான் தலைவியைக் காண்பதை விரும்புவானேயன்றித் தன்னைத் தலைவி காணவேண்டுமென்று விரும்பான். (தொ. பொ. 261 பேரா.)
தலைவி ஊடற்காலத்து மனத்தில் உள்ளதனை மறைத்துக் கூறுவது போல அல்லாமல், புணர்ச்சிக்காலத்தில் தன் மனத்துப் பட்டதனை, “ஊரன் நறுமேனி கூடலின் இனிதாம் எமக்கு” (ஐந்.ஐம். 30). என்றாற் போல உண்மையாகக் கூறல் (தொ. பொ. 268 இள.) இஃது இல்லது காய்தலும் உள்ளது உவர்த்தலும் ஆகிய வேறுபாடின்றிப் புணர்ச்சிக்காலத்துச் செய்வன செய்தற்கண் உண்மை உவகை கொள்ளுதல். (272 பேரா.)
இது கற்பிற்கே சிறந்த பத்து மெய்ப்பாடுகளுள் ஒன்று.
மணந்து வாழ்வார், கற்புக்காதலுக்கு எந்தச் சிறுபொழுதை யும் பகுத்துத் தடையாகக் கருதாது, நாள் முழுதும் சிறு பொழுது வரையறையின்றி மகிழ்வோடிருத்தல்.
பேராசிரியரும் இளம்பூரணரும் புணர்ந்துழி உண்மை எனவும், பொழுதுமறுப்பு ஆக்கம் எனவும், இரண்டு மெய்ப் பாடாகக் கொண்டதனைச் சோமசுந்தரபாரதியார் “இம் மெய்ப்பாடுகள் பத்து” என்ற வரையறை அமைவதற்காக ஒன்றாகக் கொண்டார். (மெய்ப். 24 பாரதி.)
புணர்ந்துழி ................. ஆக்கம் : தலைவன் குறித்த பருவம் இகந்து மீண்டு வந்து கூடியவழிக் கூறிச்சென்ற பருவ மாறுபாட் டினைக் கருதாது அதனையே பருவமாகக் கொண்டு தலைவி மகிழ்தல். இஃது உவகைக்குப் பொருள். (தொ. மெய்ப். 24 ச. பால.)
இஃது உவகை என்ற மெய்ப்பாட்டிற்குரிய குறிப்பு நான்கனுள் மூன்றாவது.
புணர்வு - காமப்புணர்ச்சி முதலாயின. (பேரா.)
அன்பொடு புணர்ந்த இன்பத்திணை ஐந்தில் இருவயின் ஒத்த கற்புறு காதற் கூட்டமாம். (மெய்ப். 11 பாரதி.)
தலைவி இரவுக்குறியிடத்து வந்து யாழ் ஒலி போல இனிய குரலில் அன்புறு சொற்கள் பேசித் தன் தொடி தலைவன் உடலில் தழும்பு படுமாறு ஆரத் தழுவிச் சென்றமையால் இரவுக்குறி நீங்கும் தலைவன் தன் மனத்திடம் பெரிதும் மகிழுமாறு கூறுதற்கண் (அகநா. 142) புணர்வு பற்றிய உவகை பெறப்பட்டவாறு. (தொ. பொ. 259 பேரா.)
இது மருட்கை என்ற மெய்ப்பாட்டிற்குரிய குறிப்பு நான்க னுள் முதலாவது.
புதுமையாவது யாதொன்றானும் எவ்விடத்தினும் எக் காலத்தினும் தோன்றாததொரு பொருள் தோன்றியவழி வியத்தல். அது கந்தருவர் அந்தரம் போவது கண்டு வியத்தல் போல்வது. (தொ. பொ. 251 இள.)
புதிதாகத் தோன்றுவது. 255 பேரா.
எ-டு : தலைவனைக் கண்ட தலைவி இரவில் உறங்கும் போது அவனைக் கனவில் கண்டு உடனே விழித்துப் பின் அவன் இன்மை கண்டு கண்ணீர் வடித்தல் தலைவிக்குத் தன்கண் தோன்றிய புதுமை பற்றிய வியப்புத் தந்தது. (அகநா. 82)
பண்டு ஒருகாலும் கண்டறியாதபடி மயில் ஆடிய காட்சி தலைவிக்குப் பிற பொருட்கண் தோன்றிய புதுமை பற்றிய வியப்புத் தந்தது (அகநா. 82) பேரா.
புதுமை - முன் அறியா யாணர்த்தன்மை; கங்காரு, பறக்கும் மீன், சிற்றுயிர்களைப் பிசைந்து தின்னும் பூச்செடி, கையில் அடங்கும் சிறுநாய், கண் கொள்ளாப் பெருமலை, இருதலை முக்கண் ஐங்கால் அறுவிரல் முதலிய வழக்கில் இல்லாத உறுப்புடைய உயிர்கள் போல்வன காண எழும் உணர்வு புதுமையிற் பிறக்கும் வியப்பாகும். (மெய்ப். 7 பாரதி)
கற்பினுள் தலைவி மேம்பட்ட இல்லறத்தைத் தெளிந்து பின் பற்றுதல்.
தலைவன்பரத்தைமை கண்டு புலவாது அதனையும் போற்றல் இல்லுறை மகளிர்க்கு இயல்பு என்னும் அறத்தினைத் தெளிந்து ஒழுகுதல். (268 இள.)
கற்பினுள் தனக்கு ஒத்த இல்லறம் இன்னதென்று, ஊடியும் கூடியும் விருந்து புறந்தந்தும் வாழும் வாழ்க்கையைத் தலைவி தன் மனத்தில் தெளிதல் (272 பேரா.)
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகை சான்ற சொற் காக்கும் சோர்வின்மையே திண்ணிய கற்பின் பெண்மையறம் எனத் தலைவி உயர்ந்த மனையறத்தை உணர்ந்து ஓம்புதல். (மெய்ப். 24 பாரதி.)
இது கற்பிற்கே சிறந்த பத்து மெய்ப்பாடுகளுள் ஒன்று.
அறத்தொடு நின்று இற்செறிக்கப்பட்டுத் தலைவனிடமிருந்து பிரிந்து நிற்கும் தலைவி தான் விரும்பியன பெறவும் வெறுப் பன விலக்கவும் வழிகாணாமல் தாங்காத் தனிமையின் ஏங்கும் நிலை இது.
தலைவனைப் பிரிந்த தலைவி, இல்லத்தே மற்றவர் பலர் இருப்பவும், அவர்களையெல்லாம் வெறுத்துத் தான் தனித்திருப்பதாகவே நினைந்து வருந்துதல்.
(தொ. பொ. 266 பேரா.)
இது ‘நாணு வரை யிறத்தல்’ என்ற ஆறாம் அவத்தையின் இரண்டாம் மெய்ப்பாடு. (262 இள.)
களவுக்காலத்துக்குரிய ஆறு பகுதியவாகிய 24 மெய்ப்பாடு களுள் இது மாறாக் காதலின் ஆறாம் பகுதியின் இரண்டாம் மெய்ப்பாடு என்பர் ஏனையோர்.
இஃது உவகை என்னும் மெய்ப்பாட்டிற்குரிய குறிப்பு நான்கனுள் இரண்டாவது.
புலன் - கல்விப் பயனாகிய அறிவுடைமை. (தொ. பொ.259 பேரா.)
புலனாவது கல்விப்பயனாகும் அறிவு. அரிய புதிய செய்தி களை ஆராய்ந்து நுட்ப முணர்ந்து மகிழ்தற்கு ஏதுவாகிய அறிவே புலன் என்பது.
கல்விப் பயனாகிய அறிவின்பம் புலனுவகை என்று கூறப்பட்டது. (தொ. மெய்ப். 11 பாரதி)
முகைப்பதம் பார்க்கும் வண்டு போல நகைப்பதம் பார்த்துத் தலைவியின் உள்ளக்குறிப்பறிந்து அவளொடு தலைவன் கூடுதற்கண், உவகை என்னும் மெய்ப்பாட்டின் புலன் என்ற குறிப்பு உணரப்படுகிறது. (கலி. 40 பேரா.)
உடம்பை அலங்கரித்தல்; ‘புறஞ்செயச் சிதைதல்.’ காண்க.
(தொ. பொ. 266)
புறத்தே கோலம் செய்யவும் அகத்தே சிதைவு உண்டாதல். உடன்போக்கோ மணமோ நிகழப்பெறாமல் இற்செறிப்பான் வருந்தும் கற்புடைத்தலைவி உணர்ந்தொழுகுதலான் தளர்ந் துழி நெஞ்சொடு தனிமை தாங்காத் துனியான் வருந்துவாள். அந்நிலையில் அவள் எண்ணம் அறியாத வண்ண மகளிர் பண்ணும் கோலம் தலைவன் காண வாய்ப்பின்மையான் மனத்தான் அதனை வெறுத்தும், வெளிப்படையாக அவ் வலங்காரங்களை நீக்க முடியாமையான் அணிசெய்ய உடன்பட்டும் தலைவி உள்ளுர வருந்தும் நிலை.
களவுக் காலத்துக் குரிய ஆறு பகுதியவாகிய இருபத்து நான்கு மெய்ப்பாடுகளுள் இது மாறாக் காதலின் ஆறாம் பகுதிக்கண் முதல் மெய்ப்பாடு என்பர் பெரும்பான்மையோர்.
இளம்பூரணர் இது நாணுவரையிறத்தல் என்ற ஆறாம் அவத்தையின் முதல் மெய்ப்பாடு என்பர்.
(தொ. பொ. 262 இள; 266 பேரா.)
வரைந்துகொண்ட பின்னர், தலைவனுக்குப் பழி வாராமல் காத்தலும் தலைவிக்குரிய அறம் ஆதலின், தலைவனுக்கு வந்த புறஞ்சொல்லின் பொல்லாங்கு குறித்து அப்பழியுரையை மாற்றுதற்குத் தலைவி கூறும் சொற்கள்.
(தொ. பொ. 272 பேரா.)
புறஞ்சொல் - பிறர் கூறும் பழிச்சொல்; மாண் ஆ கிளவி - மாண்புடைய சொற்கள் ; பிறர் பழியைப் போக்கக் கூறும் சொற்கள்.
அஃதாவது பிறர் கூறும் பழியுரையைச் சுட்டி அத்தகைய நிலை எதிர்காலத்து வாராதவாறு நடந்து கொள்ளும்படி தலைவி தலைவனை வேண்டுதல்.
தலைவனைத் தன் உயிர்த்தோழி போல்வார்கூடப் புறம்தூற் றும் புன்சொல் பொறாத தலைவி அதனை வெறுத்து மறுப்பது. தலைவனைப் புறம்பழித்த தோழியைக்கூடத் தலைவி வெகுளும் என்பது. (குறுந். 96) (மெய்ப். 84 பாரதி.)
காமனால் உண்டாக்கப்பட்ட காமம் ‘சிருங்காரம்’ என்ற தனித்த சுவையாதலே யன்றி, ஏனைய நகை அழுகை இளி வரல் மருட்கை, அச்சம் பெருமிதம் வெகுளி என்ற ஏழினோடும் கூடிவெளிப்பட்டு எட்டுவகையாக நிகழ்வது.
(வீ. சோ. 96 உரை மேற்.)
இது நற்காமத்திற்கு ஆகாத மெய்ப்பாடுகளுள் ஒன்று.
புறமொழி - புறங்கூறுதல். (270 இள; 274 பேரா.)
(அஃதாவது பிறரைக் காணாத விடத்தே இகழ்ந்து கூறுதல், இல்லாளுக்கு நல்லறம் ‘புறஞ்சொல் மாணாக் கிளவி’ யாதலின், பழிதூற்றும் தவறுடைமை காதல்வாழ்வுக்கு ஏதம் பயத்தலின் அது விலக்கப்பட்டது. (தொ. பொ. மெய்ப். 26 பாரதி)
தெளிவு ஒழிந்த காமத்தின்கண்ணே மிகுதலும், ஐந்திணைக்- கண் நிகழும் காமத்தின் மாறுபட்டு வருதலும் ஆகிய நிலைமையில் உள்ள தலைவிக்குக் களவுக் காலத்தும் கற்புக் காலத்தும் ஒப்ப நிகழ்தற்குரிய மெய்ப்பாடுகள் இன்பத்தை வெறுத்தல், துன்பத்துப் புலம்பல், எதிர்பெய்து பரிதல், ஏதம் ஆய்தல், பசி அட நிற்றல், பசலை பாய்தல், உண்டியிற் குறைதல், உடம்பு நனி சுருங்கல், கண்துயில் மறத்தல், கனவொடு மயங்கல், பொய்யாக் கோடல், மெய்யே என்றல், ஐயம் செய்தல், அவன்தமர் உவத்தல், அறனழித்து உரைத்தல், ஆங்கு நெஞ்சு அழிதல், எம்மெய்யாயினும் ஒப்புமை கோடல், ஒப்புவழி உவத்தல், உறுபெயர் கேட்டல், கலக்கம் என்பன வாம். 266 இள.
இவை களவிற்கும் கற்பிற்கும் உரிய எனவும், களவிற்கு இவை வருங்கால் புகுமுகம் புரிதல் முதல் கையற வுரைத்தல் ஈறாகக் கூறப்பட்ட இருபத்து நான்கின் பின்னரே அவற்றோடு இவை பெரும்பான்மையும் உடன் நிகழ்ந்து வரும் எனவும், கற்பிற்கு இவை பயின்று வரும் எனவும் கூறுவர். (269, 270 பேரா.)
அன்புத் திணையின் தனிப்படர் மெலிவின் துனி நனி விளக்கும் மெய்ப்பாடுகள் இவை என்பர் சோமசுந்தர பாரதியார். (மெய்ப். 22)
பெருமிதம் - வீரத்தைத் தோற்றுவிக்கும் பொருள்களைக் கண்டவழி மனத்தில் விளையும் பொருளாகிய வீரம். கல்வி, தறுகண், இசைமை, கொடை என்ற நான்கு குறிப்புப் பற்றியும் பெருமிதம் பிறக்கும்.
இந்நான்கேயன்றி காமம் பற்றியும் பெருமிதம் பிறப்பதுண்டு. பெருமிதம் எப்பொழுதும் தன்கண் தோன்றிய பொருள் பற்றியே வரும். (தொ. பொ. 257 பேரா.)
பெருமிதம் - தன்னைப் பெரியவனாக மதித்தல். 253 இள.
எல்லாரொடும் ஒப்ப நில்லாது தனித் தகுதியுடன் இருத்த லின், வீரம் பெருமிதம் எனப்பட்டது. பெருமிதம் பேரெல்லை பேரா.
‘பெருமிதம்’ வெறுப்புக்குரிய செருக்கன்று, ‘வீறு’ தருக்கு ஆகும். ஆகவே, இது புகழ்க்குரிய பெருமையில் பிறக்கும் மகிழ்வாம். (பாரதி)
பெருமிதக் குறிப்புப் பகை, செரு, இ(மி)கல், முனிவு என்ற நான்கென வீரசோழிய உரை கூறும். (கா. 96 உரை மேற்.)
இது வீரச்சுவை எனவும் வழங்கப் பெறும். அது காண்க.
(மா. அ. 198)
கல்வி, தறுகண் (-அஞ்சாமை), இசை (-புகழ்), கொடை என்னும் இவை காரணமாக மிக்க வலிமையும் அஞ்சாத மன உறுதியும் கூடிப் பொலிவது. (நாடக. 43)
இது மருட்கை என்ற மெய்ப்பாட்டிற்குரிய குறிப்பு நான்க னுள் இரண்டாவது.
பெருமை - பண்டு கண்ட பொருள்கள் போலாத பொருள்கள் அவ்வளவின் பெருத்தன கண்டு வியத்தல். அவை மலையும் யானையும் செல்வமும் முன்பு கண்ட அளவின் மிக்கன கண்டவழி வியப்பு வரும். (தொ.பொ. 251 இள.)
எ-டு : தலைவனொடு தலைவி கொண்ட தொடர்பு தொடக் கத்திலேயே நிலத்தினது அகலம் போலவும், மலை யினது உயரம் போலவும், நீரினது ஆழம் போலவும், அவளிடத்து அமைந்தமை தன்கண் தோன்றிய பெருமை பற்றிய வியப்பு (குறுந். 3) (தொ. பொ. 255 பேரா.)
நகை என்ற மெய்ப்பாடு தோன்றதற்குரிய குறிப்பு நான்கனுள் மூன்றாவது.
பேதைமை - கேட்டதனை, இஃது உண்மையா, பொய்யா என்று ஆராயாது உண்மையாகவே கோடல். (தொ. பொ. 248 இள.)
அறிவின்மை - 252 பேரா.
எ-டு : (அறிவுக்குழப்ப முடையோர் கூற்றாக இளம்பூரணர் கூறுவது)
தன் இல்லத்தை நாடி வந்த பாணன், தன்னை முட்டவந்த பசுவுக்குப் பயந்து இல்லம் தெரியாமல் தலைவியது மனைக்கண் நுழைந்தனனாக, அவன் நுழையத்தகும் மனை பரத்தை மனையே, தன்மனை அன்று என்று கூறித் தலைவி சிரித்தாள். இது பாணனாகிய பிறன்பேதைமைப் பொருளாகத் தோன்றிய நகை. (அகநா. 56)
தலைவியின் களவொழுக்கத்தை அறிந்த செவிலி, அதனைத் தலைவிக்கு வெளியிடு முகத்தான் சிரித்துச் சென்றதை அறியாது, தலைவி தானும் சிரித்தமை தன்கண் தோன்றிய பேதைமைப் பொருளாகத் தோன்றிய நகை. (அகநா. 248)
பொச்சாப்பு என்பது மறத்தல். (தொ. பொ. 256 இள.)
பொச்சாப்பு என்பது அற்றப்படுதல். அஃதாவது சோர்வு படுதல். தான் பாதுகாத்துச் செல்லும் பொருட்கண் யாதானும் ஒரு சோர்வு காரணத்தான் செயற்படாமல் சில காலம் இருத்தல். (260 பேரா.)
இது துணைமெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று.
இதனை வடநூலார் ‘அபஸ்மாரம்’ என்ப.
இது நற்காமத்துக்கு ஆகாத மெய்ப்பாடுகளுள் ஒன்று.
பொச்சாப்பு - தம்மைக் கடைப்பிடியாமை; அது சோர்வு.
(தொ. பொ. 270 இள.)
பொச்சாப்பாவது கடைப்பிடியினின்று நெகிழ்ந்திருத்தல். (274 பேரா.)
உவகை மகிழ்ச்சியில் பிறக்கும் இச்சோர்வு கடமையுணர்வை மறக்கச் செய்தலின் விலக்கப்பட்டது. (மெய்ப். 26 பாரதி)
தலைவனிடத்துள்ள காதல்மிகுதியால் அவன் கூறிய சொற்களையும் அவன் செயலையும் பொய்யாகத் திரித்துக் கொண்டு, தன்னைத் தழுவிய தலைவன்மார்பினை,
‘கனவினால் எய்திய செல்வத்(து) அனையதே, ஐய! எமக்கு நின் மார்பு ’ (கலி. 68)
எனவும், தலைவன் ‘தானுற்ற சூள் பேணான் பொய்த்தான்’ (கலி. 41) எனவும், ‘அவன் வருவல் என்று குறிப்பிட்டுச் சொன்ன நாளும் பொய்த்தன (அகநா. 144)’ எனவும் தலைவி கூறுதல் போல்வன. (பேரா.)
இதனைப் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு என்பர் இளம் பூரணர் (தொ. பொ. 266). அன்புத்திணையின் தனிப்படர் மெலிவின் துனிநனி விளக்கும் இம்மெய்ப்பாடு கற்பிற்குச் சிறந்து களவிற்கும் கொள்ளப்படும் என்பர் ஏனையோர்.
பிரிவிடை நிகழும் இம்மெய்ப்பாடு ஆராய்ந்துணரின் புணர்ச் சிக்குரிய நிமித்தமாகும். (தொ. பொ. 270 பேரா.)
தலைவன் தலைவியைக் காண இன்ன பொழுது வருவான் என்று வரையறை இல்லாத காலத்தில், அவன் வரும் பொழு தினையே எப்பொழுதும் நினைத்துக்கொண்டு, ‘புல்லிய கேளிர் புணரும் பொழுதறியேன்’ (கலி. 144) என்ற மனநிலை யில் தலைவி இருத்தல். (தொ. பொ. 268 இள.)
களவுக் காலத்தில் தலைவனைக் காண்பதற்குப் பகற்குறி இரவுக்குறி என்றாற்போல நேரம் வரையறுக்கப்பட்ட இடர்ப் பாட்டின் நீங்கிய ஆக்கமாகிய மனமகிழ்ச்சி; களவின்கண் பகற்குறி இரவுக்குறி என வரையறுத்தாற் போலக் கற்புக் காலத்தில் வரையறை இன்மையின் தலைவி தலைவனோடு எந்நேரமும் ஊடியும் கூடியும் இன்பம் நுகர்ந்து அவனைப் பிரியாதிருத்தல். (272 பேரா.)
பொறாமை என்பது பிறருடைய ஆக்கம் முதலியன கண்ட வழி அதனைச் சகிக்காமல் நடக்கும் மனநிகழ்ச்சி. அஃது ‘அழுக்காறு என ஒரு பாவி’ (குறள் 168) என அழுக்காறு ஒரு மெய்ப்பாடாகக் கொள்ளப்படுகிறது. (தொ. பொ. 256 இள.)
பொறாமை என்பது அழுக்காறு. அழுக்காறாவது பிறர் செல்வம் கண்டவழி வேண்டாதிருத்தல். (260 பேரா.)
இது துணைமெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று.
இதனை வடநூலார் ‘அசூயை’ என்ப.
பொறாமையாவது, செருக்கும் திறலும் காரணமாக ஒன்றைப் பொறுத்தலாற்றாத பண்பு. (தொ. மெய்ப். 12 ச. பால)
நெற்றியில் வியர்வை துளித்தல்.
புகுமுகம் புரிதலுக்கு அடுத்த மெய்ப்பாடு இது. தலைவன் தன்னை உற்று நோக்கியவழித் தலைவிக்கு அச்சமும் நாண மும் ஒருங்கு வந்தடைதலின், அவற்றை வெளிப்படுத்தும் முகத்தான் நெற்றியில் வியர்வை துளிப்பதாயிற்று. தலைவ னுக்கு அச்சமோ மகளிரைப் போன்ற நாணமோ இன்று ஆதலின், அவனுக்கு நுதல் வியர்த்தல் இல்லை. (தொ. பொ. 261 பேரா.)
இதனைக் காட்சி என்ற முதல் அவத்தையின் இரண்டாம் மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர்.
களவு என்ற ஒழுக்கத்தில் புணர்ச்சிக்கு முன் நிகழும் நந் நான்காய் அமைந்த முக்கூற்று மெய்ப்பாட்டினுள், இது முதற்கூற்றின் இரண்டாம் மெய்ப்பாடு என்பர் ஏனையோர்.
கட்புலனாகியவற்றுள் வினையாவது நீட்டல் முடக்கல் விரித்தல் குவித்தல் முதலாயின. பயனாவது நன்மையாகவும் தீமையாகவும் பயப்பன. வடிவாவது வட்டம் சதுரம் கோணம் முதலாயின. நிறமாவது வெண்மை பொன்மை முதலாயின. செவிப் புலனாவது ஓசை. நாவினால் அறியப்படுவது கைப்பு, கார்ப்பு முதலிய சுவை. மெய்யினால் அறியப்படுவன வெம்மை, தண்மை முதலாயின. மூக்கால் அறியப்படுவன நன்னாற்றம், தீநாற்றம் என்பன. மனத்தான் அறியப்படுவன இன்பம், துன்பம் முதலாயின.
எ-டு : ‘புலி போலப் பாய்ந்தான் - வினை
மழை போன்ற கொடை -
பயன்
துடி போன்ற இடை - வடிவு
பொன்
போன்ற மேனி - நிறம்
குயில் போன்ற மொழி -
செவியாலறியப்படுவது
வேம்பு போலக் கைக்கும்
- நாவாலறியப் படுவது
தீப் போலச் சுடும் -
மெய்யாலறியப்படுவது
ஆம்பல் நாறும்
துவர்வாய் - மூக்காலறியப்படுவது
‘தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.’
}மனத்தாலறியப்படுவது.
(தொ. பொ. 272 இள.)
ம
களவியல் புணர்ச்சி நிகழ்ந்த பின் தலைவி, தோழியர் முதலானோரிடம் விளையாட்டையே பற்றி நின்ற அறிவு மடமை நீங்கக் காமப்பொருட்கண்ணே சிறிது அறிவுதோன்ற உரைத்தல். (தொ. பொ. 264 பேரா.)
மடம் - கள்ளமற்ற பிள்ளைத்தன்மை; தபுதல் - கெடுதல்; முன்னைய பிள்ளைத்தன்மை நீங்கத் தேர்ந்து உரையாடுதல் என்பது. (பாரதி.)
இது ‘மெலிதல்’ என்ற நாலாம் அவத்தையின் இரண்டாம் மெய்ப்பாடு. (260 இள.)
களவில் புணர்ச்சிக்குப்பின் நிகழும் மூன்று பகுதியவாம் பன்னிரண்டு மெய்ப்பாடுகளுள் இது முதற் பகுதியின் இரண்டாம் மெய்ப்பாடு; இதனைத் தோலாக் காதலின் நாலாங் கூற்றின் இரண்டாம் மெய்ப்பாடு என்பர்.
நகை என்ற மெய்ப்பாடு தோன்றுதற்குரிய குறிப்பு நான்கனுள் நான்காவது. (மடன் - மடம்)
மடன் - செய்தியை உள்ளவாறு உணராமல் தவறாக உணர்தல். (தொ. பொ. 248 இள.)
மடன் - பெரும்பான்மையும் பெற்றோரும் தலைவனும் கற்பித்த செய்திகளை மனத்துக்கொண்டு, தான் அவற்றை அறிந்திருக்கும் செய்தியை வெளிக்காட்டாதிருத்தல். (252 பேரா.)
மடம் - ஐயுறாது நம்பும் இயல்பு.
எ-டு : மடவோர் சொல்லும் சொல், பிதற்றிக் கூறும் பித்தர்மொழி, தமக்கு உற்றுழி உதவும் சுற்றத்தாரை இகழும் மொழி, ஒருவரிடம் அடியவராகப் பணிபுரி வோர் அவரைப் பற்றிய உண்மையை ஆராயாது கூறும் மொழி, மெலியோர் தம்மை வலியோராகக் கருதிக் கூறுவது, வலியோர் தம்மை மெலியோராகக் கருதிக் கூறுவது, தம்முடைய பகைவரை நண்பராக மதித்துப் பேசுவது, ஒரு பெண்ணின் உள்ளத்தை உள்ளவாறு அறியாது காமுகன் தன் உள்ளத்தை அவள்பால் செல்லவிட்டுப் பேசுவது - போல்வன பொருண்மை அறியாது திரியக்கொண்டு கூறும் மடன் பற்றியன. இவற்றைக் கேட்பவருக்குப் பிறர் மடம் பொருளாக நகை பிறக்கும் (இள.)
தலைவன் தலைவியை விரைவில் வரைந்துகொள்ளாமல் களவினை நீட்டித்தவழித் தலைவி தலைவனிடம், “உம்மை உள்ளவாறு பண்டே அறியாமையால் உம்மொடு சிரித்து விளையாடினேன்” என்று கூறுமிடத்து (குறுந். 168), தலைவி தன் மடம் காரணமாகச் சிரித்தமை பெறப்படும்.
தலைவி தலைவனொடு பாலை நிலத்தைக் கடந்து செல்வதற்கு உடன்வருவதாகக் கூறியவழித் தலைவியின் மடம் காரண மாகத் தலைவற்கு நகை பிறந்தது. (அகநா. 121 பேரா.)
மடிமை என்பது சோம்புதல் தன்மை.
‘குடிப்பிறந்தானிடம் மடிமை இருப்பின் அவனை அஃது அவன் பகைவருக்கு அடிமையாக்கிவிடும்’ (குறள் 608) என்ற வழி, மடி என்னும் மெய்ப்பாடு தோன்றும். (தொ. பொ. 256 இள.)
மடிமை என்பது சோம்பு. சோம்பியிருப்பவன் உள்ளம், அவன் குணம் செயல் இவற்றால் புலப்படுதலின், அதுவும் மெய்ப் பாடு ஆயிற்று. இது துணைமெய்ப்பாடுகள். முப்பத்திரண் டனுள் ஒன்று. (260 பேரா.)
இதனை வடநூலார் ‘ஆலஸ்யம்’ என்ப.
இது நற்காமத்துக்கு ஆகாத மெய்ப்பாடுகளுள் ஒன்று. மடிமை - முயற்சியின்மை. (தொ. பொ. 270 இள.)
மடிமை சோம்புள்ளம். (274 பேரா.)
சோம்புள்ளம் நாடோறும் நிகழ்த்தும் இல்லறத்துக்குத் தடையாதலின் விலக்கப்பட்டது.
நடுவுநிலை எனப்படும் சாந்தச்சுவைக்கு ஒரு பெயர்.
(தொ. பொ. 245 இள.)
அறிவால் மதித்து உணரப்படாத வியப்பு என்ற மெய்ப்பாடு. எனவே, மதிமை சான்ற அறிவுடையோர் இப்பொருள்களைக் கண்டு வியவார். (தொ. பொ. 251 இள.)
மதிமை சாலா மருட்கை அறிவினை உலகவழக்கினுள் நின்றவாறு நில்லாமல் திரித்து வேறுபடுத்தவல்லது. ஆதலின் சிறுமைப்பொருள் பெருந்தொழில் செய்தவழியும் (நெடுஞ் செழியன் இளையனாயிருந்த போதே தலையாலங்கானத் துப் போரில் எழுவர் மன்னரை வென்றமை போல்வது), பெருமைப் பொருள் சிறுதொழில் செய்தவழியும் (மேம் பட்ட தலைவன் குற்றேவல் செய்யும் தோழியை இரந்து நிற்பது போல்வது) வியப்பு என்ற மெய்ப்பாடு தோன்றும் (255 பேரா.)
ஒன்றன் இயல்பு அமைப்பு விளைவுகளை கண்டாங்கே ஆராய்ந்து அறியக் கூடுமிடத்து மயக்கம் இல்லை. மதியால் மதிக்கப்படாவிடத்து மாத்திரமே வியப்பு விளையும். ஆத லின் தேர்ந்து தெளியும் திறனற்று அறிவு சிறவா நிலையில் வருவதே மயக்கமாம் என்பது தோன்ற, ‘மதிமை சாலா மருட்கை’ என்றார். (மெய்ப். 7 பாரதி)
அறிவு நிறையாவிடத்து உண்டாகும். மருட்கை என்றது யாதொரு பொருள் மருட்கை செய்கின்றதோ, அப்பொருள் பற்றிய அறிவு நிரம்பவில்லை என்றவாறு. அப்பொருள் பற்றிய அறிவு நிரம்பியவழி, அது பற்றி மருட்கை நிகழாது என்பது. (தொ. மெய்ப். 7 ச. பால)
களவொழுக்கத்திற்குரிய உணர்வுப் பகுதிகள் பத்தனுள் இது ஒன்று.
மயக்கமாவது, செய்வனவற்றின்கண் ஆராய்ச்சியும் கடைப்பிடியு மின்றி நெகிழ்தலும் விளைவறியாது பேசுதலும் செயல்புரிதலும் ஆம். (தொ. கள. 9 ச. பால)
மெய்ப்பாடு எட்டனுள் ஒன்றாகிய வியப்பு. (தொ. பொ. 251 பேரா.)
மருட்கை - வியப்பைத் தோற்றுவிக்கும் பொருள்களைக் கண்டவழி மனத்தில் விளையும் சுவை. புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் என்ற நான்கு குறிப்பும் பற்றி மருட்கை பிறக்கும்.
இவை தன்கண் தோன்றிய புதுமை பற்றிய மருட்கை, பிறன்கண் தோன்றிய புதுமை பற்றிய மருட்கை, தன்கண் தோன்றிய பெருமை பற்றிய மருட்கை, பிறன்கண் தோன்றிய பெருமை பற்றிய மருட்கை, தன்கண் தோன்றிய சிறுமை பற்றிய மருட்கை, பிறன்கண் தோன்றிய சிறுமை பற்றிய மருட்கை, தன்கண் தோன்றிய ஆக்கம் பற்றிய மருட்கை, பிறன்கண் தோன்றிய ஆக்கம் பற்றிய மருட்கை - எனத் தன்கண் தோன்றுவனவும் பிறன்கண் தோன்றுவனவுமாகிய பாகுபாடு பற்றி எட்டாதலும் உரிய.
இவையே யன்றிச் சிறுபொருள் பெருந்தொழில் செய்தவழி யும், பெரும்பொருள் சிறுதொழில் செய்தவழியும் மருட்கை உண்டாதலும் உண்டு. (தொ. பொ. 255 பேரா.)
தறுகண், புலமை, பொருள், பண்பு இவை பற்றி மருட்கை நிகழும் என்பது வீரசோழிய உரை. (கா. 96 உரை மேற்.)
இதுவியப்புச் சுவை எனவும்படும்; அது காண்க.
(மா. அ. பாடல் 473 உரை)
மெய்யுறு புணர்ச்சி நிகழும் முன் தலைவனுக்கும் தலைவிக் கும் நிகழும் பத்துவகை நிலைகளுள் எட்டாவது; பித்தாதல் என்பது இதன் பொருள். (தொ. பொ. 97 இள.)
களவொழுக்கத்திற்குரிய உணர்வுப் பகுதிகள் பத்தனுள் இஃது ஒன்று. மறத்தலாவது, பிறப்பும் குடிமையும் பிறவு மாகிய தம் தகவுகளை நினையாமையும், ஆயம் விளையாட்டு முதலியவற்றின்கண் சோர்வுறுதலும் ஆம்.
(தொ. கள. 9 ச. பால)
இந்நிலை தலைவற்கே உரியது என்பர் இலக்கண விளக்க நூலார். (இ. வி. 405)
இயற்கைப்புணர்ச்சி முதல் களவு வெளிப்படுந்துணையும் தலைவன் தலைவி என்ற இருவர்க்கும் உளவாம் இலக்கணம் ஒன்பதனுள் ஏழாவது இது.
மறத்தலாவது - விளையாட்டு முதலியவற்றை மறத்தல்.
தலைவனுக்கு மறத்தலாவது தான் வழக்கமாகச் செய்யும் செயல்களை விடுத்துத் தலைவிக்கு வழங்குவதற்குக் கையுறை யாகத் தழையாடை குறுங்கண்ணி முதலியன தொடுத்தலும், தலைவியிடத்து வேட்கை மேலிட்டுக் காட்டுள் திரிதலும் போல்வன.
தலைவிக்கு மறத்தலாவது கிளியும் பந்தும் முதலாயின கொண்டு விளையாடுதலை நீக்குதலாம். (தொ. பொ. 100 நச்.)
இது நற்காமத்துக்கு ஆகாத மெய்ப்பாடுகளுள் ஒன்று. மறப்பு யாதொன்றாயினும் கற்றதனையும் கேட்டதனையும் பயின்ற தனையும் மறத்தல். (தொ. பொ. 270 இள.)
மறத்தல், இல்லறவாழ்வின் கடமைகளை உரிய காலத்தில் செய்வதைத் தடுக்குமாதலின் விலக்கப்பட்டது.
மறைந்த ஒழுக்கத்தைக் கூறிய புறஞ்சொல்லாகிய அலர் மாட்சிமைப்படாமல் கற்புக்கடம் பூண்டல்.
அஃதாவது ஊரில் அலர் எழுந்தவழிக் களவொழுக்கம் நிகழ்த்தும் தலைவி தலைவனொடு உடன்போக்கு நிகழ்த்தி ஊரார் நிகழ்த்தும் அலர் தொடராதவாறு செய்யும் செயல்களுக்குரிய உள்ள நிகழ்ச்சி. ‘மாணாக்கிளவி’ என்ப தற்கு மிகாத சொல் என்ற பொருள் கொண்டு, தொடர்ந்து ஊரார் அலர் தூற்றாத வகையில் நடந்துகொள்ளுமாறு பரத்தையர் தொடர்புடைய தலைவனுக்குத் தலைவி எடுத்துரைத்தல் போல்வன கொள்ளப்படும்.
இம்மெய்ப்பாடுகளின் தொகை பத்து என்பது பொருந்து வதற்காக, மறைந்தவை உரைத்தல், புறஞ்சொல் மாணாக் கிளவி என்ற இரண்டனையும் இளம்பூரணர் ஒன்றாக்கிக் கொண்டார். (தொ. பொ. 268 இள.)
தலைவி களவுக்காலத்து நிகழ்ந்தவற்றைக் கற்புக் காலத்துக் கூறுதல். மறைவில் நிகழ்ந்ததைத் தலைவி பின்னர்த் தோழிக்கு எடுத்துரைத்தல் என்பதும் உரை.
“நான் வேண்டா என்றபோதும் பண்டு விடாது தழுவிய தலைவன் நான் இப்பொழுது அவனைத் தழுவிக் கொள்ள விரும்பும்போது, என் புதல்வன் பால் அருந்திய என் நகில்களின் பால் தன் மார்பில் பட்டுவிடும் என்று அஞ்சி ஒதுங்குகின்றான். புதல்வனைப் பெற்று மூத்ததனால் வந்த நிலை இது” (அகநா. 26) என்றாற் போலப் பழைய செய்தியும் மறைவில் நிகழ்ந்த செய்தியும் ஆகிய ஒன்றை வெளிப்படக் கூறுதல்.
இது கற்பிற்கே சிறந்த பத்து மெய்ப்பாடுகளுள் ஒன்று.
(தொ. பொ. 272 பேரா.) (மெய்ப். 24 பாரதி.)
இன்பத்தை வெறுத்தல் முதல் கலக்கம் ஈறாகச் சொல் லப்பட்ட மெய்ப்பாடுகள், தெளிவொழிந்த காமத்தின் கண்ணே மிகுந்து, ஐந்திணைக்கண் நிகழும் காமத்தின் மாறு பட்டு வரும் பெருந்திணைத் தலைவியின் மெய்ப்பாடுகள் ஆதலின், இவை மனம் அழிந்தவழி நிகழும் மெய்ப்பாடுகள் என்பர், இளம்பூரணர். (தொ. பொ. 267)
இவை பிரிதல்துயரை விளக்குவன என்பர் நாவலர் சோம சுந்தர பாரதியார்.
இவை கற்பிற்குச் சிறந்து களவிற்கும் உரியன என்பர் பேரா சிரியர் (271)
முட்டுவயின் கழறல், முனிவு மெய்ந்நிறுத்தல், அச்சத்தின் அகறல், அவன் புணர்வு மறுத்தல், தூது முனிவின்மை, துஞ்சிச் சேர்தல், காதல் கைமிகல், கட்டுரை யின்மை என்ற எட்டும் மனம் அழியாதவழி நிகழும் மெய்ப்பாடுகளாம் என்பர் இளம்பூரணர். (தொ. பொ. 267)
இவை வரைதல் வேட்கைப் பொருளை வெளிப்படுத்தும் மெய்ப் பாடுகள் என்பர் பேராசிரியர் (271) பிறரும் அவ்வாறே கூறுப.
துணை மெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று.
மிகை என்பது ஒருவனை நன்கு மதியாமை; ‘மிகுதியான் மிக்கவை செய்தாரை’ (குறள் 158) என்புழி, மிகுதி இப்பொரு ளில் வந்துள்ளது. (தொ. பொ. 256 இள.)
மிகை என்பது கல்லாமையும் செல்வமும் இளமையும் காரணமாக வரும் உள்ளமிகுதி. (அஃதாவது அளவு கடந்த உற்சாகம்) 560 பேரா.
இதனை வடநூலார் ‘கர்வம்’ என்ப.
களவுக் காலத்தில் தலைவன் தன்னைக் காண வருதற்கண் இடையூறுகளாகத் தாய் துஞ்சாமை, நாய் துஞ்சாமை, ஊர் துஞ்சாமை, காவலர் கடுகுதல், கூகை குழறுதல், நிலவு வெளிப்படுதல், கோழி குரல் காட்டல் முதலியன நிகழ்ந்த வழித் தலைவி தலைவனுடைய களவொழுக்கத்தை இடித்துக் கூறித் தன் வரைதல் வேட்கையைப் புலப்படுத்துதல். இஃது ஒளியாது ஒழியாது உடன்உறையும் கற்புக் காதற் கூட்ட வேட்கைக் குறிப்பினை வெளியிடும் மெய்ப்பாடு எட்டனுள் ஒன்றாகும். (271 பேரா. 23 மெய்ப். பாரதி)
இது நடுவண் ஐந்திணையுள் மனம் அழியாதவழி நிகழும் மெய்ப்பாடு எட்டனுள் ஒன்று என்பர் இளம்பூரணர். (267 இள.)
காட்சி, வேட்கை முதலாகச் சாக்காடு ஈறாகச் சொல்லப்படும் பத்து அவத்தையுள் முதல் அவத்தையாகும் காட்சிக்கண் தலைமகளுக்கு நிகழும் மெய்ப்பாடுகள். அவை புகுமுகம் புரிதல், பொறிநுதல் வியர்த்தல், நகுநயம் மறைத்தல், சிதைவு பிறர்க் கின்மை என்ற நான்குமாம். (தொ. பொ. 257 இள.)
இவற்றைக் களவில் புணர்ச்சி நிகழுமுன் தலைவிக்கு நிகழும் மூன்று பகுதியவாகிய மெய்ப்பாடுகளுள் முதற்பகுதிக்குரிய மெய்ப்பாடுகள் என்பர் பேராசிரியர். (261 பேரா.)
இவை நான்கும் தலைக்காதலின் முதற் கூறாகும் மெய்ப் பாடுகள். (மெய்ப். 13 பாரதி)
பெருமையும் உரனும் உடைய தலைவன் தன் தழையும் காதலை மறையானாக, அச்சமும் நாணும் மடனும் உடைய தலைவி தன் சுரக்கும் காதலைக் கரக்குமாதலின், இம்மெய்ப் பாடுகள் அவள்மாட்டே பெரும்பாலும் நிகழ்வன.
அளவுக்கு மீறி நகையைப் புலப்படுத்தும் நகைச்சுவை. இஃது அறிவும் பண்பும் உடையவரிடத்தே நிகழாதது.
எ-டு : ‘பள்ளியுள்
வாழும் பறியறு மாதவர்
பிள்ளைகள் எல்லாம்
பெரியர் முதிர்ந்தவர்
வெள்ளைகள் போல விலாஇற நக்குநக்கு
உள்ளவர் எல்லாம் ஒருங்குடன்
மாய்ந்தார்.’
சான்றோர் இருப்பிடங்களில் வாழும் பொறுப்பற்ற மாதவ ரும், பிள்ளைகளும், வயதில் மூத்தவரும், கலையறிவு மிக்க வரும் ஆகிய எல்லாரும் அறிவற்றவர் போல விலாஎலும்பு முறியுமாறு சிரித்து ஒரு சேர இக்காட்சியைக் கண்டு சிரித்துக் கொண்டே மறைந்தனர் - என்ற பொருளமைந்த இப் பாடற்கண், பெருகச் சிரித்தல் என்ற சிறுதொழில் ‘முறுகிய நகை’ என்ற சுவையணி வகையாக வந்துள்ளது. (வீ. சோ. 170)
முனிதல் என்பது வெறுத்தல்.
தலைவனுடைய புறத்தொழுக்கத்தை அறிந்து மனம் நொந்து அவனைத் திருத்தும்வகை யறியாத தலைவி குடிப்பிறத்தலை வெறுத்து மனம் வருந்துதல் போல்வன (குறுந். 45) (தொ. பொ. 256 இள.)
முனிதல் என்பது வெறுத்தல். அஃது அருளும் சினமும் இன்றி இடைப்பட்ட மனநிலையொடு கூடியிருத்தல். வாழ்க்கையை முனிந்தான் எனவும், ‘அதிகமான் நெடுமானஞ்சியின் மகன் போரிடச் செல்லும் ஊர்களில் இருந்த மக்கள் அங்குத் தங்கியிருத்தலை முனிந்தனர்” (புறநா. 96) எனவும் கூறுதல் போல்வன.
முனிவுள்ளம் புலப்பட நடந்துகோடலின் இதுவும் மெய்ப்பா டாயிற்று. இது துணைமெய்ப்பாடுகள் முப்பத்திரண்டனுள் ஒன்று. (தொ. பொ. 260 பேரா.)
உளம் கொள்ளாவிடத்தும் மாறுபட்ட விடத்தும் எய்தும் வெறுப்பு. (தொ. மெய்ப். 12 ச. பால.)
இதனை வட நூலார் ‘அமர்ஷம்’ என்ப.
தலைமகள் தன் வெறுப்பினைப் பிறருக்குப் புலனாகாமல் மெய்யின்கண்ணே நிறுத்துதல் என்பர் இளம்பூரணர். (தொ. பொ. 267 இள.)
தலைமகள் தன் உள்ளத்து வெறுப்பு வெளிப்படத் தோழி யிடம், “என் உயிரே போவதாயினும் எனக்கு ஏற்பட்டுள்ள இம்மெய்வேறுபாடு காமநோயால் ஏற்பட்டது என்று தாயிடம் சொல்லாதே” (அகநா. 52) என்றாற் போலக் கூறி நிற்கும் நிலை என்பார் பேராசிரியர். (271 பேரா.)
இஃது ஒளியாது ஒழியாது உடன்உறையும் கற்புக்காதல் கூட்ட வேட்கைக் குறிப்பை வெளியிடும் மெய்ப்பாடு எட்டனுள் ஒன்று.
இது நடுவண் ஐந்திணையுள் மனம் அழியாவழி நிகழும் மெய்ப்பாடு எட்டனுள் ஒன்று என்பர் இளம்பூரணர்.
இளிவரல் என்ற மெய்ப்பாட்டிற்கு உரிய குறிப்பு நான்கனுள் முதலாவது. மூப்பு - வேறொரு காரணமின்றி ஆண்டு மிகுந்தமை ஒன்றே காரணமாக உடம்பின்கண் தோன்றும் வேறுபாடு. (56 சேனா.)
எ-டு : தொடித்தலை விழுத்தண்டினார், தம் இளமைக் கால நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்த்துத் தாம் இது பொழுது தளர்ந்த கால்களுக்கு ஆதாரமாகத் தடி ஊன்றி உடல்நடுங்கிச் சில சொற்கள் இருமலுக் கிடையே பேசும் தம் வயது மூத்த நிலை குறித்து வருந் திக் கூறுதல், தன்கண் தோன்றிய மூப்புப் பொருளாக வந்த இளிவரல். (புறநா. 243)
ஆண்டு மூத்தமையான் தலை தொங்கிப் போன வீரனோடு இளைய வீரன் போரிட நாணுவதாகக் கூறல் பிறன்கண் தோன்றிய மூப்புப் பொருளாக வந்த இளிவரல். (தொ. பொ. 254 பேரா.)
தலைவன் நினைவிலேயே இருக்கும் தலைவி, அவன்நினைவு மிகுதலால் கருவிகரணங்கள் செயற்படுதல் தவிர்ந்து மயங்கி விழுதல்.
இந்நிலைக்குக் காரணம் தலைவியின் உள்ளத்தை உள்ளவாறு உணர்ந்தார்க்கே புலனாவதாதலின் இஃது அக மெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று. (வீ. சோ. 96 உரை மேற்.)
காட்சி, வேட்கை முதலாகச் சாக்காடு ஈறாகச் சொல்லப்படும் பத்து அவத்தையுள் மூன்றாம் அவத்தையாகும் ‘உள்ளுதல்’ என்பதன்கண், தலைமகளுக்கு நிகழும் மெய்ப்பாடுகள் அல்குல் தைவரல், அணிந்தவை திருத்தல், இல் வலியுறுத்தல், இருகையும் எடுத்தல் என்ற நான்குமாம்.(தொ. பொ. 259 இள.)
இவற்றைக் களவில் புணர்ச்சி நிகழுமுன் தலைவியிடம் நிகழும் மூன்று பகுதியவாகிய மெய்ப்பாடுகளுள் மூன்றாம் பகுதிக்குரிய மெய்ப்பாடுகள் என்பர் பேராசிரியர். (தொ. பொ. 263 பேரா.)
இவை நான்கும் ஊன்றியெழும் அன்பின் மூன்றாங்கூறு பற்றிய மெய்ப்பாடுகள் என்பர் பாரதியார். (மெய்ப். 15)
கண்ணீர் அரும்பல், மெய்ம்மயிர் சிலிர்த்தல் முதலிய சத்துவம் படுமாறு வெளிப்படச் செய்வது. அது தேவருலகம் முதலியவற்றைக் கூறினும் கண்டாங்கு அறியச் (செய்யுள்) செய்யும் செய்யுளுறுப்பாம். (தொ. செய். 204 நச்.)
நாடகச்சுவைக்கும் உரிமையுடையனவாய், நகைமுதலாய எண்வகை மெய்ப்பாடுகட்குச் சிறப்புடையனவாய் அகத்திற் கும் புறத்திற்கும் பொதுவாய் அமைந்து வரும் 32 பொருள் களை (எள்ளல் முதல் விளையாட்டு ஈறாக) முதற்கண் விதந்து ஓதினார்; மேலவற்றைப் போல் வரையறைப்பட்டு அடங்கா மல், எண்வகை மெய்ப்பாட்டினுள் விரவி வருவனவும் புறத்திணைக்குச் சிறந்துரிமை பெற்று நிற்பனவுமாகிய 32 பொருள்களை (உடைமை முதல் நடுக்கு ஈறாக) ‘அவை அல்லாதவிடத்து எண்வகைமெய்ப் பாட்டிற்குரிய பொரு ளாக இவையும் உள’ என்று, அடுத்து ஒதினார்.
அகத்திணை பற்றிய மெய்ப்பாட்டுப் பொருள்களைக் களவிற் குரியவை, அழிவின் கூட்டத்திற்குக் காரணமாகிய வரைவிற் குரியவை, அழிவில் கூட்டமாகிய கற்பிற்குரியவை என மூவகைப்படுத்து, களவொழுக்கத்தின்கண் சிறந்து வரும் 24 பொருள்களை புகுமுகம் புரிதல் முதல் கையறவுரைத்தல் ஈறாக முதற்கண் மொழிந்தார். களவிற்கும் வரைவிற்கும் இடைப்பட்ட வரைவுமலிதல் வரைவு கடாதல் என்ற பகுதிக்கும் ஒருவழித் தணத்தல் வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல் ஆகிய பிரிவுப்பகுதிக்கும் உரியவாக நிகழும் கிளவிகள் பற்றி வரும் 20 பொருள்களை (அவை உணர்வும் செயலும் ஆவன) ஒரு சேரத் தொகுத்து மெய்ப் பாட்டுப் பொருள்களாக அடுத்து ஓதினார். அவை இன் பத்தை வெறுத்தல் முதல் கலக்கம் ஈறாக வருபவை - அடுத்து, கற்பொழுக்கத்திற்கு அடிப்படையாய் அதற்கு முன் நிகழும் வரைவிற்குரிய கிளவிகள் பற்றிவரும் (உணர்வும் செயலு மாகிய) பொருள்களை எண்வகை மெய்ப்பாட்டுப் பொரு ளாகத் தொகுத்து ஓதினார். அவை முட்டுவயின் கழறல் முதல் கட்டுரையின்மை ஈறாக எட்டாம். இறுதியாக, கற்பொழுக் கத்திற்கு உரியவற்றுள் சிறப்புடைய பத்தனைத் தெய்வம் அஞ்சல் முதலாகப் புறஞ்சொல் மாணாக்கிளவி ஈறாக மெய்ப்பாட்டுப் பொருளாகத் தொகுத்துக் கூறினார்.
(தொ. மெய்ப்.)
மெய்ப்பாடாவது உலகத்தார் உள்ளத்து நிகழும் உணர்ச்சி களைப் புறத்தார்க்கு உடலின்கண் புலப்படும் வேறுபாடு களான் எடுத்துரைத்துப் பொருளைப் புலப்பட வைப்பது.
உவமமாவது எடுத்துக்காட்டுக்கள் வாயிலாக அறியாப் பொருளைப் புலப்படுத்தியும் அறிந்த பொருளைச் சிறப்பாக விளக்கியும் வருவது.
ஆதலின், பொருளைப் புலப்படுத்தல் என்ற செயல்ஒப்புமை பற்றிப் பொருளதிகாரத்தில் மெய்ப்பாட்டியலை அடுத்து உவமஇயல் அமைந்துள்ளது. (தொ. பொ. 276 பேரா.)
குறிப்புப் பற்றி வரும் மெய்ப்பாட்டை அடுத்துப் பண்பும் தொழிலும் பற்றி வரும் உவமம் கூறப்பட்டுள்ளது என்பார் உரையாசிரியர். (272 இள.)
உடம்பில் தோன்றி மற்றவர்க்குப் புலப்படும் கண்ணீரும் மெய்ம்மயிர் சிலிர்த்தலும் போன்ற வேறுபாடுகளே மெய்ப்பாடு எனப்படுவன. இவை உய்த்துக் காணும் அறிவு இல்லாமல், எதிர்ப்பட்ட பொருளின் தன்மையான், அதனை மெய்ப்பொருளை எதிர்ப்பட்டது போலவே கருதிப் பார்த்த னான் விளையும்.
இம்மெய்ப்பாடு நிலைமெய்ப்பாடு எனவும், பொதுமெய்ப் பாடு எனவும் இருவகைப்படும்.
1. சுவைகளின் அனுபவம் உள்ளவரை நிலைத்திருக்கும் ஒன்பான் சுவைகளும் காரணமாக நிகழும் மெய்ப்பாடுகள் ‘நிலை மெய்ப்பாடு’ எனப்படும். வடமொழியினர் இதனை ‘ஸ்தாயிபாவம்’ என்பர்.
2. ஒரு சுவைக்கே உரியன ஆகாமல், பல சுவைகளிலும் தோன்றும் மெய்ப்பாடுகள் ‘பொது மெய்ப்பாடு’ எனப் படும். வடமொழியினர் இதனை‘அநுபாவம்’ என்பர்.
மெய்ப்பாடு நடிப்பு இயல்களில் ஒன்று. (நாடக. 225 - 228)
மெய்ப்பாடு என்பது 34 செய்யுள் உறுப்புக்களுள் ஒன்று. மெய் - பொருள்; பாடு - அறிவித்தல். அஃதாவது உலகத்து மக்கள் உள்ளத்தின்கண் நிகழும் நகை முதலிய குறிப்புக்கள் உள்ளத்தில் நிகழ்ந்தபடியே, மற்றவர்க்கு, அவர்கள் உடம்பின்கண் நிகழும் வேறுபாடுகளாற் புலப்படுதல். (தொ. பொ. 249 பேரா.)
ஆராய்ந்து அறியவேண்டும் தேவையின்றிச் செய்யுளுள் கூறப்படும் பொருளினாலேயே கண்ணீர் அரும்பல், மெய்ம் மயிர் சிலிர்த்தல் முதலாகிய சத்துவம் உண்டாகுமாறு செய்வது. ஆகவே, செய்யுளுள் சில சொற்களான் விளக்கப் பட்டுள்ள பொருளை நோக்கி அறிந்தவன், அதனை நேரில் கண்டதுபோலச் செய்யும் செய்யுள்உறுப்பு மெய்ப்பாடாம். அது, தேவருலக வருணனையைச் செய்யுளுள் வாசித்தவன் நேரே தேவருலகைக் கண்டவன் போலப் பெருமிதம் கொள் ளச் செய்வது. இவ்வகையான், செய்யுளிலுள்ள சில சொற்கள் தம்மை வாசித்தவர்க்குத் தாம் குறிப்பிடும் பொருளை நேரே கண்முன் கொண்டு வந்து நிறுத்தினாற் போன்ற உணர்வு பிறப்பித்தலே மெய்ப்பாடாம். (517 பேரா.)
‘உய்ப்போன் செய்தது காண்போர்க்கு எய்துதல்
மெய்ய்பா(டு) என்ப மெய்யுணர்ந் தோரே’
என்று செயிற்றியனார் ஓதுதலின், அச்சமுற்றவன்மாட்டு நிகழும் அச்சம், அவனிடம் ஏற்படும் உடல் நடுக்கமும் மயிர் செவ்வன் நிற்றலும் முதலிய குறிகளால் காண்போர்க்கும் புலனாகும் தன்மை மெய்ப்பாடாம். மெய்யின்கண் தோற்று தலின் மெய்ப்பாடாயிற்று. (247 இள.)
மெய்ப்பாடு என்பது அகஉணர்வுகளை ஆழ்ந்து ஆராயா மலேயே யாரும் இனிது அறியப் புலப்படுத்தும் இயற்புற உடற்குறியாம். உள்ளத்திலுள்ள உணர்ச்சிகளைப் பொருத்த மான வகையில் உடலான் வெளிப்படுத்தப்படும் குறிப்புக் களைக் கொண்டு புலவன் செய்யுளில் புலப்பட அமைத்தல் வேண்டுமாதலின், செய்யுள் உறுப்புக்களுள் மெய்ப்பாடு சிறப்பிடம் பெற்றது. (மெய்ப். பாரதி. முன்.)
இஃது அகப்பொருள் உரை இருபத்தேழனுள் ஒன்று.(கா. 90).
மெய்ப்பாடாவது உடம்பில் ஏற்பட்டு வெளியே நன்கு புலப்படும் வேறுபாடுகளை நன்றாகத் தெரிந்து சொல்லுதல். மன்மதனுடைய ஐந்தம்புகளாலும், மனத்தில் முன்பே இருக்கும் காமஉணர்வு சிறிது சிறிதாக முதிர்ந்து பரவும்; அப்பொழுது சுப்பிரயோகம், விப்பிரயோகம், சோகம், மோகம், மரணம் என்ற ஐந்து நிலைகள் ஏற்படும்.
சுப்பிரயோகம் காமத்தால் விளைந்த பேச்சும் நினைவும்; விப்பிரயோகம் - காமத்தால் பெருமூச்செறிதல்; சோகம் - காமத்தால் சோறுண்ணாமை; மோகம் - காமத்தால் மயக்க மும் பிதற்றலும்; மரணம் - காமத்தால் பெரிதும் வருந்துதல். (வீ. சோ. 96 உரைமேற்.)
உணர்தற்கு எளிமையும் யாவர்க்கும் ஒப்பதும் பற்றி நகை முதற்கண் வைக்கப்பட்டது. அவ்வாறே அமைந்து நகைக்கு மறுதலையாக வருதலின் அழுகை அதன்பின் வைக்கப்பட் டது. அழுகையோடு இயைபுடைமையானும் இளநிலை அறிவு காரணமாக எய்துதலானும் இளிவரல் அதன்பின் வைக்கப்பட்டது. நிரம்பா அறிவும் ஆய்விலா நிலையும் பற்றி வருதலின், இளநிலை அறிவான் எய்தும் இளிவரலுக்குப் பின் மருட்கை வைக்கப்பட்டது. தளர்நிலை அறிவும் மெலிநிலை உள்ளமும் காரணமாக வரும் அச்சம் ஆய்விலா அறிவான் வரும் மருட்கையின் பின் வைக்கப்பட்டது. அச்சத்திற்கு மறுதலையாகலின் பெருமிதம் மருட்கையின் பின் வைக்கப் பட்டது. பெருமிதத்திற்கு வரும் ஊறு காரணமாக வரும் வெகுளி அதன்பின் வைக்கப்பட்டது. யாவரானும் விரும்பப் படுதலானும், அறிவானும் ஆற்றலானும் நிரம்பி நிற்றலானும் உவகை இறுதிக்கண் வைக்கப்பட்டது.
அன்றி, அவை சான்றோர் செய்யுள்களுள் ஒன்றின் ஒன்று மிக்குப் பயின்று வரும் சிறப்பு நோக்கி வைக்கப்பட்டன எனினும், தொல்லோர் அமைத்த முறை அஃது எனினும் ஆம். (தொ. மெய்ப். 3 ச. பால.)
இயற்றமிழின்கண் இலக்கியக்கலையுள் செய்யுளிடத்து அமையும் உணர்வுகள் ஒலிவடிவாயின் செவிவாயிலாகவும், வரிவடிவாயின் விழிவாயிலாகவும் புக்கு அச்செய்யுள் உணர்த்தும் நிகழ்ச்சிகள் அகத்தே புலப்படுகின்றன. ஆதலின் மெய்ப்பாடு என்பது சுவைப்பொருளின் அடிப்படையில் பொருள் புலப்பாட்டினைத் தலையாகக் கொண்டுவரும். எனவே மெய்ப்பாடு சுவையொடு தொடர்புடையதாதல் போதரும்.
முத்தமிழுள் இயற்றமிழுக்குரிய மெய்ப்பாடு என்னும் செய்யுளுறுப்பு நாடகத் தமிழுக்குரிய சுவையுறுப்பொடு தொடர்புடையதாதலின், ஆசிரியர் நாடக நூலார் கூறும் சுவை பற்றிய கோட்பாடுகளை ஒப்புமை பற்றி இவ்வியலுள் முதற்கண் எடுத்துக் கூறிப் பின்னர் இயற்றமிழுக்குரிய மெய்ப் பாட்டியல்புகளைப் பொதுவும் சிறப்புமாக வகுத்தோது கிறார். (தொ. மெய்ப். பாயிரம் ச.பால.)
மெய்ப்பாடாவது உள்ளத்து நிகழும் உணர்ச்சிகளின் மெய்ம்மை வெளிப்படுதல் அல்லது உள்ளத்து நிகழும் உணர்ச்சிகளின் உண்மைத் தோற்றமாகிய புற உடற்குறி யாகும். மெய்ப்பாடுகள் பொறிவாயிலாகப் பெறும் அக உணர்வுகளோடும் உணர்ச்சிகளொடும் புறஉடற் கூறுக ளொடும் நெருங்கிய தொடர்புடையன. இவை தோன்று வதற்கு அடிப்படையான உணர்ச்சிகள் நிலைக்களன்கள் எனப்படும்.
இயற்கையாக எழும் உள்ளத்துணர்ச்சிகளின் உண்மை வெளிப்பாடே மெய்ப்பாடாகும். இயற்கையாக அவ்வுணர்ச் சிகள் எழாதபோதும், ஒருவன் அவ் உணர்ச்சிகளை உய்த் துணர்ந்து, மனத்தால் பாவித்து அவற்றிற்குரிய புற உடற் குறிகளைச் செயற்கையாக எழுப்பி நடித்தல் ‘பாவம்’ எனப் படும். ஒன்றைப் போலப் பாவித்தல் ‘பாவம்’ ஆகும். இவ்வாறு போலியாக எழுப்பும் உடற்குறிகள் சத்துவம் அல்லது விறல் எனப்படும். விறல்பட ஆடுகின்றவள் விறலி ஆவாள்.
உய்த்து உணர்வதால் எழுப்பப்பெறாது, தாமே தலைப்பட்டு வரும் உணர்ச்சிகளை அவற்றின் மெய்ம்மைப் பதிவாகச் செய்யுளில் அமைப்பதே மெய்ப்பாடு என்பது தொல்காப்பி யர் கருத்து.
தாமே இயற்கையாக எழாமல் பொய்யாகப் பாவனையால் விறல்படச் செயற்கை முறையில் அவ்வுணர்ச்சிகளுக்குரிய புற உடற்குறிகளை எழுப்புதல் விறல் அல்லது சத்துவம் எனப்படும். மெய்ப்பாட்டியலில் கூறப்படுவன மெய்ப்பாடே யன்றிச் சுவைகள் அல்ல. மெய்ப்பாட்டினின்றும் தோன்றியதே என்று கொள்ளும் சுவை மெய்ப்பாட்டின் வேறுபட்டது.
சுருங்கச் சொல்லின், உடலின்பத்தை விரும்பினோர் வகுத்தது சுவைக் கொள்கை. அறிவின்பத்தை விரும்பினோர் வகுத்தது மெய்ப்பாடு.
(கம்பரும் மெய்ப்பாட்டியலும் - கோதண்டபாணி பிள்ளை).
பிரிவினுள் தலைவன் கூறிய சொல் நிகழாது போயினும் அதனை மெய்யென்றே துணிந்து,
‘கானம் கார் எனக் கூறினும்
யானோ தேறேன்அவர் பொய்வழங் கலரே’ (குறுந். 21)
என்றாற் போலத் தலைவன் சொல் ஒரு காலத்தும் பொய்யாது என்று கொள்ளும் காதலியல்பு. (மெய்ப். 22 பாரதி.)
தலைவி தான் கொண்ட பொய்யான கருத்தை மெய் என்று துணிதல் என்பதும் பொருள். தலைவன் மகனை வாயிலாகக் கொண்டு தலைவியை அடையவும், தலைவி அதனை நம்பாது, “தலைவன் பரத்தை ஒருத்தியை மணத்தற்குத் தன் தெருவழியே சென்றபோது தன் மகன் அவனைத் தடுத்துப் பிடிவாதம் செய்து இல்லத்திற்கு அழைத்து வந்துவிட்டான்” (அகநா. 66) என்று தான் கொண்ட பொய்யான கருத்தையே மெய் என்று சாதிப்பது போல்வன. (270 பேரா.)
இதனைப் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு என்பர் இளம் பூரணர் (தொ. பொ. 266) அன்புத்திணையில் தனிப்படர் மெலிவின் துனி நனி விளக்கும் இம்மெய்ப்பாடு கற்பிற்குச் சிறந்து களவிற்கும் கொள்ளப்படும் என்பர் ஏனையோர்.
பிரிவிடை நிகழும் இம்மெய்ப்பாடு ஆராய்ந்துணரின் புணர்ச் சிக்கு நிமித்த மாகும்.
இஃது இளிவரல் என்ற மெய்ப்பாட்டிற்கு உரிய நான்கு குறிப்புக்களுள் நாலாவது.
மென்மை - நல்குரவு. (தொ. பொ. 250 இள.)
மென்மை - வலிகுன்றியிருத்தல். (254 பேரா.)
மென்மை - இகழ்ச்சிக்கு ஆளாக்கும் எளிமை; அஃதாவது நொய்ம்மை. (மெய்ப். 6 பாரதி.)
எ-டு : ‘அறத்தொடு பொருந்தாத நல்குரவுடையான் தன் தாயானும் புறக்கணிக்கப்படுவான் (குறள் 1047);
‘குடிப்பிறந்தவர்களிடத்தினும் நல்குரவு தாழ்வான சொற்கள் பேசப்படுதற்கு இடம் தரும். (குறள் 1044) (இள.)
பகைவர் வலியர் என்று அவரை வணங்கி வாழ்தல், தன்கண் தோன்றிய மென்மை பற்றிய இளிவரல்; ‘பகைவர் மெல் லியர்’ என்று அவரோடு பகைத்துப் போரிடுதல்; பிறன்கண் தோன்றிய மென்மை பற்றிய இளிவரல் (புறநா. 239).
மேட்டிமை - பெருமிதச் சுவை.
(கொடை பற்றிய) பெருமிதம், மேன்மை; அகந்தை; தலைமை. (L)
ய
திட்பமுற வந்த இளிவரல். இதனால் இழிக்கத்தக்கன பிறவும் கொள்க. அவை நாற்றத்தானும் தோற்றத்தானும் அற்பமாகத் தோன்றுவன. (250 இள.)
இருகையுடைய வீரன், ஒருகையுடைய யானையை எதிர்த்துப் போரிடாத, தன்கண் உற்ற வீரம்பற்றிக் கூறுவன போல்வன வும் இளிவரவின் பாற்படும். (தொ. பொ. 254 பேரா.)
ரௌத்திரம் - வெகுளிச்சுவை
வ
இஃது இளிவரல் என்னும் மெய்ப்பாட்டுக்குரிய குறிப்பு நான்கனுள் மூன்றாவது.
வருத்தம் - தன்மாட்டும் பிறர்மாட்டும் உளதாகிய துயரம்.
(தொ. பொ. 250 இள.)
வருத்தம் - முயற்சி. (254 பேரா.)
வருத்தம் - இடுக்கண்; அஃதாவது அல்லல். (மெய்ப். 6 பாரதி)
எ-டு : தம்மை அகன்று சென்றார் பின் செல்லாது தாமும் அகன்றிருக்கும் நிறையுடைமை காமநோயுற்றாரிடம் தோன்றாது” (கு. 1255) என்ற தலைவி கூற்றுப் பற்றித் தோழிக்குப் பிறர் வருத்தம் கண்டு இளிவரல் நிகழ்ந்தது. (இள.)
சிறைப்பட்ட சேரமான் கணைக்காலிரும் பொறை வருந்திக் கூறியது (புறநா. 74) தன் வருத்தம் பற்றிய இளிவரலான் நிகழ்ந்தது. (இள.)
தலைவன் தன் மனத்தைத் தனித்து நிறுத்தி, “மனமே! நீ சேய்மையில் உள்ளவளும் கிட்டுதற்கு அரியளுமாகிய தலைவி நினைப்பாகவே உள்ளாய்” (குறுந். 128) என்றது. பிறன்கண் தோன்றிய வருத்தம் பற்றிய இளிவரல். (பேரா.)
தோழியை இரந்து பின் நின்ற தலைவன், “தலைவி என்னை வருத்துகிறாள். அதனை யான் அறிகின்றேன்; ஆயின் அவள் அதனை அறிகின்றாளில்லை” என்று கூறியதன்கண் (குறுந். 337) தன்கண் தோன்றிய வருத்தம் பற்றிய இளிவரல் வந்தது. (பேரா.)
எவ்வளவு புறத்தே கோலம் செய்யினும், தலைவனைப் பிரிந்திருக்கும் வாட்டத்தைத் தலைவி தன்முகத்தின் வாயி லாகத் தெரிவித்தல்.
இந்நிலைக்குக் காரணம் அவள் அகத்தது உணர்ந்தார்க்கே புலனாம் ஆதலின் இஃது அகமெய்ப்பாடு முப்பத்திரண்ட னுள் ஒன்று. (வீ. சோ. 96 உரைமேற்)
வரைதல் என்பது செய்யத்தகுவனவும் தவிரத் தகுவனவும் இவை என்று வரையறை செய்துகொண்டு ஒழுகும் ஒழுக்கம். அவை பிறன்மனைவியையும் செல்வங்களையும் தான் பெற விரும்பாமை போல்வன. (தொ. பொ. 256 இள)
வரைதல் என்பது காக்கவேண்டிய நற்செயல்களைப் பின்பற்றி, நீக்க வேண்டிய தீச்செயல்களை அகற்றி ஒழுகும் ஒழுக்கம். அவை பார்ப்பாராயின் முத்தீக்களையும் விரும்பிப் போற்றுதலும், புலாலுணவும் கள்ளும் முதலாயினவற்றைக் கொள்ளாமையும் போல்வன. இது மனத்தின் நிகழ்ச்சியை வெளிப்படுத்தலான் மெய்ப்பாடாயிற்று.
இது துணைமெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று. (260 பேரா.)
வரைதல் என்பது வெளிப்படுவது புலப்படாது நீங்கி ஒளித்தல் என்று கொண்டு, வடநூலார் இதனை ‘அவகித்தம்’ என்ப.
உண்மை நடுநிலை முதலியன காத்துப் பொய் பொறாமை முதலியன நீக்கி ஒழுகல். அஃதாவது செய்வன தவிர்வன கடைப்பிடித்தல். நல்லன செய்ய மகிழ்தலும், தீயன செய்ய அஞ்சுதலும் மெய்ப்பாடாகும். (247 குழ.)
முட்டுவயின் கழறல், முனிவு மெய் நிறுத்தல், அச்சத்தின் அகறல், அவன்புணர்வு மறுத்தல், தூது முனிவின்மை, துஞ்சிச்சேர்தல், காதல் கைம்மிகல், கட்டுரையின்மை என்ற எட்டும் வரைந்து எய்தும் கூட்டமாகிய திருமணத்திற்குத் தலைவனை வரைவு கடாவுவதற்கு முன்னர் தலைவி தான் வரைதலையே வேட்கின்ற செய்தியைப் புலப்படுத்தும் மெய்ப்பாடுகளாம்.
இவை ‘அழிவில்கூட்ட மெய்ப்பாடுகள்’ எனவும் வழங்கப் பெறும். (தொ. பொ. 271 பேரா.)
இஃது அழுகை என்ற மெய்ப்பாட்டிற்குரிய குறிப்பு நான்க னுள் இறுதியாவது.
வறுமை- நல்குரவு (தொ. பொ. 249 இள.)
வறுமை - தான் விரும்பிய பொருள் கிட்டாதாயினும் அதனிடத்து வைத்த ஆசை குறையாதிருத்தலாகிய, போகம் துய்க்கப் பெறாத பற்றுள்ளம். (253 பேரா.)
எ-டு : கடகம் அணிந்த கையில் வெறுமஞ்சட்கயிறு அணிந் திருத்தல் (இள.)
தாயிடம் பால்குடிப்பதற்குப் பால் இல்லாமையால் குழவி அழுதல் தன்கண் தோன்றிய வறுமை பற்றிய அழுகை; அக்குழவியின் துயர் கண்டு தாய் அழுதல் பிறன்கண் தோன் றிய வறுமை பற்றிய அழுகை. (புறநா. 164) (பேரா.)
நற்காமத்துக்கு ஆகாத மெய்ப்பாடுகளுள் ஒன்று.
வன்சொல் - கடுஞ்சொல் கூறல். (தொ. பொ. 270 இள.)
வன்சொல் - கண்ணோட்டமின்றிச் சொல்லும் சொற்கள் (274. பேரா)
வருத்த முறுத்தும் கடுஞ்சொற்கள் காதல் வாழ்க்கையைக் கைக்கச் செய்யுமாதலின் வன்சொல் விலக்கப்பட்டது.
வாழ்த்தல் - பிறனை வாழ்த்துதல், ‘வாழி ஆதன்’ (ஐங். 6) ‘எங்கோ வாழிய குடுமி!, (புறநா. 9) என்று ஒருவனை வாழ்த்தும்போது வரும் மனநிகழ்ச்சி மெய்ப்பாடாம்.
வைதல் மெய்ப்பாடு ஆகாது. அது வெகுளியின் முதிர்ச்சி. வாழ்ச்சி அன்பின் முதிர்வு ஆகாதோ எனின், அன்பின்றியும் அரசன் முதலாயினாரைச் சான்றோர் வாழ்த்துதலின், வாழ்த்தல் அன்பினுள் அடங்காது. (தொ. பொ. 256 இள.)
வாழ்த்தல் என்பது பிறரால் வாழ்த்தப்படுதல். இது பிறவினை யன்றோ எனின், ஒருவனை “நீடு வாழ்க” என்று வாழ்த்தல் பிறவினை யாயினும், அவன் வாழ்விக்கப்படுதலின் அவன் அவ்வாறு கூறல் அமையும். இது மனத்தின் நிகழ்ச்சியை வெளிப்படுத்தலின் மெய்ப்பாடாயிற்று. (260 பேரா.)
இது துணை மெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று.
இதனை வடநூலார் பெருவலி உள்ள இடத்து நிகழும் ‘உக்ரதை’ என்ப.
பிறர் வாழ்த்தும்போது பிறக்கும் உள்ளக்குறிப்பு மெய்ப் பாடாகும். 247குழ.
இயல்பான நிலை மாற்றத்தால் குறிப்பாக ஒருபொருள் அறியக் கிடக்குமாறு அமையுமாயின் அம்மாற்றமும் சுவைப் பொருளாதலின் விகாரமும் ஒரு சுவையாயிற்று.
எ-டு: ‘கலைகால் நெகிழ்ந்து குழலும் சரிந்து, வளைகழல
முலைகால் பசந்து முன் போலாள்....’
தலைவியின் கலைநெகிழ்தல், குழல் சரிதல் வளை கழலுதல், நகில் பசத்தல் முதலிய விகாரங்கள் அவளுக்குத் தலைவ னொடு நிகழ்ந்த கூட்டத்தைக் குறிப்பிக்கும் மெய்ப்பாடுகள் ஆயினமையின், சுவையெனப்பட்டன. (வீ. சோ. 154 உரை)
தலைவன் தலைவியென இருவரிடையேயும் நிகழும் பிரிவு; தலைவன் தலைவியை எய்துதற்கு முன் மன்மதனுடைய ஐந்து அம்புகளாலும் இருவரிடையேயும் நிகழும் ஐவகை நிலைகளுள் ஒன்றாகிய பெருமூச்செறிதல். இஃது ஒரு மெய்ப்பாடு. (வீ. சோ. 96 உரை மேற்.)
இது நற்காமத்துக்கு ஆகாத மெய்ப்பாடுகளுள் ஒன்று.
வியப்பு - தம்மைப் பெரியதாக நினைத்தல் (தொ.பொ. 270 இள.)
வியப்பு - தலைமகள்பால் தெய்வத்தன்மை கண்டான் போல வியந்து ஒழுகுதல்; தலைவன் தன் பண்புநலன்கள் மிக்கன என்று தன்னைத் தானே வியத்தலும் ஆம். (தொ. பொ. 274 பேரா.)
இஃது ஒத்த காதலுக்கு ஒவ்வாக் குற்றம். புனிதவதியாரிடம் தெய்வத்தன்மை கண்ட பரமதத்தன், அவரொடு தான் வாழ்ந்த காதல்வாழ்வை நீத்து வேற்றுநாடு சென்று அங்கு மறுமணம் செய்துகொண்டு வாழ்ந்தமை பெரியபுராண வரலாறு.
(வியப்பு, அற்புதம், ஆச்சரியம் என்பன ஒருபொருட் கிளவிகள்.)
சொல்லாடலில் சோர்வு, பிற செயல்களிலும் சோர்வு, மயிர்க் கூச்செறிதல், பிறரை வியப்பில் ஆழ்த்தும் செயல்கள், இமைத்தலின்றி விழித்த கண் விழித்தவாறிருத்தல், ஒரோ விடத்து மூடிய கண்ணுடன் இருத்தல் போன்றவை. (நாடக. 248)
வியர்த்தலென்பது தன் மனத்தில் வெகுளி தோன்றியவழிப் பிறப்பதொரு புழுக்கம். (தொ. பொ. 256 இள.)
வியர்த்த லென்பது பொறாமை முதலியன பற்றி மனம் புழுங்குதல். (260 பேரா.)
இது துணைமெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று.
இதனை வடநூலார் ‘ஸ்வேதம்’ என்ப.
விரைவு என்பது ஒரு பொருளைச் செய்ய நினைத்தான், அது தாழ்க்கில் அப்பயன் எய்தான், கடிதில் முடித்தல் வேண்டும் எனக் குறித்த மனநிகழ்ச்சி.
“கன்றை நினைந்து வரும் பசுப் போலத் தன் நண்பனுக்கு உதவ விரைந்து வருகின்றான்” (புறநா. 275) என்றாற் போல்வது. (தொ. பொ. 256 இள.)
விரைவு என்பது இயற்கைவகையானன்றி ஒரு பொருட்கண் விரைவு தொழில்பட உள்ளம் நிகழும் கருத்து. (இது துணை மெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று.)
இதனை வடநூலார் ‘ஆவேகம்’ என்ப.
விரைவாவது, காலத்தையும், இடத்தையும் சுருக்கி மேற் செல்லக் கடிதுவிழையும் உள்ளஎழுச்சி. (தொ. மெய்ப். 12 ச. பால.)
இஃது அச்சம் என்ற மெய்ப்பாட்டிற்குரிய குறிப்பு நான்கனுள் இரண்டாவது.
விலங்கு என்பன அரிமா முதலிய அஞ்சத்தக்கன.
(தொ. பொ. 256 பேரா.)
எ-டு : தினைக்கொல்லை காக்கும்போது மயக்கம் பொருந் திய யானை தலைவியைத் தாக்க வந்தவிடத்தே, அவளுக்கு விலங்கு பொருளாக அச்சம் பிறந்தது. (குறிஞ்சிப். 165- 169) 252 இள.
கேடில்லாத கொள்கையையுடைய அழுகை. இவ்வடை மொழியாகிய இலேசினான், அழுகைக்கண்ணீர் போல உவகைக் கண்ணீர் வீழ்தலும் உண்டு; அதுவும் அழுகை யின்பால் சார்த்தி உணரப்படும்.
யானையின் துதிக்கையை வெட்டி வீழ்த்தித் தம் புதல்வர் தந்தையொடு விழுப்புண்பட்டு இறந்து கிடத்தலைக் கண்டு வீரப்பெண்டிர் வடித்த கண்ணீர் (புறநா. 19) உவகைக் கண்ணீர் ஆகும். (தொ. பொ. 253 பேரா.)
இஃது உவகை என்ற மெய்ப்பாட்டுக்கு உரிய குறிப்பு நான்கனுள் இறுதியானது.
விளையாட்டு - யாறும் குளனும் காவும் ஆடிப் பதி இகந்து வருதல் முதலாயின. (தொ. பொ. 259 பேரா.)
விளையாட்டாவது மக்கள் உளம் களித்து ஆடும் தீது அறியாப் பொய்தல். அஃதாவது ஓரைவகை அனைத்தையும் குறிக்கும். இஃது ஆண்பெண் இருபாலார்க்கும் பொது. (மெய்ப். 11 பாரதி.)
“இளவேனிற் பருவம் வந்து விட்டதை அறிந்தால், தலைவன் விரைந்து ஊருக்கு மீண்டு, வையையாற்றுப் புதுவெள்ளத்தில் பரத்தையரொடு மகிழ்ந்து மயங்கி நீர்விளையாட்டு நிகழ்த்து வானே” என்ற தலைவி கூற்றில் (கலி. 30) விளையாட்டுத் தலைவனுக்கு உவகைப்பொருளாமாறு குறிப்பிடப்படுகிறது. (பேரா.)
விறல் என்பன அவ்வவ்வுள்ள நிகழ்ச்சி பிறந்தவழி, வேம்பு தின்றார்க்குத் தலை நடுங்குவது போலத் தாமே தோன்றும் நடுக்கம் முதலாயின. (தொ. பொ. 249 பேரா.)
விறல் எனினும், சத்துவம் எனினும், மெய்ப்பாடு எனினும் ஒக்கும்.
‘சத்துவம் என்பது சாற்றுங் காலை,
மெய்ம்மயிர் குளிர்த்தல், கண்ணீர் வார்தல்,
நடுக்கம், கடுத்தல், வியர்த்தல், தேற்றம்,
கொடுங்குரல் சிதைவொடு, நிரல்பட வந்த
பத்தென மொழிப சத்துவம் தானே.’
என்பதனால், மெய்மயிர் சிலிர்த்தல், கண்ணீர் வார்தல், உடல் நடுங்குதல், முகத்தில் சினக்குறி காட்டுதல், வியர்த்தல், முகத்தில் தெளிவு காட்டுதல், குரலில் வேறுபாடு காட்டுதல், சொற்கள் பேசும்போது தடுமாறுதல் போல்வன சத்துவமாம். (245 இள.)
சத்துவங்களை வடநூலார் ‘சாத்துவிக பாவம்’ எனவும், துணையாகும் மெய்ப்பாடுகளைச் ‘சஞ்சாரி பாவம்’ எனவும் கூறுப.
நுகர்தற்குரிய பலபொருள்களையும் துய்த்த புலனுணர்ச்சி யான சுவை காரணமாக மனத்தில் உண்டாகும் உணர்வே அடிப்படையாய், விரும்பி முயன்று செய்தலின்றித் தாமே தோன்றிப் புறத்தே வெளிப்படும் கண்ணீரும் மெய்ம்மயிர் சிலிர்ப்பும் போன்ற குறிப்புக்கள்; சத்துவம் என்பதும் அது.
விறலின் பத்து வகைகளாவன :
1. மெய்ம்மயிர் சிலிர்த்தல்; ‘உரோமாஞ்சம்’ என்ப.
2. விழி நீர் வார்தல்.
3. நடுக்கம் அடுத்தல் - உடம்பு நடுங்கத் தொடங்குதல்.
4. வியர்த்தல் - திடீரென்று வியர்வை தோன்றுவது.
5. தேற்றம் - தெளிதல்.
6. களித்தல் - மகிழ்தல்.
7. விழித்தல் - கண்ணை அகல விழித்துப் பார்த்தல்.
8. வெதும்பல் - மனம் புழுங்குதல்.
9. சாக்காடு - உணர்ச்சி மரத்துப் போதல்.
10. குரல் சிதைவு - குரல் தழுதழுத்தல்.
என்பனவாம். (நாடக. 229, 230)
மடித்த வாயும், விரிந்த புடைத்த மார்பும், துடித்த புருவங் களும், நீண்டு சுட்டும் விரலும், காய்ந்த உள்ளமும், கையுடன் கை புடைத்தலும் என இவை. அடியார்க்குநல்லார் மேற் கோள் காட்டும் 24 வகை அவிநய இலக்கணச் சூத்திரங்களுள் வெகுண்டோன் அவிநயம் கூறும் சூத்திரம் கூறுவன இவை.
(நாடக. 253 உரை)
உறுப்புக்களை வெட்டிக் குறைத்தலும், தாரமும் சுற்றமும் குடிப்பிறப்பும் போன்றவற்றிற்குக் கேடு நினைத்தலும், மன்னனது கொடுங்கோலும் போன்ற அநியாயச் செயல் காரணமாகச், சினம் மிகுந்து, தன் நிலையை மறந்து, கொதித் தெழுந்து கூறும் சொற்களும் செய்யும் செயல்களும் இச்சுவையின் பாற்படும். (நாடக. 481)
எதிரியான மாந்தரிடமும் பிறவற்றிடமும் தோன்றும் மனக் கலக்கமும் வெப்பமும் எழுச்சியும். இது வெகுளிச் சுவையின் நிலைக்கருத்து. (நாடக. 44.)
கைகளைப் பிசைதலும், மெய்குலைதலும், மடித்த வாயும், கடித்த உதடும், சிவந்த கண்ணும், வெம்மையான பெருமூச் சும், வியர்த்தலும் போன்றவை.
வெகுளி, உருத்திரம், கோபம் என்பன ஒரு பொருட் கிளவிகள்.
(நாடக. 247)
வெகுளி - வெகுளியைத் தோற்றுவிக்கும் பொருள்களைக் கண்டவழி மனத்தில் விளைவது.
உறுப்பறை, குடிகோள், அலை, கொலை என்ற நான்கு குறிப்புப் பற்றியும் வெகுளி பிறக்கும்.
ஊடல் பற்றியும் வெகுளி பிறத்தல் உண்டு.
வெகுளி எப்பொழுதும் பிற பொருள் பற்றியே வரும். ‘தன்னை வெகுண்டான்’ என்றவழி, உடல் வேறு உயிர் வேறாகக் கருதி உயிராகிய தான் உடலாகிய பிறபொருளை வெகுண்டான் என்பது கொள்ளப்படும். (தொ. பொ. 258 பேரா.)
தந்தையும் தாயுமாகிய இருவகைக்குரவரும், அவரைச் சேர்ந்தோரும், தேவர்களும், அரசரும் ஆகிய இவர்களுடைய பெருமைக்கு இழுக்குத் தரும் செயல்கள் நிகழ்ந்துழி வெகுளி தோன்றும் என வெகுளிக்குறிப்பு, தந்தைதாயர் தீங்கு, சுற்றத்தார் தீங்கு, தெய்வத்தீங்கு, மன்னவர் தீங்கு என்னும் இவை குறித்து வரும் என்னும் வீரசோழியவுரை. (கா. 96)
1) “தாகம் தாகம்” என்று பலகால் நீர் வேண்டல், 2) உடல் நெருப்புப் பற்றி எரிவது போன்ற நினைப்புக் கோடல். 3) வெளியில் சென்று இயங்குவதற்கு அஞ்சுதல், 4) கண்கள் வெப்பத்தால் சிவந்து காணப்படுதல், 5) எப்பொழுதும் தண்ணீர் பருகும் வேட்கை மிகுதல், 6) உடம்பில் பொருத்த மில்லாத எரிச்சல் ஏற்படுதல் முதலியன. (இவை அடியார்க்கு நல்லார் காட்டுவன.) (நாடக. 253 உரை)
1. உடம்பிலே துன்பம் பெருக்கெடுத்து ஓடுவது போன்ற நிலை எய்துதல், 2. உடம்பு நெருப்புப் போலத் தகித்தல், 3. கண் சிவத்தல், 4. பார்வை மழுங்குதல் முதலியன. (இவை அடியார்க்குநல்லார் காட்டுவன.) (நாடக. 253 உரை)
வெருவுதல் என்பது அச்சம் போல நீண்ட நேரம் நில்லாது, திடீரென்று தோன்றி மறையும் குறிப்பாகிய துணுக்கம்.
தலைவி ஊடற்கண் தலைவனிடம், “நின்னைக் காணும் போது வெருவுகின்றேன்” (கலி. 87) என்று கூறும் கூற்றில், அச்சமோ அச்சத்திற்குரிய மெய்ப்பாடோ தோன்றாமல் தலைவனைக் காணாது கண்ட அளவில் திடுக்கிட்டுக் கூறுதல் ஒன்றுமே அமைவது இம்மெய்ப்பாடாம். (தொ. பொ. 256 இள.)
வெருவுதல் என்பது உண்மையான காரணம் எதுவுமின்றி விலங்கும் புள்ளும் திடுக்கிட்டுக் கூச்சலிடுவது போலத் துணுக்குறும் உள்ளநிகழ்ச்சி. அஃது அஞ்ச வேண்டாதன கண்டவழியும் கடிதில் பிறந்துமாறுவதொரு வெறி. இது துணை மெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று. (260 பேரா.)
இதனை வடநூலார் சங்கை என்ப.
உறுப்பறை, குடிகோள், அலை, கொலை என்ற நான்கனையும் தான் பிறரைச் செய்யுங்காலும் வெகுளி பிறக்கும்; தன்னைப் பிறர் செய்யுங்காலும் வெகுளி பிறக்கும்.(தொ.பொ. 254 இள.)
உறுப்பின் ஊறும், சுற்ற நலிவும், அலைத்தலும், கொலையும் வெறுப்பான் விளையும் சினத்தை அடிப்படையாகக் கோடலின் ‘வெறுப்பின் வந்த வெகுளி’ எனப்பட்டது. தீதில்லாத சினம் அறம் ஆதலின், அதனை விலக்கி வெறுப்பிற் குரிய வெகுளி வகையே ஈண்டுக் கூறப்பட்டது. (மெய்ப். 10 பாரதி)
தலைவிக்கு ஊடல் பொருளாக வெகுளி தோன்றத் தலைவன், “என்னிடம் தவறில்லாதஇடத்து நீ எவ்வாறு என்னைக் கோபிப்பாய்?” (கலி. 87) என்று கூறுதற்கண் ஊடல் பொரு ளாகவும் வெகுளி தோன்றும் என்பதும், அதுதான் தலைவிக்கு உரித்து என்பதும் பெறப்படும். வெகுளி பிறன்கண் தோன்றிய பொருள் பற்றியே வரும். (258 பேரா.)
நாடகம்
அ
முக்குண சம்பந்தமான கூத்து. (சிலப். 3 : 12)
அக நாடகத்துக்குரிய பாடல்கள். அவை கந்தம் முதல் பிரபந்த உரு ஈறாக உள்ள இருபத்தெட்டு வகைப்படும்.
கந்தம் என்றது, அடிவரையறை யுடைத்தாய் ஒரு தாளத்தால் புணர்க்கும் இசைப்பாடலை.
பிரபந்தம் என்றது, அடிவரையறை இன்றிப் பல தாளத்தால் புணர்க்கும் இசைப்பாடலை. பிறவும் அன்ன.
(சிலப். 3 : 14 உரை)
நாடக வகையுள் ஒன்று. இராசதம், தாமதம், சாத்துவிகம் என்ற முக்குணங்களை அடிப்படையாகக் கொண்டு உள் ளத்து எழும் சுவையை வெளிப்படுத்தும் கதை தழுவிவரும் கூத்து. (சிலப். 3 : 14 உரை)
நாடகத்தின் பெரும்பிரிவிற்கு அங்கம் என்பது பெயர். அதன் உட்பிரிவு களம் எனப்படும். ஓர் அங்கத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட களங்கள் அமையும்.
வடநூலார், ஓர் அங்கம் தொடங்குவதற்கு முன் சில விடங்க ளில் நாடகக்கதையை விளக்கல் வேண்டி, இன்றியமையாத நிகழ்வுகளையும் செய்திகளையும் இழிந்த பாத்திரங்களின் மூலம் கூறுவிப்பதும் உண்டு. இதனைக் `கதை நிறைகளம்‘ என்று கொள்வோம். இது வடமொழியில் `விஷ்கம்பம்‘, `பிரவேசம்‘ எனப்படும்.
களமாவது கதை நிகழிடமாகக் கூறப்பட்ட இடத்தில் நிகழ்ந்திடும் காட்சி ஆதலின், நாடகத்தில் களம் என்பதனைக் காட்சி எனவும் வழங்குதல் உண்டு. களம் முடியும்போது திரை விழும். ஒரே தொடரில் வரும் காட்சிகளை அடுத் தடுத்து அமைத்தல் பொருத்தமின்று. (நாடக. 187-193)
இஃது ஓரங்கமே கொண்ட நாடகம். இதனுள் அவலச் சுவையே பெரிதும் இடம்பெறும். கவலைகொண்ட பெண் பாலார் கசிந்து வருந்த, அருகிலிருப்போர் வாய்விட்டுக் கதறிப் புலம்ப, வாக்குவாதமான வாய்ச்சண்டை இதன்கண் இடம் பெறும். மனிதர்களே பாத்திரங்கள். இராமன் போன்ற அவதாரக் கடவுளரை மனிதபாத்திரமாகவே கொள்வதும் உண்டு.
நாடகத்தின் பெரும்பகுதியைக் குறிக்கும் அங்கம் என்ப தற்கும் இந்தவகை நாடகத்திற்கும் வேறுபாடு தெரியும் வகையில் இதனைச் `சிறப்பங்கம்‘ எனப் பெயர் சுட்டுவதும் உண்டு.
(நாடக. 131, 132)
உடம்பு ஒடுங்குவதும், நடுக்கமும், கண்கலக்கமும், மனக்கலக்க மும், ஒளிந்து வருதலும், கைகளால் தனக்கெதிரே எதனை யோ வெருட்டுதல் போலக் கையை உதறுதலும், நாற்புறமும் பார்வையைச் செலுத்திக் கூசுதலும், அச்சத்தை (-பயானக ரஸத்தை) உணர்த்தும் அவிநயங்கள். (நாடக. 251)
கொடிய விலங்குகளையோ மக்களையோ காண்பதால் “ஆபத்து யாது விளையுமோ?”என்று மனம் கிளர்ச்சியுற்று அஞ்சுவது அச்சம் என்னும் சுவையின் நிலைக்கருத்து. சுவையை `நிலைக்கருத்து’ எனவும் சுட்டுவர். (நாடக. 54.)
நாடகத்தின் மூன்றாவது சந்தியாகிய கர்ப்பமுகத்தின் பேதம் பன்னிரண்டில் ஒன்று. (வீ. சோ. 106 உரை)
வஞ்சனையால் கூற்றினைத் திருப்புவதும், மாறுபட்ட கருத்துக் கொள்வதும், கபடமாகப் பேசுவதும் அதிபலமாம். கலக்கமும் படபடப்புமின்றி உரையாடுவதனை அதிபலம் எனக் கருதுவாரும் உளர்.
வஞ்சனையால் வெல்லுதல் அதிபலம். (ம. சூ. பக். 99)
அஃதாவது ஒன்றைக் கண்டு மற்றவற்றையும் உய்த்துணர்வால் அறிந்துரைத்தல்; ஐந்து வகைப்படும் சந்தியுள் மூன்றாவதா கிய கர்ப்பமுகத்தின் பேதம் பன்னிரண்டனுள் இதுவும் ஒன்று. (வீ. சோ. 106 உரை)
அநுமானமாவது குறிப்பால் உணர்தல். `அனுமானம்‘ காண்க.
குற்றங்களை எடுத்துரைத்து இகழ்தல்; பிறர் குற்றம் இயம்பல்.
(ம.சூ. பக். 99)
இது நாடக சந்தி ஐந்தனுள் நான்காவதான விமரிசத்தின் (வைரிமுகம்) அங்கம் பதின்மூன்றனுள் ஒன்று. (வீ.சோ. 106 உரை) சூத்திரங்களுள் வழு அமைத்தல் முதலியனவாகிய எய்தியது விலக்கிய சிறப்புவிதி. ‘உற்சர்க்கத்துக்கு அபவாதம் என்னும் நிஷேதவிதியாக மயங்கி’ (பி. வி. 50 உரை)
(பொதுவிதிக்கு மாறாக வரும் சிறப்புவிதியாகிய வழுவமைதி எனக் கோடல், எய்தியதன்மேற் சிறப்புவிதியை எய்தியது விலக்கிய பிறிதுவிதியாக மயங்கிக் கொண்டமை.)
அஃதாவது வஞ்சம் நிறைந்த கூற்று; வஞ்சித்து மொழிதல். (ம. சூ. பக். 99) இது நாடகத்தின் மூன்றாம் சந்தியான கர்ப்ப முகத்தின் பேதம் பன்னிரண்டனுள் ஒன்று.(வீ. சோ. 106 உரை.)
1) போர்த் தொடக்கத்துச் செய்யும் களப்பூசை.
2) பந்தயவிளையாட்டின் தொடக்கத்துச் செய்யும் பூசை.
‘சினம் தணிந் தரங்கபூசை செய்வன்’ (வில்லி. வாரணா. 65)
3) நாடகத் தொடக்கத்திற் செய்யும் பூசை (L)
அரங்கம் என்று கூறப்படும் நாடகமேடை நாடகசாலைக்கு முகம் போல்வது. அது சமதலமாய் இருத்தல் வேண்டும். பலவகைக் காட்சிகளைக் காட்டும் அழகுடைய திரைகள் வேண்டும்போது வீழ்த்தும் வகையில் கட்டப்பட்டிருத்தல் வேண்டும். அவை மிக உயரிய ஓவியங்கள் தீட்டப்பட்டன வாதல் வேண்டும். தூக்கவும் வீழ்த்தவும் இயந்திரம் அமைக் கப்பட்டுச் சிக்கல் ஏற்படா வண்ணமும் திரைகள் இருத்தல் வேண்டும். சிறிதும் இருளே தெரியாமல் மிக்க ஒளி வீசும் விளக்குக்கள் மேலே தொங்கவிடப்பட்டிருத்தல் வேண்டும். மேடைக்குக் கீழேயும் அவை அமைந்திருத்தல் வேண்டும். இவ்விளக்குஒளியால் தூண்களின் நிழல் வீழாமல் இருத்தலும் வேண்டும். (நாடக. 266)
இது வீரசோழியம் குறிப்பிடும் நாடகச் சாதியுள் ஒன்று. இதன்கண் இரக்கமற்றவர் தலைவராக இருப்பர்; பெண் பாத் திரம் தவறாது இருக்கும்; வாரம் இருந்தாலும் இருக்கலாம். இஃது அர்ப்பீடம் எனவும்படும். (வீ. சோ. 106 உரை)
இந்த உபசாதி நாடகத்தில் தீரோதாத்தன் தலைவனாக இருப்பான். ஆயினும் அவனுடைய செயலும் போக்கும் சற்றே வேறுபட்டிருக்கும். அஃதாவது, அவன் ஆராயாது செயற்படும் குறையுடையவனாய் அமைவான். எழுவர் எண்மர் பதின்மர் வரையுள்ள தலைவியர் பலர் வருவர். பற்பல வகைத் தாளக்கட்டு அமைந்த இன்னிசைப்பாடல்கள் பயிலும். கைசிகிவிருத்தியில் இயற்றப்பெறும் ஓர் அங்கமே யுண்டு. [தீரோதாத்தான் - பலவகையானும் (இராமபிரான் போன்று) உயர்ந்தவன்]. (நாடக. 156)
அவலம் - சோகரசம். கவலையும், கண்ணீரும், வாட்டமும் வருந்திய நடையும், பெருமையை அழிக்கும் துயரமும், பிதற்றலும், புலம்பலும், நெஞ்சத்து நிறையழிதலும், பண்பற்ற சொற்களைப் பேசுதலும், பொறுமை இழத்தலும் போன் றவை அவலச் சுவையினை அறிவிக்கும் அபிநயங்களாம். (நாடக. 250)
பிறரால் இகழப்பட்டு எளியவனாகும் இளிவும், தந்தை தாய் சுற்றத்தார் போல்வாரை இழந்து வருந்தும் இழவும், பண்டை நல்ல நிலைகெட்டு வருந்தும் அசைவும், வறுமையும் என்னும் இவை காரணமாகத் துயரம் உண்டானபோது, விம்முதலும் ஏங்குதலும், புலம்பி அரற்றுதலும், கண்ணீர்விட்டு அழுத லும், மயங்கி விழுதலும் அவலச் சுவை என்பர்.
தலைவனைப் பிரிந்து இரங்கும் தலைவியின் துயர் அவலம் ஆகாது. (நாடக. 51, 52)
அவலமாவது சோகம். இனிய சுற்றமும் பொருளும் இழந்த தனால் வரும் உள்ளத்தின் உளைவு அவலம் எனப்படும். இஃது அவலச்சுவையின் நிலைக்கருத்து. (நாடக. 54)
பாடற் பொருளைக் கையாற் காட்டி ஆடும் கூத்து.
(சிலப். 3 : 12 உரை)
கூத்துக்குச் சுவை, குறிப்பு, சத்துவம், அவிநயம் என்னும் நான்கும் இன்றியமையாத உறுப்புக்களாம்.
காட்டிற் சென்ற ஒருவன் வேங்கைப் புலியைக் கண்டான். கண்ட மாத்திரத்தே அவன் உள்ளத்தில் அச்சவுணர்வாகிய சுவை தோன்றியது; அவ்வேங்கை தன்னுயிரை வவ்வுமோ என்று அவன் எண்ணியவழி அச்சக்குறிப்புத் தோன்றியது; அவ்வச்சக்குறிப்புத் தோன்றி உடல்நடுக்கமாகிய சத்துவம் தோன்றிற்று. இங்ஙனம் அஞ்சிய மகன் நாடக அரங்கத்தில் பின்னாளில் முன்னர்த் தான் அநுபவித்த சுவைஉணர்வைப் பிறர்க்குப் புலப்படுத்த முயன்ற எல்லையில், பாவகமாகிய அவிநயம் பிறக்கும். ஆசிரியர் செயிற்றியனார் சுவையுணர்வை யும் சுவைப்பொருளையும் ஒன்றாக அடக்கிச் சுவை, குறிப்பு, சத்துவம் என மூன்றாக்கி, அவிநயத்தைத் தனித்துக் கூறுவர். அவிநயம், தான் குறிப்பிடும் உணர்வைக் கண்டும் கேட்டும் இருப்பார் மனத்துக் கொணருமாறு ஒருவன் நடிப்பது.
(ம. சூ. பக். 8)
அவிநயம் - அபிநயம். அஃதாவது சுவையில் தோன்றும் உள்ளக்குறிப்பை வெளியிட்டுக் காட்டுதற்குப் பொருத்த மான முக்கரணங்களின் செய்கை.
1) ஆங்கிதம் - உடம்பால் செய்யும் நடிப்புச் செய்கை. 2) வாசிகம் - பேசும் ஒலி வேறுபாட்டானும் குரல் வேறுபாட் டானும் மொழி வேறுபாட்டானும் நிகழும் நடிப்புச் செய்கை. 3) ஆகாரியம் - உடை முதலியனகொண்டு தரிக்கும் வேடத்தால் நிகழும் நடிப்புச் செய்கை. 4) சாத்துவிகம் - மனவேறுபாட்டால் நிகழ்வன - என இவ்வாறு அவிநயம் நால்வகைப்படும். சத்துவத்தால் பெறப்படுதலின் சாத்துவிகம் எனப்பட்டது. சத்துவமாவது விறல். இம்மன வேறுபாடுகள் உடம்பில் தோன்றுங்கால் முகத்தில் மிக்குத் தோன்றும்; அதனினும் மிகுதியாகக் கண்ணிலும், அதனினும் மிகுதியாகக் கட்கடையிலும் தோன்றும்.
இந்த அவிநயங்கள் ஒன்பது சுவைகளையும் புலப்படுத்தச் செயற்படும் திறத்தைத் தனித்தனித் தலைப்புக்களில் காண்க. (நாடக. 243 - 251)
அவிநயங்களாவன கீழ்க்காணும் நிலைகளுக்கு ஏற்ப முகத்தாலும் பிற உறுப்புக்களாலும் பிறவற்றாலும் நடித்தல்.
1) அகந்தையுற்றோன், 2) அழற்பட்டோன், 3)
அழுக்கறுப் போன், 4) அழுவோன், 5) ஆலோசிப்போன்,
6) இரப்போன்,
7) இறந்தோன், 8) இன்பம் எய்தினோன், 9) உடன்பட்டோன், 10) உவந்தோன், 11) எழுதுவோன், 12) ஐயமுற்றோன், 13) கண் நோவுற்றோன், 14) கள்ளுண்டு
களித்தோன், 15) கள்வன், 16) கனவு காண்போன், 17)
கொலைவினை செய்வோன், 18) கைப்பொருள் இழந்தோன்,
19) மயக்கமுற்றோன், 20) அறிவிலி, 21)
தண்டிப்போன், 22) தண்டிக்கப்பெற்றோன், 23) தலை
நோவுற்றோன், 24) துதிப்போன், 25) துயில்வோன், 26) துயில் உணர்வோன், 27) பொய்யன், 28) தெய்வஆவேச முற்றோன், 29) மழையால் நனைந்தோன், 30) உடல் வருந்துவோன், 31) பசித்தோன்,
32) பைத்தியக்காரன், 33) காமுகன், 34) போர்
செய்வோன், 35) வெற்றி பெற்றோன், 36)
அஞ்சியோடுவோன், 37) பனியால் நனைந்தோன், 38) சோம்பேறி, 39) துன்பமுற்றோன் 40) யோகம் பயில்வோன், 41) கீழே விழுந்தோன்,
42) படுவிடமுண்டோன், 43) பரத்தை, 44) தூதுவன்,
45) நாணமுற்றோன், 46) வெம்மையுற்றோன், 47)
வேட்டையாடுவோன், 48) கவிஞன் - என்ற இவர்கள்தம் அவிநயங்களாம். இவற்றுள், அடியார்க்குநல்லார்
மேற்கோள் காட்டிய
முன்னாசிரியர்தம் 24 வகை அபிநயங்களும்
அடங்குவதோடு, இந்நூலாசிரியர் கூறிய புதியன சிலவும் வந்தன. (நாடக. 253)
நிழலிலே இருக்க விரும்பும் விருப்பமுடைமை, நெருப்பு வெயில் விளக்கு இவற்றைக் கண்டு அஞ்சுதல், நிழல் - நீர் - சந்தனச் சேறு - இவற்றையே விரும்புதல், பனி நீரையும் பாதிரிப்பூவையும் விரும்புதல், விரல்நுனியை ஈரமாக வைத் திருக்க விரும்புதல், மனம் துன்புற்று வாடியிருத்தல் - என்னும் இவை போல்வன. இவை அடியார்க்கு நல்லார் காட்டுவன. (நாடக. 253 உரை)
பிறரைக் குறைகூறிப் பேசும் கருத்தும், பேராசையும், கூம்பிய வாயும், நேர்மையற்ற பேச்சும், யாரையும் பரிவுடன் பேணாது கைவிரித்து வெருட்டும் இயல்பும், கொடிய கோபமுடை மையும், மெலிந்த முகமுடைமையும், உடல்மெலிவும், ஓயாத் துன்பமும் என்னும் இவை பொறாமை கொண்டவனுக்குரிய அபிநயங்கள். இவை அடியார்க்குநல்லார் காட்டியன.
(நாடக. 253 உரை)
நல்லொழுக்கத்தை விரிவாக எடுத்துரைத்தலும், நல்லொழுக் கம் உடையார் நன்மை எய்தலும், தீயொழுக்கத்தின் தீமை சாற்றலும், தீயொழுக்கமுடையார் தீமையடைந்து அழிந் தொழிதலும், தீயோர்தம் தீச்செய்கைகளைச் சிறப்பாக உரைத்தபோது நல்லோர் அவர்தம் சொற்செயல்களை வெகுண்டு கழறலும் அறத்தின் பகுதியன. (நாடக. 22)
ஆ
வடமொழியில் ஆக்ஷேபம் எனப்படும் இது, சில நூல்களில் `உத்க்ஷிப்தம்‘ எனப்படும். கதையின் கருவை வெளிப்படையாக் குதல் என்னும் பொருளது அச்சொல். (வீ. சோ. 106 உரை)
ஆக்ஷேபம் - விதை (-கதைக்கரு) கருப்பமாகி முடிகின்ற நிறைவு. (ம. சூ. பக். 99 )
ஆகேவம் என்பது, நாடகத்தின் மூன்றாவது சந்தியான கர்ப்ப முகத்தின் பேதம் எனப்பட்ட பன்னிரண்டனுள் ஒன்று.
அஃதாவது நிகழ்ச்சிகள் அனைத்தையும் தொகுத்து உணர்ந்து செய்தல்.
ஆதானம் - கருமத்தை மீண்டும் தொடங்குதல்.(ம. சூ. பக். 100)
இது நாடக சந்திகள் ஐந்தனுள் நான்காவதான விளைவின் அங்கம் பதின்மூன்றில் ஒன்று. விளைவு `வைரிமுகம்‘ எனவும்படும். (வீ. சோ. 106 உரை)
ஒருவருக்கொருவர் கலந்து அளவளாவுதல், கருதியது பெற்று அடைந்த மகிழ்ச்சியை எடுத்துக் கூறல். (ம.சூ.பக். 100)
இது நாடக சந்தி ஐந்தனுள் இறுதியாகிய நிருவகணமுகத் தின் அங்கம் பதினான்கனுள் ஒன்று. (வீ. சோ. 106 உரை)
ஆரவடியாவது, அதிகெம்பீரமும் தந்திரமும் வஞ்சனையும் இந்திரசாலமும் கலந்த உபாங்க மாவது. (வீ.சோ. 106 உரை)
ஆரவடியாவது அறமும் இன்பமும் கலவாத பொருளே நாட கத்தின் கருப்பொருளாக, வீரராகிய மானிடர் தலைவராக வருவது. (ம. சூ. பக். 16)
பொருள் ஈட்டுதலே பொருளாக, வீரர் தலைவராக, வலிய பொருள் மிகுந்த சொற்களை உடையதாக, வெகுளிச்சுவை பொலிய வருவது. (நாடக. 170)
இவ்விருத்தி அமைந்த நாடகங்களில், இந்திரசாலம் மந்திர வாதம் போர் வெகுளி அவலம் சிறைப்படல் கொலை முதலியன நிகழும்.
இதனையும் வடநூலார் நால்வகைப்படுத்துவர்.
1. வஸ்தூத் தாபனம் - இந்திரசாலம், மகேந்திரஜாலம், மந்திரம், தந்திரம் முதலியவற்றால் பற்பல தோற்றம் உண்டாக்குதல்.
2. சம்பேடம் - சினம்கொண்டவர்களும் கலக்கம் கொண்ட வர்களும் ஒருவரையொருவர் சந்திப்பது.
3. சம்க்ஷிப்தி - யுக்தியாலோ தந்திரத்தாலோ சில விஷயங் களைச் சுருக்கமாக ஒழுங்குபடுத்துதலும், ஒன்று தன்னி லையில் பிறழ்ந்து நீங்க மற்றொன்றினை அந்நிலையில் பொருத்துதலும்.
4. அவபாதனம் - வஞ்சனை, பயம், உடன்போக்கு, களிப்பு, தப்பியோடுதல் முதலியவற்றால் ஏற்படும் குழப்பம்.
(நாடக. 170 உரை)
ஆனந்தமாவது விழைந்ததன் பேறு; விழைபொருள் பெற்று மகிழ்தல். (ம. சூ. பக். 100)
இது நாடகத்தின் இறுதிச் சந்தியாகிய நிருவாண முகத்தின் அங்கம் பதினான்கனுள் ஒன்று. (வீ. சோ. 106 உரை)
இ
இடக்கராவன நாடக அரங்கில் காட்டத் தகாதவை. இதழ் சுவைத்தலும், புணர்தலும், எண்ணெய் தேய்த்து முழுகலும் போன்ற இடக்கர்யாவும் அரங்கில் காட்டத் தகாதன.
(நாடக. 255)
பயனில்லாமல் தன் மனத்திற்குத் தோன்றியபடியெல்லாம் கதை நிகழும் இடத்தை மாற்றாமல், கதையின் போக்கிற்குப் பொருந்த இடத்தை அமைத்தல். அஃதாவது கதையின் நிகழ்ச் சிகள் நடக்கும் காலத்திற்கும் பாத்திரங்களின் செயல்களுக்கும் முரண்பாடு இல்லாவகையில் இடம் அமைத்தல் வேண்டும்.
(நாடக. 62)
நாடகவகைகளில் இடிமம் என்பதொன்று. இதன்கண் நான்கு அங்கங்கள் இருக்கும்; வெகுளிச்சுவையே மிக விளங்கும்; இந்திரசாலம், மந்திரம், தந்திரம் போன்ற மாயவித்தைகள் இடம் பெறும்; கொடிய சினம் மிக்க போரும் கலகங்களும் விரவப்பெறும்; பல தீய நிமித்தங்கள் நேரும்; தேவாசுர கந்தருவர் பாத்திரம் ஆவர். இவ்வகை நாடகத்தே இன்பம், நகை, சமநிலை ஆகிய முச்சுவைகளும் இடம் பெறா; பிற சுவைகள் இடம் பெறுவன. தீய நிமித்தங்களாவன உற்பாதம் எனப்படும் பூகம்பம், பேரிடி வீழ்தல், குருதிமழை பொழிதல், சூரிய சந்திரஒளி மழுங்கித் தோன்றல் முதலாயின.(நாடக. 129)
உல்லாசமாகக் கூடிக் குலவும்போது போலியான கண்டனக் கூற்றுக்களும் எள்ளலும் இயைந்து பாட்டுக்களால் நிகழும் உரையாடல்; வடநூலார் கூறும் `இலாசியம்‘ என்பதன் அங்கமான `உக்தப்பிரத்யுக்தம்‘ என்பது இது.
இஃது இசைபாடும் கோலங்கள் பத்தனுள் ஒன்று. (நாடக. 261)
இசைபாடும் கோலங்கள் பத்தனுள் இஃது ஒன்று. ஒருவருக் கொருவர் வாதம் செய்யும் நிலையில் மனஎழுச்சியும் கவர்ச்சி யும் தோன்ற இனிய பாடல்களைப் பாடுதல். வடநூலார் கூறும் இலாசியம் என்பதன் அங்கமான `உத்தமோத்தமகம்‘ இது. (நாடக. 261)
இஃது உவகைச் சுவையின் நிலைக்கருத்து. உவகை - சிருங் காரம். இரதி என்பதனை அன்பு எனக் கொள்ளலாம். அது கடவுளர் ஐம்பெருங்குரவர் என்போரிடம் தோன்றின் பக்தி யாம்; குழந்தையிடம் தோன்றின் பாசமாகிய வாற்சலியம் (வாத்ஸல்யம்); வறியோர், நோயுற்றோர் போன்ற எளியோர் மாட்டுத் தோன்றின் இரக்கம் (-தயை) ஆம்.
நாடகவியலாசிரியர் இரதி ஒன்றனையே கூறினாரேனும், தொடர்பு பொருத்தங்கள் கருதிப் பிற நிலைக்கருத்துக்களை யும் அவ்வத்தலைப்புள் சுருங்கக் காணலாம். [உற்சாகம், சிரிப்பு (ஹாஸ்யம்), சமம் (சாந்தி), வெகுளி (குரோதம்), வியப்பு, இழிப்பு, அவலம் (சோகம்), அச்சம், பெருமிதம்] (நாடக. 58)
இஃது உபசாதி நாடகம். இதன்கண் பாத்திரங்கள் ஐந்தே; அதன் மேலிருத்தல் கூடாது. கற்றோர் வழங்கும் மொழியும், கல்லாத இழிந்தோர் பேசும் மொழியும் இதன்கண் இடம் பெறும். சூத்திரதாரன் வருவதில்லை. பாரதி, கைசிகி என்னும் இரண்டு விருத்திகளிலும் அமைவது இது. தலைவி கற்பனைப் பாத்திரமாயிராமல் உள்ளவளாகவே இருக்கத் தலைவன் ஒரு மூர்க்கனாய் இருப்பான். இதன்கண் ஒன்பான் சுவையும் பயிலும்; அங்கம் ஒன்றுதான் இருக்கும். (நாடக. 148)
இசைபாடும் கோலங்கள் பத்தனுள் ஒன்று. இருக்கையில் வீற்றிருந்த வண்ணம் யாழின் இன்னிசைக் கிணங்கப் பாடுதல். வடநூலார் கூறும் இலாசியம் என்பதன் அங்கமான `கேய பதம்‘ இது. (நாடக. 261)
ஈ
ஈகாமிருகம் -
நாடகச் சாதியுள் ஒன்றாகிய இதனுள், விண்ணுலகப்பெண் ஒருத்தியைக் கவர்ந்துசெல்லுதல் காரணமாக நிகழும் பெரும்போருக்கான செயல்கள் தொடர்ந்து இடம்பெறும். தம்முள் பகைமையுடைய தலைவரிருவர் தலைமைப் பாத்தி ரங்கள் ஆவர். இதன்கண் அங்கங்கள் நான்கு; போர்ச்செய லுள் எதுவும் முற்றுப்பெறாது. இருபுடையும் ஒவ்வாத காமத்தின் விளைவான, உவகைச்சுவையின் இழிவினை விளக்கும் இந் நாடகம். (நாடக. 130)
ஈரைங்கோலம் -
இசைபாடும் கோலங்கள் பத்து.
1. இருந்திசைக்கோலம், 2. நின்றிசைக் கோலம், 3. வெறுங் கோலம், 4. யாப்பிசைக் கோலம், 5. வெறுப்பிசைக் கோலம், 6. கரந்தாடு கோலம், 7. ஏங்கிசைக் கோலம், 8. இரட்டிசைக் கோலம், 9. சிறந்திசைக் கோலம், 10. இணங்கிசைக் கோலம் என்பன.
வடநூலார் இவற்றை ‘இலாசியம்’ என்பர். அவை ‘கேயபதம்’ முதல் ‘உக்த பிரத்யுக்தம்’ வரையுள்ள பத்தாம். (நாடக. 261, 262.)
உ
உச்சிரம் - உற்பேதம் -
இது நாடக சந்தியான முகத்தின் அங்கம் பன்னிரண்டனுள் ஒன்று. (வீ. சோ. 106 உரை)
உச்சிரம் என்பது உற்பேதம் என்பதாகக் கொள்க. இதன் பொருள் விதை வெடித்து முளை தோன்றுதல். (தலைமை யான கதை தொடக்கத்தில் சுருக்கமாகக் குறிக்கப்படுவது.)
அந்த விதை - கதையின் சிறுதொடக்கம் - பின்னர் வளர வழியாய் முளைத்து வருதல் உற்பேதம் எனப்படும்.
மறைந்ததன் வெளிப்படல். (ம. சூ. பக். 98)
உள் நாடகம்; ஒரு நாடகத்திற்குள்ளேயே மற்றொரு நாடகம் பொருந்தியிருப்பதும் உண்டு என்பது. (நாடக. 160)
இது வீரசோழிய உரை குறிப்பிடும் நாடக சாதியுள் ஒன்று.
இது மக்கள் பலரைத் தலைவராகப் பெற்றது; பொல்லாத போர் பற்றிப் புகழ்வது; பெண்களை இன்றியமையாத பாத்திரங்களாய் உடையது. (வீ.சோ. 106 உரை)
உதாஹ்ருதி - உதாஇருதி, உதாகிருதி;
மிக்க உணர்ச்சியுடன் மிகுத்துரைத்தல்.
உதாகிருதி - வரம்பு கடந்து பெருக்கிக் கூறுதல். (ம. சூ. பக்.99)
இது நாடகத்தின் மூன்றாவது சந்தியான கர்ப்பத்தின் அங்கம் பன்னிரண்டனுள் ஒன்று. (வீ. சோ. 106)
உதேகம் - உத்வேகம்; பகைவரால் விளையும் அச்சம். உத் வேகம் - பகைவனைக் கண்டு அஞ்சுதல். (ம.சூ. பக். 99)
இது நாடகத்தின் மூன்றாவது சந்தியான கர்ப்பத்தின் அங்கம் பன்னிரண்டனுள் ஒன்று. (வீ. சோ. 106 உரை)
வியப்பூட்டும் வகையில் விரும்பியதை அடைதல். உபகூகனம் - வந்தடைந்த நிகழ்ச்சியினால் வியப்புறுதல். (ம.சூ.பக். 100)
இது நாடகத்தின் ஐந்தாம் (இறுதிச்) சந்தியாகிய நிருவகணத் தின் (- நிருவாணத்தின்) அங்கம் பதினான்கனுள் ஒன்று.
(வீ. சோ. 100 உரை)
நாடகச் சாதியெனக் கூறப்பட்ட பத்துவகை நாடகங்களையும் போலவே அமையினும் அத்துணைச் சிறப்பின்றி ஒரு சில இலக்கணங்கள் குறைந்து வரும் நாடக வகை.
அவை பதினெட்டு வகைப்படுவன. அவையாவன :
1. நாடிகை, 2. துரோடகம், 3. கோட்டி, 4. சட்டகம், 5. நாட்டியராசகம், 6. பிரத்தானம், 7. உல்லாப்பியம், 8. காவியம், 9. பிரேங்கணம், 10. (இ) ராசகம், 11. சமுலாபகம், 12. திருக்கதிதம், 13. சிற்பகம், 14. விலாசிகை, 15. துன்மல்லிகை, 16. பிரகரணி, 17. அல்லீசம், 18. பாணிகை என்பன. (நாடக. 136, 137)
பொருந்தும் வகையில் பொலிவுறக் கூறல். உபந்நியாசம் - சூழ்ச்சி உணர்த்துதல். (ம. சூ. பக். 98)
இது நாடகத்தின் இரண்டாவது சந்தியான பயிர்முக (பிரதிமுக)த்தின் அங்கம் பதின்மூன்றனுள் ஒன்று. (வீ. சோ. 106 உரை)
உருவம் - ரூபம்; வியப்பூட்டும் வகையில் ஓர்ந்துரைத்தல். (வீ. சோ. 106 உரை)
ரூபம்- தன் கருத்தை உரைத்தல். (ம. சூ. பக். 99)
இது நாடகத்தின் மூன்றாவது சந்தியான கர்ப்பத்தின் அங்கம் பன்னிரண்டனுள் ஒன்று.
இவ்வுபசாதி நாடகத்துள் தீரோதாத்தன் தலைவன்; தலைவியர் நால்வர் வருவர். உவகை, நகை, அவலம் என்னும் மூன்று சுவைகளும் அமைந்து விளங்கும். இதில் கீதவுரு, கீர்த்தனம் வரிப்பாட்டு என்னும் மூன்றுவகை இசைப்பாட் டுக்களும் இடம் பெறும். இம்மூன்றுவகை இசைப்பாட்டுக் கள் சிந்து, ஆனந்தக் களிப்பு, கும்மி என்று கொள்வாரும் உளர். இந்நாடகத்துள் போரினைத் தெரிவிக்கும் செயல் களும் தோன்றும் என்றும் கூறுவர். இதன்கண் அங்கம் ஒன்றுதான் இருக்கும்.
நால்வர்தலைவியரைக் கொண்டு, போரும் கட்களிப்பும் விளங்க, மூன்று அங்கங்களாக இஃது அமைவது என்பாரு முளர். (நாடக. 144, 145)
வடமொழியில் `உபக்ஷேபம்‘; நாடகப்பொருள் சற்றே சுருக்கமாகத் தோன்றச் செய்தல்.
விதையினை (-நாடகக் கதைக் கருவினை) விதைத்தல்.
(ம. சூ. பக். 98)
இது நாடக சந்தியான முகத்தின் அங்கம் பன்னிரண்டனுள் ஒன்று. (வீ. சோ. 106 உரை)
அறிவு, செல்வம், புணர்ச்சி, விளையாட்டு, இளமை, அழகு என்னும் ஆறும் காரணமாகக் காமுறும் தலைவனும் தலைவியும் நலமுற்றுக் களித்தல்.
உடன் உறை இன்பம் (- கூட இருந்து இன்புறல்; சம்போக சிருங்காரம்) எனவும், பிரிந்துறை இன்பம் [பிரிவின்கண் (நினைவால் துயருற்றும் இன்பமே காணும்) இன்பம்] எனவும் இஃது இருவகைப்படும். இவற்றுள் பிரிந்துறை இன்பம் நான்கு பிரிவுகளையுடையது. அவையாவன :
1. உழுவல் அன்பு - மிகுந்த அன்பு; எழுமையும் தொடர்ந்து வருமன்பு; இதனைப் ‘பூர்வராகம்’ என்ப வடநூலார்;
2. மானம் - ஊடல்;
3. பிரவாசம் - பிரிவு (பொருட் பிரிவு போன்றவை);
4. சோகம் - இரங்கல்; பிரிந்து சென்ற தலைவன் குறித்த பருவத்தே வாராமை கண்ட தலைவியது துயரம் என்பனவாம். (நாடக. 40-42)
கள்ளம் கபடம் அற்ற வடிவமும் செயலும், கண் அழகும், கடைக்கண் வீச்சும், புன்னகையும், முகமலர்ச்சியும், கொஞ்சிக் கெஞ்சும் பேச்சும், இன்ன பிறவும் சிருங்காரத்திற்குரிய அபிநயங்கள். (நாடக. 243)
உயர்ந்து நிமிர்ந்து இனிதாயிருக்கும் கண்மலர்ச்சியும், மனத்தினிமை தோன்றும் நிலையும், சிறிதும் கோபமே இல்லாத புன்முறுவலும், மகிழ்வுடன் வீற்றிருத்தலும், இனிது செல்லும் நடையும், பாட்டும் போன்றவை. இவை அடியார்க்கு நல்லார் காட்டுவன. (சிலப். 3:13 உரை) (நாடக. 253 உரை)
கூத்துவகை ஏழனுள் ஒன்றான வரிக்கூத்தின் வகை எட்டனுள் ஒன்று.
அரசர்மரபினைச் சார்ந்த தலைவனும் தலைவியும் தம் உள்ளத்தே ஊற்றுப் போலப் பொங்கி யெழும் அன்பு காரணமாக வேற்றுருக் கொண்டோ கொள்ளாமலோ ஆடும் கூத்து. (சிலப். 8 : 84 - 89) (நாடக. 209)
செயல்களில் மிக்க ஆர்வத்துடனும் விரைவுடனும் ஈடுபடுத லாம் களிப்பு. இஃது உவகைச் சுவையின் நிலைக்கருத்து.
(நாடக. 55)
நாடகத்தின்கண் பொருந்திய பகுதிகளின் தன்மை. அப் பகுதிகள்தாம் வாழ்த்து, நடாத்துநர், முன்னுரை, குறிப்பு, அங்கம், களம், கூற்று, கூத்து, பின்னுரை என்பனவும் பிறவும் ஆம். பரத வாக்கியம் (-நாடக இறுதி வாழ்த்து) பின்னுரையில் அடங்கும். (நாடக. 174)
எ
பிறர் தூக்கியெடுக்கும் வகையில் துயருற்று வீழும் கூத்து. துயரத்தால் கையற்று உண்மையாகவே கீழே வீழ்ந்தவர் களைப் போலவே வீழ்ந்து, அயலார் வந்து தம்மைத் தூக்கி எடுக்கும்வகை துயரத்தை நடித்துக் காட்டல். கூத்து வகை ஏழனுள் ஒன்றான வரிக்கூத்தின் வகை எட்டனுள் இஃது ஒன்று. (சிலப். 8 : 107, 108) (நாடக. 214)
நாடக மேடையில் தொங்கும் திரை. அது மூவகைப்படும்.
1. ஒருமுக எழினி - அரங்கின் இடப்புறத்தூணினின்று வலப்புறம் முடிய இழுக்கப்படும் திரை.
2. பொருமுக எழினி - வலம் இடம் இரு தூண்களினின்றும் இடையே வந்து பொருந்துமாறு இழுக்கப்படும் திரை.
3. கரந்துவரல் எழினி - மேலிருந்து கீழே வருமாறு வேண்டும் போது தொங்கவிடும் வகையில் அமையும் திரை.
(சிலப். 3 : 109, 110) (நாடக. 267)
ஏ
குறியிடத்திற்குத் தலைவன் குறித்த நேரத்தே வாராது காலம் நீட்டித்தபோது, தலைவி இன்னிசைப் பண்ணை எழுப்பி இனிது பாடுதல். வடநூலார் கூறும் இலாசியம் என்பதன் அங்கமான `சைந்தவம்‘ இது. இசைபாடும் கோலங்கள் பத்தனுள் ஒன்று. (நாடக. 261.)
ஐ
உறுப்புக்களின் வாட்டமும், மயங்கிய பார்வையும், சோர்ந்த புலன்களும், வாய் பேசாமையும், செயலில் தடுமாற்றமும், வhனையும் திசைகளையும் வெறித்துப் பார்த்தலும், ஐயம் உற்ற வனுக்குரிய அவிநயங்களாக அடியார்க்குநல்லார் குறிப்பிட் டுள்ளார். (நாடக. 253 உரை)
ஒ
1. ஒப்பு 2. நாடகத்தை முன் ஆடிப்பார்க்கை. (L)
ஒளியாவது யோனி; அஃதாவது கதாப் பிரகாச வஸ்து. அஃதாவது வெளிப்படையான கதையின் உடல். அது மூன்று வகைத்து. அவையாவன : (1) சத்தி நிருதை (2) அநிருதை (3) சந்தியா நிருதை என்பன. இம்மூன்று நிலையும் இணைந்து ஐந்து வகைப்படும். அவையாவன : (1) உள்ளோன் தலைவ னாக உள்பொருள் புணர்த்தல், (2) உள்ளோன் தலைவனாக மிகைப் பொருள் புணர்த்தல் (கற்பனை கலந்தது மிகைப் பொருள்), (3) உள்ளோன் தலைவனாக இல்பொருள் புணர்த்தல், (4) உள்ளோன் தலைவனாக விரவுப் பொருள் புணர்த்தல், (5) இல்லோன் தலைவனாக இல்பொருள் புணர்த்தல் என்பனவாம். (வீ. சோ. 106 உரை.)
நடிப்பு இயல்பில் ஒன்று. அரங்கில் நடிப்பவன், பாத்திரம் வேறு தான் வேறு என்ற நினைவு சிறிதும் தோன்றாமல், தானே அவனாகி, நடைஉடைபாவனைகளால் முற்றிலும் தான் நடிக்கக் கொண்ட பாத்திரத்துடன் ஒன்றாகிவிடுதல்.
நடிப்பவன் மனம் பாத்திரஇயல்புகளை நன்குணர்ந்து தானே சுவைத்துக் கனியும் நிலையில் அவனும் நாடகத்தைக் காண்பாரைப் போலவே ஈடுபட்டு மனம் இளகுவானா னால்தான் சுவையினைத் தோற்றுவித்தல் இயையும்.
கதாநாயகனோ, பாத்திரங்களை ஏற்று நடிப்பவரின் தலைவ னோ அன்னான் செய்யும் வெறும் நடிப்போ மாத்திரம் சுவை நிலைக்களன் ஆவதில்லை. (நாடக. 233, 234)
க
தலைவன் தலைவி இருவருடைய காதல் காரணமாக நேர்வது. கண் கூடு - கண்களின் கூட்டம் - காட்சி - அன்புடையோர்தம் இன்பம் தரும் சந்திப்பு; இடைநின்று ஒருவர் கூட்டிவைக்கா மல், தலைவனோ தலைவியோ ஒருவர் மற்றவரைத் தாமே தனியாகச் சென்றடைந்து கூடி மகிழ்தல்.
இது கூத்துவகை ஏழனுள் ஒன்றான வரிக்கூத்தினது வகை எட்டனுள் ஒன்று. (நாடக. 207)
கதையினது முடிவு; அஃது இருவகைப்படும்.
1. நற்பொருள் இறுதி - நற்செய்தியாக முடிவது; நாடகத் தலைவன் தனக்கேற்ற தலைவியைத் திருமணம்செய்து கொள்வதும், முடிசூடுவதும், இன்னோரன்ன பிற மங்கலமான செயலுடன் முடியும் கதை.
2. தீப்பொருள் இறுதி - தீயசெய்தியாக முடிவது; நாடகத் தலைவன் சொல்லொணாக் கொடுந்துயர் உழத்தலும், உயிரிழத்தலும் போன்ற துன்பச் செய்தியுடன் முடியும் கதை. (நாடக. 109-112)
பலவிதமாய்ப் பிரிந்து விரிந்து கிடக்கும் தன்மையுடையதாகிப் பொய்யுரை, மெய்யுரை, புனைந்துரை எனக் கதை முத்திறப் படும். இம்மூன்றனையும் பிறிதொரு சாரார்,
1. ஆக்கம் - உண்டாக்கியது - உத்பாத்யம்,
2. பல்லோர் அறிவு - பலரும் அறிந்தது - பிரக்கியாதம்,
3. முன்னிரண்டும் கலந்தது - (கலப்பு) - மிச்சிரம் - எனக் குறிப்பர்.
பொய்யுரை - புதிதாய் ஒருகதையினைப் படைத்துக் கூறல்.
மெய்யுரை - உண்மையாகவே உலகத்தில் நிகழ்ந்ததும், பலர்க்கும் நன்கு தெரிந்ததுமான கதையைக் கூறல்.
புனைந்துரை - மெய்யுரையுடன் சிறிது வேறுபடுத்திப் புலவன் தனது ஆற்றலால் இல்லதும் சேர்த்து அழகுறச் சொல்லும் கதை. (நாடக. 12-16.)
கதையின் நோக்கான காரியத்தின் தொடக்கம். இது நாடக சந்தியான முகத்தின் அங்கம் பன்னிரண்டனுள் ஒன்று. (வீ. சோ. 106 உரை)
கரணமாவது கருதிய பொருளின் தொடக்கம். (ம. சூ. பக். 98)
ஆடவர் பெண்டிர்தம் உடையணிந்து மறைந்து நின்று பாடுவது; வடநூலார் கூறும் இலாசியம் என்பதன் அங்க மான ‘திரிகூடகம்’ இது.
இசைபாடும் கோலங்கள் பத்தனுள் இஃது ஒன்று. (நாடக. 261)
மேலே மறைவிடத்தினின்று கீழே யிறங்கிவருதலையுடைய ஒருவகை நாடகத் திரைச்சீலை. ‘ஒருமுக எழினியும் பொரு முகஎழினியும், கரந்துவரல் எழினியும்’ (சிலப். 3 : 109, 110)
இழிவான நாடகம். ‘முதுபார்ப்பான், வீழ்க்கைப் பெருங்கருங் கூத்து.’ (கலித். 65 - 29) (L)
கருப்பமாவது களத்திற் கருவு திரண்டோங்கிக் களைநீங்க அவை குடை போகியவாறு போல நலம் தரும் பொருளைத் திரளச் சொல்லுவது. (வீ.சோ.106 உரை)
நாற்றாகிக் கருமுதிர்ந்துழிக் களை தோன்ற அஃது அகற்றப் பட்டு, கருவின் உள்ளீடு நன்கு அமைந்து தோன்றுவது. இதன்கண் பதின்மூன்று உட்பிரிவுகள் உள. (நாடக. 35)
சந்திகள் ஐந்தனுள், முன்னிரண்டனுக்கும் பின்னிரண்ட னுக்கும் இடையே இருப்பதால் நாடகத்தின் மூன்றாம் சந்தி ‘கர்ப்பம்’ எனப்படும். கதைக்கரு, இடைக்கதை நிகழ்ச்சிக ளாலும் இடையூறுகளாலும் பின்னணியில் மறைந்திருக்கும் நிலையில், மீண்டும் அதனைத் தேடிக் கொண்டுவருவது கர்ப்ப சந்தியாம்.
கருப்பத்தினுள், பயன்விழைவும் (-பிராப்திஆசை) கிளைக் கதையும் (-பதாகை) இணைந்து வருதல் வேண்டும். (ம. சூ. பக்.99)
நூலியற்றும் ஆசிரியன் தன் கூற்றாகவே நூலில் பல இடங்களில் செய்யுள் செய்வான். ஆயின் இது நாடக நூலில் பயிலாது; பொருத்தமாய் அமையாது.
ஆயின் நாடகக் காப்பியங்களில் கவி கூற்றுப் பயிலும் என்னும் ஒரு கொள்கை உண்டு.
நாடக ஆசிரியன், நாடகத்தில் இடையிடையே நடிப்போர்க் கெனக் குறிப்பிடுபவை ஏற்றுக் கொள்ளதக்கனவே.
நடிப்போர் குறிப்பு : Stage Directions எனப்படுபவை. (நாடக ஆசிரியன் நடிப்போர்க்கு வழங்கும் விதிமுறை)
(நாடக. 79, 80)
‘திருச்ய காவ்யம்’ என்ப வடநூலார். இது செவிப்புலனுக்கும் கட்புலனுக்கும் இன்பம் தருவதும், உலக அறிவு மாத்திரம் அன்றி உண்மையான மெய்யறிவினைத் தருவதுமான நாடகம். இஃது அகப்புறத்திணையுள் அடங்கும். (நாடக. 10)
தலைவி தன் துயரைப் பலருங் காணக் கூறி ஆடுதல்.
தலைவன்பாற் கொண்ட காதலால் துன்புறும் தலைவி, தலைவனுடைய சுற்றத்தாரைக் கண்டு தன் துயரத்தை அவர்கள் கண்டு பரிவு கொள்ளும் வகை அவர்கட்கு எடுத்துக் கூறி ஆடுதல்.
கூத்துவகை ஏழனுள் ஒன்றான வரிக்கூத்துவகை எட்டன்கண் இஃது ஒன்று. (நாடக. 213)
கூத்துவகை ஏழனுள் ஒன்றான வரிக்கூத்தின் எண்வகையுள் ஒன்று.
தலைவன் தலைவி எனும் இருவரில் ஒருவர் ‘வருக’ என அழைப்ப வந்து ‘போக’ எனக் கூறப் போகும் இயல்பினை யுடையது இது.
இருவரும் கூடிய பின் இருவர் மனமும் மகிழத்தக்க அனைத் தையும் பரிமாறிக் கொண்டபின் பிரிந்துபோதல்.
(சிலப். 8 : 78 - 83) (நாடக. 208)
நாடகம் காண்போர் அமரும் இடம்.
நாடகம் காண்போர் நாடக அரங்கில் நிகழும் அனைத்தையும் நன்கு காணும் வகையிலும், அக்காண்போர்தம் தகுதிக்கேற்ற வகையிலும் அமரும் இடம் அமைத்தல் வேண்டும்; மேலும் அரசன் போன்றோர் தம் உரிமை மகளிரொடு வீற்றிருந்து காணும் வகை அரங்கின் எதிரே இடம் அமைத்தல் வேண்டும். இஃது அவையம்.
மற்றொரு புறம் மகளிர்க்கென்றே தனித்து அமைந்த இடம் இருத்தல் வேண்டும். இது பரிவமை பள்ளி.
இன்னொரு புறம் கல்விகேள்விகளாற் சிறந்த சான்றோர்க் கான இடம் அமைத்தல் வேண்டும். இது கோட்டி.
நாடக சாலையில் காண்போர் தின்னச் சிற்றுண்டியும் பருகப் பால் போன்றனவும் விற்றலும் உண்டு. (நாடக. 268, 269, 270)
வீணாகக் காலத்தை நீட்டித்தலும், இடையே பயனற்ற இடை யூறுகளை உண்டாக்குதலும் போன்ற காலதாமதம் நிகழாமல் கதையை நடத்திச் செல்வது. (நாடக. 63)
உபசாதி நாடகம் பதினெண் வகைகளுள் காவியமும் ஒன்று. இதற்குத் தலைவன் தீரோதாத்தன்; தலைவி சுகுணை. இன்ப நுகர்ச்சி பற்றிய சொற்கள் இதன்கண் மிகுதியாக இடம் பெறும்; இசை வழுவாத பாடல்கள் பாடப்படும்; நகைச்சுவை நிறைந்து விளங்கும். (நாடக. 146)
தான் கருதிய பொருளை அடைந்துவிட்டது போல் அமைத் துரைத்தல்.
கருதிய பொருளைப் பெற்றுவிட்டது போலுரைத்தல்.
(ம. சூ. பக்.100.)
இது நாடகத்தின் இறுதிச்சந்தியாகிய நிருவகணமுகத்தின் அங்கங்கள் பதின்மூன்றில் ஒன்று. (உரையுள் ‘பிரசனம்’ என் றிருப்பது மிகையாதலின் ஆராயத்தக்கது) (வீ. சோ. 106 உரை)
எதிர்கால நிகழ்வை உற்றறிந்துரைத்தல், நீடு நினைந்த பொருளினைப் பெறுதல். (ம. சூ. பக்.99)
(பிறரது உள்ளக்கருத்தினை உணர்தல் என்பதும் ஆம்.)
இது நாடகத்தின் மூன்றாம் சந்தியான கர்ப்பத்தின் அங்கம் பன்னிரண்டனுள் ஒன்று. (வீ. சோ. 106)
கதையின் பயன் உறுதிபெறுதல். நன்மைப் பேற்றில் நிலைபெறுதல். (ம. சூ. பக்.100)
இது நாடகத்தின் இறுதிச் சந்தியாகிய (ஐந்தாம்சந்தி) நிருவ கணத்தின் அங்கம் பதினான்கனுள் ஒன்று. (வீ. சோ. 106 உரை)
கூத்துவகை ஏழனுள் ஒன்று வரிக்கூத்து; அதன் வகை எட்ட னுள் கிளர்வரியும் ஒன்று. அஃதாவது கிளர்ச்சியுடன் புலந்து பிரியும் கூத்து.
தலைவனையும் தலைவியையும் சந்து செய்விக்கும் ஒருவர் உடனழைத்துக்கொண்டு போய்ச் சேர்க்கக் கூடி, இருவருக்கு மிடையே சமாதானம் பேசுவோர் கூறும் சொற்களைக் கேட்டு, அவற்றை இருபொருள்படும் வகையில் மனத்திற் கொண்டு, கிளர்ச்சியுடன் புலந்து பிரிந்துபோகும் கூத்து. (சிலம். 8 : 94 - 101) (நாடக. 211)
நடிப்புக் குறிப்பினாலோ, அன்றி மொழிக்குறிப்பினாலோ முன்கூட்டியே தெரிவித்தல்.
நாடகக் கதையையோ, விதை (-விந்து) எனப்படும் கதைக் கருவினையோ, நாடகத்தின் தொடக்கமான அரிய செயலி னையோ, தலைவன்தலைவியரது வருகையையோ, அவை நிகழ்வதற்கு முன்பாகவே அவிநயத்தாலோ சொல்லாலோ குறிப்பால் புலனாம் வகையில் சூசனை குறிப்பிடுதல்.
இவ்வாறு நாடகக் குறிப்பினைத் தெரிவிக்காமல் நாடகம் இயற்றலும் உண்டு.
வாழ்த்து, முன்னுரை, நடாத்துநர் என்ற வேறுபாடுகள் இல்லாத நாடகங்களும் உள (நாடக. 184, 185, 186)
இது வீரசோழிய உரை குறிப்பிடும் நாடகச் சாதியுள் ஒன்று.
இதன்கண் தலைமக்கள் இருவர் உளர். அவர்கள்கதை தொடர்ந்து வாராமல் இடையிட்டு வரும். இதன்கண் வாரம் உண்டு. (வீ. சோ. 106 உரை)
கடைச்சங்க காலத்தது என்று கருதப்படும் சாத்தனார் இயற் றிய கூத்தநூல் நாடக நாட்டியச் சுவைக்குரிய குணங்களா கவும் பொருள் இழைகளாகவும் கூறுவன பின் வருமாறு :
குணம் ஒன்பதாவன : அமைதி, ஊக்கம், ஒழுக்கம், இச்சை, சினம், குறுக்கு, மயக்கம், தேக்கம், திணக்கம் என்பன.
இழைகள் நாற்பத்தெட்டு ஆவன : கோபம், இச்சை, சிறுமை, சோர்வு, படபடப்பு, பயப்புறுதல், அகங்காரம், பற் றுடைமை, வெறுப்புறுதல், கொடுமை செய்தல், எடுத் தெறிந்து பேசுதல், பொறாமை, தாழ்மையுணர்வு, பயம், தெவிட்டல், சோம்பல், மகிழ்தல், கையாறு, அமைதி, மயக்கம், களித்தல், வெறித்தல், பிடிவாதம், கவலை, அழுகை, நினைத்தல், நெட்டுயிர்ப்பு, பேதுறல், உறக்கம், கனவு, விழிப்பு, நாணம், தெய்வமுறல், பேய் மயக்கம், நஞ்சுறல், மிதப்பு, காப்பு, விதிர்விதிர்ப்பு, நோக்கி யறிதல், ஒப்புமை, அகநோய், புறநோய், சன்னிவெளி, ஏமாற்றம், கொதிப்புறல், தயக்கம், பசி, தாகம் என்பன.
மேலும் இழைகளாகக் கொள்ளத்தக்கவை என்ற முறையில் கூத்த நூல் கூறுவன உள. அவை சில பண்பு பற்றியும் சில செயல் பற்றியும் அமைந்துள்ளன.
இவையாவும் நாட்டியக் கூத்திற்குரிய சுவைப்பொருள் பற்றியனவாம். (தொ. மெய்ப். 1,2 ச. பால.)
குதித்தாடுவது கூத்து; தாள சதிக்குத் தகச் குதித்து ஆடுதல். இதன்கண், பரத நாட்டியம் - குரவை - நகை - வரி - முதற் கூத்து. இடைக்கூத்து - கடைக்கூத்து - என்னும் எழுவகை யுள.
(நாடக. 200)
இடையிடையே கவியின் கூற்றுக்கள் இடம்பெற்றுக் கீழ்மக்கள் நடிக்கும் இயல்புடையதாய்க் கூத்தும் (-நாட்டியம்) பாட்டுமாகக் கலந்தமைந்த நூல்.
அருணாசலக் கவிராயரின் இராமநாடகம் இவ்வகையினது என்பது நாடகவியல் உரையாசிரியரது கருத்து.
குறமும் பள்ளும் கூத்துநூல்களாம். (நாடக. 165)
பேச்சு, உரை, அஃதாவது நாடகத்தில் வரும் உரைகளும் உரையாடல்களும். இது நான்கு வகைப்படும். அவையாவன.
1. ‘தற்கூற்று - தானே தன்னுள் பேசிக்கொள்வது. வடநூலார் ‘°வகதம்’ என்ப; ஆங்கிலத்தில் ‘Soliloquy’ என்ப.
2. புறக்கூற்று - பாத்திரங்களில் சிலர் தமக்குள் (களத்தில் தம்முடன் உள்ளோர் கேளா வகையில்) பேசிக்கொள்வது. வடமொழி ‘அபவாரிதம்’ என்னும்; ஆங்கிலம் ‘Aside Speech’ என்னும்.
3. முன்னிலைக் கூற்று - முன்னிலைப்படுத்திப் பலரும் கேட்பப் பேசுவது. வடமொழி ‘பிரகாசம்’ என்னும்; ஆங்கிலம் ‘Open Speech’ என்னும்.
4. மதங்கசூளாமணியில் இது ‘சொல்’ எனக் கொள்ளப் பட்டு, உட்சொல் புறச்சொல் ஆகாயச் சொல் என மூவகை யாகக் கொள்ளப்படுகிறது. (ம.சூ.பக். 18) (நாடக. 194-198)
காமுகர் தலைவராக, காம விகற்பம் உபாங்கமாவது.
காமம் பொருளாகக் காமுகரான மக்கள் தலைவராக வருவது. (ம. சூ. பக். 16)
ஆடல் பாடல்களும் சிறந்த ஆடையணிகளும் அமைந்து, காமமே தலைமைப் பொருளாய், பெருங்காமுகர் தலைவ ராக, மெல்லிய பொருள் கொண்ட சொற்றொடைகளைக் கொண்டு, உவகைச் சுவையே சுவையாக, அன்பாகக் காதலும் விளங்க, களவு வாயிலாக இன்பம் துய்த்தலை விளக்குவது. (நாடக. 171 உரை)
வடநூலார் இதன்கண்ணும் நால்வகை கொள்வர்.
1. நருமம் - காதலியின் மனத்தை வசீகரிக்கும் வகையில் பரிகாசமாகப் பேசுதல். இது விநோதமான வார்த்தை, சாதுரியமான ஆசைவார்த்தை, சாதுரியமான அச்சுறுத் தும் வார்த்தை என மூவகைத்து.
2. நரும° பஞ்சம் அல்லது நர்ம° பூர்ஜம் - தொடக்கத்தில் களிப்பையும் பின்னர்ச் சற்றே அச்சத்தையும் தரும் காதலரின் முதற்சந்திப்பு.
3. நரும°போடம் - காமக்குறிகள் சிறிதே புலப்படச் செய்யும் உரையாடலும் செயலும்.
4. நருமகர்ப்பம் - காமம் மிகுந்த தலைவன் தலைவியினிடம் களவில் இயற்றும் பலவகைச் செயல்கள். (நாடக. 171 உரை)
கைசிகி மிகவும் மென்பொருளுடையது. (நாடக. 172 உரை)
(வீ.சோ. 106 உரை)
காமம் பொருளாகக் காமுகராகிய மக்கள் தலைவராக வரும் நாடக நடை. (வீ. சோ. 106 உரை) விளக்கம் ‘கைசிகி’யுள் காண்க.
ஒரே அங்கத்தில் மிகச்சாமானியரான ஆடவரும் பெண்டிரும் பாத்திரங்களாக வரக் கைசிகி விருத்தியில் அன்புடைக்காமம் கனிந்த உவகைச் சுவையை விரித்துக் காட்டும் உபசாதி நாடகம். (நாடக. 140)
ச
உபஸம்ஹாரம், காவ்ய சம்ஹாரம்; வரம் பெறுதலும், காப்பியத்தின் (நாடகத்தின்) முடிவும்.
காவிய சங்காரம் - வரம் பெறுதல். (ம. சூ. பக். 100)
இது நாடகத்தின் இறுதிச் சந்தி (ஐந்தாவது) ஆகிய நிருவ கணத்தின் அங்கம் பதினான்கில் ஒன்று. (வீ. சோ. 106 உரை)
நன்மையாகவும் இனிமையாகவும் பொருள் தருவதாகக் கூறியும், “ஒறுப்பேன்” எனக் கூறியும் வற்புறுத்தல்.
இது சில நூல்களில் ‘பிரார்த்தனை’ எனப்படும்.
கையுறை கொடுத்து நட்புப் பெறுதல். (ம. சூ. பக். 99)
இது நாடகத்தின் மூன்றாவது சந்தியான கர்ப்பத்தின் அங்கம் பன்னிரண்டனுள் ஒன்று. (வீ. சோ. 106 உரை)
திரை எனப்படும் சவனிகை ஒவ்வோர் அங்கத்தின் முடிவிலும் விழுந்து அரங்கத்தை மறைப்பது. தொடக்கத்தே சுருட்டப் பட்ட திரை மறுபடியும் விழுவதற்குள் ஒவ்வோர் அங்கமும் முற்றுப்பெறும் வகையில் நான்கு அங்கங்களைப் பெற்று வருவது இந்நாடகம். இதன்கண் வியப்புச்சுவையே பெரிதும் இடம் பெறும். தாழ்ந்த மக்களின் மொழிநடையில் இவ்வுப சாதி நாடகம் அமையும்; மற்றபடி நாடிகைவகை நாடகம் போன்றே இருக்கும். இதுவும் இசைக்கப்படும் வகையினதே. (நாடக. 141)
சக்தி - பகை ஒடுங்கி ஒழிதல்
சக்தி - விரோதத்தைச் சமப்படுத்துதல் (ம. சூ. பக். 99)
இது நாடகசந்தி ஐந்தனுள் நான்காவதான விமரிசத்தின் அங்கம் பதின்மூன்றில் ஒன்று. (வீ. சோ. 106 உரை)
சந்தி - (பீஜம் - விதை) கதைக்கரு மீண்டும் தோற்றுதல்.
(ம. சூ. பக். 100)
இது நாடகத்தின் இறுதிச் சந்தி (ஐந்தாவது) ஆகிய நிருவ கணத்தின் அங்கம் பதினான்கனுள் ஒன்று. (வீ. சோ. 106 உரை)
நாடகக் கதையின் இடையில் வரும் நிகழ்வுகளுடன் தலைமையான பொருள் பொருத்தமுறச் சேர்ந்து தழைத்து வளர்ந்து முற்றுவது நாட்டியக் கட்டுரையாகிய சந்தி எனப்படும்.
ஐவகைச் சந்திகளான முகம் பிரதிமுகம் கருப்பம் விளைவு துய்த்தல் என்பவற்றைத் தனித்தனித் தலைப்பிற் காண்க. (நாடக. 32)
1. உவகேபம் முதல் கரணபேதம் வரை முகத்தின் அங்கம் 12
2. விலாசம் முதல் வருணசங்காரம் வரை பயிர்முகத்தின் அங்கம் 13
3. அபூதா(க)ரணம் முதல் ஆகேவம் (ஆட்சேபம்) வரை கர்ப்பமுகத்தின் பேதம். 12
4. அபவாதம் முதல் ஆதானம் வரை வைரிமுகத்தின் அங்கங்கள் 13
5. சந்தி முதல் சங்காரம் வரை நிருவகணமுகத்தின் அங்கம் 14 (வீ. சோ. 106 உரை)
இவ்வகையால் சந்தியங்கம் 64 ஆகும். (ம. சூ. பக். 98-100)
தமிழ்மரபு பற்றி இவற்றைத் ‘துறைகள்’ என்னலாம். (ம. சூ.)
சந்தியாவது சந்தியும் சந்திஅங்கமும் என இருவகைப்படும். முகம் முதலாகச் சந்தி ஐந்தாம். அவை முகம், பிரதிமுகம், கர்ப்பம் விமர்சம், நிருவகணம் என்பன.
1. சந்தி - இணைதல்; ஒரே நிகழ்ச்சித்தொடர்பு பற்றி ஒரு பொருளினொடு மற்றொரு பொருளை இணைத்து நிற்பது. சந்தி ஐவகைப்படும்.
2. அவற்றின் உறுப்புக்கள் ‘சந்தியங்கம்’ என்பன.
1. பீஜம் - விதை. (2) விந்து - விரிநிலை (3) பதாகை - கிளைக்கதை. (4) பிரகரீ - வழி நிகழ்ச்சி. (5) காரியம் - பொருள் முடிவு - என்னும் இவ்வைந்துமே பொருள்மூலம் என்பன. வடநூலார் இதனை ‘அர்த்த பிரகிருதி’ என்பர்.
2. விதை - கதைக்கரு. கதையின் முடிவான பயனைப்பெற விரும்பித் தொடங்கும் செயலாரம்பம்.
2. பிரயத்தனம் - அதற்கான முயற்சி.
3. பிராப்தியாசா - பயனை எதிர்பார்க்கின்ற பயன்விழைவு.
4. நியதாப்தி - பயனைப் பெறுவோம் என்ற உணர்வு.
5. பல யோகம் - பயன் முழுவதையும் பெறுதல்.
இவை ஐந்தும், நாடக நிகழ்ச்சி. (அவ°தை) எனப்படும். பொருள் மூலம் ஐந்தும் அவ°தைகள் ஐந்தும் இணைந்து நிகழ்கையில் சந்திகள் ஐந்தும் அமைகின்றன. (ம. சூ. பக். 97)
1. முகம் - பீஜம் - விதை - வித்து
2. பயிர்முகம் - பிரதிமுகம் விரிநிலை முளை
3. கர்ப்பமுகம் கர்ப்பம் கிளைக்கதை சூல்
4. வைரிமுகம் விமர்சம் வழிநிகழ்ச்சி விளைவு
5. நிருவாணம் நிர்வகணம் பொருள்முடிவு துய்த்தல்
முகமாவது ஏழுவகைப்பட்ட உழவினால் சமைக்கப்பட்ட புழுதியுள் இட்டவித்துப் பருவம்செய்து முளைத்து முடிவது போல்வது. பிரதிமுகமாவது, அங்ஙனம் முளைத்தல் முதலாய் இலை தோன்றி நாற்றாய் முடிவது போல்வது.
கருப்பமாவது அந்நாற்று முதலாய்க் கருவிருந்து பெருகித் தன்னுள் பொருள் பொதிந்து கருப்பம் முற்றி நிற்பது போல்வது.
விளைவாவது, கருப்பம் முதலாய் விரிந்து கதிர் திரண்டு இருண்டு காய் தாழ்ந்து முற்றி விளைந்து முடிவது போல்வது.
துய்த்தலாவது, விளையப்பட்ட பொருளை அறுத்துப் போரிட்டுக் கடாவிட்டுத் தூற்றிப் பொலிசெய்து கொண்டு போய் உண்டு மகிழ்வது போல்வது. (ம. சூ. பக். 3,4)
அச்சம் காரணமாக ஏற்படும் ஐயுறவும் நடுக்கமும் ஆம். சில நூல்களில் இது வித்ரவம் எனப்படும்.
சம்பிரமை - பயந்து நடுங்குதல். (ம. சூ. பக். 99)
நாடகத்தின் மூன்றாம் சந்தியான கர்ப்பத்தின் அங்கம் பன்னிரண்டனுள் ஒன்றாகும். (வீ. சோ. 106 உரை)
சினம் மிகுந்த உரையாடல்.
சம்பேடம் - அபிமானத்தால் கோபித்து உரைத்தல் (ம.சூ. பக். 99) நாடக சந்தி ஐந்தனுள் நான்காவதான வைரிமுகத்தின் அங்கம் பதின்மூன்றனுள் ஒன்றாகும். (வீ. சோ. 106. உரை)
இது சிலநூல்களில் ‘தாபனம்’ எனப்படும். மறுக்கப்பட்ட தால் தோன்றிய தனிமை தணிதல் தாபனம் எனக்கொள்ளின், தான் பெற விழையும் இன்பம் பெறப்படாததால் தோன்றும் நனி பெருந்துயர்.
சமம் - பிரிவினால் வந்த ஆற்றாமையை ஒருவாறு ஆற்றிக் கொள்ளுதல். (ம. சூ. பக். 98)
இது நாடக சந்திகளில் இரண்டாவதான பிரதிமுகத்தின் அங்கம் பதின்மூன்றனுள் ஒன்று. (வீ. சோ. 106 உரை)
எதன் மீதும் பற்றில்லாது தன்னில் தானே அடங்கி ஒடுங்கிய நிலை; ‘சமநிலைச் சுவை’ நிலைக்கருத்து. (நாடக. 46)
துயரம் நீங்கல்; துன்பத்தினின்று விடுபடுதல் (ம.சூ. பக். 100) இது நாடகத்தின் இறுதிச் சந்தியாகிய நிருவகணத்தின் அங்கம் பதினான்கில் ஒன்று. (வீ. சோ. 106 உரை)
தனித்தனியாக வேறுபட்ட எண்ணங்களைக் கொண்ட தலைவியர் பலரைப் பெற்று, ஒன்பது சுவைகளையும் செவ்வனே கலந்து, வீரச்சுவையினை மிகுதியாக அமைத்து, மூன்று அங்கங்களில் நடக்கும் நாடகச்சாதி. இதன் தொடக் கத்தில் காமஇன்பமும் பின்னர் அறஇன்பமும் பொருளின் பமும் விரிவாக விளங்கும். (நாடக. 128)
நாடகப் பயன் நோக்கிய (கதையின்) முன்னேற்றம். விதை (நாடகக் கருத்து) நிலைபெற்றுத் தோற்றுதல். (ம. சூ. பக். 98)
இது நாடகத்தின் முதற் சந்தியான முகத்தின் அங்கம் பன்னிரண்டனுள் ஒன்று. (வீ. சோ. 106 உரை)
இந்நாடகத்தின் தலைவன் வேதநெறிக்குப் புறம்பான ஒழுக்கமுடைய ஒரு பாடண்டன் (பாஷண்டன்). இந்நாடகம் மூன்று அல்லது நான்கு அங்கங்களைப் பெறும். அவலம் உவகை என்னும் சுவைகளைத் தவிரப் பிறசுவைகள் இதன்கண் நிகழும். உழிஞைப்போர், நிலவறைவழியே தப்பியோடுதல், வீரமின்றிப் புறங்காட்டி ஓடல், போன்ற நிகழ்ச்சிகள் இதன்கண் வரும். ஆரவடி, சாத்துவதி எனும் இருவிருத்திகளிலும் இஃது அமையும். (நாடக. 149)
வினாவிடையாக நாடக அரங்கிற் பாடும் பாடல். (W) (L)
வீரசோழிய உரை குறிப்பிடும் நாடகச்சாதியுள் ஒன்று. ஒரே பொருள் பற்றிப் பேசும் தலைமக்கள் இதன்கண் இருப்பர். இஃது ஓரங்கமே யுடையது. முதல் நான்கு சந்திகளை யுடையது. (வீ. சோ. 106 உரை)
பகைவரை அவமதித்தல்
சில நூல்களில் இது ‘சாதனம்’ எனப்படும்.
சலனம் - எள்ளல் (ம. சூ. பக். 100)
இது நாடக சந்தி ஐந்தனுள் நான்காவதான வைரிமுகத்தின் அங்கம் 13இல் ஒன்று. (வீ. சோ. 106 உரை)
நாடக அரங்கில் நடிகன் ஒருவன் தோன்றும்போது பாடும் பாட்டு. (W) (L)
நாடக அரங்கில் கடைசி நடிகன் வரும்போது நிகழும் பாட்டு. (W) (L)
‘சவனிக்கைத் தரு’ காண்க.
அரங்கிற் புகுந்துள்ள நாடகபாத்திரங்கள் பலருள் இருவர் பிற பாத்திரங்கள் அறியாவகை தம்முட் பேசிக்கொள்ளல். (யாழ். அக.) (L)
தலைமக்களில் சிறந்தோரைக் கொண்டு அறம் பொருள் உபாங்கம் ஆவது. (வீ. சோ. 106 உரை)
சாத்துவதி - அறம் பொருளாகத் தெய்வ மானிடர் தலைவ ராக வருவது. (ம. சூ. பக். 15)
அறம் பொருந்திய பொருளாக, கடவுளர் தலைவராக, பொருள் விளங்கும் மெல்லிய சொற்றொடர்களால் அமைந்து, வீரம் வியப்பு என்னும் சுவைகளையுடையதாய் வருவது இது.
இவ்விருத்தியில் அமைந்த நாடகப் பொருள் மிகவும் மென்மையான விடயம்; சௌரியம் (-வீரம்) கருணை பெருமை போன்ற குணங்கள் பொருந்தி வருமே யன்றி, காமச்சுவை சிறிதும் பயிலாது. ஆயினும் களிப்புத் தருவ தாகவே இருக்கும்; வியப்பு இருக்கும். இதனை வடநூலார் உத்தாபகம், சாங்காத்தியம், சல்லாபம், பரிவர்த்தகம் என நான்கு வகையில் கூறுவர். (நாடக. 169 உரை)
1. உத்தாபகம் - பகைவனை வீராவேசம் கொள்ளச் செய்யும் பேச்சு.
2. சாங்காத்தியம் - ஆலோசனை கூறியோ, செல்வப்பேற்றைக் காட்டியோ, விதிவசத்தாலோ நட்பிற்கு இடையூறு விளைத்தல்.
3. சல்லாபம் - பல்வேறு உணர்ச்சிகளையும் தன்னகத்தே கொண்டு இயலும் மேம்பட்ட உரையாடல்.
4. பரிவர்த்தகம் - எண்ணிய செயலை விடுத்துப் பிறிதொரு செயலைச் செய்தல். (மேலை உரை)
நாடக வகை; இவற்றை உருவகம் எனவும் கூறுவர். அஃதாவது உபமானத்தையும் உபமேயத்தையும் வேறுபாடு நீக்கி ஒன்றெனவே ஏற்றிக் கூறும் உருவகஅணியைப் போல, நடிகரிடத்தில் கதைப்பாத்திரங்களின் இயல்பை ஏற்றியுரைத் தலால் உருவகம் என்னும் பெயர் அமைந்தது. இனி, நடிகர் யாவரும் முழு ஈடுபாட்டோடு தம்மினும் வேறான பாத்திரங் களின் உருவங்களை மேற்கொள்வதால் உருவகம் என்னும் பெயர் எய்திற்று என்றலும் உண்டு.
நாடகங்களின் சாதிவகை பத்து. அவையாவன நாடகம் பிரகரணம், பாணம், வியாயோகம், சமவகாரம், (இ) டிமம், ஈகாமிருகம், அங்கம், வீதி, பிரகசனம் என்பன.
வீரசோழிய உரையாசிரியர் கூறும் வீரம் முதலிய பத்தனை யும் தனித்தனித் தலைப்புக்களிற் காண்க. (நாடக. 119-122)
நாடகச்சாதி பத்தனுள்ளும் உபசாதி பதினெட்டனுள்ளும் அடங்காதனவும், ஒருவகையது இலக்கணம் மற்றையது ஒன்றன்கண் கலந்துவருவனவும், குறைந்து வருவனவும், கூடிவருவனவும், ஆகிய எவ்வகை நாடகங்களும் ‘நாடகம்’ என்றே பெயர் பெறும். (நாடக. 158)
நாடக வகையாகிய சாதியினை வீரசோழிய உரைகாரர் பத்தாகப் பகுக்கிறார். அவையாவன வீரம், கூச்சம், அர்ப் பாயம், பேய்க்காரம், வியோகம், பாணம், சல்லாபம், வீழிணி, உத்தாரமடங்கம், பிராசனம் என்பன. (வீ. சோ. 106 உரை)
நாயகன் முதலியோர் மனஅமைதி அடைதற்கு ஆடும் கூத்து.
(சிலப். 3 : 12 உரை) (L)
இகழ்ச்சி பகைமை அறியாமை போன்றவை காரணமாக இயல்பினின் திரிந்த மொழியும் செயலும் பற்றி மனத்தில் தோன்றும் உணர்வு. வடநூலார் ‘ஹா°யம்’ என்ப. இது நகை என்னும் சுவையாகிய நிலைக்கருத்து. (நாடக. 44)
உபசாதி நாடகம். இந்நாடகத்தில் நான்கு அங்கங்கள் இருக்கும். சமநிலையும் நகையுமான சுவை இரண்டனைத் தவிரப் பிறசுவையும் இடம்பெறும். அந்தணன் தலைவன்; உபநாயகன் ஒருவன்; இடுகாட்டின் விரிவான புனைந்துரை இருக்கும். (நாடக. 152)
இன்னிசை பொருந்திய வரிப்பாடல்களை வெகுளிச் சுவையோ இன்பச் சுவையோ வெளிப்படும் வகையில் ஆழ்ந்த கருத்துடனும் பற்பல இசைவேறுபாட்டுடனும், எடுத்த நிலையும் உற்றுணர் நிலையும் ஆகிய இரு நலன்கள் விளங்கப் பாடுதல்; இசைபாடும் கோலங்கள் பத்தனுள் ஒன்று.
எடுத்த நிலை, உற்றுணர் நிலை - இவற்றை ‘நாலேழ் நலன்’ என்ற தலைப்பில் காண்க.
வடநூல் கூறும் ‘இலாசியம்’ என்பதன் அங்கமான ‘உத்தமோத்தமகம்’ இது. (நாடக. 261)
நாடகத்தை நடத்துவோன். (L)
1. பதுமையைச் சூத்திரம் (நூல்) கொண்டு ஆட்டுவோன் (சி. சி. 4.4 சிவாக்.) (L)
2. சூத்திரதாரன் (L)
வரிக்கூத்து வகை தொண்ணூற்று மூன்றனுள் ஒன்று. (அபி. சிந்தா.) (L)
நாடக நூல்களில் செய்யுள் இயங்கும் வகை. அவை நான்காவன:
1. முதல் நடை - மிகவும் தாழ்ந்து செல்லும் நடை.
2. வாரம் - சொல்லொழுக்கமும் இசையொழுக்கமும் ஒருங்கே கொண்ட நடை.
3. கூடை - சொல், இசை ஆகியவற்றின் செறிவினைக் கொண்ட நடை.
4. திரள் - நெருக்கமாய் மிகவும் முடுகிச் செல்லும் திரள்நடை.
இந்நான்கனுடன் கல்வியறிவும் நாகரிகமும் பெறாத இழி மக்கள் இயல்பாகப் பேசும் சொற்கள் அமைந்த பாடலையும் பிழையென நீக்காது ஏற்பதும் ஒன்று. (நாடக. 69,70)
நாடகத்தில் நிகழும் செயல்கள் யாவும் காரணகாரிய முறையின் கட்டுக்கோப்புடன் அமைதல் வேண்டும். நடுவே வரும் சிற்றருவிகள் சேரப் பெரியதோர் ஆறு பெருகி னாற்போல, இடையே வரும் நிகழ்ச்சிகள் பலவும் சேரத் தலைமையான நாடகக் கதைச்செயல் விரிந்து பெருகுதல் வேண்டும். இடைநிகழ்ச்சிகள் வரும் நாடகத்தின் எல்லாப் பகுதிகளும் தலைமைப் பொருட்கு உட்பட்டு நடத்தல் வேண்டும். செயல்கள் உலக இயல்புக்கு மாறுபடாமலும், நம்புதலுக்கு உரியவாகவும் இருத்தல் வேண்டும். இவையே செயற் பொருத்தம் எனப்படுவன.
இடம் காலம் செயல் ஆகிய மூன்றன் பொருத்தமும் இன்றி யமையாதனவே எனினும் ஒன்றற்கொன்று முரண்பாடு தோன்றும்போது செயலின் பொருத்தத்தையே முக்கியமாகக் கொள்ளல் ஏற்புடைத்து என்பர். (நாடக. 64)
தலைவனுக்குப் பணிபுரிவோன் சேடன் எனப்படும்.
(தலைவிக்குப் பணிபுரிபவள் சேடி எனப்படும்). (நாடக. 100)
கூற்றுப்போலவே நாடகத்தில் வரும் பேச்சுவகை; பொரு ளழகு மிக்க நாடகச் சொல்வகை. அஃது இருவகைப்படும்:
வியப்புச்சுவை பயக்கும் வண்ணம் உரையாடுதல்.
நகைச்சுவை பயக்கும் வண்ணம் உரையாடுதல்.
மதங்க சூளாமணி, அடியார்க்குநல்லார் கூறும் சொல்வகை யான சுண்ணம், சுரிதகம், வண்ணம், வரிதகம் என நான்கும் கொள்ளும்.
சுண்ணம் நான்கடியால் வருவது; சுரிதகம் எட்டடியால் வருவது; வண்ணம் நானான்கு (16) அடியால் வருவது; வரிதகம் 32 அடியால் வருவது. (நாடக. 199; ம.சூ.பக். 18)
த
வினாவிடையாக நாடக அரங்கில் பாடும் பாடல்.
நிச்சயபுத்தியின்மையாலே பன்முறையும் ஆலோசித்தல் கருதலாகிய ‘தர்க்கம்’ ஆம். (ம. சூ. பக். 119)
1) பெரியவன்; ‘சாவகம் ஆளும் தலைத்தாள் வேந்தன்’ (மணி. 14 - 103)
2) முன்னிலை; ‘மனைவி தலைத்தாள்’ (தொ. பொ 165 நச்.) (L)
கதையில் வரும் பாத்திரங்கள் அனைவரினும் சிறப்புடைய தலைமை அமைந்து, ஆயிரக்கணக்கான வலம்புரிச் சங்கு களால் சூழப்பட்டுள்ள சலஞ்சலம் என்னும் சங்கினைப் போலப் பொலிவோர்.
(இடம்புரிச் சங்குகள் ஆயிரம் சூழ இருப்பது ஒரு வலம்புரிச் சங்கு. அத்தகைய வலம்புரிச் சங்குகள் ஆயிரம் சூழ இருப்பது ஒரு சலஞ்சலம் என்னும் சங்கு.) இத்தகைய தலைமையுடைய பாத்திரங்களில் ஆடவரும் உண்டு; பெண்டிரும் உண்டு. நாயகன், நாயகி, கதாநாயகன் கதாநாயகி என்ற வழக்காறும் உண்டு. (நாடக. 83, 84)
ஆடவர், கதாநாயகர் எனவும் கூறப்படுவர்.
நாடகத் தலைவர் - நாடகங்களில் வரும் தலைமையான ஆண்பாத்திரங்கள்.
இவர்கள் தாம் உளராய காலத்தேயே பெறும் புகழாகிய ஒளி பெற்றோராய் இருத்தல் வேண்டும். இவர்கள்பால், எப்பொழுதும் முகமலர்ச்சியோடு இருத்தலும், இன்மொழி பேசி இனியவே செய்யும் இயல்பும், நற்குணங்கள் பலவும், நெடிய மனவுறுதியும், மானமுடைமையும், வாய்மை மொழியும் போன்ற பெரும்பண்புகள் பொருந்தியிருத்தலும் வேண்டும். (நாடக. 85)
இவர்களை நான்கு வகையினராகக் கூறுவர் வடமொழி நாடக நூலோர். அவராவர் (1) தீரோதாத்தன் (2) தீரசாந்தன், (3) தீரோத்ததன் (4) தீரலலிதன் என்பார். (நாடக. 86)
1. தீரோதாத் தன் (தீரனும் மிகஉயர்ந்த இயல்பு உடையோனு மான நாயகன்) வடிவழகும், நல்லொழுக்கமும், பேரறிவும், வீரமும், தீரமும், மேன்மையும், கல்வியும், அன்பும், அருளும், இன்பம் நிறைந்த உள்ளமும் கொண்டு புகழ்மிகவுடைய தலைவன். (நாடக. 87)
இவ்வகைக்கு உதாரணமாவான் இராமபிரான்.
2. தீரசாந்தன் (தீரனும், புலனடக்கமும் மனஒழுக்கமும் உடையோனுமாவான்) - மிகப்பெரும் பொறுமையும் மாசற்ற பண்பும் நிறைந்தவன். (நாடக. 88)
இவ்வகைக்கு இலக்கியமாவான் முனிவருள் வசிட்டன்.
3. தீரோத்ததன் (தீரனும், செருக்கால் நிமிர்ந்து தலை வணங்காதவனும் ஆவான்) அரும்பெருங்குணநலனும் அறிவு நலனும் வாய்க்கப்பெற்றோனாக இருந்தும், நனிபெருவெகுளி யும், அதனால் விளைந்த தன்னையும் மறந்து செயற்படும் மூர்க்ககுணமும் உடையவன். (நாடக. 89)
இவ்வகைக்கு உதாரணமாவான் பாண்டவரிடை வீமன்.
4. தீரலலிதன் - (தீரனே ஆயினும் இன்பவேட்கை மிக்கவன்) வலிமை வீரம் மானம் அருள் முதலிய யாவுமே பெற்று விளங்குபவன்; ஆயினும் இன்ப வேட்கை மிகுந்த இயல்பு கொண்டவன்.
இவ்வகைக்கு இலக்கியமாவான் தேவருள் இந்திரன். (நாடக. 90)
நாடகத் தலைவனுக்கு உற்ற உறுப்புக்கள் போன்று வரும். கதாபாத்திரங்கள்; அமைச்சர், ஆசிரியன், குலகுரு, விதூட கன், விடன், சேடன், தண்டத் தலைவன், தூதர் போன்றோர்.
இவர்களைத் தவிர, அரண்மனையிலுள்ள வாயிற்காப்போன் போன்ற காவற்காரர்களும், அந்தப்புரக் காவலரும், போலி மைத்துனர்களும், குறுகிய உடலுடையோரும், நொண்டி போன்றோரும், கூனர்களும் ஆகியோர் மன்னனைச் சூழ இருப்பர்.
தலைவற்கு உற்றோர் எனப்பட்டவர்களுள், முதற்கண் கூறப்பட்ட மூவரும் இன்னோர் என்பது வெளிப்படை. மற்றவர்களைத் தனித்தனித் தலைப்பிற் காண்க.
தண்டத் தலைவன் - சேனாபதி
தூதர் - அரசியல் தூதர்; தலைவிபால் செல்லும் தூதரும் உளர். (நாடக. 94:95)
இயற்கைநிலை முதலிய இருபத்தெட்டு நலன்களும் நன்கு அமையப் பெற்றுத் தலைவர்க்குச் சொன்ன நற்குணங்களுள் தமக்குப் பொருந்துவன பலவும் பெற்று, அழகும் பருவமும் பொங்கிக் கனிந்து பொலியும் நங்கையரே தலைவியர் ஆவர்.
இயற்கைநிலை முதலிய இருபத்தெட்டனையும் ‘நாலேழ் நலன்’ என்ற தலைப்பில் காண்க.
தலைவியர் நான்கு வகையினர்.
1. சுகுணை - நற்குணங்கள் நிறையப் பெற்று, எல்லா வகையி லும் தீரோதாத்தனை ஒப்பவள்.
2. சாந்தை - பொறுமையுடையாள். அடக்கம் மிக்கவள்; எல்லா வகையிலும் தீரசாந்தனை ஒப்பவள்.
3. அரக்கி - மூர்க்க குணமும், போரில் ஆர்வமும், மிக்க சினமும் உடையாள்; தீரோத்ததனுக்கு ஒப்பானவள்.
4. காமினி - காமம் மிக்கவள்; நாள்தோறும், எத்திறத்த வரையும் கூடி இன்புறும் நாட்டியம் வல்ல பொதுமாதர் போன்று காம விளையாட்டினையே நோன்பு போல் கொண்டொழுகும் இயல்பினள்.
வேறு தலைவியர் வகைகளும் உள.
மடந்தை, தெரிவை, ஆட்டி என்னும் தமக்குரிய மகளிரும்; பிறர் மனைவியும், மகளுமான பிறர்க்குரியோரும்; சேரிப் பரத்தையர், இற்பரத்தையர் எனும் பொதுமகளிரும் ஆகிய எழுவகையினரும் சிலவிடங்களில் தலைவியர் எனப்படுவர்.
வடநூலார், தமக்குரியோரைச் சுவகீயர் என்றும், பிறர்க் குரியோரைப் பரகீயர் என்றும், பொதுமகளிரைச் சாமானியர் என்றும் கூறுப; மடந்தை, தெரிவை, ஆட்டி என்னும் மூவரையும் முறையே முத்தை, மத்தியை, பிரகல்பை என்பர். (நாடக. 103 - 108)
குரவரையும் (சினத்தால்) அவமதித்தல்.
பெரியோரை மதியாது நடத்தல். (ம. சூ. பக். 99)
இது நாடக சந்திகள் ஐந்தனுள் நான்காவதாகிய விமரிசத்தின் அங்கம் பதின்மூன்றனுள் ஒன்று. (வீ. சோ. 106 உரை)
திருக்கதிதம் -
உபசாதி நாடகம். வடமொழியில் ஸ்ரீகதிதம் எனப்படும். கதை மெய்யானது; ஓர் அங்கந்தான் உண்டு; உயர்ந்தோர் தலைவ னும் தலைவியும் ஆவர். இது பாரதிவிருத்தியில் அமையும்; செந்தாமரையில் உறையும் திருமகளே நேரில் வந்து அமர்ந்து உயர்ந்த இன்பம் பயக்கும் பாடலைப் பாடுவதாய் அமைவது; சுவைகள் இனிது விளங்குவது; திரு என்ற சொல்லையே பலகாலும் சேர்த்து இசைப்பது. (நாடக. 150, 151)
துடிக் கூத்து -
பதினொருவகை யாடல்களுள் ஒன்று. கரிய கடலின் நடுவுநின்ற சூரனது வஞ்சனையை அறிந்து அவன்போரைக் கடந்த முருகன் அக்கடலின் நடுவண் திரையே அரங்கமாக நின்று துடிகொட்டி ஆடிய துடிக்கூத்து. (சிலப். 6 : 49 - 51)
சப்த கன்னிகைகளது ஆடல். (பிங். 3650) (L)
துணங்கை -
முடக்கிய இருகைகளையும் விலாப்புடைகளில் ஒற்றியடித் துக் கொண்டு அசைந்தாடும் ஒருவகைக் கூத்து ‘பழுப்புடை இருகை முடக்கி யடித்துத், துடக்கிய நடையது துணங்கை யாகும்’ (முருகு. 56 நச்.)
துதி -
வட நூலார் ‘த்யுதி’ என்பதனைத் தமிழ் நூலார் துதி எனத் தற்பவம் ஆக்கினர். துதியாவது அச்சுறுத்தி இகழ்ந்துரைத் தல்.
துதி - பிறர் உள்ளத்துக்குத் துன்பம் உண்டாக்கும் வெஞ் சொற் கூறல். (ம. சூ. பக். 100)
இது நாடகசந்தி ‘ஐந்தனுள் நான்காவதான விமரிசத்தின் அங்கம் பதின்மூன்றில் ஒன்று. (வீ. சோ. 106 உரை)
துரோடகம் -
ஐந்து ஏழு எட்டு ஒன்பது என்ற அளவில் அங்கங்கள் கொண்டு, மக்கள் தேவர் என்னும் இருவகைப் பாத்திரங்களும் கலந்து, உவகைச் சுவையே தலைமைச் சுவையாகப் பெறும் நாடக வகை; உபசாதி நாடகம். (நாடக. 139)
துன்மல்லிகை -
உபசாதி நாடகமாகிய இதனுள் நான்கு அங்கங்கள் உள்ளன. முதல் அங்கத்தில் விடனுடைய விளையாட்டுக்களும், இரண்டாம் அங்கத்தில் விதூடகனுடைய வேடிக்கைகளும், மூன்றாம் அங்கத்தில் பீடமர்த்தனுடைய செய்கைகளும், நாலாம் அங்கத்தில் இழிந்த தன்மையைச் சேர்ந்த தலைவ னுடைய செயல்களும் விளையாட்டுக்களும் எடுத்துக் கூறப்படும்; காமம் மிகுந்து பிரிவுத்துயர் உற்றுள்ள மக்கள் ஆவலுடன் வரும் வகையில் அமைவது. கைசிகி, பாரதி ஆகிய இரண்டு விருத்திகளிலும். இந்த நாடகம் இயலும்.(நாடக. 154)
தேர்ந்து உரைத்து ஆடுதல், தலைவி தலைவனை விட்டுப் பிரிந்துறையும்போது பிரிவாற்றாமல், தலைவனுடைய சுற்றத்தாரைக் கண்டு, அவர்களிடம் தான் உற்ற துன்பத்தை நினைத்து நினைத்து உள்ளம் தேர்ந்து உரைத்து ஆடுதல்.
கூத்துவகை ஏழனுள் ஒன்றான வரிக்கூத்துவகை எட்டனுள் ஒன்று. (சிலப். 8 : 102 - 04) (நாடக. 212)
கலக்கத்துடன் விரைந்துரைத்தல்.
தோடகம் - வெகுண்டு உரைகூறல். (ம. சூ. பக். 99)
இது நாடகத்தின் மூன்றாவது சந்தியான கர்ப்பத்தின் அங்கம் பன்னிரண்டனுள் ஒன்று. (வீ. சோ. 106 உரை)
ந
கூத்துவகை ஏழனுள் ஒன்று. யாரேனும் ஒருவரைப் புகழ்ந்தோ பழித்தோ பேச விரும்பி, விதூடகன் அரசவைக்கண் மிகுந்த நகைப்பை விளைவித்த வண்ணம் ஆடும் கூத்து.
இடக்கை தண்ணுமை போன்ற தாளவாத்தியங்களுடன் தாளங்களின் கட்டுக்கள் அமைய ஆடுவது நகைக் கூத்து என்பர் நாட்டிய இலக்கணம் அறிந்தோர். (நாடக. 203)
நாடகத்தை நடத்திக் காட்டுவதற்குத் துணையாய் இருப்ப வர்கள். அவர்கள் சூத்திரதாரனும், அவனைச் சேர்ந்தவர்க ளான நடியும் நடனும் ஆவோர்.
சூத்திரதாரன்-நூலைப் பிடித்திருப்போன் என்பது சொற் பொருள். பண்டைய பொம்மலாட்டம் (பொம்மையாட்டம்) எனப்படும் கூத்தில், பொம்மைகளைப் பிணித்துள்ள கயிறு களைப் பற்றி இழுத்து அவற்றை ஆட்டுவிப்போனுக்குப் பெயராய் வழங்கிய சொல் இது. நடிகர்கள் நடிக்கும் நாடகங்களில், எல்லாவற்றிற்கும் முதல்வனாய் நின்று நாடக நிகழ்ச்சிகளை முற்றுவிப்பான் சூத்திரதாரன் எனப்பட்டான். இவனைச் சூத்திரதாரி என்றும் வழங்குவதுண்டு. இவனே நாடகத்தை நல்ல நிலையில் நிகழ்த்தி நிறுவுகின்றான் என்ற காரணத்தால் (ஸ்)தாபகன் என்றும் கூறப்படுவான்.
நடி-சூத்திரதாரனுடைய காதல் மனைவியாயிருப்பவள். இவளும் கல்வியிலும் கலைகளிலும் தேர்ச்சியுடையவ ளாவள்.
நடன்-சூத்திரதாரன்பால் நட்புரிமை வாய்ந்தவனாய் அவன் இயற்றும் வினைக்குத் துணையாயமைபவன். (நாடக. 177-182)
மெய்ப்பாடுகளின் இனிய இயல்பு நன்கு புலப்படச் செய்து, தன் உள்ளத்து நிகழும் உணர்வுக்கு ஏற்பத் தோன்றும் விறல்களை நாடகம் பார்ப்போரும் பெறும் வகையில் வெளிக்காட்டி, தான் நடிக்கும் கதாபாத்திரத்துடன் ஒற் றுமையுடன் ஒன்றி, சுவைக்குத் தக்க அவிநயங்களைச் செய் துணர்த்தி, ஆறுவகை நடிப்பு நிலைகளையும் குற்றமின்றிக் காட்டி, நாடகசாலையை அழகு செய்து நல்ல பாவனை களுடன் நடித்தலே நடிப்பின் இயல்பு எனப்படும். இதுவே நாடகம் காண்போர் மனத்தைக் களிப்பிக்கும்.
1. மெய்ப்பாடு, 2. விறல், 3. ஒற்றுமை, 4. அவிநயம், 5. நிலை, 6. நாடக சாலை என்பவற்றைத் தனித்தனித் தலைப்பில் காண்க. (நாடக. 224)
நாடகத்தினது கதையைப் பொருத்தமாகக் கூறும் வகையே நடை எனப்படும். அது வாசகம், செய்யுள், இசைப்பாட்டு என மூவகைத்து.
வாசகம் - பேசும் தமிழில் பிழையின்றிப் பேசும் பாத்திரங் களின் நிலைக்குப் பொருந்திய வேறுபாட்டுடன் அமைவது.
செய்யுள் - எழுவகைத் தாதுக்களால் உயிர்க்கு இடமாக உடம்பு அமைந்துள்ளவாறு போல, பலவகைச் சொற்களால் பொருளுக்கு இடமாக அணிபெற உணர்வு மிக்க கவிஞரால் செய்யப்படுவது.
இசைப்பாட்டு - பண்கலந்து (இராகத்துடன்) பாடப்
படுவது. (நாடக. 65-68)
நர்மத்யுதி என்னும் ஆரியச்சொல் தற்பவமாகத் திரிந்தது.
ஏளனம் செய்து நகைத்துப் பேசியதால் விளைந்த நகைக் கூற்றினால் இன்புறுதல். (ம. சூ.பக். 98)
இது நாடக சந்திகளில் இரண்டாவதான பிரதிமுகத்தின் அங்கம் பதின்மூன்றனுள் ஒன்று. (வீ. சோ. 106 உரை)
ஆன்றோரைத் தலைவராகக் கொண்டு, மெய்ப்பொருளை உணர்த்தும் செயல்களை விளக்கும் நாடகம். இது வீர சோழிய உரையாசிரியராம் பெருந்தேவனாரால், “நயநிலைப் படலமாவது நாடகம்; கூத்தமார்க்கம் என்பதும் அது. அது பெரியோரைத் தலைமக்கள் மேவச் செய்யப்பட்ட மெய்ப் பொருள் பற்றி வருதல்” என்று விளக்கப்படுகிறது.
மெய்ப்பொருள் பற்றி வருதல் என்பதற்கு, மெய்யுரைக் கதை யுடையதாக வருதல் எனப் பொருள் கூறலும் ஏற்புடைத்து. (நாடக. 159)
நாடகம்; கூத்தமார்க்கம் என்பதும் அதுவே. அது பெரியோ ரைத் தலைமக்கள் மேவுமாறு செய்யப்பட்ட மெய்ப்பொருள் பற்றிவருவது; சிறியோரைத் தலைமக்களாக்கி ஒளி(யோனி) யும் விருத்தியும் சாதியும் சந்தியும் சுவையும் முதலாகப் பல விகற்பத்தானும் வரும். (வீ. சோ. 106 உரை)
இஃது இனிய இசைப்பாட்டுக்கள் மிகுதியும் கொண்டது. தீரோதாத்தன் தலைவன். தன்னை அழகு செய்து கொள்வதி லும் உயர்ந்த உடைகள் அணிவதிலும் மிக்க ஆர்வம் கொண்டவள் தலைவி. துணைத்தலைவராக உபநாயகனும் பீடமர்த்தன் என்பானும் வருவர். இன்பச்சுவையும் நகைச் சுவையும் நிறைந்து விளங்கும் உபசாதி நாடகம் இது. இதன்கண் இசை பாடும் கோலங்கள் எனப்படும் பத்துவகைக் கோலங்களும் இடம் பெறும். இந்தக் கோல வகைகளைத் தனித்தனித் தலைப்பில் காண்க. (நாடக. 142)
நல்ல இசை பொருந்திய பாடல்களுடன் கூடி, நாடகத்திற் குரிய இலக்கணங்களும் சில சேர்ந்து நூல் முழுவதும் ஆசிரியனுடைய கூற்றாகவே அமைவது.
சிலப்பதிகாரம் இதற்கு உதாரணம் என்பர் நாடகவியல் உரையாசிரியர். (நாடக. 164)
முகம், பிரதிமுகம், கருப்பம், விளைவு, துய்த்தல் என்று ஐவகைப்பட்ட நாடகக்கதைப் பொருத்து. (சிலப். 3, 13 உரை)
பெரிய நகரமொன்றன் நடுவில், பலர் கூடும் சபையாகவும், காவல் காப்பவர் பலரைப் பெற்றதாகவும் இருக்கும் இடமே நாடகசாலை ஆதலுக்குரியது.
அந்த இடத்திற்கு அருகே தேவத்தானமோ, செபம் செய்யு மிடமோ, பறவைகளின் கூடுகள் அமைந்த இடமோ, பாம்புப் புற்றுக்களோ இருத்தல் கூடாது. யானைகுதிரைகள் கட்டும் இடங்களோ, மறவர் போர் பயிலும் இடமோ, மறவர் வாழிடங்களோ அருகில் இருத்தலும் கூடாது.
அந்நிலம் நுண்ணிய மண் சேர்ந்து திண்மையாய் இருத்தல் வேண்டும். இன்சுவையும் மணமும் பெற்ற மண்ணாய் அஃது இருத்தல் வேண்டும்.
நடிகர்கள் வேடம் அணிந்து கொள்ளும் தனியிடமும், நாடக மேடையும், நாடகம் பார்ப்பவர்கள் அமர்ந்திருத்தற்கு வசதியான இடமும் ஆகிய இம்மூன்று நல்ல பகுதிகளை நாடகசாலை பெற்றிருத்தல் வேண்டும். (நாடக. 263)
நாடகத் தமிழ்நூல் பற்றிய இலக்கணஇலக்கியங்கள். முத்தமிழுள் நாடகம் எனப்படும் கூத்துப் பற்றிய செய்தியை விளக்கும் தமிழ் நாடகத்தமிழாம். பெரும்பான்மையும் கூத்துப் பற்றிய தமிழிலக்கியப் பகுதியே நாடகத் தமிழ்நூல் எனப்படுகிறது. ‘நூல்’ இலக்கணத்தையே பண்டு குறித்து, இன்று இலக்கியத்தையும் குறிக்க வழங்கப்படுகிறது.
நாடகத்தின் இயல்புகளை பெற்றிருந்தும், நடித்துக் காட்டக் கூடிய தன்மையில்லாத நூல்.
மனோன்மணீயம் இதற்கு உதாரணமாம் என்பர் நாடகவியல் உரையாசிரியர். (நாடக. 163)
நாடக மேடையில் நடிக்கும் ஆண்பாலரும் பெண்பாலரும்.
ஐந்து அங்கங்களுக்குக் குறையாமல் பெற்று, ஒன்பான் சுவை களும் அமைந்திருப்பினும் இன்பச்சுவை அல்லது பெருமிதச் சுவை நன்கு தெரியும் வகையில் நடந்து, வியப்புச்சுவையுடன் நிறைவுறுவது.
ஒன்பான் சுவைகளுமே இடம்பெற வருவது உயர்ந்த நாடகம் ஆகும்; சில சுவைகள் இடம் பெறாவிடினும் அதன் சிறப்புக் குன்றாது.
நாடகத்தின் பெரிய உறுப்பு அங்கம்; அவ்வங்கத்துள் நிகழும் உறுப்புக் களம் எனப்படும். ஓர் அங்கம் பல களங்களைப் பெற்று வரும். (நாடக. 123, 124)
நாடகம் ஒரேவகையான ஆசிரியம் போன்ற பாட்டால் இயல் வதுண்டு; பலதிறப்பட்ட பாட்டு வகைகளாலும் இயல்வ துண்டு; உரைநடையும் பிற மொழிகளும் கலந்தும் இயலும். ஆதலின் இதனை ‘உரை இடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ என்று கொள்ப ஆன்றோர். (நாடக. 116)
(நாடகஇயல்) நாடகம் பற்றிய ஓர் இலக்கண நூல். இதன் ஆசிரியர் வி.கோ. சூரிய நாராயண சாத்திரியார், பி.ஏ. நூல் எழுதப்பட்ட ஆண்டு கி.பி. 1897. நுண்மாண் நுழை புலம் வாய்ந்த பேரறிஞரான இவர் பல தமிழ்நூல்களையும் வட மொழி நூல்களையும் ஆங்கில நூல்களையும் ஆராய்ந்து எழுதிய நூல் இது. தெய்வ வணக்கம் அவையடக்கம் உள்ளிட்டு, இதன்கண் 272 சூத்திரங்கள் உள. நூல் தொடங் குவது 10 ஆம் எண் தொடங்கியாதலின், 263 நூற்பாக்கள் என்றே கொள்ளப்படும். அவை ஆசிரிய யாப்பின. இந்நூற்கு இவ்வாசிரியரின் மாணாக்கர் ந. பலராமய்யர் என்ற பெயரிய பெரும்பண்டிதர் ஒருவர் விரிவான உரையியற்றி யுள்ளார். இந்நூல் பொதுஇயல்பு, சிறப்புஇயல்பு, உறுப்புஇயல்பு, நடிப்புஇயல்பு என நான்கு பகுதிகளையுடையது. (நூற்பா. 10)
சாத்துவதி, ஆரபடி, கைசிகி, பாரதி என்ற நால்வகை நாடக நடை. (சிலப். 3. 13 உரை) (நாடக. 168)
அபிநயம். (L)
கூத்தர். ‘நாடகர்’ என்னும் பிங்கலந்தை. (824) (திவா.பக்.36)
இது கைசிகி விருத்தியில் அமைவது. இதன்கண் அங்கங்கள் நான்கு. பெண்பாத்திரங்கள் பலர் வருவர். அரசன் தலைவன். அவன் அஞ்சும் அரசியும், அவன் காதலுக்குரியவளும் அவனது ஆட்சிக்கு அடங்கியவளுமாகிய பேரழகியொருத்தி யுமாக இருவர் தலைவியர். இது நாட்டியத்துடனும் இசையுடனும் நிகழும் நாடக வகை. (நாடக. 138)
நர்மம் - நருமம். அஃதாவது எள்ளி நகைத்துரைப்பது.
நகைக் கூற்று (ம. சூ. பக். 98)
இது நாடகச் சந்திகளில் இரண்டாவதான பிரதிமுகத்தின் அங்கம் பதின்மூன்றில் ஒன்று. (வீ. சோ. 106)
தலைவியர்க்குரிய இருபத்தெட்டு நலன்கள்.
1. இயற்கை நிலை - சுபாவமான, இயற்கையான நிலை,
2. எடுத்த நிலை - இயல்புக்கும் மேலான உயர்நிலை, 3. உற்
றுணர்நிலை - மனவெழுச்சி வெளிப்படும் நிலை, (இம்
மூன்றும் உடல் அசைவினால் தோன்றுபவை.) 4. ஒளி,
5. அழகு, 6. தேசு, 7. இனிமை, 8.
துணிவு, 9. உதாரம், 10. தீரம் (இவை ஏழும் முயற்சியின்றி இயல்பாகவே உண்டாவன).
11. லீலை, 12. மலர்ச்சி, 13.
எளிய உடை, 14. மடம், 15. மகிழ்வு, 16.
தன்னையும் அறியாமல் எழுகின்ற காதல் மொழிகள்,
17. ஊடல், 18. விப்பிரமம் (-பரபரப்பு),
19. லலிதம், 20. மதம், 21. நிறை, 22. ஏக்கம், 23. வெட்கம், 24. வேறுபாடு, 25.வியப்பு, 26. நகை, 27. நடுக்கம், 28. கேளி - இவை தலைவியர்க்கு
அழகுசெய்யும் அணிபோல்வன. (நாடக. 102
உரை.)
நாடகத்திற்குப் பொருளாய் அமைத்தற்குரிய அறம்பொருள் இன்பம் வீடு என்பன. இவற்றையே மக்கட்கு உறுதிபயக்கும் உறுதிப்பயன் என்பர். (நாடக. 20,21 )
தன் செயலையும் அனுபவத்தையும் உரைத்தல்.
அனுபவத்தை உரைத்தல். (ம. சூ. பக். 100)
இது நாடகத்தின் (ஐந்தாவதாகிய) இறுதிச் சந்தியாகிய நிருவகணத்தின் அங்கம் பதினான்கனுள் ஒன்று. (வீ. சோ. 106 உரை)
வடநூலார் ‘நிர்வஹணம்’ என்ப. மதங்க சூளாமணி இதனைத் துய்த்தல் என்று குறிக்கும்.
கதைக்கூறுகளும் உணர்ச்சிகளும் நிகழ்ச்சிகளும் போன்ற யாவும் ஒருமுகப்பட்டுக் கதையின் முடிவும் பயனும் நிறை வுறுதல் ‘நிர்வஹண சந்தி’ ஆகும். (ம. சூ. பக். 100)
பொருள் முடிவாகிய காரியமும் அதன் முழுப்பயன்பேறும் சேர்வதால் (நிர்வஹணம்) இறுதியாகத் தொகுத்து முடித்தல் என்று கூறப்படும். இச்சந்தியில், கதைநோக்கம் நிறைவேறப் பெற்றுத் தலைமக்கள் பயனைத் துய்க்கும் நிலை இருக்கும். கதிர்களை அறுத்து, நெற்குவியல் செய்து, கொண்டுபோய் உண்டு மகிழ்வது போல்வது.
உபசங்கிருதி என்பதும் இதுவே. ‘நிருவாணம்’ எனவும்படும். இது நாடகவியல் கொண்டது. இது 14 வகைப்படும்.
விளைந்த போகம் விதிவகையால் அறுத்துப் படுத்துவைத்துத் துகளும் களைந்துகொண்டு உண்(டு) மகிழ்ந்தாற் போலக் கொள்வது. (வீ. சோ. 106 உரை)
‘விரோதம்’ என்றிருக்கற்பாலது; பயன் பெறுவதில் நிகழும் தடை.
நன்மை பயத்தற்கு ஏதுவாகிய இடையீடு. (ம.சூ.பக். 98)
இது நாடக சந்திகளில் இரண்டாவதான பிரதிமுகத்தின் அங்கம் பதின்மூன்றில் ஒன்று. (வீ. சோ. 106)
‘விரோதனம்’ என்றிருக்கற்பாலது; சினம் முதலியவற்றால் மனம் குழம்பி வீறுகொண்டவர்களை மேலும் சினம் கொள்ளச் செய்தல்.
கோபத்தினால் தன்நிலை இழந்தோன் தனது ஆற்றலை எடுத்துக் கூறுதல். (ம. சூ. பக். 100)
இது நாடகச் சந்திகள் ஐந்தில் நான்காவதான விமரிசகத்தின் அங்கம் பதின்மூன்றில் ஒன்று. (வீ. சோ. 106 உரை)
பாத்திரங்கள் நாடக அரங்கில் தோன்றும் நிலைகள் (Postures). அவை ஆறுவகைப்படும். 1. நிற்றல், 2. இயங்கல் (-அங்குமிங்கு மாக நடந்து கொண்டிருத்தல்), 3. கிடத்தல் (-படுத்த நிலை), 4. இருத்தல் (-அமர்ந்திருக்கும் நிலை), 5. வருதல், 6 போதல் என்பன அவை. இவற்றுள் விதூடகன் எல்லா நிலைக்கும் உரியவன். மற்றவர்க்கு அவை அவரவர் நாடகப்பதவிக்கும் சந்தர்ப்பத்திற்கும் ஏற்றவாறு அமையும்.
நிலை என்றதனை ஓவிய நூலோர் தமக்கேற்ப ஒருவிதமாக வகுத்துக் கூறுவர். நாடக இலக்கணம் கூறுவோர் ஐம்பது வகையென்று வரையறை செய்து கூறிய பின் தொகுத்துக் கூறும் முறையில் ஒன்பது என்று அனைத்தையும் அடக்கிக் கூறுவர். அவை பதுமுகம், உற்கட்டிதம், ஒப்படியிருக்கை, சம்புடம், அயமுகம், சுவத்திகம், தனிப்புடம், மண்டிலம், ஏகபாதம் என்பன. (நாடக. 257-260 உரை)
நாடகநூலில் ஆசிரியன், பாத்திரங்களின் வாயிலாக நன்கு பொருத்தத்துடன் காட்டும் செய்கையாலும் பேச்சாலும் தம் மனத்தில் தூண்டப்பட்டெழுந்த சம்பந்தத்தின் திண்மை யால், காண்போர் (படிப்போர்) அவற்றைத் தம்முடையனவே என்ற நிலையில் அனுபவித்து உணரும் வகையில் இன்பம் அளிப்பதால் அச்சுவையை (-உணர்வை) நிலைக்கருத்து என்பர். இதுவே வடநூலார் கூறும் ‘ஸ்தாயிபாவம்’ என்பது.
இந்த நிலைக்கருத்துத் தோன்றக் காரணமாக இருப்பது விபாவம் என்பது. துணைக்கருவிகளாவன சஞ்சாரிபாவம் என்பன. இவற்றால் மனத்தில் மலர்ந்து துய்க்கப்படும் சுவை களை வெளிப்படுத்துவன சாத்துவிக பாவங்கள். இவையே அனுபாவம் எனப்படுவன; தமிழில் மெய்ப்பாடு என்றும் விறல் என்றும் கொள்ளப்படும். சஞ்சாரிபாவம் என்பன வியபிசாரிபாவம் என்றும் வழங்கப்படும்.
விபாவங்களால் தோன்றி அனுபாவங்களால் வெளிப்பட்டுச் சஞ்சாரி பாவங்களால் வலுப்பெற்று நிற்கும் ஸ்தாயிபாவமே சுவை எனப்படும். (நாடக. 54)
அல்லியம், கொட்டி, குடை, குடம், பாண்டரங்கம், மல் என்ற அறுவகைப்பட்ட நின்றாடுந் தெய்வக் கூத்து. (சிலப். 3 - 14, உரை) (L)
இசை பாடும் கோலங்கள் பத்தனுள் ஒன்று; நின்ற வண்ண மாகவே இசைத்தல்; வடநூலார் கூறும் ‘இலாசியம்’ என்பதன்கண் அங்கமான ‘ஸ்திதபாட்யம்’. (நாடக. 261)
பொதுவாக நடிகர்கள் வேடம் அணிந்து கொள்ளுமிடம். இஃது அரங்கின் புறத்தே இருத்தல் இன்றியமையாதது. அங்கே, இசைக்கருவிகளும், அவற்றை இசைத்துப் பாடும் இசைவல்லுநர்களும், பாத்திரங்களுக்கு வேண்டிய ஆடை அணிகளும், நடிகர் அமர்ந்துகொள்ள இடங்களும், அவர்கள் மறைந்துகொள்ளும் இடங்களும், கூத்தர்கள் தங்கும் இடங்களும், நாடகக் காட்சிக்கு வேண்டிய அலங்காரப் பொருள்களும் போன்றவை நினைத்தபோது பயன்படும் வகையில் சித்தமாய் இருத்தல் வேண்டும்.
ஆங்கிலத்தில் இதனை ‘Green Room’ என்பதனைக் கொண்டு, பசிய அறை என்னும் பொருளில் ‘பாசறை’ என்பாரும் உளர். (நாடக. 264, 265).
ப
பதம் -
பல்லவம், அதனின் இருபங்கு அநுபல்லவம், அதனின் இருபங்காம் சரணம் - எனுமிவை தாளம் தவறாமல் அமைத்துப் பேரின்பம் பெற வழங்கும் நாடகத் தமிழியல்; ‘கீர்த்தனை’ எனவும் ‘பதம்’ எனவும் சொல்லப்பெறும். (நாடகத்தமிழியல்பு. பக் 70, நாடக. 73)
நாடகத்தில் எந்த இடத்திலும் பொருந்தி வருவதாய், நினைத்துத் தாம் எதிர்பார்த்த ஒரு பொருளில் அதே போன்ற வேறொன்று எதிர்பாராமல் வருமாறு அமைப்பது. இது நாடக பாத்திரங்கள்பால் நிகழும்; பின்வரும் வகைகளில் நிகழும்:
1. தாம் நினைத்த வேறோர் எண்ணம் எதிர்பாரா விதத்தில் செவ்விதாகப் பொருந்துவது.
2. பல அடைமொழிகள் சேர்ந்த பல பொருள் கொண்ட சொற்றொடர்களை அமைப்பது.
3. வேறு ஏதோ பொருளில் பிறர் கூறும் சொற்களுக்குத் தன் எண்ணத்திற்கு ஏற்பப் பொருள் கொள்ளுவது.
4. சந்தர்ப்பத்திற்கு ஏற்றதாகவும் அதே சமயம் நாடகத்தின் இறுதியில் நடக்க இருக்கும் பொருளைக் குறிப்பால் உணர்த்துவதாகவும் அமைந்து, ஐயம் விளைக்கும் வகை யில் நாடக ஆசிரியன் சொற்றொடர்களைப் புகுத்துவது. (நாடக. 113, 114)
பயிர்முகம் எனினும் பிரதிமுகம் எனினும் ஒக்கும். விதையி னின்று கிளைத்தெழுந்த முளை மேலும் வளர்ந்து பெரிதா வது போலத் தலைவன்தலைவியரைப் பற்றிய செய்தி நன்கு பொலிவுறும் வண்ணம் விரிவடைதல் என்னும் நாடகத்தின் இரண்டாம் சந்தி. கட்புலன் ஆகாக் களை இதில் குறிப்பிடப் படுவதில்லை. முளை தோன்றியது முதல் இலைகளும் தழைத்து நாற்று நிலையில் இருத்தல்.
முகசந்தியின்கண் குறிப்பாகக் கூறிய கதைக்கரு சற்றே புலப் பட்டும் புலப்படாமலும் இருக்கும். அதனை நன்கு வெளிப் படையாகக் காட்டுவது பிரதிமுக சந்தியாம். விதை முளைத்து வந்த நாற்றுப் போலுதலின் ‘பயிர் முகம்’ எனப்பட்டது போலும். விந்துவும் பிரயத்தனமும் (-விரிநிலையும் முயற்சி யும்) இணைவது பிரதிமுகம் அல்லது பயிர்முகம் ஆம். இது பன்னிரு வகைப்படும். (ம. சூ. பக். 98)
முளைத்த அங்குரம் ஓங்கி மூத்தாற் போலத் தலைமக்கள் பற்றிச் சொன்ன பொருளைப் பொலியுமாற்றால் விரிவால் சொல்வது. (வீ. சோ. 106 உரை)
கூத்துவகைகளுள் ஒன்று; உள்ளக் குறிப்பு வெளிப்படத் தோன்றும் வகையில் அவிநயத்துடன் கூடிய பலவகை ஆடல்களும், இராகபாவம் நன்கு அமைந்த இனிய பாடல் களும், காண்போர் நெஞ்சைக் கவர்ந்திடும் வனப்பு மிக்க கூத்து. இது காமக்கணிகையரால் ஆடப்படுவது. (நாடக. 201)
நாடகம் முடிந்தபின், நாடகத்தின் தலைவனாக நடித்த நடிகன் அரங்கில் வந்து நின்று, நடித்த நாடகநூலினையும் அதனை இயற்றியவனையும், அவனுடைய ஆசானையும் தமிழ்மொழி யினையும் தமிழ்ப்புலவர்களையும் பாட்டால் வாழ்த்துவது.
பின்னுரையில் கூற வேண்டியவற்றையும் சேர்த்து இதனைச் செய்வதுமுண்டு. (நாடக. 220)
நாடகப் பொருள் மேலும் விரிவடைதல்.
பரிக்கிரியை: விதையினது-கதைக் கருவினது-அகற்சி.(ம.சூபக். 98)
இது நாடகச் சந்தியான முகத்தின் அங்கம் பன்னிரண்டனுள் ஒன்று. (வீ. சோ. 106)
விழையும் இன்பம் தரவல்லதாய்த் தான் முன் கண்ட பொருள் மறையப் பின் அதனை நாடிச் சேறல்; கண்டு பின்பு இழந்த பொருளைக் காதலித்துத் தேடல். (ம.சூ.பக். 98).
இது நாடகச் சந்திகளுள் இரண்டாவதான பிரதிமுகத்தின் அங்கம் பதின்மூன்றில் ஒன்று. (வீ. சோ. 106).
நாடகப்பொருளின் பயனை (- முடிவினை) வெளிப்படை யாக்குதல். விதையின் (-கதைக்கருவின்) நிலைபேறு. (ம. சூ. பக். 78.)
சந்தித்து உரையாடல்.
கலந்துரையாடல் (ம.சூ.பக். 100).
இது நாடகத்தின் இறுதிச் சந்தியாகிய நிருவகணத்தின் அங்கம் பதினான்களுள் ஒன்று. (வீ. சோ. 106 உரை).
ஐவகை நாடகச் சந்தியுள் முதலாவதான முகத்தின் அங்கம் பன்னிரண்டனுன் ஒன்று. (வீ. சோ. 106 உரை).
ஆர்வம் நிறைந்த பரபரப்பைத் தரும் செய்தியை வியப்புற்று நோக்குதல். (ம. சூ. பக்.98)
அணுகி நின்று குறையிரந்து வழிபடுதல்.
நயமொழி. (ம. சூ. பக். 98)
இது நாடக சந்தி ஐந்தனுள் இரண்டாவதான பிரதிமுகத்தின் அங்கம் பதின்மூன்றனுள் ஒன்று. (வீ. சோ. 106)
கண்ணுக்கெட்டாதது; அரங்கிலுள்ளோர் காதில் விழாத படி கூறும் மொழி. புறக்கூற்று நோக்குக. (L)
வரிக்கூத்து வகை. (சிலப். 3 : 13 அடியார்க்.)
1. உடல் கட்டுக்கடங்காமல் நடுங்குதல், 2. அந்நடுக்கம் பிறர் பரிகசிப்புக்கு இடனாதல், 3. பேசும்போது பனி தாக்கியதால் கம்பீரம் இன்றித் தளர்வொடு பேசுதல், 4. சொல்லத் தெரியா மல் உடல் வேதனைப்படுதல், 5. போர்வையைப் போர்த்திக் கொள்ள விரும்புதல், 6.மனம் வருந்திச் சோர்தல், 7. கண்கள் நீர் சோர்தல் 8. சந்தனம் முதலியன பூசுதலை வெறுத்தல் முதலியன. (இவை அடியார்க்குநல்லார் காட்டுவன). (நாடக. 253 உரை)
இதில் ஓரங்கம் மாத்திரமே உண்டு; காமம் வீரம் இரண்டும் விளங்கும். ஒரே பாத்திரம் தன் அனுபவத்தையும் பிறர் அனுபவத்தையும் விரித்துக் கூறிப் பாட்டும் ஆட்டமுமாய் நிகழ்த்துவது. (நாடக. 126)
இது வீரசோழிய உரை குறிப்பிடும் நாடக சாதியுள் ஒன்று. தூர்த்தனும் தலைவனும் இதன்கண் வருவர். அவர்கள் கூற்று ஐவகைச் சந்தியுள்ளும் வரும். அவர்கள் தாமேயும் பேசுவர்; பிறர் கூற்றை எடுத்து மொழிந்தும் பேசுவர். கடைசியில் சந்திஅங்கம் ஒன்றாகும். (வீ. சோ. 106 உரை)
உபசாதி நாடகம். இந்நாடகத்தின் தலைவன் தகுதியற்றவனா யிருப்பான். ஆயின் தலைவி சுகுணை வகையைச் சார்ந்தவ ளாய் இருப்பாள். உயர்ந்த அழகிய உடைகள் அணிந்த தலைவனும் தலைவியும் காட்டப்படுவார்கள். கைசிகி, பாரதி என்னும் இரண்டு விருத்திகளையும் பெறும் இது ஓர் அங்கமே உடையது. (நாடக. 157)
பாத்திரங்கள் தம் இயல்பில் முன்னுக்குப் பின் முரண்படும் தன்மை இருத்தல் கூடாது. ஒவ்வொரு பாத்திரமும் தனக்கே உரிய ஒரு தனித்தன்மை பெற்றிருத்தல் வேண்டும். நாடக ஆசிரியன், எப்பாத்திரத்தின் வாயிலாக எப்பண்பை உணர்த்த விரும்பினானோ, அது நன்கு வெற்றி பெறுதல் வேண்டும். (நாடக. 115)
நாடகக் கதையில் வரும் கதாபாத்திரங்கள், அவர்கள் அசுரர், தேவர், அரக்கர், முனிவர், யோகியர், மக்கள் ஆவோர். பாரதி கூத்தனையே தலைவனாகக் கொண்டு இழிப்பும் அச்சமும் பட வருவது. (வீ. சோ. 106 உரை.)
அசுரரைக் கொல்ல அமரர் ஆடிய பதினோராடலும் ஆம். இது ‘தெய்வ விருத்தி’ எனப்படும். (ம. சூ. பக். 16)
முன்னைய விருத்திகள் மூன்றும் (சாத்துவதி, ஆரவடி, கைசிகி போலன்றி, முன்னுரையில் முதன்மை பெற்று, கூத்தன் நாடகத்தலைவனாக, நடிகை நடர்கள் கூறப்படும் பொருளாகக் குறிப்பாகக் காட்டியும் வெளிப்படையாக எடுத்துரைத்தும், சற்றே வலிமை பொருந்திய சொற்றொடை பெற்று இழிப்புச் சுவையும் அச்சச்சுவையும் நிரம்பி வருவது. பாரதி விருத்தி என்பதும் அது. (நாடக. 172 ) (நாடக. 81, 82.)
கூத்துப் பதினொன்றனுள் அவுணர் மோகித்து விழும்படி கொல்லிப்பாவை வடிவுகொண்டு திருமகள் ஆடிய ஆடல். (சிலப். 6: 60, 61) (L)
பிரகசனம் -
நகைச்சுவை மிகுதியாகப் பெற்ற நாடக வகை இது. இதன் பாத்திரங்களிடையே, முனிவர், தேவர், மறையோதிய அந்தணர் போன்றோர் வருவர். இப்படி வரும் பாத்திரங்கள் இழிதகவும் பழியும் பெறும். அஃதாவது அவர்களை இழித் தும் பழித்தும் கதைப்போக்கு அமையும். வெறும்போலிக ளான மக்கட்பதர்கள் நாடகத்தலைவராய் அமைவர். சாத்துவதி, கைசிகி என்னும் விருத்திகளும் அமையும். நகைச் சுவைக்கே இது தலைமை வாய்ந்தது. ஓர் அங்கமோ இரண்டு அங்கங்களோ இதன்கண் இருக்கும்.
சாத்துவதி, கைசிகி என்னும் விருத்திகளின் விளக்கம் தனித் தனித் தலைப்பில் காண்க. (நாடக. 134)
பிரகமனம் -
கூற்றும் மாற்றமுமாகச் செல்லும் உரையாடல் பிரகமனம். மறுமொழிபெறுதல். (ம. சூ. பக்.98)
இது நாடகச் சந்திகளுள் இரண்டாவதான பிரதிமுகத்தின் அங்கம் பதின்மூன்றில ஒன்று. (வீ. சோ. 106 உரை)
பிரகரணப் பிரகரணம் -
அறம் பொருள் இன்பம் இவற்றைப் பொருளாகக் கொண்ட நாடக வகை. (சிலப். 3 : 13 உரை) (L)
பிரகரணம் -
அந்தணன் வணிகன் அமைச்சன் ஆகியோருள் ஒருவனைத் தலைவனாகக் கொண்டு, கற்புடைய ஒருத்தியோ பரத்தையோ இருவருமேயோ தலைவியராக, நாடகம் போலவே ஐந்து அங்கங்கள் அளவுக்குக் குறையாமல், உவகைச்சுவை பெரிதும் பெற்றுவருவது இந்நாடகச் சாதி நூலாகும். (நாடக. 125)
பிரகரணி -
உபசாதி நாடகம். நாடகத்திற்கும் நாடிகைக்கும் இடையே எந்த அளவு வேறுபாடு உண்டோ, அந்த அளவு பிரகரணத் திற்கும் இதற்கும் இடையே வேறுபாடு காணப்படும்.
தலைவனும் தலைவியும் வணிகர்களாக, மற்ற எல்லாவிதத் திலும் நாடிகை போலவே அமைவது. (நாடக. 155)
பிரசங்கம் -
பெரியோரை நினைத்து விளித்தல், உடனடித் தொடர்பற்ற (அஃதாவது கதைநிகழ்வுடன் இன்றி அதன் கடந்த காலத் தொடு தொடர்புடைய) பொருள்களையோ நிகழ்ச்சிகளை யோ கூறுதல்.
பிரசங்கம்-பெரியோரைப் போற்றுதல். (ம. சூ. பக். 100)
இது நாடக சந்திகள் ஐந்தில் நான்காவதான விமரிசத்தின் அங்கம் பதின்மூன்றில் ஒன்று. (வீ. சோ. 106 உரை)
பிரசஸ்தி; அஃதாவது மங்கலவாழ்த்து.
பிரசத்தி-ஆசிமொழி (ம. சூ. பக். 100)
இது நாடகத்தின் இறுதி சந்தியாம் ஐந்தாவதாகவுள்ள நிருவகணத்தின் அங்கம் பதினான்கில் ஒன்று.
பூர்வபாவம்; காரியத்தைக் கண்டறிதல்
பூர்வபாவம்-கரும முடிவை எதிர்நோக்குதல். (ம.சூ. 100)
இது நாடகத்தின் இறுதிச் சந்தியாம் ஐந்தாவதாகவுள்ள நிருவ கணத்தின் அங்கம் பதினான்கில் ஒன்று. (வீ.சோ. 106 உரை)
உபசாதி நாடகம். இது பாரதிவிருத்தியில் அமையும். நாடகத் தின் தலைவனும் தலைவியும் அடிமைத்தொழில் செய்யும் மக்களா யிருப்பர்; உபநாயகனும் உண்டு. இதன்கண் இரண்டு அங்கங்கள் உள; நாடக பாத்திரங்கள் கள் குடித்த களிப்பில் தம் கருத்துக்களைக் கூறுவதும், செய்துமுடிப்பதும் நிகழும். (நாடக. 143 )
கதாநாயகனுடைய முதன்மையான பகைவன். (L)
‘நாடகச் சந்தி ஐந்தனுள், முளைத்து இலைதோன்றி நாற்றாய் முடிவது போல நாடகப் பொருள் நிற்பது’ (சிலப். 3:13 உரை). ‘பயிர்முகம்’ என்னும் வீரசோழிய உரை.
நிகழப்போவதை நிகழ்ந்து விட்டதாகவே உறுதி பற்றி வந்த உணர்வால் வலியுறுத்திக் கூறுதல்.
நன்மைப்பேறு வரும் என்னும் துணிவினால் மேல் நடக்கப் போகும் நிகழ்ச்சிகளை நோக்குதல். (ம. சூ. பக். 100)
இது நாடகச் சந்திகள் ஐந்தனுள் நான்காவதான விமரிசத்தின் அங்கம் பதின்மூன்றனுள் ஒன்று (வீ. சோ. 106 உரை)
நாடகம் தொடங்குகையில், அவையோர்க்கு நாடகக் கதையை உணர்த்தும் தோற்றுவாயுறுப்பு. (L)
நாடக சந்தியுள் ஒன்று.
பிரகசனம், சுத்தமும் சங்கீரணமும் என இரண்டாம். சுத்தம், தக்காரை இகழ்ந்து வருவது; சங்கீரணம், பாஷண்டன் தலைவனாக இருப்பத் தோழியர் கணிகையர் தூதர் அலிகள் பேடியர் என்றிவர்களையுடையது, இறுதிக்கண் சந்தியின்றி அங்கம் ஒன்றாவது. (வீ. சோ. 106 உரை)
வடமொழியில் ‘ப்ராப்தி’ (-அடைதல்) எனப்படும்; நாடகப் பொருளாகிய பயன் பெறப்படுதல்.
பிராத்தி-சுகத்தினை அடைதல் (ம. சூ. பக். 98)
இது நாடகச் சந்தியான முகத்தின் அங்கம் பன்னிரண்டனுள் ஒன்று. (வீ. சோ. 106 உரை)
உபசாதி நாடகம்; சூத்திரதாரன் கூறும் முன்னுரை பெறாமலும், நாட்டியம் குரவை போன்ற கூத்துக் கலவாம லும், சாத்துவதி ஆரவடி கைசிகி பாரதி என்னும் நான்கு விருத்திகளிலும் அமைந்து, மற்போரும் விற்போரும் நிகழ வருவது. இதன்கண், நாடகத் தலைவன் ஓர் இழிந்த பாத்திர மாகவே அமையும். இதில் ஓரங்கம்தான் உண்டு. (நாடக. 147)
1. தீரோதாத்தன் 2. தீரசாந்தன் 3. தீரோத்ததன் 4. தீரலலிதன் என்னும் நால்வரில் ஒருவன் நாடகத்தலைவனாகும்போது, கதைப் போக்கிற்கேற்ப அ) உபநாயகன் என்பானும் ஆ) பீடமர்த்த நாயகன் என்பானும் வருதல் உண்டு.
அ) உபநாயகன் - உதவித் தலைவன், இலக்குவன் போல; தலைவனை ஒத்த தலைமையியல்புடையோன்.
ஆ) பீடமர்த்த நாயகன் - நாடகத் தலைவனுக்கு உற்ற துணைவன் இவன்; தலைவனைவிடச் சற்றே குறைந்த நிலையுடையவன்; தலைவனுடைய காரியங்கள் பலவற்றிலும் பங்குடையவன், சுக்கிரீவனைப் போல. (நாடக. 91- 93)
நாடகத்தின் முடிவில் தலைமைப்பாத்திரங்களில் ஒருவன் அரங்கில் தோன்றி நிகழ்ந்த நாடகத்தால் புலப்படும் நீதியை நன்கு விளக்கி நாவன்மை தோன்றப் பேசி, இன்னிசையால் கடவுளை வாழ்த்தியும் அவைக்களத்தோரைப் பாராட்டும் நன்றியுரை தெரிவித்தும் போவது.
சூத்திரதாரனே பின்னுரை கூறுவதும் உண்டு. பின்னுரை கூறாத நாடகங்களும் உள. (நாடக. 217 - 219)
நயம் கூடும் வகையில் ஒருவர் கூற்றை மற்றவர் மேலும் சிறப்புறுத்திக் கூறுதல்.
புட்பம் - நன்னயக் குறிப்பு. (ம.சூ. பக். 98)
இது நாடகச் சந்திகளில் இரண்டாவதான பிரதிமுகத்தின் அங்கம் பதின்மூன்றனுள் ஒன்று. (வீ. சோ. 106 உரை)
நாடக உறுப்பாகிய களம் ஒன்றில் பொருந்திய நாடக பாத்திரங்கள் பலருள்ளும், ஏனையோர் கேளாதவாறு சிலர் தம் முள்ளேயே பேசிக்கொள்ளும் கூற்று. இதனை ஆங்கிலத் தில் (Aside Speech) என்பர். (நாடக. 196)
கூத்துவகையேழனுள் ஒன்றான வரிக்கூத்து வகை எட்டனுள் ஒன்று.
வருக என அழைத்தபின் தலைவி வந்து, இன்பமுற விரும்பும் தலைவனோடு இணைந்து கூடாமலேயே, புறத்துநின்று விளையாடுதல். (சிலப். 8 : 90 - 93) (நாடக. 210)
நாடகக் கதையைப் புனையும் முறை. நாடக பாத்திரம் இந்தப் பிறவியில் செய்யும் வினைகளுக்கு ஏற்ப உரிய முறையில் நன்மையும் தீமையும் அடையும் பொருத்தம் தோன்ற நாடகத்தை இயற்றல் வேண்டும். (நாடக. 222)
நாடகங்களுக்குப் பெயரிடும் வகை. தலைவன்தலைவிய ருடைய பெயரினையோ, நாடகக் கதையில் மிகச் சிறப்பான செய்தியினையோ சார்த்தி நாடகங்களுக்குப் பெயரிடல் வேண்டும். (நாடக. 221)
புருவம் ஏற்றி வளைத்தலும், கண் சிவத்தலும், வாளைப் பிடித்தலும், பற்களைக் கடித்தலும், உதடுகள் துடித்தலும், அவற்றைக் கடித்தலும், புருவம் நெருங்குதலால் நெற்றித் தோல் சுருங்குதலும், திட்பம் அமைந்த பேச்சும், பகைவரைப் பொருட்படுத்தாமையும், அவர்களை இகழ்தலும், இவ் வுணர்ச்சிகளைக் காட்டும் வேறு நடிப்புச் செயல்களும் ஆம். (நாடக. 244.)
கூத்துப் பதினொன்றனுள் ஒன்றானதும், வாணனாற் சிறை யிடப்பட்ட தன்மகன் அநிருத்தனைச் சிறை மீட்டுப் பிரத்தியும்நன் ஆடியதுமான கூத்து.
(சிலப். 6 - 56, 57; மணி. 3 : 116 - 125)
இணைந்த பல இடையூறுகளை உடைத்துக் களைந்து உற்சாக மூட்டுதல்.
பேதம் - வேதை; மேல் நோக்கும் இயக்கம். ம.சூ.பக். 98 இது நாடகச் சந்தியான முகத்தின் அங்கம் பன்னிரண்டனுள் ஒன்று. (வீ. சோ. 106)
இது வீரசோழிய உரையுள் குறிப்பிடப்படும் நாடகச் சாதி யுள் ஒன்று. இதன்கண், தேவசாதி, கந்தருவசாதி பைசாச சாதியைச் சேர்ந்த பதினாறுபேர் வருவர்; பெண்பாத்திரம் ஒருதலையாக நிகழும். வீரம், கூச்சம், அர்ப்பாயம், வியோகம், பாணம், சல்லாபம் இவற்றிற்குரிய கதைச் சுருக்கங்களில் ஒன்றனைப் பெற்று வரும். இஃது ஒரே அங்கமுடையது; ஒரே கண்டமுடையது. இஃது இடிமம் என்ற நாடகச் சாதியோடு ஒருபுடை ஒப்புமையுடையது. (வீ. சோ. 106 உரை)
நாடகவியலில் முதற்பகுதி; இதன்கண் கீழ்க்கண்டவை கூறப்படுகின்றன;
1) முத்திறக்கதை, 2) நாற்பொருள், 3) ஐந்து சந்தி, 4) ஒன்பான் சுவை, 5) மூன்று வகைப் பொருத்தம், 6) மூன்று விதமான நடை, 7) கவி கூற்று இன்றிப் பாத்திரமே கூறுதல், 8) கதாந்தம் இரண்டு, 9) பாத்திரங்களின் இயல்பு அறியும் செவ்வி, 10) நாடகப் பாத்திரங்களின் சிறப்பியல்புகள் பொலிவுறுதல் என்பன. (நாடக. 11)
பொருத்தமாவது ஒற்றுமையுடைமை. நாடகத்தில் வரும் இடமும், காலமும், செயலும் நன்கு பொருந்துதல் வேண்டும். இப்பொருத்தமுடைமையை மேலைநாட்டார் `Unity’ என்பர்.
1. இடப்பொருத்தம் - (Unity of place)
2. காலப் பொருத்தம் - (Unity of time)
3. செயற்பொருத்தம் - (Unity of action)
இது கிரேக்க நாட்டு நாடக இலக்கணம் கூறும் கருத்து.
(நாடக. 61 உரை)
அரசனது செங்கோல் முறையையும், அரசின் அங்கமான வற்றின் தன்மைகளையும் கூறும் பொருட் பகுதி. அரசு அங்கம் ஆறாவன படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்பன. (கு. 381) (நாடக. 23)
ம
1. பிறர் அருவருத்தும் பழித்தும் நோக்குமாறு உடல்மழை நீரால் நனைந்தும் ஆடைகள் நீரிலும் சேற்றிலும் தோய்ந்தும் காணப்படும் இயல்புடைமை,
2. உடம்பின்கண் ஈரத்தின் குளிர்ச்சியால் ஏற்பட்ட நடுக்கம்,
3. நடுக்கத்தால் கைகளை மார்பொடு பிணித்துக்கொள் ளுதல்,
4. ஈரம்போக உலர்ந்த துணியால் உடம்பை முகம் மறையப் போர்த்திக்கொள்ளுதல்.
5. மனம் சோர்ந்திருத்தல்,
6. கண்ணொளி மழுங்கியிருத்தல்,
7. காற்றொடு கூடிய மழை தாக்கியதால் காதடைத்திருத்தல்,
8. குளிரால் உடம்பு வெட்டிவெட்டி இழுத்தல்,
9. கீழ்வாய் மேல்வாய்ப் பற்கள் ஒன்றோடொன்று தாக்கி ஒலியெழுப்புதல்,
10. கனவில் மழையில் நனைவதாகக் கண்டு திடீரென்று விழித்தெழுதல் முதலியன.
இவை அடியார்க்குநல்லார் காட்டுவன. (நாடக. 253 உரை)
பதாகை யென்னும் இடைக்கதை; கிளைக்கதைகளின் நான்கு நிலைகளும் நன்கு அமைந்து, நாடகத்தின் பல்வேறு சிறப் பான பகுதிகளும் முழுவதும் வரப்பெற்று, உவகைச்சுவை பெருமிதமாகிய வீரச்சுவை - என்னும் இரண்டையும் மிகவும் மேம்படுத்திக் காட்டி, பத்து அங்கங்களுடன் அமைவது.
`பதாகை நிலை’ என்ற தனித்தலைப்பில் காண்க. (நாடக. 161)
உள்ளதை உள்ளவாறே உரைத்தல்.
மார்க்கம் - உண்மைக் கருத்தினைக் குறிப்பிடுதல்.
(ம. சூ. பக். 99)
இது நாடகத்தின் மூன்றாவது சந்தியான கர்ப்பத்தின் அங்கம் பன்னிரண்டனுள் ஒன்று. (வீ. சோ. 166 உரை)
தானே நேரில் நின்று பேசுதல். (இ. வி. 563 உரை)
உழுத புழுதியினின்று முளைத்தாற்போலக் கூத்தின் முகத்தி னுள்ளே பொருள் தோன்றுவது. அஃதாவது விதை முளைத் தாற்போல, நாடகத் தொடக்கத்திலேயே நாடகப் பொருள் தோன்றுவது. (வீ. சோ. 106 உரை)
நாடகக் கதை செவ்வனே தொடங்கி, உழுது சேறான நிலத்தில் இட்ட விதை முளைத்து வெளிப்படுதல் போல்வது. (நாடக. 33)
நாடகக்கதையின் மூலமான கருத்து - பல்வேறு உணர்ச்சி களும் வெளிப்படத் தோன்றும் இடம் - நாடகக் காப்பியத் தொடக்கமாம்.
முகம் - முகசந்தி எனப்படும். கதைக்கரு சிலேடையாகவும் குறிப்பாகவும் வெளியிடப்படுவதும் இதுவே. கதைக் கருவா னது வடநூல்களில் `பீஜம்‘ (- விதை) எனப்படும். இது நாடகத்தின் முதல் சந்தி.
பீஜமும் ஆரம்பமும் சேர்ந்து அமைவது முகம்; பல்வகைப் பொருளுக்கும் சுவைக்கும் முதலாகி நிற்றலாலும், விதையி லிருந்து தோன்றியதாலும் முளை போல்வது. (ம. சூ. பக். 97)
கூத்து நடாத்துநராகிய சூத்திரதாரன், நடி, நடன் என்ற மூவரும், காலம் இடம் செயல் ஆகிய மூன்றையும் நன்கு வருணித்துக் கூறும் ஆற்றலுடையவர்களாக இருப்பர்; அவருள் ஒருவர், முன்வந்து அரங்கில் நின்று, நாடகத்தின் மூலம் கூறும் நீதிகளை இனிய இசைப்பாட்டுக்களால் நாடகத்தின் தொடக்கத்திலும் இடையிலும் முடிவிலும் பாடி ஆடும் கூத்துக்கள் இவை.
எவ்வகைக் கூத்தும் நிகழாத நாடகங்களும் உள.
(நாடக. 215, 216)
ஒரு பெரிய `விஷயத்தின், (கதையின்) முதல் இடை கடை என்னும் மூன்று நல்ல பகுதிகளையும் தனித்தனியே மூன்று நாடகங்களாக இயற்றி மூன்றையும் தொடர்ச்சியாகத் தொகுத்து வைத்தல். (இது மேனாட்டார் கருத்து.)நாடக. 162.
நாடகத் தொடக்கத்தில் கூறப்படும் பொருள்;
சூத்திரதாரன், அரங்கில் கூடியுள்ள அவையினரை வணங்கி, தன் துணைவர் களான நடியையும் நடனையும் அழைத்து, அவர்களுடன்
உரையாடும் வாயிலாக நாடக ஆசிரியனுடைய நல்ல இயல்
புகளை எடுத்துரைத்துக் கதை நிகழும் பருவகாலத்தை
வருணித்து இனிய இசைபாடச் செய்து, அவையோரை மகிழ்வித்துக் கூறும் தொடக்கவுரை. இதனை வடநூலார்,
‘ஆமுதம்’ எனவும்,
‘பிரஸ்தாவனை’ எனவும் கூறுப ஆங்கி லத்தில்
இது Prologue
எனப்படும். (நாடக. 183)
ய
இசை பாடும் கோலங்கள் பத்தனுள் ஒன்று; இசைக் கருவி களின் ஒலிக்கு இணங்க இசை கூட்டிப் பற்பல யாப்பின் விகற் பங்களைத் தெரியக் காட்டிப் பாடி ஆடவரும் பெண்டிரும் தத்தம் இயல்புக்கு மாறாக நடித்தல்.
வடநூலார் கூறும் இலாசியம் என்பதன் அங்கமான ‘புஷ்ப கண்டிகா’ இது. (நாடக. 261)
நாடகப் பொருள் நிறைவேறுதற்கான வழிகளை ஆராய்தல். யுக்தி - இது செய்வோம் என நிச்சயித்தல். (ம. சூ. பக். 98)
இது நாடக சந்தியான முகத்தின் அங்கம் பன்னிரண்டனுள் ஒன்று. (வீ. சோ. 106)
1. உள்ளோன் தலைவனாக உள்ள துரைத்தல். 2. இல்லோன் தலைவனாக இல்லது இசைத்தல். 3. உள்ளோன் தலைவனாக இல்ல துரைத்தல். 4. இல்லோன் தலைவனாக உள்ளது இயம்பல் என்பன முதலாவது மெய்யுரை; இரண்டாவது பொய்யுரை; ஏனையிரண்டும் புனைந்துரை.
யோனி ‘ஒளி’ எனவும் படும். (நாடக. 17, 18, 19)
வ
கொடுஞ்சொற் கூறுதல்.
வச்சிரம் - கடுஞ்சொற் கூறுதல். (ம. சூ. பக். 98)
இது நாடகச்சந்திகளில் இரண்டாவதான பிரதிமுகத்தின் அங்கம் பதின்மூன்றில் ஒன்று. (வீ. சோ. 106 உரை)
வரிக்கூத்து -
கூத்துவகை ஏழனுள் ஒன்று; நடிப்போர் தாம் விரும்பி நடிக்க மேற்கொண்ட கோலத்திற்கு ஏற்ப, உணர்ச்சியும் செயலும் வெளிப்படுமாறு நடிக்கும் வினோதக் கூத்து.
இக் கூத்துக்குரிய வரி 1. கண் கூடுவரி, 2. காண்வரி, 3. உள்வரி, 4. புறவரி, 5. கிளர்வரி, 6. தேர்ச்சிவரி, 7. காட்சி வரி, 8. எடுத்துக் கோள் வரி என எட்டுவகைப்படும். (நாடக. 205, 206)
வரிப்பாட்டு (1) -
அகப்பொருள்துறைக் கருத்துடன், உவகைச் சுவையோடு, இராகமும் அதன் உட்பிரிவும் செயன்முறையும் தாளமும் பலவாறு மாறிவரும் வகையில், எட்டும் ஆறுமாகிய தாள விகற்ப இயல்புகளைப் பெற்று, பாடலின் முதலும் இறுதியும் சீர்குறைந்த அடிகளைக் கொண்டோ எல்லா அடிகளும் சீர்குறைந்த அடிகளைக் கொண்டோ எல்லா அடிகளும் சீர்குறைந்த முடப்பாட்டாகவோ முடிந்து, அகப்பொருளில் கூறப்பட்ட சந்தியும் சார்த்துக்களும் பெற்றும் பெறாமலும், தெய்வத்தைக் குறித்தும் மக்களைத் துதித்தும் இனிமையாகப் பாடப்படுவது.
சந்தி - நாடக உறுப்பாக வரும் சந்திகள்;
சார்த்து - பாட்டுடைத் தலைவனுடைய ஊரும் பெயரும் சார்த்திப் பாடுவது; இது முகச் சார்த்து, முரிச் சார்த்து, கொச்சகச் சார்த்து என மூவகைத்து முகச்சார்த்துவரிக்கு மூன்றடிச் சிறுமை, ஆறடிப் பெருமை. ‘வரிப்பாட்டு வகை’ காண்க. (நாடக. 76)
வரிப்பாட்டு (2) : வகைகள் (2) -
பண்ணும் திறனும் விரவுற்ற தாளமும் என்னுமிவை பொருந்தி, நாற்சீரடி முதலாகப் பலசீரடிகளால், விருத்தம் ஒன்று மூன்று அடுக்கியும் ஈற்றடி குறைந்தும், இடையடி மடக்கடியாயும், தெய்வத்தைச் சுட்டியும் மக்களைப் புகழ்ந்தும் வருவது வரிப்பாட்டாம். பொருளமைவாலே, இஃது ஆற்றுவரி - கானல்வரி - நிலவரி - முரிவரி - திணை நிலைவரி - சார்த்துவரி, மயங்குதிணை நிலைவரி - சாயல்வரி - வேட்டுவவரி எனப் பலவகைப்படும். (தென். இசைப். 10)
வரிப்பாட்டு வகை : விளக்கம் -
1. ஆற்றுவரி - தடங்கலின்றிச் செல்லும் இழுமென்னும் ஓசை யுடன் தடைப்படாமற் செல்லும் ஒழுகுவண்ணத்துடன், ‘தன்னுள் கையா றெய்திடு கிளவி’ என்ற அகப்பொருள் துறையை ஆற்றின்மேல் வைத்துப் பாடப்படுவது.
2. சார்த்துவரி - அ) முகம் ஆ) முரி இ) கொச்சகம் என்ற மூன்று பகுதியாகத் தனது உள்ளக் கிடக்கையைத் தன்னை ஆட்கொண்ட தலைவனது ஊர்ப்பெயருடன் சார்த்தி இசைக்கப்படுவது.
3. கானல் வரி - கடற்கரைச் சோலையில், காமநோய் மிகுந்தபொழுது தலைவன்தலைவியர் இருவரும் தம்முள் ஒருவர் மற்றவருடைய எழில்நலம் மிக்க உறுப்புக்களை உற்றுநோக்கிக் காதலுறப் பாடப்படுவது.
அ) முகம் - வரிப்பாட்டுக்கு முகமாய் நிற்றலின் இப்பெயர் பெற்றது.
ஆ) முரி - தொடங்கிய இயலையும் இசையையும் அவற்றுள் முரித்துப் பாடுவது.
இ) கொச்சகம் - முகத்தாலும் முரியாலும் தோன்றிய வேறுபட்ட பொருண்மையெல்லாம் தன்னகத்து அடக்கி, ஒரு நெறிப்படுத்தலால் இப்பெயர் பெற்றது.
4. நிலைவரி - முகமும் முரியும் முடிவுபெற நின்று தான் மனத்தில் நினைந்த பொருளே எதிரில் தோன்றித் தன்னை வருத்த, உருவம் மாறி இங்கு வந்து நிலைபெற்றது போல மயங்கி உள்ளம் வருந்தி அப்பொருளின் பெயரை மீண்டும் கூறுவது.
5. முரிவரி - துயரம் தாங்காமல் அஃறிணைப் பொருள்களை விளித்து, தன்னை வருத்தும் பொருள்கள் இன்னவை என்று புலம்பி, (அராகம் தொடுப்பதாகிய) உருட்டு வண்ணப்பாவால் பாடப்படுவது.
6. திணைநிலை வரி - அகப்பொருள் ஐந்திணை கட்கும் அமைந்த உரிப்பொருள்களின் இயல்பை விளக்கிப் பாடப்படுவது.
7. மயங்கு திணைநிலைவரி - ஐந்திணையின் கருப்பொருள்கள் தம்முள் ஒன்றோடொன்று மயங்குதலைக் காட்டி, உரிப்பொருளையும் காட்டிப் பாடப்படுவது.
8. சாயல்வரி - தலைவி, தன் மனத்தில் காதலை விதைத்த தலைவனை நினைந்து, அவனுடைய அழகை நினைவு கூரும் வகையில் ஓரடி இடையில் மடக்கி வரும்படிப் பாடப்படுவது.
9. முகமுடை வரி - மூன்றடிகள் முதல் ஏழடிகள் வரை அமையப் பாடப்பெறுவது; சிந்தடியும் நெடிலடியுமாய்ப் பொருந்தியும் பொருந்தாமலும் வரப்பெறும்; முகம் என்னும் உறுப்பொடு பாடப்படுவது.
10. முகமில் வரி - பிரிவால் வாடி வருந்திய மனநிலையில், பறவைகளுடனும் விலங்குகளுடனும் பேசிப் புலம்பும் தலைவனோ தலைவியோ, ஏனையவருக்குத் தன் துயரத்தைக் கூறுமாறு வேண்டி, மும்முறை அடுக்கிவரப் பாடப்படுவது.
11. படைப்பு வரி - ஒன்றாகவோ, பலவாகவோ, வெண்பா வாலோ ஆசிரியப்பாவாலோ, கொச்சகம் பெற்றோ பெறாமலோ, உறுப்புக்கள் பலவும் பெற்றுவரும் வகையில் பாடப்படுவது.
இவை போன்ற வேறுவகையான வரிப்பாட்டுக்களும் இசை நாடக நூலறிஞர் இனிமை பயக்க அமைப்பதும் உண்டு. (நாடக. 77)
பிறர் கூறியவற்றைக் குறைகண்டு மறுத்தல்.
எல்லாப் பிரிவினரையும் ஒன்று கூட்டிக் கூறுதலும் இதுவே.
வருணசங்காரம் - நால்வகை வருணத்தாரும் ஓரிடத்தில் ஒருங்கு கூடுதல். (ம. சூ. பக். 98)
இது நாடக சந்திகளில் இரண்டாவதான பிரதிமுகத்தின் அங்கம் பதின்மூன்றனுள் ஒன்று. (வீ. சோ. 106 உரை)
பொருத்தமில்லாது துன்பத்தைத் தன்னிடம் சேர்த்துக் கொள்ளுதல், உடம்பு சோர்தல், தலைமயிர் குலைதல், வியர்வை மிகுதல். அடிக்கடிச் சிறிய கொட்டாவி விடுதலைப் போன்ற சோர்வு தோற்றுதல், உதடுகள் வறண்டுபோதல், உறுப்புக்கள் துவண்டு காணப்படுதல் போல்வன. (இவை அடியார்க்குநல்லார் காட்டுவன) (நாடக. 253 உரை)
‘செய்யுள் இயக்கம் காண்க.’
இறைவனை வணங்குமுகத்தான் நாடகத் தலைவனையும் தலைவியையும் வணங்குதல். வடநூலார் கூறும் அரங்க வழிபாடான ‘நாந்தி’ என்பது இதுவே.
சூத்திரதாரனே வாழ்த்தினைக் கூறுபவன். (நாடக. 175)
தன் ஆற்றலை வியந்துரைத்தல்.
விசலனம் - தற்புகழ்தல். (ம. சூ. பக். 100)
இது நாடகச்சந்திகள் ஐந்தனுள் நான்காவதான விமரிசகத்தின் அங்கம் பதின்மூன்றில் ஒன்று. விமரிசம் - வைரிமுகம். (வீ. சோ. 106 உரை)
நாடகத்துள் அங்கங்களுக்கு இடையில் வருதற்குரிய உறுப்பு.
இவன் நுண்கலைகளில் நல்ல தேர்ச்சியுடன் சுவை காணும் வாழ்வினன்; மிக நயமாகவும் இனிமை பயக்கவும் பேசும் இயல்பினன்; இன்பம் தரும் நடைஉடைபாவனைகளைக் கொண்டவன்; சுவை கண்டு வாழ்வதால் செல்வம் சிறிது குறைந்து நலிவுற்றவன்; ஆயினும் மேலான இயல்பு குறையாதவன். (நாடக. 99)
மனக்கலக்கம் - (கொலை, சிறைப்படுதல் போன்றவற்றால் விளைவது)
வித்திரவம் - கொல்லுதல், கட்டுதல் செய்தல் (ம. சூ. பக். 99)
இது நாடகச் சந்திகள் ஐந்தனுள் நான்காவதான விமரிசத்தின் (வைரிமுகம் என்பதும் அது.) அங்கம் பதின்மூன்றில் ஒன்று (வீ. சோ. 106 உரை)
நாடகப் பொருள் பற்றிய இன்பமும் துன்பமும் நிகழ்வு. (கதையின் நிகழ்ச்சி)-
விதானம் இன்பமும் துன்பமும் காரியப்படுதல். (ம. சூ. பக். 98)
இது ‘நாடகச் சந்தியான முகத்தின் அங்கம் பன்னிரண்டில் ஒன்று. (வீ. சோ. 106 உரை)
நாடகக்கதை நிகழ்ச்சிக்கு இன்றியமையாத பல பயன்களை விளைக்கவல்ல பாத்திரம் ஆவான் விதூடகன். இவன் அரசவையைச் சார்ந்த பெருமையுடையோனாயிருப்பன்; தன் நுண்ணறிவால் எதனையும் ஊகித்தறியவல்லவன். இவ னுடைய பேச்சும் செயலும் இதம் அளிப்பனவாக அமையும். கற்பனையாகப் படைத்துப் பேசும் ஆற்றல் இவனுக்குண்டு. இவனுக்கு உலகியல்பெல்லாம் நன்கு தெரியும். உண்மையை ஆய்ந்தறிவதில் இவன் வல்லுநன்; புதிதுபுதிதாகச் சாதுரியம் மிக்க வசனங்கள் பேசுவோன். நாடக மேடையில் இவன் தோன்றும் போதெல்லாம் நகைச்சுவை மலரும். தானும் விநோதமாகத் தோன்றிப் பிறரையும் விநோதவுணர்வுக்கு உட்படுத்துபவன் இவன்.
சில நாடகங்களில் விதூடகன் என்றொரு தனிப் பாத்திர மின்றியே வேறு பாத்திரங்கள் இவன் செய்வதனைச் செய் வதுண்டு.
விதூடகன் இல்லாத நாடகமும் உண்டு. (நாடக. 96 - 98)
விதூதம் - விதுதம் - வித்ருதம்; இன்பம் வேண்டிச் செய்யும் தன் வழிபாடுகள் மறுக்கப்படுதலும், அதனால் தோன்றும் புலம்பலும்.
பிரிவு காரணமாக இன்ப நுகர்ச்சி எய்தப் பெறாதிருத்தல். (ம. சூ. பக். 98)
இது நாடக சந்திகளுள் இரண்டாவதான பிரதிமுகத்தின் அங்கம் பதின்மூன்றில் ஒன்று. (வீ. சோ. 106)
வைரிமுகம் எனினும் இதுவே.
இது அவமர்சம் எனவும்படும்.
மதங்க சூளாமணி இதனை `விளைவு’ எனக் குறிக்கும் (பக். 99) இஃது இயல் கொண்டது.
தோடு முரித்துக் கதிர் போந்தாற் போலவும், மேயது வளைந் தாற் போலவும், நாடகப் பொருள் நன்கு விளக்கப் பயன்படுவது. (வீ. சோ. 106 உரை)
கர்ப்ப சந்தியில் மலர்ந்து விரிந்த நாடகக் கதைக் கரு, அது பற்றி விளைந்த ஆற்றாமை சினம் முதலியவற்றைக் கூறுவ தால், மேலும் மலர்ந்து விரிவடைதல் `விமரிசம்‘ என்பர் ஒருசாரார். (ம. சூ. பக். 99)
மற்றொரு சாரார், முன் மூன்று சந்திகளிலும் சிதறிக் கிடக்கும் தலைமைக் கதையின் கூறுகளை ஆய்ந்து தொகுப்பது விமரிச சந்தி என்ப.
மற்றோர் ஆசிரியர் கூறுவது : நன்கு சமைந்து முற்றி வந்த கதைப்பயன் பற்றி ஏதேனுமொரு காரணத்தால் ஐயம் தேர்ந்து அதனை ஆய்வதும் விமரிசம் ஆகும்.
முதிர்ந்து நின்ற கதிர் திரள அவற்றைக் கவர வரும் புள் விலங்குகளை ஓட்டிக் காத்த பயிர் முதிர்ந்து முற்றித் தாழ்வதைப் போன்றது விமரிசம். (நாடக. 36 உரை.)
இதன்கண் பதின்மூன்று பாகுபாடுகள் உள.
புதுமையுணர்வும் பெருமையும் சிறுமையும் மாறுபாடும் காரணமாக எதிர்பாராதது நிகழ்ந்தபோதும், முயற்சியின்றித் தான் நினைத்த செயல் எதிர்பாரா வகையில் நடந்தபோதும், தான் விரும்பியதற்கு மேலாகவே ஒன்று வாய்த்தபோதும், கருவிகளையும் சாதனங்களையும் தேடிக்கொண்டிருக்கும் போது கருதிய பயனே கிட்டியபோதும் நிகழும் சுவையே வியப்பு ஆவது. (நாடக. 49)
இறும்பூது பயக்கும் நிகழ்ச்சிகளாலோ பொருள்களாலோ உள்ளம் கொள்ளும் விரிவு விஸ்மயம் என்றும் ஆச்சரியம் என்றும் சொல்லப்படும்.
இது வியப்புச்சுவையின் நிலைக்கருத்து. (நாடக. 54 உரை)
ரூபகம் பத்தனுள் காமமும் ஆசியமும் நீக்கித் தலைவனது வீரச்செயலைக் கூறும் ஓரங்கமுடைய நாடக வகை. (ஆசியம் நகைச்சுவை.) சிலப். பக். 85 அடிக் குறிப்பு. (ஐயர் பதிப்பு)
இவ்வகை நாடகத்தில் ஒரே அங்கம்தான் உண்டு. உவகை, நகை, சமநிலை என்ற சுவைகள் இடம் பெறுதல் கூடாது; மற்ற சுவைகளே வருதல் வேண்டும். இது பெண்காரணமாக அல்லாத பெரும்போர் பற்றி அமையும். (நாடக. 127)
இனி, மதங்க சூளாமணி கூறுமாறு :
கருப்பம் விளைவு என்னும் இரண்டொழிந்த மூன்று சந்திகள் பெற்று ஓர் அங்கத்தினால் ஒரு நாளில் நடந்த நிகழ்ச்சிகளைக் காட்டும் வியாயோகமானது பல ஆண்டால், நாடகப் பாத்திரங்களைக் கொண்டு இடிமத்துக்குக் கூறிய சுவைகளை எய்திப் பெண்கள் காரணமல்லாத பிற காரணங்களால் விளைந்த ஒரு போரை நடத்திக் காட்டுவதாக வருவது இது வியாயோகத்தின் இலக்கணம். (பக். 114)
நாடக சாதியுள் ஒன்று. இதன்கண் தலைமக்கள் ஒருவரோ, பலரோ இருப்பர்; சந்தி ஐந்தும் இருக்கும்; தலைமைக் கண்டம் ஒன்று இருக்கும். (வீ. சோ. 106 உரை)
சாத்துவதி, ஆரபடி, கைசிகி, பாரதி என நால்வகைப்பட்ட நாடக நூலின்நடை (சிலப். 3 : 13 உரை).
நாடகம் பொலிவுற்றுச் சிறக்கக் காரணமாவதும், உண்மை யான உறுதிப்பொருளைக் காட்டுவதும், தலைமக்கள்இயல்பு இன்னதெனத் தெரிவிப்பதும் நாடகத்தில் அமைந்த சுவையின் பொருத்தத்தை அறிவிக்கும் சொற்றொடர்களைப் பெற்று விளங்குவதும் விருத்தி எனப்படும். (நாடக. 167)
சாத்துவதி, ஆரவடி (ஆரபடி), கைசிகி (கௌசிகி), பாரதி என விருத்தி நால்வகைப் படும். (வீ. சோ. 106 உரை)
இவற்றுள் கைசிகி உவகைச்சுவைக்கும், சாத்துவதி வீரச் சுவைக்கும், ஆரவடி உருத்திரத்திற்கும் இழிப்பிற்கும் பொருந் துவன; ஏனைய பாரதி ஒன்றும் எல்லாச் சுவைக்கும் பொருந்துவது. (தசரூபகம்)
இது `விபோதம்‘ என்று இருத்தற்பாலது; கதைப் பயனுக்கான செயலை நாடுதல்.
விபோதம் - கரும (- காரிய) முடிப்பைத் தேடுதல். (ம. சூ. பக். 100)
இது நாடகத்தின் இறுதிச் சந்தியாகிய (-ஐந்தாவதாகிய) நிருவகணத்தின் அங்கம் பதினான்கில் ஒன்று. (வீ. சோ. 106 உரை)
இன்பம் துய்க்க விழையும் மனநிலை
விலாசம் - இன்பப்பொருளை விழைதல். (ம. சூ. பக். 98)
இது நாடகச் சந்திகளில் இரண்டாவதான பிரதிமுகத்தின் அங்கம் பதின்மூன்றனுள் ஒன்று. (வீ. சோ. 106 உரை)
நாடக நூல். எ-டு : அரிச்சந்திர விலாசம்.
உபசாதி நாடகம்; இந்நாடகத்தின் உவகைச்சுவை முழுதும் விரிவாக உணர்த்தப்படும்; பத்துவகைக் கோலங்களும் மிக நன்றாக அமைந்திருக்கும். ஒரே அங்கம்தான் உண்டு. விடனும், விதூடகனும் பீடமர்த்தனும், அழகு மிக்க இழிந்த தலைவியும் இடம் பெறுகின்றனர். அங்கத்தின் உட்பிரிவான களங்கள் சுவை பயக்க இயல்வனவாம். (நாடக. 153)
விலோபநம்; நாடகப் பொருளின் இயல்பைச் சிறப்பித்துக் கூறுதல்.
விலோபநம் - நற்குணங்களை எடுத்தியம்பி உள்ளத்தைக் கவர்தல். (ம. சூ. பக். 98)
இது நாடகச் சந்தியான முகத்தின் அங்கம் பன்னிரண்டில் ஒன்று. (வீ. சோ. 106 உரை)
தன் ஆற்றலை எடுத்தியம்புதல்.
வியவசாயம் - தனது வல்லமையைக் குறிப்பிட்டுரைத்தல்.
(ம. சூ. பக். 100)
இது நாடக சந்திகள் ஐந்தனுள் நான்காவதான விமரிசகத்தின் அங்கம் பதின்மூன்றனுள் ஒன்று. (வீ. சோ. 106 உரை)
விதியின் வலிமையை எடுத்துக் கூறலும் உத்தம பத்தியும் வீட்டின் பகுதி. (நாடக. 26)
ரூபகம் பத்தனுள், காமவிச்சை மிகுந்த பரத்தையிடத்துக் கொண்ட காதலைக் குறித்து ஒருவர் அல்லது இருவர் நடிப்பதான ஓரங்கமுடைய ரூபகவகை. (சிலப். 3 : 13 பக். 85 அடிக்குறிப்பு)
நாடக வகைகளுள் ஒன்று; இவ்வகை நாடகங்களில் அங்கமும் ஒன்றே; பாத்திரமும் ஒன்றே. இது முற்றும் கைசிகி விருத்தியையே பெறும். இதன்கண் உவகைச்சுவை நன்கு புலப்படும்; வியப்பு விளைக்கும் மொழிகள் பல பேசப்படும்; அசரீரி வாக்கும் இடையே தோன்றும்.
கைசிகி விருத்தி பற்றிய விளக்கம் தனித்தலைப்பில் காண்க.
அசரீரிவாக்கு - விட்புலக் கூற்று; கண்ணுக்குப் புலனாகாமல் ஆகாயத்திலிருந்து கேட்பதாக நாடகங்களில் அமைக்கப் படும் கூற்றுக்கள். (நாடக. 133)
வீரம், கூச்சம், அரப்பாயம், பேய்க்காரம், வியோகம், பாணம், சல்லாபம், வீழிணி, உத்தாரமடங்கம், பிராசனம் என்பன. இவ்வகை தசரூபகம் முதலிய நூல்களுள் காணப்படவில்லை. இவ்வாறு பகுத்துக் கொண்ட ஒருசார் ஆசிரியர் பண்டு இருந்தனர் போலும். (106 உரை; நாடக. 135)
இது வீரசோழியஉரை குறிப்பிடும் நாடக சாதியுள் ஒன்று; இரண்டு முதலாக ஆறு அங்கம் வரை வரப்பெறும்; சந்தி ஐந்தும் உடைத்தாய் வரும்; வாரமும் கண்டமும் பெற்றும் பெறாதும் வரும்; தலைமகன் ஒருவனே இதற்குரியான். (வாரம் இசைப்பாடலையும், கண்டம் வாக்கு வாதத்தையும் குறிக்கும் போலும்.) வாரம், கண்டம் என்பன திரைச்சீலை களின் வகை என்பதும் ஒன்று. (வீ. சோ. 106 உரை)
இது வீரசோழிய உரை குறிப்பிடும் நாடக சாதியில் ஒன்று. இதன்கண் கூத்தன் தலைவன்; அவன் தன் மனைவிக்குத் தான் கண்ட விழாவையும் ஊரையும் பற்றிக் கூறுவான். இஃது ஓரங்கமே நிகழ்வது. இதன்கண் ஐவகைச் சந்தியுள்ளும் கடைச் சந்தி இன்றியமையாது வரும். (வீ. சோ. 106 உரை)
வெண்டுறைப் பாட்டாவன இலக்கு நாட்டிச் செய்யப்படும் கூத்திற்கு உரியனவாகிய வரியும். குரவையும், மண்டிலமும், சேதமும் முதலியன. (யா. வி. பக். 581)
ஒன்பது மேற்புறமும் பதினோராடலும் என்ற இவை பற்றிய ஆடற்கு ஏற்ற நாடகம். (செந்துறை என்பது பாடற்கு ஏற்பது; வெண்டுறை என்பது ஆடற்கு ஏற்பது.) (யா. வி. பக். 579)
`வெண்டுறை மார்க்கமாகிய நாடகம்‘ என்பது தொ.பொ. 82 இல் வரும் நச்சினார்க்கினியர் உரைப்பகுதி. எனவே, ஆடற்கேற்ற நாடக இசைப்பாட்டு `வெண்டுறை மார்க்கம்‘ ஆயிற்று.
இசைபாடும் கோலங்கள் பத்தனுள் ஒன்று; துயரம் மேலிட்டு அணி முதலியவற்றைக் களைந்துவிட்டு இசைக்கருவிகள் இன்றி ஓரிடத்தில் இருந்து இரங்கி இசைத்தல்.
வடநூலார் கூறும் இலாசியம் என்பதன் அங்கமான `ஆஸீநம்‘ இது. (நாடக. 261)
இசை பாடும் கோலங்கள் பத்தனுள் ஒன்று; தலைவன் மற்றொருத்தியிடம் விருப்பம் கொண்ட செய்தி அறிந்த தலைவி, அவனிடம் தான் கொண்ட அன்பை வெறுத்து, யாழிசைத்து, அதன் ஒலிக்கு இயையக் குரல் எழுப்பி இரங்கிப் பாடுதல்.
வடநூலார் கூறும் இலாசியம் என்பதன் அங்கமான `பிரச்சேதகம்‘ இது. (நாடக. 261)
அளவை,
ஆனந்தக்
குற்றம்,
நியாயம், வழுவமைதி
அ
அகத்து இயல் கால் உந்தியிலிருந்து தோன்றும் உதானன் என்னும் காற்று; ‘உந்தி முதலா முந்துவளி’ (தொ.பிறப். 1) என்றார் தொல்காப்பியனார். (யா. வி. 4. உரை மேற். பக். 46)
பொருள் வெளியாகப் புலப்படாது உள்ளடங்குமாறு சூத்திரம் செய்தல். ‘ஆசிரியர்.......... அகப்படச் சூத்திரியார் ஆகலானும், (தொ. சொ. 35. சேனா.)
செய்யுளில் கடியப்படும் ஓசைக்குற்றமாவன அறுத்திசைப்பு, வெறுத்திசைப்பு, அகன்றிசைப்பு என மூன்று. அவற்றுள் அகன்றிசைப்பாவது ஒருபாடலின் முற்பகுதி பாடலாகவும் பிற்பகுதி கட்டுரையாகவும் முற்பகுதியும் பிற்பகுதியும் ஒலியால் வேறுபடுமாறு அமைத்தல்.
எ-டு :
‘கானக நாடன் கருங்கோன் பெருமலைமேல்
ஆனை கிடந்தாற்போல் ஆய பெருங்கற்கள்
தாமே கிடந்தன கொல்லோ! அவையேற்றிப்
பெற்றிப் பிறக்கிவைத் தார்உளர் கொல்லோ!’
இதன்கண், முதல் ஈரடியும் பின்னீரடியும் வேற்றுமைத் தன்மைப்பட்டு அகன்று இசைத்த இவ்வோசைக்குற்றம் யாப்புவழுவுள் அடங்கும். (யா. வி. பக். 425)
இல்பொருளை உண்டென உணரும் அறியாமை (விசார. சந். 333)
‘முயற் கொம்பு’ என்ற தொடர் இல்பொருளுக்கு உவமமாகக் கூறப்படுகிறது. இங்ஙனம் முயற்கொம்பு என்ற சொற்றொடர் இருப்பதனை உட்கொண்டு, முயற்கொம்பினை உள்பொரு ளாக உணருவது போல்வன இதற்கு எடுத்துக்காட்டு
அசன் - இல்லாதது. அசன்னாய் உள்ள உபயதன்ம விகலம் திருட்டாந்தப் போலிகளுள் ஒன்று. உபயதன்ம விகலம், சன்னும் அசன்னும் என்றிருவகையதாம். (மணிமே. 29 : 362) (L)
உண்மைக் கொள்கையைக் காணவொட்டாமல் தடுக்கும் தரிசனாவரணீயம் என்னும் வினைவகை இது. (மேருமந். 169. உரை) (L)
நிரூபிக்கக் கருதும் பொருளுக்குக் காட்டப்படும் ஏதுவானது, அப்பொருளைத் தவிர, அதன் இணையான பொருள் களுக்கோ, அதனின் வேறுபட்ட இனத்தனவான பொருள் களுக்கோ பொருந்தாது ஒழியுமாறு கூறும் ஏதுப்போலி வகை. இஃது அநைகாந்திகம் என்ற ஏதுப்போலியின் வகை ஆறனுள் ஒன்று.
பக்கம் - ஒலி நிலைபேறுடையது
ஏது - கேட்கப்படுதலான்.
இக்கேட்கப்படுதலான் என்ற ஏது, ஒலி ஒன்றற்கேயுரியது; ஏனைய நிலைபேறுடைய பொருள்களுக்கோ நிலைபேறில் லாப் பொருள்களுக்கோ பொருந்தாது. இங்ஙனம் இணைப் பொருள்களுக்கோ இனத்தன அல்லாப் பொருள்களுக்கோ இல்லாத தொன்றை ஏதுவாகக் கூறுவது, பக்கச் செய்தியை நிறுவுதற்குப் பயன்படாது போதலின் இஃது ஏதுப்போலி யாயிற்று. (மணி. 29 : 223 - 230)
பொதுவாதலன்றிச் சிறப்புடைத்தாகிய தன்மை. பெயர்க்குக் காலம் காட்டாதிருத்தல் என்பது சாதாரண தருமம்; வினையாலணையும் பெயராயின் காலம் காட்டும் என்பது அசாதாரண தருமம். தருமம் - குணம், தன்மை. (L)
ஏதுப்போலிகளுள் ஒன்று. ஏதுப்போலிகள் அசித்தம், அநைகாந்திகம், விருத்தம் என மூவகைப்படும். இவ்வசித்தம் என்னும் ஏதுப்போலி உபயாசித்தம், அந்நியதராசித்தம், சித்தாசித்தம் ஆசிரியாசித்தம் என நான்காய் விரியும். (மணி. 29: 192)
அசித்தம் - ஏதுவாம் தன்மை இல்லாதது.
அசுமம் - கல்; லோஷ்டிரம் - மண்கட்டி. மண்ணாங்கட்டி பஞ்சினோடு ஒப்பிட்டு நோக்க மிகவும் கடினமானது; ஆனால் அதுவே கருங்கல்லோடு ஒப்பிட்டு நோக்கக் கடினம் இல்லாதது. இங்ஙனம் ஒரு பொருளை மற்றொரு பொருளொடு சீர்தூக்கிச் சிறுமை பெருமை கற்பிக்கும் நெறி அசும லோஷ்டிர நியாயமாம். (L)
அசோகம் - ஒருவகைமரம்; வனிகா - சோலை.
இராவணன் சீதையை அசோகவனத்தில் சிறை வைத்தான். “ஏன் அவன் அவளை அசோகவனத்தில் சிறைவைத்தான்? வேறு ஒரு வனத்தில் சிறை வைத்திருக்கக் கூடாதா?” என்று வினவினால், அசோகவனத்திற்குத் தனிச்சிறப்போ ஏனைய வனங்களுக்குச் சிறப்பின்மையோ இன்று. ஏதோ ஓரிடத்தில் சிறைவைக்க வேண்டும்; அதனால் அசோக வனத்தில் சிறை வைத்தான். வேறொரு வனத்திலும் சிறை வைத்திருக்கலாம். அசோகவனத்தில் சிறை வைத்ததற்குத் தனிப்பட்ட காரணம் எதுவும் இல்லை. இங்ஙனம் ஓரிடத்து ஒன்றன் நிகழ்ச்சிக்குத் தனிப்பட்ட சிறப்புக் காரணம் முடியாது நிற்கும் நெறி இந்நியாயமாம்.
பஞ்ச இலக்கணம் (யாழ். அக.). எழுத்து சொல் பொருள் யாப்பு அணி என்ற ஐங்கூற்றதாகிய இயற்றமிழ் இலக்கண மாம்.
பஞ்ச இலக்கியம் (யாழ். அக.). ஐம்பெருங் காப்பியங்களைக் குறிப்பதுபோலும்.
பின்வாங்குதல்; ‘அடிபிறக்கிட்டோனையும்’ என்றமை காண்க. (தொ. பொ. 65 நச்.) (L)
அணுவினின்று எல்லா உலகமும் தோன்றியுள்ளமையைக் கூறும் சித்தாந்தம். ‘சிதலது நீர்வாய்ச் சிறுதுகளால் பெரும் புற்று உரு அமைந்த பெற்றியது என்ன ஐம்புலப் பேருரு ஐந்தும் ஐந்து அணுவால் இம்பரில் சமைவது யாவரும் அறிதலின்’ (நன். 58 சங்கர. உரை)
அணுவிலிருந்து எல்லா உலகமும் தோன்றின என்பது ஆசீவகர் சித்தாந்தம். (மணி. 27 : 110 - 150) (L)
அனுமானப் பிரமாணம் ‘அணுமை’ எனப்படும். ‘புனைவுசேர் அணுமை’ என்பது நீலகேசி தருமஉரைச். 110 (L)
அனுமானப் பிரமாணமாவது கருதல் அளவையாம்; அஃதாவது புகையைக் கண்டு, “தீ உண்டு” என்று கருதுவது போல்வது.
அஃதாவது நினைத்த பொருளை விளக்கும் சொல்; ‘வைகரி செவியிற் கேட்பதாய் அத்த வசனம் ஆகி’ (சி. சி. 1 : 20) (L)
அஃதாவது காண்டல் என்னும் அளவை. ‘ஆக்கை விதம். பேதமென அத்தியக்கம் அறிவிக்கும்.’ (சிவதரு. மறைஞானயோ. 19) (L)
இதனொடு ‘பிர’ என்ற முன்இணைவு சேரப் பிரத்தியக்கம் என்பது காண்டல்அளவை; அஃதாவது பொறிகளால் காணும் காட்சிஅளவை.
அந்தன் - குருடன்; கஜம் - யானை.
குருடன் யானையை முழுமையாகக் காணஇயலாது, அதன் கால்கள், வால், துதிக்கை, தந்தம் இவற்றுள் ஒன்றனை மட்டும் தொட்டு அறிந்து தான் அறிந்தவாற்றான் யானையின் வடிவினைக் கற்பனை செய்துகொள்வது போல, ஒருபொரு ளின் கூறுபாடுகளை முழுமையாக ஆராயாது, அதன் ஒரு பகுதியை மாத்திரம் கண்ட அறிவினைக் கொண்டு அப் பொருளைப் பற்றி முடிவு செய்யும் நெறி இந்நியாயமாகும்.
அந்தன் - குருடன்; கோ - பசு; லாங்கூலம் - வால்.
குருடன் ஒருவனை அருகில் நின்ற பசுவின் வாலைப் பிடித்துக் கொண்டு அது போகும் வழியே போய்த் தான் விரும்பும் இடத்தை அடையுமாறு கூற, அது விரைந்து சென்று குருடனைக் கீழே வீழ்த்தி வருத்தியது போன்று, பொருத்த மில்லா ஒருபொருளின் உதவியை நம்பி ஒரு செயலைத் தொடங்கி அச்செயலை நிறைவேற்ற முடியாமல் வருந்தும் நெறி இந்நியாயமாகும்.
குருடன்தோள்மேல் நொண்டி ஏறிக்கொண்டு வழிகாட்டக் குருடன் நடந்து செல்வது போன்ற நெறி. ஒருவர்க்கொருவர் உபகாரம் செய்துகொண்டு குறைபாடுடைய இருவரும் பயனடையும் திறம் இது.
அந்நியதர - வாதி, பிரதிவாதி என்ற இருவருள் ஒருவன். அசித்தம் - ஏற்றுக் கொள்ளப்படாதது. இஃது ஏதுப்போலி மூன்றனுள் முதலாவதாகிய அசித்தத்தின் ஐந்து வகைகளுள் ஒன்று.
ஒலி நிலையற்றது செயலிடைத் தோன்றுவதால் எனின், பிரதிவாதியாகிய சாங்கியனுக்குச் செயலிடைத் தோன்றுதல் என்பது மூலப்பகுதி செய்கைக்கண் ஒலியாய்த் தோன்றும் காரியம் என்றே தோன்றுவதால், அவனுக்கு ஒலி நித்தியம் என்பது கருத்து ஆதலின், ஏது பிரதிவாதிக்கும் ஏற்றுக் கொள்ளப்படாததாய் அந்நியதர அசித்தம் என்ற ஏதுப் போலி ஆயிற்று. (மணி. 29 : 198 - 202)
இயைபின்மை. (L)
தோல்வித் தானத்து ஒன்று (செந். iii. 13). அநுபாஷணம் - விடை கூறல்; அநநுபாஷணம் - விடை கூறாதிருத்தல். வாதி வினாவும் வினாவுக்கு அவனை எதிர்த்து வாதிட வந்தோன் விடை ஏதும் கூற இயலாது வாளா இருப்பது. இஃது எதிரி தோற்றுவிட்டான் என்று அறிவிக்கும் வாய்ப்புக்களுள் ஒன்று.
சத்தெனவும், அசத்தெனவும் நிர்ணயிக்கல் ஆகாத ஒன்றை உணரும் திரிபுணர்வு இது. (L)
‘அனுகரண ஓசை’ காண்க.
‘அனுகரண ஓசை’ காண்க
‘அனுகரணம்’ காண்க
இது பக்கப்போலி ஒன்பதனுள் ஒன்று. கருதல் அளவையால் துணியப்பட்ட ஒன்றைத் தவறாக எடுத்துக் கூறுவது இது.
இஃது அழியும் இயல்புடைய குடத்தை அழியா இயல் புடைய தாகக் கூறுவது போல்வது. விருத்தம் - மாறுபட்டது.
(மணி. 29 : 151, 152.)
பக்கப் போலிகளுள் இதுவும் ஒன்று. வாதி தான் தன் எதிரிமுன் நிறுவுவதற்காக எடுத்துக்கொண்ட பக்கத்தின் எழுவாயாகிய விசேடியமும் பண்பாகிய விசேடணமும் எதிரிக்குத் தெரியாதனவாக, அஃதாவது அவன் கொள்கைக்கு ஒவ்வாதனவாகக் கூறும் குற்றம்.
வைசேடிகனுக்கு ஆன்மாவும் உண்டென்பதும், ஆன்மா வினாலேயே சுகம், துக்கம், இச்சை முதலியனவும் ஏற்படு கின்றன என்பதும் கொள்கை.
பௌத்தனுக்கு ‘ஆன்மா என்ற ஒரு பொருளில்லை; வாழ்வு துன்பமயமானது’ என்பன கொள்கை.
வைசேடிகனாகிய வாதி பௌத்தனாகிய எதிரியிடம், “ஆன்மாவே சுகம் துக்கம் இச்சை முதலியவற்றிற்குக் கார ணம்” என்ற கருத்தை நிறுவ முற்பட்டால், ஆன்மாவாகிய விசேடியமும் சுகம் முதலிய விசேடணமும் அவனுக்கு உடன் பாடில்லை ஆதலின், விசேடணம் விசேடியம் இரண்டும் எதிரிக்கும் உடன்பாடில்லனவற்றைக் கூறி நிறுவ முற்படு தற்கண் வாதிக்கு அப்பிரசித்த உபயம் (உபயம் - இரண்டு - விசேடணமும், விசேடியமும்) கூறிய குற்றம் நிகழும். (மணி. 29 : 152)
பக்கப் போலிகள் ஒன்பதனுள் இதுவுமொன்று. வாதி தான் எடுத்து நிறுவும் பொருள் எதிரிக்கு முன்னரே இசைவுடைய பொருளாக இருத்தலின், வாதிப்பதால் யாதும் பயனின்றிப் போதல் என்னும் குற்றம் இது.
ஒருவாதி தன் எதிரியாகிய பௌத்தனிடம் ‘ஒலி நிலையற்றது’ என்பதனை நிறுவப்புகின், ‘ஒலி நிலையற்றது’ என்பதே அவனுக்குக் கொள்கையாதலின், வாதத்திற்குத் தேவையே இன்றாய் அமைதலின், அப்பிரசித்த சம்பந்தம் என்ற குற்றம் அமையும் பக்கப் போலியாம். (மணி. 29 : 153)
பக்கப் போலி வகைகள் ஒன்பதனுள் இதுவும் ஒன்று. அப் பிரசித்த விசேடணம்ஆவது வாதம் செய்வோன் தன் எதிரிக்குத் தான் நிறுவுதற்கு எடுத்துக்கொண்ட பொருளின் பண்பு அறியப்படாததாகக் கூறுதல். பௌத்தனுக்கு, ‘ஒலி நிலையற்றது’ என்பது கொள்கை. சாங்கியனுக்கு, ‘ஒலி நிலை பேறுடையது’ என்பது கொள்கை. சாங்கியனை நோக்கிப் பௌத்தன் ‘ஒலி நிலையற்றது’ என்பதனை நிறுவ முற்படுவா னாயின், அஃது அவனுக்கு ஒலி நிலைபேறுடையது என்ற அடிப்படைக்கு மாறாக இருத்தலின், வாதி நிறுவுவதற்கு எடுத்துக் கொண்ட பண்பு எதிரிக்கு அறியப்படாத ஒன்றாத லின், அப்பிரசித்த விசேடணம் என்ற பக்கப் போலி வகை அமைந்து குற்றமாகும். ஏனைய விளக்கங்களைப் பக்கப் போலியுள் காண்க. (மணி. 29 : 151.)
விசேடியம் - பண்பி - ஒலி
விசேடணம் - பண்பு - நிலைபேறுடைமை, நிலைபேறின்மை.
பக்கப் போலி வகை ஒன்பதனுள் ஒன்று. வாதி தான் கூறும் பக்கச் செய்திக்கு எழுவாயாகிய பொருள் எதிரிக்குத் தெரியாததாக இருக்கவும், தன் வாதத்தை நிறுவுவதற்கு முற்படுதல் என்னும் குற்றம் இது.
‘ஆன்மா என்ற ஒன்று உண்டு’ என்ற கொள்கையுடையன் சாங்கியவாதி. ‘ஆன்மா என்ற ஒன்று இன்று’ என்ற கொள்கை யுடையன் பௌத்தன். சாங்கியனாகிய வாதி எதிரியாகிய பௌத்தன் ஒருவனை நோக்கி ‘ஆன்மா அறிவு மயமானது’ என்ற செய்தியை நிறுவ முற்பட்டால், பௌத்தன் ஆன்மா என்ற ஒன்றில்லை என்ற கருத்துடையவன் ஆதலின், அவன் கருத்தில் இல்லாத ஒன்றிற்குப் பண்பு ஒன்றுகூறி அதனை நிறுவ முற்படும் குற்றம் அப்பிரசித்த விசேடியப் பக்கப்போலி என்று கூறப்படும். (மணி. 29 : 152)
விசேடியம் - பண்பி - ஆன்மா;
விசேடணம் - பண்பு - அறிவுடைமை.
தோல்வித் தானத்துள் ஒன்று. வாதி சொல்லும் வாதத்திற்கு எதிரி விடை எதுவும் கூற இயலாதவகை மௌனமாக இருப்பது அப்பிரதிபை என்ற தோல்வித்தானமாகும். (செந். iii 13.) (L)
காணாத தொன்றனை உளதாகக் கூறும் உலக உரை. இது நினைப்பு எனப்படும் பிரமாண ஆபாசமாகும். ‘நினக்கிவர் தந்தையும் தாயும் ஆவர்’ என்று பிறர் கூறியவழிக் கோடல் போல், பிறர் கூறியவற்றையெல்லாம் காரண ஆராய்ச்சியின்றி மேற்கொண்டொழிதலாம். (மணி 27: 75-77 (சி. சி. அளவை.1)
பிரமாணம் அல்லாதது. அஃதாவது எல்லைக்கு உட்படாதது. வேதநெறிக்கு மாறுபட்ட சமயங்களாகிய பௌத்தம் சமணம் என்பனவற்றிற்கு வேதங்கள் அப்பிரமாணமாகும்.
அளக்க முடியாதது - பேரெண். (L)
தோல்வித் தானத்துள் ஒன்று - கருதல்அளவையை விளக்கப். பக்கம், ஏது, எடுத்துக்காட்டு, உபநயம், நிகமனம் என்ற ஐந்து கூறுகள் உள.
பக்கம் - இம்மலை நெருப்புடையது
ஏது - புகை இருப்பதால்
எடுத்துக்காட்டு - அடுக்களை போல
உபநயம் - இம்மலையும் புகையுடையது
நிகமனம் - ஆகவே இம்மலை நெருப்புடையது.
இங்ஙனம் கூறும் முறையை விடுத்துப் பக்கம், ஏது, எடுத்துக் காட்டு, உபநயம், நிகமனம் என்பவற்றை மாற்றிக் கூறுவது அப்பிராத்தகாலம் என்ற குற்றத்தின்பாற்படும். (செந். iii 13 ) (L)
பிரமாணம் ஆகாமை. வேதத்திற்கு மறுதலையான செய்திகள் வைதிகருக்கு அப்பிராமாணியம் ஆகும். (சி.சி. 8-5 ஞானப்) (L)
தோல்வித் தானத்துள் ஒன்று; கொள்கைக்கு மாறுபட்டது. வாதி தன் சித்தாந்தத்திற்கு இணங்காதவற்றைச் சொல்லிச் சித்தாந்தம் சாதிக்க முற்படுதல் அபசித்தாந்தமாகித் தோல்வித் தானத்துள் ஒன்றாகும். தருக்கவாதத்தின்கண் பேசத் தெரியாமை யாகிய தோல்வித் தானங்களுள் இதுவும் ஒன்று. (செந் iii - 13) (L)
‘தோல்வித்தானத்துள் ஒன்று.’ தான் கொண்ட மேற்கோ ளுக்கு மறுதலைப்படப் பேசுதல். இது தருக்கவாதத்தின்கண் பேசத் தெரியாமையாகிய தோல்வித் தானங்களுள் ஒன்று.(L)
அஃதாவது இன்மை. ஈது ஒரு பிரமாணம்.
உண்மையை நிறுவுதற்குப் பயன்படுத்தப்படும் அளவைகள் பத்தனுள் இது நான்காவதாகக் கூறப்படுகிறது.
‘அளவை காண்டல் கருதல் உரைஅபாவம், பொருள்
ஒப்பு ஆறென்பர்
அளவை மேலும்,
ஒழிபுஉண்மை ஐதிகத்தோடு இயல்பு என நான்கு’
சி. சி. அளவை -1.
அருத்தாபத்தி; “இங்ஙனம் இன்றாயின் இது கூடாது” என்று அறியும் ஓர் அளவை. “பகலுண்ணான் பருத்திருப்பான்” என்று கூறின், “இரவில் உண்ணுதல் இன்றாயின் இவ்வாறு பருத்திருத்தல் இயலாது” ஆதலின், “இவன் இரவில் மறைய இருந்துண்பான்” என அறிவது அருத்தாபத்தி அளவை.
அஃதாவது பின்னும் வாதத்திற்கு இடமுண்மை கண்டு, எதிராளி மகிழ்க என்று அவன்கொள்கையை அங்கீகரிக்கும் நியாயம். (சி. போ. 3-6 சிற்)
திட்டாந்தப் போலியின் இரு கூறுகளாகிய சாதன்மியம், வைதன்மியம் என்னும் இரண்டனுள், வைதன்மியத் திட்டாந் தப் போலியின் ஐவகைகளுள் ஒன்று. அவ்வியதிரேகமாவது பக்கத்தைக் கூறி, ஏதுவை எடுத்துச்சொல்லி வியாப்தியை வியதிரேக முகத்தால் கூறாமல், திட்டாந்தத்தை மட்டும் குறிப்பிடுவதாம்.
எ-டு : பக்கம் - ஒலி நிலைபேறுடையது, ஏது - பண்ணப்படுவ தன்றாகலின்.
வியதிரேக வியாப்தி - யாதொரு பொருள் நிலைபெற்றது அன்றோ, அது பண்ணப்படாமல் இருக்க முடியாது என்பது.
எடுத்துக்காட்டு - குடத்தில் பண்ணப்படுதலும் நிலைபேறின் மையும் காணப்படுகின்றன.
இங்ஙனம் கூறாமல் வியதிரேக வியாப்தியை விடுத்து ஏனைய வற்றைக் கூறின், ‘குடத்தின்கண் நிலைபேறின்மையால் அது பண்ணப்படாமையும் இல்லை’ என்ற விளக்கம் இன்மை யால், எதிரிக்கு மயக்கம் ஏற்படுதலின், வியதிரேக வியாப் தியைக் கூறாமையாகிய அவ்வியதிரேகம் என்ற திட்டாந்தப் போலி நிகழும். வியதிரேகம் எனினும் வெதிரேகம் எனினும் ஒக்கும். (மணி. 29 : 450 - 459)
ஒருபொருளுக்கு இலக்கணம் கூறுங்கால், அவ்விலக்கணம் அப்பொருளின் சிலபகுதியில் இருந்து சிலபகுதியில் இரா திருப்பின் அஃது அவ்யாப்தி என்னும் குற்றமாம்.
எ-டு : அலைதாடி, குளம்பு, கொம்பு முதலியவற்றை உடைத்தாயிருப்பதும் கருமைநிறம் உடைத்தாயிருப் பதும், பசு எனின், கருமையல்லாப் பிற நிறமுடைய பசுக்கட்கு அவ்விலக்கணம் செல்லமாட்டாமையின், அஃது இக்குற்றம் பெறுமாறு காண்க. இது குன்றக் கூறல் என்னும் சிதைவாம். இலக்கியத்தின் ஏகதேசத் தில் இலக்கணம் செல்லாதொழியும் தோஷம் என்பது. (தருக்கசங். 5)
குறிப்பிட்டு வேறுபடுத்தப்பட்டது.
எ-டு : பசு அலைதாடி யுடையது என்ற பண்பால், ஏனைய விலங்குகளிடமிருந்து வேறுபடுத்தப்படுதலின் இஃது அவச்சின்னமாம். (L)
பிரிக்கக் கூடியது.
எ-டு : ஏனைய விலங்குகளிலிருந்து தன்னைப் பிரித்து உணரக்கூடிய பண்பாகிய அலைதாடியுடைமை யாகிய பசுவின் தகுதி அவச்சேத்தியம் ஆகும். (விசாரசந். 321) (L)
வேறுபடுத்தும் தன்மை
எ-டு : பசுவை ஏனைய விலங்குகளிலிருந்து பிரித்து உணரு மாறு வேறுபடுத்தும் ‘அலைதாடியுடைமை’ அவச் சேதகம். (சி.சி. 2-54 சிவாக்) (L)
நாட்டில் வழங்கும் மொழியைச் சங்கிரதம், பாகதம்,. அவப்ரஞ்சம் என மூன்றாகப் பகுப்பர். சங்கிரதம் கற்றுவல்ல சான்றோரிடைப் பயிலும் மொழி எனவும், பாகதம் எல்லா நாட்டிலும் மேன்மக்கள் பேச்சிடைப் பயிலும் மொழி எனவும், அவப்ரஞ்சம் பாமர மக்களாகிய இழிசனர் திரித்துக் கொச்சையாக வழங்கும் மொழி எனவும் கொள்வர். (இ. வி. 635 உரை)
இடையில் வந்த காரணம் (சி.போ.சிற். 1-3) (குடம்வனைந்தான் என்புழி, மண்-முதற்காரணம்; தண்டசக்கரம் முதலியன துணைக்காரணம்; குயவன் - நிமித்தகாரணம்; மண்ணைப் பிசைதல், நீர்விடுதல், உருண்டையாக்கல் முதலிய பிற இடையில் வந்த அவாந்தரகாரணங்களாம்.) (L)
உட்பிரிவு. தொல்காப்பியத்தின் எழுத்து அதிகாரத்தின் அவாந்தர பேதம் நூல்மரபு முதல் குற்றியலுகரப் புணரியல் ஈறான ஒன்பது இயல்களும் ஆகும்.
விகாரமற்றது. “பொய்ப்பொருள் கற்பிதமாயிற்று அவி காரியாகப் பொருந்தும்“. (வேதா. சூ. 83)
தமிழில் எழுவாய்வேற்றுமை பெயர் தோன்றிய துணையாய் நிற்பதாம். ஏனைய வேற்றுமைகள் பெயர்ப்பின்னர் அவ்வவ் வேற்றுமை உருபேற்று அமைவனவாம். ஆகவே முதல் வேற்றுமை அவிகாரி என்பதும், ஏனைய வேற்றுமை விகாரி என்பதும் புலப்படுகின்றன.
இடைவிடாமை (சிவதரு. மறை ஞான. 80) (L)
தோல்வித் தானங்களுள் ஒன்று (செந் iii-13). வாதி தான் கூறும் செய்தியை எதிரிக்குத் தெளிவு தோன்றாதவாறு கூறுதல் என்னும் குற்றம். (L)
1) பண்டித சபையோர் 2) நியாயம் உரைக்கும் சபையினர் (கலி. 94 : 42) (L)
அஃதாவது அழிந்ததனால் அஃதில்லை என்னும் அபாவம்.
(சி.சி. அளவை. 1 (மறை) சிவஞா.) (L)
தருக்க நூல் : ‘அளவைநூல் சொன்னூல் கற்றே கற்க வேண்டு தலின்’ (குறள். 725 - பரிமே.) (L)
கேடு விளைக்கும் சொற்பயிலும் பாடல். (L)
தீச்சொற்பட்டுத் தீப்பயனுண்டாகப் பாடுதலே அறம்பாடுத லாம் என்ப.
‘காட்சியளவையாற் பொருந்தும் சாட்சி’ - ‘அங்கியங்கடவுள் அறிகரியாக’ (142 நச். உரை) (L)
காமசூத்திரம் என்ற வடமொழி நூலிலும் பிறவற்றிலும் மகளிரால் சிறப்பாக மேற்கொள்ளப்படுவனவாகக் கூறப்படும் அறிவியலொடு பொருந்திய அறுபத்து நான்கு கலைகள். சதுர்அகராதி அவற்றைப் பின்வருமாறு குறிக்கின்றது; பொருட்டொகை நிகண்டும் இவற்றைச் சுட்டுகிறது (973).
அக்கர இலக்கணம், இலிகிதம், கணிதம், வேதம், புராணம், வியாகரணம்,நீதிசாத்திரம், சோதிடசாத்திரம், தரும சாத் திரம், யோகசாத்திரம்,மந்திரசாத்திரம், சகுன சாத்திரம், சிற்ப,வைத்தியசாத்திரங்கள், உருவசாத்திரம், இதிகாசம், காவியம், அலங்காரம்,மதுரபாடணம், நாடகம், நிருத்தம், சந்தப்பிரமம், வீணை, வேணு, மிருதங்கம், தாளம், அத்திரப் பரீட்சை, கனகபரீட்சை, இரத பரீட்சை, கசபரீட்சை, அசுவ பரீட்சை, இரத்தினபரீட்சை, பூமிபரீட்சை, சங்கிராம இலக்கணம், மல்லயுத்தம், ஆகருடணம், ஆகர்ஷணம், உச்சாடணம், வித்துவேடணம், மதனசாத்திரம், மோகனம், வசீகரணம், ரசவாதம், சுந்தருவவாதம், பைபீலவாதம், கவுத்துகவாதம், தாதுவாதம்,காருடம், நட்டம், முட்டி, ஆகாயப்பிரவேசம், ஆகாய கமனம், பரகாயப் பிரவேசம், அதிருசியம், இந்திரசாலம், மகேந்திரசாலம், அக்கினித்தம்பம், சலத்தம்பம், வாயுத் தம்பம், திட்டித்தம்பம், வாக்குத்தம்பம், சுக்கிலத்தம்பம், கன்னத்தம்பம், சுட்கத்தம்பம், அவத்தைப் பிரயோகம் - என இவை.
செய்யுட் குற்றம் ஆறு. அவையாவன இடம் காலம் கலை உலகம் நியாயம் ஆகமம் என்னும் ஆறுபொருள்களிலும் ஒன்றற் குரியதை மற்றொன்றற்கு ஏற்றிச் சொல்லுதல் போன்ற குற்றங்கள். இவை செய்யுளில் நீக்கத்தக்கன. தனித் தனித் தலைப்பில் விரிவு காண்க. (தண்டி. 99)
இடம், காலம், கலை, உலகம், நியாயம், ஆகமம் என்னும் இவ்வாறு வகையிலும் செய்யுளில் குற்றம் நிகழுங்கால் அவற்றை நீக்குதல் முறை. ஆயின், நாடகவழக்கில் அவை அமையும். ஈண்டு நாடகவழக்கு என்றது இல்பொருளாய்ப் புகழ்ச்சியிடத்தே புனைந்துரை வகையால் கூறுதல். அவ்வாறு புகழ்ச்சிக்கண் அவை நீக்கப்படாமல் அலங்காரமாகவே வரும் என்று கொள்ளப்படும். (தண்டி. 125)
உபய (இரண்டு) வாதிகளில் ஒருவனால் உள்ளதாகக் கொள் ளப்பட்டு, மற்றொருவனால் உள்ளதாகக் கொள்ளப்படாத பொருளை ஏதுவாகக் கூறுவது. (அனுமான. பக். 19) (L)
அன்னிய தர - இருவரில் ஒருவன்
அசித்தம் - இதற்குமுன் கொள்ளப்பட்டது.
இது வாதி கூறும் ஏது எதிரியால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சாதனம் ஆகாமல்போலும் ஏதுப்போலி வகையாம். இஃது அசித்தம் என்ற ஏதுப்போலியின் வகைகள் நான்கனுள் ஒன்று.
பக்கம் - ஒலி நிலையற்றது
ஏது - செய்கையில் தோன்றுதலால்.
எதிரி சாங்கியனாக இருந்தால், அவனுக்கு, “ஒலி முதலிய யாவும் மூலப்பகுதியின் காரியம்; காரண வடிவில் தோற்றம் இன்மையும் காரியவடிவில் தோற்றம் உடைமையும் பொருட்கு இயல்பு; செயலிடைத் தோன்றுவன யாவும் புதியன அல்ல, மூலப்பகுதியின் காரியமே” என்பது கொள்கை. ஆதலின் அவனுக்குச் செய்கையில் தோன்றுதலால் என்ற ஏது, ஒலி என்ற பொருளின்கண்ணும், அது நிலையற்றது என்ற அப்பொருட்பண்பின்கண்ணும் பொருந்தாது ஒழிதலின், இருவரில் ஒருவருக்குப் பொருந்தாததாகிய ஏது எனப்படும் அன்னியதராசித்தம் ஏதுப்போலியாய்க் குற்றப்படும். (மணி. 29 : 198- 202)
‘அன்னியதராசித்தம்’ காண்க.
ஒன்றையொன்று பற்றுதல் என்ற குற்றம். ஒரு பொருளின் இலக்கணத்தை மற்றொரு பொருளின் தன்மையைக் கொண்டும், பின்பொருளின் இலக்கணத்தை அம் முன்பொரு ளின் தன்மையைக் கொண்டும், கூறின் இக்குற்றமாம்.
எ-டு : உருபேற்றல் பெயரிலக்கணம் என்றும், உருபு பெயரின் ஈற்றில் வரும் என்றும் கூறுதல் எவ்வாறு குற்றமெனில், உருபு ஏற்றதன் பிறகே அச்சொல்லுக்குப் பெயர் என்னும் குறி வரும். ‘அக்குறி’ வந்த பிறகே உருபினை அப்பெயர் ஈற்றில் சேர்த்தல் வேண்டும் என்று நேர்த லின், ஒன்றையொன்று பற்றுதல் காண்க.
உருபும் பொருளும் உடன்தொக்க தொகை அன்மொழித் தொகை போல இடையே உள்ள சொற்களைப் பொருத்தி விரிக்கப்படும். அன்மொழித்தொகை உருபும் பொருளும் உடன்தொக்க தொகை போல இடையே சொற்களைப் பொருத்தி விரிக்கப்படும் என்று கூறுதல், ஒன்றனை ஒன்று பற்றுதல் எனப்படும் இதரேதராசிரயம் என்னும் குற்றமாம். (சூ. வி. பக். 49,50) (அன்னியோன்னியாச்சிரயம், இதரேதராசிர யம் என்பன ஒருபொருள.) (பி. வி. 24 உரை)
அன்னியோன்ய + அபாவம் = ஒன்று மற்றொன்று ஆகாமை. இப்பி வெள்ளி ஆகாமை போல்வது. (பிரபோத. 42-4) (L)
உடன் நிகழ்வதால் கொள்ளும் அனுமானம்.
புகை இருப்பதனால் இவ்விடத்தில் நெருப்புண்டு என்று கொள்வது. புகை இல்லை ஆதலின் நெருப்பு இவ்விடத்தில் இல்லை என்று கொள்ளும் வியதிரேக அனுமானத்திற்கு இது மறுதலையாம். ‘புகையுள இடத்து நெருப்புண் டென்னும் அன்னுவயத்தாலும்’ (மணி. 29 : 87,88)
1) சம்பந்தம்; ‘இவை அன்னுவயமின்றாயிருந்தும்’ மணி. 27 : 39.
2) காரண காரியங்களின் நியத சம்பந்தம் (சி.சி. அளவை.11). அஃதாவது காரணகாரியத் தொடர்பு இடையறவுஇன்றிச் சேர அமைவது.
3) சாதன சாத்தியங்களின் வியாப்தி.
4) கொண்டுகூட்டு.
5) குலம் (கம்பரா. 8874) (L)
முடிவு பெறாமைக் குற்றம். (வேதா. சூ. 135) (L)
எ-டு : இறைவனுடைய மேதக்க பண்புகளை எண்ணப்புகின், அனவத்தையாம்.
அனன்னியம் -
பிரிப்பற்ற தன்மை. (சி.சி. 6-6 சிவஞா.) (L)
எ-டு : ‘பார்வதி, பரமேசுவரனோடு அனன்னியமாகக் கலந் துள்ளாள்’ ந + அன்னியம் = அநந்நியம் - அன்னிய மற்ற தன்மை
அனாதிகாரணம் -
மூலகாரணம். ‘அனாதி காரணமாகிய மாயை’ நன். 58 விருத்தி (L)
அனு -
1) பிரதிச் செயல் - ‘மற்றிதற்கோர் அனுவே என்ன’ (பாரத. பதினொ. 37)
2) மோனை எழுத்து - ‘ஆகாத அல்ல அனு’ (இ.வி. 748 உரை)
3) வடமொழி உபசருக்கங்களுள் ஒன்று (யா.க.43 உரை)
எ-டு : அனுஜன் - தம்பி (L)
அனுமானித்தல் -
1) அனுமானப் பிரமாணத்தால் அறிதல். பொறிகளான் உணராது அறிவான் கருதி அறிதல் 2) உத்தேசித்தல் - (எண்ணுதல்) 3) ஐயுறுதல். (L)
அனுமிதி -
அனுமானத்தால் உண்டாம் ஞானம். தருக். சங். 45 (L)
அனுமேயம் -
அனுமானத்தால் அறியத்தக்கது. (மணி. 27-26)
எ-டு : மலையின்பால் நெருப்புள்ளது என்பது துணியப்படும் மேற்கோளாகிய அனுமேயம்.
அனுவிருத்த ஸ்வபாவம் -
இயற்கைக் கு™ம்; ஸ்வர்ணம் என்னும் பொருளில், நிறமும் வற்கெனலும் வசஞ்செய்தலும் முதலாயின அனுவிருத்த ஸ்பாவ மாம். (நீலகேசி. 380 உரை)
வற்கெனல் - வல்லென்றிருத்தல்; வசம் செய்தல் - வேண்டிய உருவிற்கு வருமாறு அமைத்தல்.
ஏதுப்போலிகளுள் ஒன்று. (மணி. 29 : 192) தவறான காரணம் காட்டும் ஏதுப்போலி அசித்தம், அநைகாந்திகம், விருத்தம் என மூவகைப்படும். அநைகாந்திகம் என்பது சாதாரணம், அசாதாரணம், சபக்க ஏகதேசவிருத்தி விபக்க வியாபி, விபக்க ஏகதேச விருத்தி சபக்க வியாபி, உபய ஏகதேசவிருத்தி, விருத்த வியபிசாரி என ஆறு உட்பிரிவுகளையுடையது. விளக்கம் தனித் தலைப்புக்களில் காண்க.
ஆ
உண்மை உணர்வதற்குக் கருவியாகும் அளவைகள் பத்தனுள் நான்காவது. இஃது; உரைஅளவை எனவும்படும்.
விளங்கிய அறிவினை உடைய பெரியோன் கூறியநூல் கருவியாக, “போக நுகர்ச்சிக்கென இந்நிலவுலகத்தின் மேலும் கீழும் உலகங்கள் உண்டு” என மேற்கொள்வது போல்வன.
(மணி. 27 : 43, 44)
அளவையை வடநூலார் ‘பிரமாணம்’ என்ப.
அஃதாவது கருத்தாமொழியாகிய நூற் பிரமாணம் (ஆகம அளவை) (குறள் 242 பரிமே.)
இருவினைப்பயனும் மறுமையும் முதலாயின ஆகமஅளவை யான் அன்றிப் பெரும்பான்மையும் பிற அளவையான் காட்டலாகா; இறைவனதுண்மையும் அது.
தொன்று தொட்டு வந்த மறை, அறநூல் முதலியவற்றால் உய்த்துணர்தல். அனுமானம் - உய்த்துணர்தல்.
ஆகமம் என்பது மனு முதலானோரும் திருவள்ளுவர் போன்றோரும் அருளிய அறம் முதலியவற்றை அறிவிக்கும் பண்டைப் பதினெண்வகை நூல்களுக்குப் பெயராவது. மலைவு - பொருந்தாமை. அறநெறிகட்கு மாறுபட்ட செய்தி களைக் கூறுவது ஆகம மலைவு என்னும் செய்யுட்குற்றம்.
எ-டு : ‘தெய்வம் விருந்தொக்கல் தென்புலத்தார்
தாமென்னும்
ஐவகையும் தம்பொருள்கொண்
டாற்றுவார் - மையிலா
முக்கோலும் கல்தோய் முழுமடியும் தாங்கியே
தக்கோர் எனப்படுவார் தாம்’
இப்பாடற்கண், முக்கோலும் காவியுடையும் உடைய தக்கோ ராம் துறவியர் தம் செல்வத்தால் ஐம்புலத்தாறு ஓம்புவார் என்று கூறியுள்ளமை குற்றம். இச்செயல் இல்லறத்தார்க்கே உரியது; இல்லறத்தார்கட்கு முக்கோல் முதலியன தாங்குதல் பொருந்தாது. ஆதலின் இஃது ஆகமவழு உடையதாயிற்று. (தண்டி. 124)
சான்றோர் அறநூற் செய்திக்கு மாறுபட்ட செய்தி, புகழ்ச்சி யிடத்து ஏற்கத்தக்கது. (தண்டி. 125 - 6)
எ-டு : ‘காய்கதி ரோனுக்குக் கன்னனைஈன்
றும்கன்னி
ஆகிப்பின் மூவரையும் ஈன்றளித்த -
தோகை
தலைமைசேர் கற்பினாள் தாள்வணங்கும்
முன்னாள்
மலையெடுத்துக் கார்காத்த மால்’
சூரியனுடன் கூடிக் கர்ணனைப் பெற்றும் பின் கன்னியாகிப் பின் தேவர் மூவரொடு கூடி மும்மக்களையும் பெற்ற குந்தியை மேம்பட்ட கற்பினாளாகக் கருதி, கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து மழையைத் தடுத்த திருமால் வணங்கினான் என்னும் இப்பாடலுள், கதிரோனுக்குக் கர்ணனைப் பெற்ற பின் மீண்டும் கன்னியானாள் என்பதும், பின் மூவருக்கு மூவரைப் பயந்தும் கற்புடையாள் என்பதும் சான்றோர் நூற்செய்திக்கு முரண்பட்டன எனினும், திருமா லால் குந்தி வணங்கப்பட்டவள் என்னும் புகழ்ச்சியிடத்து அலங்காரம் ஆயின.
பக்கப் போலியின் ஒன்பது வகைகளுள் இது நாலாவது.
பக்கமாவது நிரூபிப்பதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பொரு ளும் அதன்பண்புமாகும். ஆகம விருத்தமாவது தான் ஆதர வாக மேற்கொள்ளும் நூலுக்கு மாறாகக் கூறுவதாம். வைசே டிக வாதிக்கு, ‘ஒலி நிலையற்றது’ என்பது நூற்கொள்கை. அதனை விடுத்து அவன், ‘ஒலி நிலைபேறுடையது’ என்று நிரூபிப்பதற்கு வருவது போல்வதாம் இது.(மணி. 29 : 164 - 168)
பக்கத்தில் இல்லாத ஏதுவைக் கூறும் ஏதுப்போலி. ஏதுப் போலி அசித்தம், அநைகாந்திகம், விருத்தம் என மூவகைப் படும். அவற்றுள் அசித்தமாவது உபய அசித்தம், அந்நியதர அசித்தம், சித்த அசித்தம், ஆசிரய அசித்தம் என்ற நான்கு உட்பிரிவுகளை உடையது.
ஆசிரயம் - பக்கவசனத்து எழுவாயாகிய பொருள். அசித்தம் - இன்மை. வாதி தன் எதிரிக்கு உடன்பாடு அல்லாத பக்கம் ஒன்றனைச் சொல்லி அதற்கு உரிய ஏதுவைக் கூறிக் காட்டு தல். ஆசீவக வாதிக்கு ஆகாயம் உடன்பாடன்று.
பக்கம் - ஆகாயம் ஒரு பொருளாகும்
ஏது - ஒலியாகிய பண்பினை உடைமையான்
என்று ஆசீவக வாதியிடம் கூறி, ‘ஆகாயம் ஒரு பொருளன்று’ என்ற முடிபுடைய அவனுக்கு ஏதுக் கூறுவதனால் பய னில்லை. இங்ஙனம் எதிரி ஏற்றுக்கொள்ளாத பொருள் ஒன்றனை ஏதுவினால் சாதிக்க முற்படுதல் ஆசிரய அசித்தம் என்ற ஏதுப்போலியாம். இதனை அனுமேய அசித்தம் எனவும் வழங்குப. (மணி. 29 : 203 - 211.)
வேதசாத்திரம் முதலியனவாக உண்மை நுவலும் நூல்களாய் ஆகமப் பிரமாணங்களாக உதவுவன.
‘ஆப்த வாக்கியம்’ என்பதும் அது.
இஃது இறப்ப உயர்ந்த ஆனந்த உவமை எனவும், இறப்ப இழிந்த ஆனந்த உவமை எனவும் இருவகைப்படும். மிக இழிந்த பொருளுக்கு மிக உயர்ந்த பொருளை உவமையாகக் கூறுவதும், மிக உயர்ந்த பொருளுக்கு மிக இழிந்த பொருளை உவமையாகக் கூறுவதும், ஆனந்த உவமையாம். இங்ஙனம் கூறுதல் குற்றமாம். இறந்துபாட்டுவமை ஆனந்தமும் உண்டு.
எ-டு : ‘வேட்டை நாய் போன்ற வீரனுக்குப் பகைவர்களாகிய மான்கூட்டம் தோற்றோடியது’ - இறப்ப இழிந்த ஆனந்த உவமை ‘இந்திரனே போலும் இளஞ்சாத்தன்’ - இறப்ப உயர்ந்த ஆனந்த உவமை. ‘மறையும் சூரியன் போன்ற செந்நிற முடையவன் தலைவன் - மறையும் சூரியனை உவமையாகக் கூறியமையின் இறந்து பாட்டுவமை ஆனந்தம்.’ ஆனந்தம் - குற்றம். (யா. வி.பக். 560.)
பிற்காலத்தார், செய்யுளுள் நிகழும் பலவகைச் சொல் சொற் பொருள் பற்றிய குற்றங்களை எழுத்தானந்தம், சொல்லா னந்தம், பொருளானந்தம், யாப்பானந்தம், தூக்கானந்தம், தொடையானந்தம் எனப் பலவகையாகப் பகுத்து விளக்குவர். அவற்றைத் தனித்தனித் தலைப்புக்களுள் காண்க.
இ
ஒலி அணுக்களின் தொகுதி. (யா. வி. மேற். பக். 46)
அவலமுற்றிருந்தோர்க்குரிய இசைகள் தலைவன் பாட்டிற்கு இசையாகி வரப் புணர்க்கும் நூற்குற்றம். (யா. வி. பக். 564)
மலை, ஆறு, நாடு போல்வன இடம் எனப்படுவன. அவற்றுள் ஒன்றற்குரியதை மற்றொன்றன்கண் உரைக்கும் பொருந் தாமையே இடமலைவு எனப்படும் செய்யுட் குற்றம். மலைவு - பொருந்தாமை.
எ-டு : ‘தென்மலையின்
மான்மதமும் சாமரையும் காமருசீர்ப்
பொன்மலையின் சந்தனமும் ஆரமும் - பன்முறையும்
பொன்னி வளநாடன் முன்றில்
பொதுளுமே
மன்னர் திறைகொணர
வந்து’
மன்னர் பலரும் கப்பமாகக் கொணர்ந்து தந்த பொதியமலை யின் கத்தூரியும் சாமரையும், மேருமலையின் சந்தனமும் பூமாலையும், சோழனது அரண்மனையின் முற்றத்தில் குவிந்து கிடக்கும் என்ற இப்பாடற்கண், தென்மலைக்குரிய பண்டங்கள் மேருமலைக்கும், மேருமலைக்குரிய பண்டங்கள் தென்மலைக்கும் சார்த்தியுரைக்கப்பட்டமை இடமலைவாம். (தண்டி. 119)
(இடமலைவு அமைதி) இடமலைவு இல்பொருளாகிய புகழ்ச்சியிடத்து ஏற்கத் தக்கது.
‘மரகதச் சோதியுடன் மாணிக்கச் சோதி
இருமருங்கும் சேர்ந்தரிவை அம்மான் - உருவம்
மலைக்கும் அகில்சுமந்(து) ஆரத்து வான்கோடு
அலைத்துவரும் பொன்னி ஆறு’
பசிய மரகதச் சோதியுடன் சிவந்த மாணிக்கச் சோதி இரு பாலும் சேர்தலால், அகிலையும் சந்தனமரத்தையும் அடித்து வரும் காவிரியாறு பார்வதிபாகனாகிய சிவனை ஒத்திருக் கிறது என்ற கருத்தமைந்த இப்பாடற்கண், பிறநாட்டிற்கும் பிறமலைக்கு முரிய மரகதமும் மாணிக்கமும் அகிலும் சந்தன மும் காவிரியாறு அடித்து வரும் என்றமையான் இடமலை வாய்ப் புகழ்ச்சி இடத்தே அலங்காரம் ஆயிற்று. (தண்டி. 125)
அன்னியோன்னியாச்சிரயம். அது காண்க. (தொ. சூ. வி.பக்.50)
1) பிரிபொருள் தொடர்மொழி; 2) முரண்மொழி, (3) ஒருபொருள் மொழி, (4) ஐயமொழி, (5) முறை பிறழ வைப்பு, (6) சொல்வழு, (7) யாப்பின் வழு, (8) நடைவழு, 9) பொருளின்வழு, 10) புணர்ப்பு வழு, 11) கலைமலைவு, 12) காலமலைவு, 13) உலக மலைவு, 14) இடமலைவு, 15) மேற்கோள் மலைவு, 16) ஏதுமலைவு, 17) எடுத்துரை மலைவு, 18) நூல் மலைவு, 19) உய்த்துணர்மொழி, 20) ஒட்டுப் பிரிமொழி, 21) உத்திமறுதலை, 22) பிறிதுபடுமொழி, 23) பிசிபடு மொழி, 24) இடக்கர் இசையன, (25) இடக்கர்ப் பொருளன, 26) இடக்கர்ச்சந்தி இசையன, (27) இன்னா இசையன - என்பன. (யா. வி. பக். 265)
உ
பொருள்களின் இயற்கைக் குணத்தைச் சுட்டிச்செல்வதாகிய சம்பவம் என்னும் பிரமாணம் (சி.சி. அளவை - 1.)
இது பத்துவகை அளவைகளுள் உண்மை எனவும், உள்ள நெறி எனவும் வழங்கப்படும் சம்பவ அளவையாம். இஃது இரும்புத்துண்டு அசைவதுகொண்டு அது காந்தத்தின் தொடர்பு உடைய செய்தியை அறிதல் போல்வது. (மணி. 27 : 55, 56)
பின்னே விரித்துக் கூறுவதற்காகப் பெயர் மாத்திரையால் பொருளைமாத்திரம் முன்னர்க் குறிப்பிடுதல் உத்தேசமாம். (வேதா. சூ. 20)
எதனைப் பற்றி விதிக்கப்படுவதோ அஃது உத்தேசியமாம். அது வாக்கியத்தில் பெரும்பான்மையும் எழுவாயாகவே யிருக்கும். அஃது இவ்விதியின் முன்னரே அறியப்பட் டிருத்தல் வேண்டும்; என்னையெனில், ஒரு பொருளை இன்னதென்று அறியாமலிருக்க, அதனைப் பற்றி வேறொன்று கூறின், கேட்போனுக்குப் பொருள் விளங்காதுபோம் ஆதலின். (தொ. சொ. குறிப். பக். 7)
ஒன்றன் தன்மையை மற்றொன்றறன்மேல் ஏற்றிக் கூறுவது.(L)
எ-டு : ‘ஆருயிர்’ (கு. 73) என்னுமிடத்தே, பிறப்பினது அருமை உயிர்மேல் ஏற்றப்பட்டது. (பரிமே.)
சொல்லும் செய்தியை நிறுவுதற் பொருட்டுக் காட்டும் உத்தி. ‘சச்சி தானந்தம் உபபத்தி அகமும் சீவனுமாய்’ (பிரபோத. 22-17) (L)
உபமானப் பிரமாணத்தினால் வரும் அறிவு. (தருக்கபா. 30)
ஆப் போலும் ஆமா என்ற உபமானப் பிரமாணத்தைக் கொண்டு, காட்டில் செல்லும்போது முன் கண்டறியாத ஆமாவினை இன்ன விலங்கு என்று அறிதல் போல்வன. (மணி. 27 : 41, 42)
திட்டாந்தத்தில் சாத்திய சாதனம் இரண்டும் குறைந்த திட்டாந்தப் போலிவகை. (மணி. 29 : 359)
உபய தன்ம விகலம் - சாதனதருமம் எனப்படும் ஏதுவின் பண்பும் சாத்திய தருமம் எனப்படும் நிரூபிக்கப்பட வேண்டிய பொருட்பண்பும் நன்கு விளக்கப்படாதொழிதலாகும் திட்டாந்தப் போலிவகை. இஃது ஒரே இனப்பொருளை எடுத்துக்காட்டாகக் கூறும் சாதன்மிய திட்டாந்தத்தின் போலிவகை. இது சன்னா உள்ள உபயதர்ம விகலம், அசன்னா உள்ள உபயதர்ம விகலம் என இருவகைப்படும். அஃதாவது உள்பொருள் உபய தர்ம விகலம், இல்பொருள் உபயதர்ம விகலம் என்பன.
எ-டு : பக்கச்சொல் - ஒலி நிலைபேறுடையது
ஏது - வடிவின்மையால்
சாதன வசனம் - யாதொன்று வடிவற்றதோ அது நிலை பேறுடையது.
எ-டு : எடுத்துக்காட்டு வடிவற்றதாய் என்றும் நிலைபே றுடையதாய் உள்ள பொருளாதல் வேண்டும். அதனை விடுத்து, ‘குடம் போல’ என்று எடுத்துக் காட்டினைக் கூறின், அக்குடத்தின்கண் வடிவின் மையோ, நிலைபேறுடைமையோ இன்மையின், பக்கச்சொல்லின் பண்பாகிய நிலைபேறுடைமையும் ஏதுவாகிய வடிவின்மையையும் விளக்குவதற்கு அவ்வெடுத்துக்காட்டுப் பயன்படாமையால், பொருட்பண்பு, ஏதுப்பண்பு என்ற இரண்டற்கும் இழுக்குத் தரும். உள்பொருளாய் உள்ள எடுத்துக் காட்டுத் தரப்படுதல் உள்பொருள் உபயதர்ம விகலம் என்ற திட்டாந்தப் போலியாகும்.
இல்பொருள் உபயதர்ம விகலமானது வாதி தன் எதிரிக்கு இல்பொருளாம் ஒன்றைக் காட்டுமிடத்து, அதன்கண் பக்கப் பொருளும் ஏதுவும் குறையுடையனவாகக் காட்டுதல். பக்கச்சொல் - ஒலி நிலையற்றது; ஏது - அது வடிவு உடைமை யால்; சாதனவசனம் - யாதொன்று வடிவுடையது அது நிலையற்றது; எடுத்துக்காட்டு - ஆகாயம் போல் எனின், “ஆகாசம் என்பது இல்லை என்ற எதிரிக்கு, அந்நிலையற்ற தன்மையோ, வடிவு உடைமையோ உடன்பாடு அன்மையின், இஃது அசன்னா உள்ள உபயதன்ம விகலம் ஆகும்.” (மணி. 29 : 359 - 84)
சாதனம் சாத்தியம் இரண்டும் மீளாதிருக்கும் வைதன்மிய திட்டாந்தப்போலி. (மணி. 29 : 441)
திட்டாந்தப் போலி என்னும் எடுத்துக்காட்டுப்போலி, ஒத்த பொருளின் எடுத்துக்காட்டுப்போலி (-சாதன்மியம்), ஒவ்வாப் பொருளின் எடுத்துக்காட்டுப்போலி (-வைதன்மியம்) என இருவகைத்து. ஒவ்வொரு வகையிலும் ஐயைந்து உட்பிரிவுகள் உள. ஒவ்வாப் பொருளின் எடுத்துக்காட்டுப் போலியின் ஐவகையுள் மூன்றாவது, உபயாவியாவிருத்தி என்பது
உபயம் - இரண்டு; வியாவிருத்தி - வேறுபாடு.
அஃதாவது எடுத்துக்காட்டாகக் கூறப்பட்ட ஒவ்வாப் பொருளைக்கொண்டு தான் சாதிப்பதற்கு மேற்கொண்ட பொருளை எதிர்மறைமுகத்தால் நிரூபிக்கப் புக்க வாதி எடுத்துக்காட்டும் அவ் ஒவ்வாப்பொருள் எடுத்துக்காட்டி லிருந்து பக்கம், ஏது என்ற இரண்டன் பண்புகளும் மறுதலை நிலையில் பொருந்தாதொழிதலாம். இவ்வுபயாவியா விருத்தியானது உண்மை, இன்மை என இரு பிரிவிற்று.
எ-டு : பக்கப்பொருள் - ஒலி நிலைபேறுடையது
ஏது - வடிவற்ற தாதலின்.
மறுதலைநிலையில் விளக்கம் - யாதொன்று நிலைபேறுடைய தன்றோ, அது வடிவு அற்றதன்று.
எடுத்துக்காட்டு - ஆகாயம் போல.
எடுத்துக்காட்டு ஆகிய ஆகாயம் ஒத்த பொருளின் எடுத்துக் காட்டு. மறுதலைநெறியான் பக்கத் தொடர்ச்சி கூறின், ஒவ்வாப் பொருளாகிய மறுதலைப் பொருளின் எடுத்துக் காட்டினைக் கூறல் வேண்டும். அங்ஙனம் கூறாது ஒத்த பொரு ளாகிய ஆகாயத்தை எடுத்துக்காட்டாகக் கூறின் ஆகாயம் நிலைபேறு உடையது அன்று எனவும், வடிவம் உடையது எனவும் பெறப்படுதலின், நிலைபேறுடையதும் வடிவமற்றது மான ஒலிக்கு ஆகாயம் எடுத்துக்காட்டு அன்றாய் முடிதலின், பக்கப்பொருளின் குணமாகிய நிலைபேறுடைமை ஏதுவின் குணமாகிய வடிவற்ற தன்மை இரண்டற்கும் மாறுபாடு உண்டாக்கும் உபயாவியாவிருத்தி, உள்பொருளிடத்தும் கூறிய எடுத்துக்காட்டுப்போலி யாகிறது. ஆகாயம் என்ற பொருளில்லை என்ற எதிரிக்கு, இஃது இல்பொருளின் உபயாவியாவிருத்திக்கு எடுத்துக்காட்டாகிறது.
எ-டு : பக்கப்பொருள் - ஒலி நிலைபேறுடையதன்று.
ஏது - வடிவுடைமையின்; பக்கவசனம் எதிர்மறை
நிலையில் - யாதொரு பொருள் நிலைபேறில்லாத தன்றோ (நிலைபேறுடையதோ), அது வடிவுடையதன்று.
மறைநிலையில் எடுத்துக்காட்டு -
ஆகாயம் போல.
ஆகாயம் என்ற பொருள் ஒன்று இல்லை என்பானுக்குப் பொருட்பண்பாகிய நிலைபேறுஇன்மையும், ஏதுப்பண் பாகிய வடிவுடைமையும், அவற்றிற்கு மாறுபட்ட நிலை பேறும், வடிவின்மையும் ஆகியவற்றுள் ஒன்றும் உடன்பா டின்மையின், எதிரி ஏற்றுக்கொள்ளாத இந்த எடுத்துக்காட் டினைத் தருதல் இல்பொருளிடத்துக் கூறிய உபயாவியா விருத்தி என்ற வைதன்மிய திட்டாந்தப்போலியாம். (மணி. 29 : 429 - 49)
இலட்சியத்தைப் பக்க உதவியைக் கொண்டு உணர்த்தும் லட்சணம் (L)
எ-டு : மரக்கிளையின் நுனி வானிலுள்ள பிறையைக் காண உதவுதல்
அவச்சேதகம் நான்கனுள் ஒன்று. (விசார சந். 320)
(ஒரு பொருளைப் பிற பொருளிலிருந்து பிரித்துணர்தற்கு ஏதுவான சிறப்புப்பண்பு அவச்சேதகம்.)
உபாதியாவது சாத்தியத்திலே வியாபித்துச் சாதனத்தில் வியாபகம் இல்லாதது. (தருக்க. பா. 18) (L)
பக்கம் - இம்மலையில் புகையுண்டு.
ஏது - ஈரமரங்களில் பற்றிய தீயினால்;
பக்க விளக்கம் - எங்கெங்கு ஈரமரங்களில் பற்றிய தீயுண்டோ, அங்கங்குப் புகை உண்டு.
சாத்தியம் - புகை
சாதனம் - நெருப்பு
உபாதி - ஈரமரங்களில் பற்றிய தீ.
ஈர மரங்களில் பற்றிய தீ என்பது சாத்தியத்தில் வியாபித்தது; அஃதாவது புகையை உண்டாக்குகிறது.
சாதனமாகிய நெருப்பு இருக்கும் இடமெல்லாம் ஈரமரமாக இருக்கவேண்டியதில்லை என்பது சாதனத்தில் வியாபகம் இல்லாததாம்.
உருவி - உருவமுடையவன்; அருவி - உருவமில்லாதவன். உருவியாகிய பாட்டுடைத் தலைவனையே அருவியாகிய கிளவித் தலைவனாகக் கொண்டு கிளவிப்படக் கூறுதல். இதுவும் ஓர் ஆனந்தக் குற்றமாம். (யா. வி. பக். 565)
1. சொல் (திவா. பக். 223)
2. எழுத்தொலி, சொற்பொருள் (பிங். 3203)
3. ஆகமப் பிரமாணம் (சி.சி. அளவை)
4. வியாக்கியானம்; ‘உரையாமோ நூலிற்கு நன்கு’ (நாலடி. 319)
கருத்தா மொழியாகிய ஆகமப்பிரமாணம். (சி. சி. அளவை.2 சிவ. (மணி. 27 : 43, 44) (L)
செய்யுட் குற்றங்களுள் ஒன்று. ஈண்டு ‘உலகம்’ என்பது உலகியலாகிய ஒழுக்க நெறியைக் குறிக்கும்.
எ-டு : ‘அலைகடல்
ஏழும்தூர்த்(து) அந்தரத்தின் ஊடே
மலையனைய
மால்யானை ஓட்டிக் - கலவாரை
நீறாக்கி வையம் நெடுங்குடையின்
கீழ்வைத்தான்
மாறாச்சீர் மாநிலத்தார்
மன்’
வேந்தன் ஒருவன் ஏழு கடல்களையும் தூர்த்து வான்வெளி யில் போர்யானைகளை ஓட்டிப் பகைவரை எரித்துச் சாம்பலாக்கி உலகமுழுதையும் தன் ஒற்றைக்குடை நிழலில் வைத்தாண்டான் என்னும் பொருளமைந்த இப்பாடற்கண், உலகியல் நெறிக்கு மாறாகக் கடல் தூர்த்தல் முதலான செயல் களைக் கூறுதல் உலகமலைவு என்னும் குற்றம் ஆயினமை காணப்படும். (தண்டி. 122)
உலகியலுக்குப் பொருந்தாத செய்திகள் புகழ்ச்சியிடத்து ஏற்கத்தக்கன.
எ-டு : ‘கடல்நான்கும் வந்தலைக்கும் காலாளும்
தேரும்
அடல்செய்(து) இருதுணியாம் அன்றே -
உடலொன்றி
அந்தரமே ஏகுவன் காண்மினோ! யானியற்றும்
இந்திர சாலம் இது!’
” நாற்கடலளவும் பரந்துபட்ட காலாட்படையையும் தேர்ப் படையையும் ஒவ்வொன்றும் இவ்விரண்டு துண்டமாமாறு அழித்து இந்த உடலொடு தேவருலகிற் செல்லப்போகிறேன்” என்று கூறுவது உலக மலைவு; இதனை இந்திரசாலம் வல்லவன் செய்துகாட்டக் கூடும் ஆதலின், அவன் இதனைக் கூறும்போது புகழ்ச்சியிடத்து அலங்காரம் ஆகும். (தண்டி. 125 -4)
வேத வழக்கிலில்லாது உலகவழக்கிலே வழங்குஞ் சொல்.
(கலித். 1- 1 உரை.)
உலகவழக்குக்கு மாறுபட்டது. (மணி. 29 : 162, 163)
ஒரு செய்தியை நிறுவுவதற்குப் பக்கம், ஏது, எடுத்துக்காட்டு என்ற மூன்றும் தேவை. பக்கமாகக் குறிப்பிடப்படும் நிரூபிப்ப தற்கு உரிய பொருளும் அதன் பண்பும் மாறுபட்டிருப்பின், அது பக்கப்போலி எனப்படும். பக்கப்போலி பிரத்தியக்க விருத்தம் முதலாக ஒன்பது வகைப்படும். அவற்றுள் உலோக விருத்தம் என்பது பொதுவாக உலகத்தில் கூறப்பட்டு வரும் செய்திக்கு மாறாகக் கூறுவது.
வானத்தில் ஒளி வீசிக்கொண்டிருக்கும் சந்திரனைச் சந்திரன் அன்று என்று கூறுவது, சந்திரனுக்கு மதி என்பது பெயரன்று என்று கூறுவது போல்வன இப் பொருந்தாப் பக்கத்துக்கு எடுத்துக்காட்டாகும்.
ஒப்பளவை (குறள் 253 உரை)
உண்மையைக் கண்டு அறிவதற்குப் பயன்படும் அளவைகள் எனப்படும் பிரமாணங்கள் காண்டல் முதலாகச் சம்பவ அளவை (உண்மைநெறி அளவை) ஈறாகப் பத்து என்பர். அவற்றுள் உவம அளவையாவது ஒன்றோடு ஒன்றனை ஒப்பக் கூறி உணர்த்தும் அளவையாம். ஆமா என்றதொரு விலங் கினை அறியாதானுக்கு, ஆப்போலும் எனப் பசுவைப் போலிருக்கும் என்று சொல்லி, ஆமாவினைக் கண்டபோது அவ்வுவமத்தைக் கொண்டே அதனை அறியச் செய்தல். (மணி. 27 : 41, 42)
“ஆனையைப் பந்தியிற் கண்டிலம்” என்றாற் போலும் அபாவம்.
பந்தி - ஆனை கட்டும் இடம். ஆனை அங்குக் காணப்பட வேண்டியது அங்குக் காணப்படாமல் போனது உள்ளதன் அபாவமாம். (சி. சி.அளவை 1, மறைஞான) (L)
எ
பாடப்படுவோனது பெயரைச் சார்த்தி எழுத்து அளபெழப் பாடுவதாகிய செய்யுட் குற்றம்.
எ-டு : ‘ஆழி இழைப்பப் பகல்போம் இரவெல்லாம்
தோழி
துணையாத் துயர்தீரும் - வாழி
நறுமாலை
தாராய் திரையவோஒ என்னும்
செறுமாலை சென்றடைந்த
போது.’
இதன்கண் ‘திரையவோஒ’ என்பது இயற்பெயரைச் சார்ந்து எழுத்து அளபெடுத்தமையால் எழுத்தானந்தம் ஆகிய குற்றமாயிற்று. ‘திரையன்’ என்னும் இயற்பெயர் ‘திரை’ என விளிக்கப்படும். (யா. வி. பக். 557, 558)
1. எழுத்திலக்கண வழு 2. நச்செழுத்து வரப் பாடும் குற்றம்
(யாழ். அக)
‘தேமான் இதணத்தேம் நாமாக நம்புனத்தே
வாமான்பின் வந்த மகன்’
இதன்கண் தேமா என்பதே சொல்; ‘தேமான்’ என அதற்கு னகரச் சாரியை கொடுத்துக் கூறியது எழுத்ததிகாரச் செய்தி யொடு மாறுபடுதலின் எழுத்திலக்கண வழுவாம். (யா. வி. பக். 422)
‘எழுத்துக் குற்றம்’ காண்க. (யா. வி. 95 உரை)
ஏ
ஏத்துவந்தரம் -
தோல்வித் தானத்துள் ஒன்று. உரிய ஏதுவன்றிப் பிறிதொரு ஏதுக் கூறல். ஹேது + அந்தரம். படைக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் அழியக்கூடியன. இதனை அறிந்திருந்தும், “பக்கப்பொருள் - ஒலி நிலைபேறுடையது; ஏது - உண்டாக் கப்படுதலால்” என்று பொருத்தம் இல்லாத ஏதுவினைக் கூறுதல் ஏத்துவந்தரம். (செந். 3 - 13) (L)
ஏது -
1. திருஷ்டாந்தம். “ஏதுக்கள் காட்டி முடித்தாள் இணையில்லா நல்லாள்” - (நீலகேசி - 423)
2. சம்பந்தம் - ‘புலி கொண்மார் நிறுத்த வளையுளோர், ஏதுஇல் குறுநரி பட்டற்றால்’ (கலி. 65) (L)
ஏது நிகழ்ச்சி -
கன்மங்களாகிய காரணங்கள் தத்தம் பயனைக் கொடுத் தற்குத் தோன்றுதல் ‘ஏது நிகழ்ச்சி எதிர்ந்துள தாகலின்’ (மணி. 3:4.) (L)
ஏதுப்போலி -
ஏதுவுக்குரிய இலக்கணமின்றி ஏதுப்போலத் தோன்றுவது. (மணி. 29: 191)
ஏதுவனுமானம் -
ஏது அனுமானம் ; காரிய நிகழ்ச்சி கண்டு அதற்குக் காரண முண்டு என்று கருதி உரைக்கும் அளவை.
எ-டு : ஆற்றில் பெருகிய வெள்ளத்தைக் கண்டு ஆறு தோன் றுமிடத்தே மழை மிகப் பெய்துள்ளமையை எண்ணி யுரைப்பது.
ஐ
சத்தப் பிரமாணத்தை மறுத்து ஏதுவாதம் செய்வோன். “ஆரணநூல்வழிச் செவ்வை அழித்திடும் ஐதுகர்க்கு ஓர் வாரணமாய்” (ரஹஸ்ய. 61) ; ஏதுவை அடிப்படையாகக் கொண்டு வாதம் செய்வோன் ஐதுகன்.
செய்யுட் குற்றங்களுள் ஒன்று; பொருள் இன்னதென்று துணியக் கூடாதவாறு தடுமாற்றம் தோன்றக் கூறுவது.
(யா. வி. பக். 565)
ஒ
செய்யுட்கண் வருதல் கூடாது என்று விலக்கப்பட்ட பல வகைக் குற்றங்களுள் ஒன்று.
இணைந்துள்ள சொற்களைப் பிரித்தவிடத்து அமங்கலப் பொருள் தருவது.
எ-டு : ‘வீதிதோறும் மாடஞ் சிறக்க’ ‘மாடஞ் சிறக்க’ என்பது மாடு அஞ்சு இறக்க என்றும் பிரிந்து அமங்கலப் பொருள் தருகிறது. இத்தகையன ‘ஒட்டுப் பிரிமொழி’ என்னும் குற்றமாம்.
(யா. வி. பக். 565)
யாப்பருங்கல விருத்தி உரையாசிரியரால் பரக்கக் கூறப்பட்ட செய்யுட் குற்றங்களில் ஒன்று. இக்குற்றம் முதலிய 27 ஊனங் களையும் நீக்கிப் பாடவல்லோன் கவிஞன் என்பர். ஒரே செய்தியைப் பலகாலும் குறிப்பிடும் கூறியது கூறல் என்னும் குற்றம் இது. (யா. வி. பக் 565)
தருக்கத்தில் பொருந்தாத பக்ஷம். பக்கம், ஏது,
திட்டாந்தம் என்ற மூன்றனுள் பக்கம் பொருந்தாது பக்கப்போலியாக அமைதல். அஃது ஒன்பது வகைப்படும்.
பிரத்தியக்க விருத்தம், 2) அநுமான விருத்தம், 3)
சுவசன விருத்தம், 4) உலோக விருத்தம், 5) ஆகம
விருத்தம், 6) அப்பிரசித்த விசேடணம்,
7)
அப்பிரசித்த விசேடியம், 8) அப்பிரசித்த உபயம்,
9) அப்பிர சித்த சம்பந்தம் என்பன அவை. இவற்றின்
விளக்கம் அவ்வத்தனித் தலைப்புள் காண்க. (மணி. 29
: 147 - 190)
அந்யோன்னியாச்சிரய தோஷம் என்று வடநூலுள் சொல் லப்படும் குற்றம். இதரேதராச்சிரயம் என்பதும் அது.
குற்றியலுகரம் இடனும் பற்றுக்கோடும் சார்ந்துவரும் என்று கூறிப் பின் இடனும் பற்றுக்கோடும் குற்றியலுகரத்துக்குச் சார்பாய்அல்லது வாரா என்று மீண்டும் கூறுதல் ஒன்றனை ஒன்று பற்றுதல் என்னும் குற்றமாம்.
வேற்றுமைத்தொகை உருபும் பொருளும் உடன் தொக்கவழி அன்மொழித்தொகை போல் இடைப்பதங்கள் விரித்துக் கொள்ளப்படும் எனவும், அன்மொழித்தொகை வேற்றுமைத் தொகைபோலத் இடைப்பதங்கள் விரித்துக்கொள்ளப்படும் எனவும் கூறுவது இதரேதராச்சிரியம் என்னும் ஒன்றனை ஒன்று பற்றுதல் என்னும் குற்றமாம். (சூ. வி. பக். 50)
க
‘பொருளில்லாமற் படைத்துக்கொண்ட தொடர்மொழி (பி. வி. 19 உரை)
எ.டு : முயற்கோடு, ஆகாயத்தாமரை
கடம் - குடம்; சடகம் - குருவி.
குடத்திற்கு இயல்பாக இல்லாத ஒலியை அதன்உள் நுழைந் திருக்கும் குருவி உண்டாக்குவதுபோல, பிராணவாயு தானே அசையும் ஆற்றல் இல்லாத உடலை உள்ளிருந்து இயக்குவது முதலாக ஒன்று மற்றொன்றினுள் இருந்து காரியப்படுத்து வதை விளக்கும் நெறி இந்நியாயமாகும் (L)
கடம்பு - மர விசேடம்; கோரகம் - அரும்பு
கடம்பமரத்தின் அரும்புகள் ஒரே காலத்தில் பூப்பது போல, ஒரே இடத்திலிருந்து புறப்படும் ஒலி அலைகள் ஒரே காலத் தில் நாற்றிசையிலும் உள்ளவர் செவியில் சென்று சேருதல் முதலாகப் பல செயல்களும் ஒரே காலத்தில் நிகழ்வதனைக் குறிக்கும் நெறி இந்நியாயமாகும். (L)
கடம்பு - மரவிசேடம்; முகுளம் - மொட்டு. கடம்ப கோரக நியா யத்தின் மறுபெயர் இது. அது நோக்குக.
கதா - செல்லுதல்; அனுகதி - பின்தொடர்தல்.
சிறிதும் ஆராய்தல் இன்றி, ஒருவர் சென்ற வழியே தனக்கும் பின் பற்றுதற்குரியது என்று கருதிச் செல்லும் நெறி இந் நியாயமாகும். (L)
கபோணி - முழங்கை; குளம் - வெல்லம்
முழங்கையிலுள்ள வெல்லத்தை நாவால் சுவைக்கச் சொல் லின் நா முழங்கையை அணுக ஒண்ணாதவாறு போல, தனக்கு அண்மையில் இருந்தும் தன்னால் பெற இயலாத பொருளைப் பெற முயன்று செயலற்றிருக்கும் நெறி இந்நியாயமாகும். (L)
கபோதகம் - புறா
ஒரு புறா ஓரிடம் சேர, அதன் இனமான புறாக்கள் எல்லாம் உடனே அதனைப் பின்பற்றி அவ்விடத்தைச் சேர்தல் போல, ஒரு செயல் நிகழ அதன் இனமான பலவும் உடன்நிகழும் நெறி இந்நியாயமாகும். (L)
புறாக்கள் பல ஒரே நெற்களத்தில் தானியங்களைப் பொறுக்க மேல் விழுவது போலும் நெறி.
‘கபோதக நியாயம்’ காண்க.
செய்யுட் குற்றங்கள் ஆறனுள் ஒன்று.
இன்பமும் பொருளும் பற்றிய அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்றற்கொன்று பொருந்தாதவற்றைச் சொல்லும் குற்றம் இது.
எ-டு : ‘ஐந்தாம் நரம்பாம் பகைவிரவா(து), ஆறாகி
வந்த கிளைகொள்ள நான்காம் - முந்தை
இணைகொண்ட யாழ்எழூஉம் ஏந்திழைதன் ஆவித்
துணைவன் புகழே தொடுத்து.’
யாழினது ஐந்தாம் நரம்பாகிய பகை சாராமல், ஆறாம் நரம்பாய் வந்த கிளையைக் கொள்ள, நான்காம் நரம்பாகிய முதன்மைத் தான இணையைக் கொண்ட யாழினை அப் பெண் தன் உயிர்த்துணைவனது புகழைத் தொடுத்து வாசிப்பாள் - என்ற பொருளமைந்த இப்பாடற்கண், இசைக் கலை மலைவு வந்துள்ளமை பின்வருமாறு :
நின்ற நரம்பிற்கு ஐந்தாவது ‘கிளை’; அஃது இங்குப் ‘பகை’ என்று குறிக்கப்பட்டுள்ளது. ஆறாவது நரம்பான ‘பகை’ ஈண்டுக் ‘கிளை’ எனப்பட்டுள்ளது. நான்காவது நரம்பான ‘நட்பு’ ஈண்டு எட்டாம் நரம்பான இணை என்று சுட்டப்பட் டுள்ளது. இவ்வாற்றால் இதன்கண் இசைக்கலை மலைவு காணப் பட்டவாறு. (தண்டி. 121)
கலைக்கு மாறாய தவறுகளும் இல்பொருளாய்ப் புகழ்ச்சி யிடத்துப் புனைந்துரையாகிய நாடகவழக்கின்கண் அலங் காரமாய் வரின் ஏற்றுக்கொள்ளப்படும்.
எ-டு : ‘கூடம் விரவிக் குறைநிலத்தா னத்தியன்ற
பாடல் அமுதம் பருகினான் - ஆடுகின்ற
ஊசல் அயல்தோன்றி ஒள்ளிழைக்கு நாண்அளித்த
ஆசில் வடிவே லவன்.’
கூடம் ஆறாம் நரம்பாகிய பகை நரம்பு. அதனொடு கூடிக் குறைந்த நிலமாகிய தானத்தில் மிழற்றப்பட்ட பாடலை அமுதம் போலப் பருகுதல் என்பது கலைமலைவாகும். தலைவி ஊஞ்சலை ஆடிக்கொண்டு பாடும்போது, அவள் அயலில் வந்து தோன்றிய தலைவனுடைய தோற்றம் அவ ளுக்கு நாணம் பயந்தமையால், பாடல் பிறழ்ந்தது; பிறழினும் அவள்பால் கொண்ட காதல் மிகுதியால் அதன்கண் குறை காணாது அவன் அதனை இனிதின் சுவைத்தான் என்பத னால், இக்கலைமலைவு புகழ்ச்சியிடத்து அலங்காரமாய் அமைந்தது. (தண்டி. 125)
ஒரு பொருளைத் தெளிவாக உணர்த்துவதற்காக வந்த சொல், அப்பொருளை ஐயுறுமாறு பல பொருளையும் குறித்து நிற்கும் வழு; வழு ஒன்பதனுள் ஒன்று.
எ-டு :
‘புயலே புறம்பொதிந்து பூந்தா(து) ஒழுக்கி
மயலே கடவுளர்க்கு வாய்த்துச் - செயலை
எரிமருவு பூந்துணர்த்தாய் யாவரும் ஊ டாடார்
அரிமருவும் சோலை அகம்’.
மேலே மேகங்களால் கவியப்பெற்று, உள்ளே மகரந்தத் தூள்கள் சொரியப்பட்டு, தன் வனப்பு மிகுதியால் தேவர்க்கும் மயக்கம் அளித்து, அசோகின் அழல்போன்ற பூங்கொத் துக்கள் மிகக் கொண்டு, வண்டுகள் (அரி) சூழும் பூஞ் சோலைக்குள் யாரும் புகார் என்ற பொருளமைந்த இப் பாடற்கண், ‘யாரும் உள்ளே புகார்’ என்ற முடிவுடன், வண்டு என்னும் பொருளில் ‘அரி’ என்ற சொல்லை அமைத் திருப்பது, அச்சொற்கு அமைந்த பிற பொருள்களான சிங்கம் நெருப்பு முதலிய பொருளுக்கும் ஏற்றதாய்க் கவர்பட்டு நிற்றலின், இது வழுவாயிற்று.
கவர்படுபொருள் : வழுவமைதியாதல்.
பல பொருள் ஒரு சொல் தெளிவாகப் பொருளுணர்த்து மாயின் அது கொள்ளத்தக்கதாம்.
எ-டு : ‘அரியே அனைத்துலகும் காக்கும் கடவுள்
எரியே மறையோர்க் (கு) இறை.’
என்புழி, ‘அரி’ திருமாலெனவும், ‘எரி’ நெருப்பெனவும் தெளிவுறப் பொருள் பயத்தலின் குற்றமில என்பது. (தண்டி. 107, 108)
காகம் - காக்கை; தாலீயம் - பனம்பழம்.
காகம் பனைமரத்தில் வந்து தங்கப் பனம்பழம் அப்பொழுது விழுந்ததனைக் காக்கை ஏறியதனால் பனம்பழம் விழுந்தது என்று சொல்வதுபோலத் தற்செயலான நிகழ்ச்சிக்கு ஒரு காரணத்தை ஏற்றி உரைக்கும் நெறி இந்நியாயமாகும். (L)
காகம் - காக்கை; அட்சி - கண்; கோளம் - கண்மணி.
காகத்திற்கு இருகண்களுக்கும் ஒரே கண்மணி உள்ளது. எந்தக் கண்ணால் பார்க்க வேண்டுமோ அந்தக் கண்ணுக்குக் கண்மணியைக் காக்கை உருட்டிக் கொண்டுவந்து சேர்த்துப் பார்க்கும். அதுபோல ஒரே சொல் இரண்டு இடங்களுக்குத் தனித்தனிப் பொருந்திப் பொருள் விளக்கும் நெறி இந் நியாயமாகும். (L)
மெய் முதலிய ஐம்பொறிகளாலும் உணர்வது (குறள் 243 பரிமே.) காட்சிப் பிரமாணம் (சி. போ. சிற். 1, 1. பக்.15) எனவும், பிரத்தியட்சப் பிரமாணம் எனவும் இது கூறப்படும். (L)
இது ‘சுட்டுணர்வு’ எனவும் பெயர் பெறும். இஃது ஒரு பொரு ளின் பொருண்மை மாத்திரம் கண்டு உணரும் உணர்வாம். ஆகவே, காட்சியளவையாவது கண் முதலிய பொறிகளான் வண்ணம் முதலியன பற்றிக் காண்டல் முதலியன செய்து மேம்போக்காக அறியலாம். இத்தகைய மேம்போக்கான அறிவோடு அப்பொருளின் பொருண்மை மாத்திரம் கண்டு ணரும் உணர்வே சுட்டுணர்வு எனவும் காட்சியளவை எனவும் கூறப்படும் பிரத்தியக்கப் பிரமாணமாகும் என்று மணிமேகலை கூறுகிறது. (மணி. 29 : 49-51)
பிரத்தியட்சம் தவிர வேறு பிரமாணம் இல்லை என்று வாதிக்கும் உலோகாயதன். (சி. போ. பா. அளவை. பக். 40) (L)
“கண்கூடு அல்லது கருத்தளவு அழியும்; இம்மையும் இம்மைப்பயனும் இப்பிறப்பே: மறுமை உண்டாய் வினை துய்த்தல் பொய்யே” என்று குறிப்பிடும் பூதவாதியின் கோட்பாடும் இதுவே. (மணி. 27 : 274-276)
‘காட்சி அளவை’ காண்க
நியாய மத்திய°தன். ‘நமக்கோர் காரணிகனைத் தரல் வேண்டும். (இறை.அ.1 உரை) (L)
காரியத்தினின்று காரணத்தை அனுமானித்தல் (மணி. 27: 33, 34 உரை).
எ-டு : ஆற்றுநீர் வெள்ளமாகக் கரைபுரண்டு ஓடுவதனைக் கண்டு ஆற்றின் தொடக்கமாகிய மலைப்பகுதியில் பெருமழை பெய்திருத்தல் வேண்டும் என்று, காரியத் தைக் கொண்டு காரணத்தை இங்ஙனம் இருத்தல் வேண்டும் என்று கருதுவது காரிய அனுமானம்.
செய்யுட் குற்றங்கள் ஆறனுள் ஒன்று. காலம் என்பது செய்யுளுள் இடம் பெறும் சிறுபொழுதும் பெரும்பொழு தும் ஆம். அவற்றுள் ஒருகாலத்திற்குரிய பூவும் புள்ளும் தொழிலும் போல்வனவற்றைப் பிறிதொரு காலத்திற்குப் புணர்த்துரைக்கும் பொருந்தாமையே இது.
எ-டு : ‘செங்கமலம் வாய்குவியத் தேங்குமுதம் கண்மலர
எங்குநெடு வான்மீன் இனம்இமைப்பப் - பொங்(கு) உதயத்(து)
ஓர்ஆழித் தேரோன் உகந்தான்; மலர்ந்ததே
நீர்ஆழி சூழ்ந்த நிலம்.’
இதன்கண், தாமரை குவியவும் குமுதம் மலரவும் எங்கும் விண்மீன் இமைக்கவும் சூரியன் உகப்ப உலகம் விழித்து மலர்ந்தது என, தாமரை குவிதல் குமுதம் மலர்தல் விண்மீன் இமைத்தல் ஆகிய மாலைக்குரிய நிகழ்ச்சிகளைக் கூறிச் சூரியன் உதித்தான் என்று கூறியது சிறுபொழுது பற்றிய காலமலைவு.
எ-டு : “காதலர் வாரார்; களிக்கும் மயில்அகவத்
தாதவிழ் பூங்குருந்தின் தண்பணையின் - மீதே
தளவேர் முகைநெகிழத் தண்கொன்றை பூப்ப
இளவேனில் வந்த(து) இதோ.”
“மயில்கள் அகவுகின்றன; குருந்த மரக்கிளைகளில் படர்ந்த முல்லை அரும்புகள் மலர்கின்றன; கொன்றையும் பூத்துவிட் டது; இதோ இளவேனில் வந்தது. ஆயின் என் தலைவர் வந்திலரே!” என்ற பொருளமைந்த இப்பாடற்கண், மயில் அகவுதல் முல்லை மலர்தல் கொன்றை பூத்தல் ஆகிய கார் கால நிகழ்ச்சிகளைக் கூறி, இளவேனில் வந்ததாகக் கூறியது பெரும்பொழுது பற்றிய காலவழு. (தண்டி. 120)
காலத்தொடு பொருந்தாத வருணனையும், இல்பொருளாகிய புகழ்ச்சியிடத்து ஏற்கத்தக்கது.
எ-டு : மண்டபத்து மாணிக்கச் சோதியான் வாவிவாய்ப்
புண்டரிகம் மாலைப் பொழு(து) அலரும் - தண்தரளத்
தாமம் சொரியும் தகைநிலவான் மெல்லாம்பல்
பூமலரும் காலைப் பொழுது.’
இப்பாடலில் காலையில் மலரும் தாமரை மாலை மலரும் எனவும், மாலையில் மலரும் ஆம்பல் காலை மலரும் எனவும் கூறியது காலமலைவாய்ப் புகழ்ச்சியிடத்து அலங்காரம் ஆயிற்று. இது சிறுபொழுது . (தண்டி. 125-2)
எ-டு : வஞ்சியர்கோன் வஞ்சி மதவேழ வார்மதத்தால்
வெஞ்சுடர்சூழ் வேனில் வெயில்மறைப்ப - வஞ்சத்
தள(வு)அரும்பப் பூங்கொன்றைத் தண்கொம்(பு) அரும்பக்
களிமயில்கள் ஆர்த்திலகும் காடு.
இப்பாடலில், கார்காலத்துக்குரிய முல்லை அரும்புதல், கொன்றைப் பூத்தல், மயில் ஆடுதல் ஆகியவற்றை வேனிற் காலத்துக் கூறியது காலமலைவாய்ப் புகழ்ச்சியிடத்து அலங்காரம் ஆயிற்று. இது பெரும்பொழுது. (இ. வி. 708-3)
குணம் - புழு; அக்கரம் - எழுத்து.
மரம் சுவடி முதலியவற்றில் புழுக்கள் அரித்துத்தின்ற இடங் களது அமைப்புச் சில சமயங்களில் எழுத்துவடிவில் அமைந் திருப்பது போல, தற்செயலாக ஒருசெயல் செய்வோனுடைய உள்ளம் கலவாது நிகழ்வதனைக் குறிக்கும் நெறி இந்நியாய மாகும். (‘ஏரல் எழுத்து’ என்பார் பரிமேலழகர்) (குறள் 404 உரை) (L)
எழுத்தானந்தம், சொல்லானந்தம், பொருளானந்தம், யாப்பா னந்தம், தூக்கானந்தம், தொடையானந்தம், இசையானந்தம் ஆகிய ஆனந்தக் குற்றங்களும்,
பாட்டுடைத் தலைவனையே கிளவிப்படக் கிளவித்தலைவ னாகக் கூறும் குற்றமும், பிரிபொருட்டொடர்மொழி, முரண்மொழி, ஒருபொருண்மொழி, ஐயமொழி, முறை பிறழவைப்பு, சொல்வழு, யாப்பின் வழு, நடைவழு, பொருளின் வழு, புணர்ப்பு வழு - என்னும் வழுக்களும்,
கலைமலைவு, காலமலைவு, உலகமலைவு, இடமலைவு, மேற்கோள்மலைவு, ஏதுமலைவு, எடுத்துரைமலைவு, நூல் மலைவு என்னும் மலைவுகளும் ஆகிய இவை பதினெட்டுக் குற்றங்களும், இன்னா இசையுடையன என்னும் குற்றமும் என ஆனந்தம், வழு, மலைவு முதலாகக் கூறப்பட்டவை செய்யுட் குற்றமாம். (யா. வி. பக். 557, 565)
ஒருவன் இல்லத்தில் இல்லை என்பதைக் கேட்டவன், வேறிடத்தில் அவன் இருக்கிறான் என்று ஊகித்துக்கொள் வது போலும் பிரமாணம். ‘அகத்தின் இலை உறு தேவதத்தன் எனில், அவன் வேறோரிடத்திலெனத் தெளிந்தறிதல்.... கேள்வி அருத்தாபத்தி’ (வேதா. சூ. 22) (L)
கிமுத - அது ஆகப்பட்டது. அது அப்படி ஆயிற்று என்பது கைமுத்யம் அல்லது கைமுதிகம் ஆகும். (L)
“ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும் என்றால் இலவம் பஞ்சைப் பற்றிக் கூறுவானேன்” என்பது போல, அதுவே அப்படியானால் மற்றதனைப் பற்றிக் கூறுவானேன் என்னும் வாதம் செய்யும் நெறி இந்நியாயமாகும்.
கோ - பசு. பலவர்த்தம் - எருது.
பசுக்கொட்டில் என்று சொல்லப்படும்இடத்தில் அங்குச் சில எருதுகளும் இருக்கலாம். ஆகவே, பசுக்கொட்டில் என்பது தலைமையும் பன்மையும் பற்றிய வழக்கு. இங்ஙனம் தலைமை யும் பன்மையும் பற்றி ஒரு பொருளைக் குறிப்பிடும் நெறி இந்நியாயமாகும்.
இடக்கர்ப்பட வரும் சந்தியிசையுடையவை; செய்யுட் குற்றங் களுள் ஒன்றாம். (யா. வி. பக். 565)
எழுத்திலக்கணத்தில் கூறப்பட்ட சந்திஇலக்கணம் பிழைபட வருவது. இஃது ஒரு செய்யுள் வழு. இதுவே இரண்டாம் வேற்றுமைக்கண் வரின் வழுவாகாது.
எ-டு : ‘என்பூடு உருக இனைவேன் மனம்கலக்கும்
பொன்பூண் சுமந்த புணர்முலையாள் - மின்பூண்
நுடங்கிடைக்குக் காவலாய் நோக்கம் கவரும்
படங்கிடக்கும் அல்குற் பரப்பு.’
“எலும்புகளும் உருக வருந்தும் எனது மனத்தைக் கலக்கும் பொன் நகைகளை அணிந்துள்ள தனம் இரண்டும் உடை யவளான இவளது மின்னல் போல அசையும் நுண்ணிடைக் குக் காவலாகிப் பாம்பின் படம் போன்ற இவளது அல்குற் பரப்பு என் நோக்கத்தினைக் கவர்கிறது” என்பது பொருள்.
இப்பாடலில் ‘பொற்பூண்’ எனச் சந்தியுடன் வருவதே இலக்கண வழாநிலை; ‘பொன்பூண்’ என நிற்பது வழு.
எ-டு : ‘இரவி துணைத்தாள் இகல்வேந்தர் சென்னி
விரவு மலர்பொழியும் மேவா - அரை(சுஇரிய
மின்பொழியும் செவ்வேல் வெறியேன் மனம்கவரப்
பொன்பொழியும் செங்கைப் புயல்.’
‘சோழ மன்னனுடைய இரண்டு கால்களும், பகை மன்னர்தம் தலையில் சூடிய மலர்களைச் சொரியப்பெறும்; வேல், பகை மன்னர் தோற்றோட ஒளிவீசும்; என் மனம் விரும்பும் வகை யில் கொடுத்தே சிவந்த அவனுடைய கைகள் பொன்னைச் சொரியும்” என்று பொருள்படும் இப்பாடற்கண், இரண் டாம் வேற்றுமைப் புணர்ச்சியில் இயல்பு புணர்ச்சியும் உண்டு என்பதால், ‘மலர் பொழியும்’, ‘மின் பொழியும்’, ‘பொன் பொழியும்’ என அவை இயல்பாகவே வரினும் வழுவாகா என்று கொள்ளப்படும். (தண்டி. 117, 118)
சமணர் கூறும் எழுவகை வாதமுறை. அவையாவன உண்டாம், இல்லையாம், உண்டும் இல்லையும் ஆம், சொல்லொணாதது ஆம், உண்டும் ஆம் சொல்லொணாத தும் ஆம், இல்லையும் ஆம் சொல்லொணாததும் ஆம், உண்டும் இல்லையும் ஆம் சொல்லொணாததும் ஆம் - என்பன. (சி. போ. பா. பக். 40). (L)
சபக்கத்தினின்று எடுத்துக்காட்டும் வியாத்தி (மணி. 29 : 73,74)
எ-டு : மேற்கோள் - இம்மலை நெருப்புடைத்து எனல்
ஏது - புகை உண்மையால்
எடுத்துக்காட்டு - அடுக்களை போல
சபக்கத் தொடர்ச்சி - யாதொன்று யாதொன்று புகையுடை யது, அது நெருப்புடையது என, இணையான பொருள்களின் பொதுப்பண்பினை விளக்குவது.
சமுத்திரம் - கடல்; கலசம் - பாத்திரம். சமுத்திரம் பேரளவிற் றாய நீரையுடையதேனும் நீரை முகக்கப் பயன்படுத்தப்படும் பாத்திரம் தன் கொள்ளளவு நீரையே முகப்பதற்குரிய தகுதி யுடைத்தாவது போல, பரந்து விரிந்த செய்திகளில் அவரவர் தம் புத்தியளவிற்கு எட்டிய அளவே கற்பது போல்வன வற்றைக் குறிப்பிடு நெறி இந்நியாயம் ஆகும். (L)
மழைக்குப் புறம்பட்ட கூதிர்க்காலம், மழைத் தூறலையும் வாடைக் காற்றையும் உடையபருவம்; ‘சரத்ருது’ காண்க.
கார்காலத்துக்கு அடுத்த பருவம் இது.
‘துவலைத் தண்துளி பேணார்’ (நெடு. 34)
சாகம் - இலையுணவு; பசு - விலங்கு. பசு என்பது பொதுவாக விலங்குகளைக் குறிக்கும் சொல். சாகபசு என்பது புலால் உண்ணாது இலையை உண்ணும் ஆடு போல்வனவாகிய யாகத்திற்குப் பலியிட உதவுவனவற்றைக் குறிக்கும் சொல் லாம். இங்ஙனம் பொதுவான பொருளை அடைமொழியால் சிறப்பான பொருளைக் குறிப்பதாக ஆக்கும் நெறி இந் நியாயமாகும். (சி.போ. பர். 1,2 - பக். 73) (L)
சாகா - கிளை; சந்திரன் - திங்கள்.
சந்திரன் கிளைக்குமேல் இருப்பதாகக் காட்டி உணர்த்துவது போல, பார்வைக்குத் தொடர்புடையது போல இருக்கும் ஒரு பொருளை அடையாளமாகக் காட்டி அதன் வாயிலாக வேறொரு முக்கியமான பொருளைத் தெரிவிக்கும் நெறி இந்நியாயமாகும். (L)
திட்டாந்தப் போலியானது சாதன்மியம் வைதன்மியம் என இருவகைத்து. ஒவ்வொரு வகையிலும் ஐந்து உட்பிரிவுகள் உள. சாத்யாவியாவிருத்தி என்பது வைதன்மியத் திட்டாந்தப் போலியின் ஐந்து வகைகளுள் முதலாவது. வைதன்மியத் திட்டாந்தமாவது எதிர்மறைமுகத்தால் எடுத்துக்காட்டுத் தருவது. அது சாதனதருமம் மீண்டு நிற்க, சாத்தியப் பொருள்தருமம் மாத்திரம் மீளாது வைதன்மியதிட்டாந் தத்தில் பொருந்தி இருப்பதாம்.
ஒலி நிலைபேறுடையது, வடிவின்மையால் - என்பன, மேற் கோளும் ஏதுவும் ஆகும். இவற்றிற்கு எடுத்துக்காட்டு மறுதலைப் பொருளில் கூறும்போது, வடிவுடையன ஆதலின் நிலைபேறு இலவாகிய எடுத்துக்காட்டுக்கள் தருதல் வேண்டும்.
சாதனம் - வடிவின்மை; சாத்தியம் - நிலைபேறுடைமை. எடுத்துக்காட்டு வடிவுடையதும் நிலைபேறில்லதுமாய் இருத்தலே தக்கது. ‘பரமாணுப்போல’ என்ற எடுத்துக் காட்டுத் தரின், வடிவுடையதும் நிலைபேறில்லாதுமாக அஃது இருத்தல் வேண்டும்; பரமாணு வடிவுடையது; நிலைபேறும் உடையது.
சாதனமாகிய வடிவின்மைக்கு மறுதலையாகிய வடி வுடைமை பரமாணுவிடத்தில் உள்ளது; சாத்திய தருமமாகிய நிலைபேறுடைமைக்கு மறுதலையாகிய நிலைபேறின்மை பரமாணுவிடம் இல்லை. எனவே எடுத்துக்காட்டாகத் தரப்பெற்ற ‘பரமாணு’ சாதன தருமத்துக்கு வைதன்மத் திட்டாந்தம் ஆவது பொருந்துகிறது; சாத்திய தருமத்துக்கு (-நித்தியத்துவம்) வைதன்மிய திட்டாந்தமாதல் பொருந்த வில்லை. ஆகவே இது ‘சாத்தியாவ்யாவிருத்தி’ என்ற எடுத்துக்காட்டுப்போலியாக அமைகிறது. (மணி. 29: 402-412)
காட்சியே அளவையாவது என்றும், நிலம் நீர் தீ வளி எனப் பூதம் நான்கே என்றும், அவற்றது புணர்ச்சி விசேடத்தால் தோன்றிப் பிரிவால் மாய்வதாய உடம்பின்கண்ணே அறிவு மதுவின்கண் களிப்புப் போல வெளிப்பட்டு அழியும் என்றும், மறுமை இல்லை என்றும், இன்பமும் பொருளுமே உறுதிப்பொருள் என்றும் சொல்லும் உலோகாயத மதம். (கு. 281 பரிமே. மணி. 27 : 264 - 276)
ஐயத்துக்கு இடமான பொருளை ஏதுவாகக் கொண்டு அனுமானம் செய்வதாகிய ஏதுப்போலி வகை. சித்தா சித்தமாவது, ஏது ஐயமாய்ச் சாதித்தல்.
ஏதுப் போலியானது அசித்தம், அநைகாந்திகம், விருத்தம் - என மூவகைப்படும். அவற்றுள், அசித்தம் உபயாசித்தம் முதலாக நான்கு உட்பிரிவுகளைக் கொண்டது. அவற்றுள் ஒன்று சித்தா சித்தம் என்னும் சித்த அசித்தமாகும்.
சித்தம் - உறுதிப்படுத்துவது. அசித்தம் - உறுதி செய்யப்படா தது. காணப்படும் பொருள் நீராவியோ புகையோ என்று ஐயமாயின இடத்தே அப்பொருளைப் புகையாகவே கொண்டு, புகை உள்ள இடத்தில் நெருப்புண்டு ஆதலின் அங்கு நெருப்பு உண்டு என்று உறுதிப்படுத்துவது, அசித்தத் தைச் சித்தமாகக் கொண்டு முடிவு செய்யும் ஏதுப் போலியாம். (மணி. 29 : 203-206)
சியாலன் - மைத்துனன்; சாரமேயன் - நாய். மைத்துனனுக்கும் வீட்டில் வளர்க்கும் நாய்க்கும் பெயர் ஒன்றாக அமைந்த நிலையில், ‘நாயை விரட்டு’ என்று தலைவன் உத்தரவிட, நாயின் பெயரே மைத்துனனுக்கும் பெயரான பெயர் ஒற்றுமை குறித்து, விரட்டப்பட உத்தரவிடப்பட்டது நாயைக் குறித்தோ மைத்துனனைக் குறித்தோ என்று உறுதியாக அறுதியிடப் படாத நிலையில், மைத்துனனைக் குறித்ததாகப் பிறழ உணர்ந்து மைத்துனனை விரட்டியது போல, கன்று என்ற பொதுப்பெயர் ஆன்கன்று, பூங்கன்று என்பனவற்றுக்குப் பொதுவாதல் அறிந்தும், “ஆன்கன்றுக்கு நீரூட்டுக” என்று கருத்தில் ‘கன்று நீர் ஊட்டுக’ என்று உத்தரவிட, ஏவலன் பூங்கன்றுக்கு நீர்வார்த்தல் இந் நியாயமாம். (L)
சுக்திகா - வெண்ணிறத்ததாகிய இப்பி; ரஜதம் - வெள்ளி. சிப்பியை வெள்ளியாகத் திரிபுணர்ச்சியால் கொள்வது போல, ஒன்றனை மற்றொன்றாகத் திரிபுணர்ச்சியால் கொள்ளும் நெறி இந்நியாயம் ஆகும். (L)
சுந்தன் உபசுந்தன் என்ற சகோதரர் இருவரும் திலோத்தமை யினை விரும்பி அவள்பொருட்டுப் போரிட்டு மாய்ந்தாற் போல ஒன்றனை ஒன்று கெடுக்கும் நெறி. அவை தம்முள் ஒன்றனால் ஒன்று அடிக்கப்பட்டுச் சுந்தோப சுந்த நியாய மாய்க் கெட்டொழியும். (சி. போ. பா. பக். 17) (L)
வேதமாகிய அளவை. இது பத்துவகை அளவைகளுள் ஆகம அளவைக்கண் அடங்கும். இது சத்தப் பிரமாணம் எனவும் படும். (மணி. 27 : 9-13)
தன் சொற்கு மாறுபாடாக இயம்பல் ஆகிய பக்கப் போலி வகை. ‘சுவசன விருத்தம் தன்சொல் மாறி இயம்பல்’ (மணி 29 : 160-161) இது பக்கப்போலி வகை ஒன்பதனுள் மூன்றாவது. சுவசன விருத்தம் ஆவது தான் கூறும் சொற்கள் ஒன்றற் கொன்று மாறுபட உரைத்தல். அஃது என்னைப் பெற்ற தாய் (மகப் பெறாதாளாகிய) மலடி என்று சொல்வது போல்வது.
(மணி. 29 : 160, 161)
சுவாமி - தலைவன்; பிருத்தியன் - தொண்டன். ஆண்டான் அடிமை இருவரிடையே உள்ள தொடர்பு போல ஒருவன் மற்றவனுக்குத் தன்னலம் விடுத்த தொண்டனாகித் தொழிற் படும் தன்மை கூறும் நெறி இந் நியாயமாகும். (L)
தன் காட்சியினின்று தான் ஒன்றை உணருமாறு கொள்ளும் அனுமானம். (சி. சி. அளவை 8. மறைஞா.) (L) இது பக்கம், ஏது, திட்டாந்தம் என மூன்றனையுடைத்து.
பக்கம் - இம்மலை நெருப்புடைத்து,
ஏது - புகை யுண்மையால்
திட்டாந்தம் - அடுக்களை போல.
அடுக்களை போல யாதொன்று புகையுடையது, அது நெருப்பு உடையது ஆகலின் இம்மலையும் நெருப்புடையது என்று முடிவு செய்வது சுவார்த்தானுபவம்.
ஊசி, கடாகம் இரண்டையும் செய்ய நேர்ந்த இடத்துச் சிறியதான ஊசியை முன் செய்து பெரியதான கடாகத்தைப் பின்னர்ச் செய்வது போல, சிறியதை முற்படவும் பெரியதைப் பிற்படவும் இயற்றல் தக்கது எனக் கூறும் நெறி. (L)
செய்யுட் குற்றங்கள் -
செய்யுளுக்குப் பொருந்தாத நீக்கப்படவேண்டிய சில வழுக் களும் மலைவுகளும்; வழுக்கள் ஒன்பது, மலைவுகள் ஆறு என இவை பதினைந்தும் செய்யுட் குற்றங்களாம்.
பிரிபொருட் சொற்றொடர், மாறுபடு பொருள் மொழி, மொழிந்தது மொழிவு, கவர்படு பொருள்மொழி, நிரல்நிறை வழு, சொல் வழு, யதி வழு, செய்யுள் வழு, சந்தி வழு என இவை ஒன்பதும் வழுக்கள். இடமலைவு, காலமலைவு, கலைமலைவு, உலகமலைவு, நியாயமலைவு, ஆகமமலைவு என இவை ஆறும் மலைவுகள். (தண்டி. 99)
செய்யுள் வழுவும் அதன் அமைதியும் -
யாப்பிலக்கணத்திற்குப் பொருந்தா இயல்புடன் செய்யுள் இயற்றுதல் செய்யுள் வழுவாம். அதுதான், இருடிகளால் உரைக்கப்படுமிடத்தும் அவர் போன்ற ஆற்றல் உடையாரால் புனையப்படுமிடத்தும் வழுவமைதியாம்.
எ-டு : ‘ஆதரம் துயர்தர அயர்தரும் கொடிக்குப்
பூதலம் புகழ்புனை வளவன் - தாதகி
தாங்கரும்பால் அன்றித் தகையுமோ, தாரநங்கன்
பூங்கரும்பால் வந்தடர்ந்த போர்?’
இப்பாடலில் முன்னிரண்டடியும் ஆசிரியப்பா; பின்னடிகள் வெண்பா ஆதலின் இது செய்யுள் வழுவாயிற்று. மருட்பாவில் வெண்பா முன்னும் ஆசிரியப்பாப் பின்னும் வருதல் வேண்டும். இஃது அன்னது அண்மையின் வழு.
எ-டு : ‘கண்டகம் பற்றிக் கடக மணிதுளங்க
ஒண்செங் குருதியுள் ஓஒ கிடப்பதே - கெண்டிக்
கெழுதகைமை இல்லேன் கிடந்தூடப் பன்னாள்
அழுதகண் ணீர்துடைத்த கை.’
இது சான்றோர் பாட்டாதலின், இரண்டாமடிக்கண், வெண் பாவுள் வருதல் ஆகா எனக் கடிந்த ஐந்து சீர்கள் வந்தும், வழு வமைதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டவாறு.(தண்டி. 115, 116)
அநுகூலமும் பிரதிகூலமுமான சாதனம் இரண்டுள்ளதன் கண் வெல்லும் வேட்கையுடையோன் கதை. (தருக்க. சங். நீலகண்.205) (L)
எச்ச அனுமானம் (மணி. 27 : 33 அரும்.); அது காண்க. (L)
பாட்டுடைத் தலைவனது இயற்பெயரினை அடுத்த மங்கலம் அழியுமாறு தொழிற்சொல் அமையப் பாடுவது.
எ-டு : ‘என்னிற் பொலிந்த திவள்முகம் என்றெண்ணித்
தன்னிற் குறைபடுப்பான் தண்மதியம் - மின்னி
விரிந்திலங்கு வெண்குடைச் செங்கோல் விசயன்
எரிந்திலங்கு வேலின் எழும்’.
இதனுள், மதியை ‘விசயன் வேல்போல் எழும்’ எனப் பாடுமவன் ‘விசயன் எரிந்து’ என அத்தொழில் அவன்மேல் ஏறச் சொன்னமையால் சொல்லானந்தம் என்னும் குற்ற மாயிற்று. (யா. வி. பக். 558)
சொல்லதிகாரத்துக் கூறப்பட்ட இலக்கணத்தொடு மாறு கொள்வது.
எ-டு : ‘அடிசில் பருகி அணிஆர்த்துப் போந்தான்’
இதன்கண், அடிசில் - பொதுப்பெயர்; பருகி - சிறப்புவினை. பொதுச் சொல்லுக்குப் பொதுவினையே கூற வேண்டு மாதலின், அடிசில் உண்டான் என்றோ, அடிசில் கைதொட் டான் என்றோ கூறுதலே வழாநிலை. அடிசில் பருகி எனச் சிறப்புவினையால் கிளத்தல் வழு.
அணி என்பது அணியப்படுவனவற்றுக்கெல்லாம் பொதுப் பெயர். ஆர்த்தல் என்பது சிறப்பு வினை. ‘அணிந்து’ என்ற பொதுவினையால் கூறுதலே வழாநிலை. ‘அணி ஆர்த்து என்பது வழு.
இவை சொல்லிலக்கணத்தொடு மாறுகோடலின் சொல் வழுவாம். (யா. வி. பக். 422)
சொல்லிலக்கணத்துக்கு மாறாக வழுவுடைய சொற்களைச் செய்யுளில் தொடுத்தல் வழு. ஆயின் அத்தகைய சொற்கள் வழக்காற்றில் காணப்படுவனவாயின், அவை வழு ஆகா.
எ-டு : ‘யாவகைய தாயர்க்கும் எந்தைக்கும் எங்களுக்கும்
ஆவி இவளே அனைவேமும் - கோவே!
நுனக்(கு)அபயம் இந்த நுழைமருங்குல் மாதர்;
தனக்(கு) இடர்ஒன் றில்லாமல் தாங்கு’
திருமணத்திற்குப் பிறகு தலைவியைத் தலைவனுடன் விடுக்கும்போது செவிலி அவனுக்குச் சொல்லிய ஓம்படை இது.
“ஐவகைத் தாய்மார்க்கும் தந்தைக்கும் தன்னையர்க்கும் எங்களுக்கும் இவள்தான் உயிர். நாங்கள் எல்லோரும் சேர்ந்து இவளை நின்னிடம் ‘அபயம்’ எனக் கூறி ஒப்படைக்கின் றோம். இவட்கு எத்துன்பமும் வாராமல் காப்பாயாக” என்னும் பொருளுடைய இப்பாடற்கண், ‘யாவகைய தாயார்க்கும்’ என்று கூறிய பின்னர், ‘எங்களுக்கும்’ என்றது ஒருவழு, இக்கூற்றிற்கு உரியவளும் தாயொருத்தி ஆதலின். ‘நினக்கு’ என்பதே சொல்; நுனக்கு என்றது ஒரு வழு.
இனி, இன்ன சொற்கள் சான்றோர் வழக்காய் நிகழ்வன வாயின் நீக்கப்படாமல் சொல்வழு அமைதியாகத் தழுவிக் கொள்ளப்படும்.
எ-டு : ‘யாவர் அறிவார்? இவர்ஒருவர் இக்குறிஞ்சிக்
காவலரோ? விஞ்சையர்தம் காவலரோ? - பாவாய்!
அருமந்தன் னார்நம் அகம்புனம்விட் டேகார்
தெருமந் துழலும் திறம்’.
“பாவாய்! ஒப்பற்ற இவர் இக்குறிஞ்சி நிலத்து அரசரோ? வித்தியாதரர்தம் தலைவரோ? அருமருந்து போன்ற அரியராம் இவர் நம் தினைப்புனம் விட்டுப் போகாமல் சுழன்று திரியுமாற்றை யார் அறிந்து சொல்லவல்லார்” என்று தோழி தலைவிக்கு உரைக்கும் கூற்றாக வந்துள்ள இப் பாடற்கண், ‘அருமருந்தன்னார்’ என வரவேண்டுவது ‘அருமந்தன்னார்’ என மரூஉமுடிபாய்ச் சான்றோராட்சியுள் பயின்று வருதலால், இவ்வழு அமைவுடையதாயிற்று. (தண்டி. 111, 112)
பொருளின்றிக் கூட்டும் துணைச்சொல். (சீவக. 1886 உரை) (L)
த
தண்டம் - கோல்; ஆபூபம் - அப்பம். ஒரு கோலின் ஒரு முனையில் அப்பம் தொங்கவிடப்பட்டிருந்தது; அக்கோலே களவாடப்பட்டு விட்டது என்றால் அதில் இருந்த அப்பமும் களவாடப்பட்டு விடுதல் உணரப்படும். இன்றேல் அக் கோலை எலி கடித்த சுவடு காணப்பட்டால். அதனுடன் இணைத்திருந்த அப்பத்தையும் எலியே கடித்து உண்டிருக்க வேண்டும் என்பது பெறப்படும். தண்டம் அபகரிக்கப்பட்டது என்றால் அதனோடு இணைத்திருந்த அப்பமும் அபகரிக்கப் படுதல் பெறப்படுவது போல, ஒரு செய்தியைக் கூற அதனோடு இணைந்த மற்றொரு பொருளும், தொடர் நிலைச் செய்யுட்பொருட்பேறணி போலப் பெறப்படுவிக் கும் நெறி இந்நியாயமாகும். (L)
தன்மாத்திரை 5, பூதங்கள் 5, கன்மேந்திரியம் 5, ஞானேந் திரியம் 5, மகத்து, அகங்காரம், மனம், மூலப் பிரகிருதி, ஆன்மாவாகிய புருடன் ஆகிய இருபத்தைந்தும். (குறள். 27) (L)
பிறன்கோட் கூறலாக வீரசோழிய நூலார் குறித்தவற்றுள் ‘முதலாயுள’ என்றதனால் உரையாசிரியர் பெருந்தேவனார் காட்டுவனவற்றுள் ஒன்று இது. தருக்கத்தில் ஒன்றனை விளக்குதற்கு அதனைப் போல்வதனை எடுத்துக் காட்டாக மொழிவது.
‘தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயா தடியுறைந் தற்று’. (குறள் 208)
‘அருளிலார்க் கவ்வுலக மில்லைப் பொருளில்லார்க்(கு)
இவ்வுலகம் இல்லாகி யாங்கு’. (குறள் 247)
பிறர்க்குத் தீவினைகளைச் செய்தவர் தாம் கெடுதல் ஒருகாலும் தவறாமைக்கு, ஒருவனது நிழல் நீங்காமல் அவன் அடிக்கண்ணேயே தங்கிவிடுதல் தவறாமையை எடுத்துக் காட்டாகக் கூறினார்.
உள்ளத்தில் அருள் பிறவாதவர்க்குத் தேவருலக இன்பம் இல்லையாதல் துணிவாம் என்பதற்கு, பொருட் செல்வமில் லாதவர்க்கு இவ்வுலக இன்பம் துணிவாக இல்லையாதலை எடுத்துக்காட்டாகக் கூறினார்.
எதிர்வில் நிகழற்பாலவற்றை நிகழ்வில் உள்ளனவற்றை எடுத்துக்காட்டிப் ‘போல இருத்தல்’ தன்மையை விளக்கிய மையின் இவை தர்க்கத்தில் எடுத்துக்காட்டும் போலியாயின. (வீ. சோ. 180 உரை)
தருமத்தையுடைய திரவியம் (-பொருள்) (சி. போ. சிற். 2. 4)
எ-டு : ஒலி நிலைபேறுடைய தன்று
ஒலி - தருமி
நிலைபேறுடையது அன்மை - அதன் தருமம்.
தன் பொருட்டனுமதிக்குக். காரணமாய் உள்ளது (தருக்க சங். நீலகண். 97) (L)
தன் பொருட்டனுமிதி - ஏது சாத்தியத்தைத் தானே நேரில் பார்த்துக்கொள்ளும் அனுமிதிஞானம்.
இது சுவார்த்தாநுமானம் என வடநூலுள் கூறப்படும். அநுமானம் தன் பொருட்டு எனவும் பிறர் பொருட்டெனவும் முறையே சுவார்த்தம், பரார்த்தம் என எல்லாப் புத்த நூல்களும் கூறியிருப்பவும், மணிமேகலை இப்பகுப்பினைக் கொள்ளவில்லை.
மலையில் புகையுண்மை கண்டு, வீட்டில், அடுக்களையில் புகை உண்மையை ஒப்பிட்டு, அடுக்களையில் நெருப்பு இருப்பதுபோல மலையிலும் நெருப்பிருத்தல் வேண்டும் என்று தான் நேரில் கண்ட பொருள்கண்டு அநுமானிப்பது சுவார்த்தானுமானம். இதற்குப் பக்கம், ஏது, திட்டாந்தம் மூன்றுமே போதுமானவை; பரார்த்தானு மானத்துக்குப் பக்கம், ஏது, எடுத்துக்காட்டு, உபநயம், நிகமனம் என்ற ஐந்தும் வேண்டும் என்ப.
விருத்த ஏதுப்போலி நான்களுள் கூறப்பட்ட ஏது; சாத்தியத் தில் ஒருபோதும் இல்லாமல் இருப்பது. (L)
பக்கம், ஏது, எடுத்துக்காட்டு என்ற மூன்றற்கும் போலியுண்டு. அவற்றுள் ஏதுப்போலி, அசித்தம் - அநைகாத்திகம் - விருத்தம் என்ற முப்பிரிவுகளையுடையது. அவற்றுள் விருத்தம் என்ற பிரிவு தன்மச் சொரூப விபரீத சாதனம் முதலிய நான்கு பகுப்பினது.
தன்மச் சொரூப விபரீத சாதனமாவது வாதி தான் கூறும் காரணத்தால் துணியப்பட வேண்டிய பொருளின் சிறப் பியல்பு கெடுமாறு செய்வது.
எ-டு : பக்கப் பொருள் - ஒலி நிலைபேறுடையது;
ஏது : உண்டாக்கப்படுவதால் - என்று கூறின் எப்பொருள் உண்டாக்கப்பட்டாலும் அஃது அழியக் கூடியது என்பது உறுதியாதலின், பண்ணப்படுதல் என்று கூறும் காரணம் ஒலி நிலைபேறுடையது என்ற கருத்தை நிறுவுவதற்கு மாறாக ஒலி நிலையற்றது என்ற கருத்தை நிறுவுவதால், இந்த ஏதுப் போலியாயிற்று. (மணி. 29 : 281)
விருத்த ஏதுப்போலி நான்கனுள் கூறப்பட்ட ஏது, பக்கத்தின் விசேடத் தன்மையைக் குறிக்காது அதனை வியாபகப் பொருளென்று தவறி நினைக்குமாறு செய்வது.
தன்ம விசேட விபரீத சாதனமாவது ஏதுப்போலிவகைகளுள் ஒன்றாகிய விருத்தம் என்பதன் நாற்பகுப்புக்களுள் ஒன்று. இதற்கு வாதி கூறும் காரணமாவது துணியப்பட வேண்டிய பொருளிடத்துள்ள சிறப்புப் பண்பு கெடுமாறு செய்வதாம்.
எ-டு : பக்கப் பொருள்- கண் முதலிய ஐம்பொறிகள் தம்மின் வேறாயுள்ள ஆன்மாவுக்குப் பயன்படுவன; ஏது -அவை படுக்கையும் இருக்கையும் போலப் பலவாய்த் தொக்கு நிற்பதனால் - என்று கூறியவழி, படுக்கையும் இருக்கையும் முதலியவை பிறருக்கும் பயன்படுவன ஆதல் போல, கண் முதலிய பொருள்கள் பிறருக்கும் பயன்படுவனவாதல் வேண்டும். படுக்கை இருக்கை முதலியவற்றை உடைமையாக உடையான் ஒருவன் பல உறுப்புக்களையுடைய ஓர் உருவமாகிய உடம்பை உடையவன் ஆதல்போல ஆன்மாவும் பல உறுப்புக் களையுடைய ஓர் உடம்பினது ஆதல் வேண்டும். இங்ஙனம் கூறுவதால் அவயவப் பகுப்பு இல்லாத நுண்பொருளாகிய ஆன்மாவின் சிறப்புப் பண்பு கெட்டுவிடும். ஆகவே இது தன்ம விசேட விபரீத சாதனம் என்ற ஏதுப் போலியாம். (மணி. 29 : 277)
தன்மிச் சொரூப விபரீத சாதனம் -
விருத்த ஏதுப்போலி நான்கனுள் கூறப்பட்ட ஏது, பக்கத்தில் ஒருபோதும் இல்லாமலிருப்பது,
ஏதுப்போலியின் வகையாகிய விருத்தத்தின் நான்கு பகுப்பினுள் தன்மிச் சொரூப விபரீத சாதனம் என்ற போலி மூன்றாவது. அஃதாவது வாதி தான் கூறப்போகும் பொரு ளின் உண்மை இயல்பை அவன் கூறும் காரணமே மாறு படுத்தி விடுவதாம்.
எ-டு : “பாவம் என்பது திரவியம் குணம் கன்மம் என்பன வற்றுள் ஒன்று அன்று” என்ற பக்கப் பொருளை விளக்குமிடத்து,
“எல்லாப் பொருள் பண்பு தொழில்களிலுமுள்ள உண்மைத் தன்மையின் வேறாய்ப் பொதுவாய் உண்மைத் தன்மை உடைமையால் பொதுவும் சிறப்பும் போல” என்று ஏதுக் கூறின்,
பொருள் குணம் தொழில் என ஒருங்கு நின்றவற்றின்கண் உள்ள உண்மைத் தன்மையின் வேறாய்ப் பொதுவாகிய உண்மைத் தன்மை என்பது ஒன்று எங்கும் கிடையாது; பொது இல்வழிச் சிறப்போ, சிறப்பு இல்வழிப் பொதுவோ இருத்தல் இயலாது.
ஏதுவானது பாவம் என்ற பொருள்இயல்பைக் கெடுத்து அதனைஇல்பொருள் ஆக்கிவிடுவதால் இவ்வேது போலி யாயிற்று. (மணி. 29 : 278)
விருத்த ஏதுப்போலி நான்கனுள் கூறப்பட்ட ஏது, பக்கத்தின் விசேடத் தன்மையைக் குறிக்காது, அதனை வியாப்பியப் பொருளென்று தவறி நினைக்குமாறு செய்வது.(மணி. 29:279)
ஏதுப்போலி வகை மூன்றனுள் ஒன்றாகிய விருத்தம் என்பதன் நான்கு கூறுகளில் தன்மி விசேட விபரீத சாதனம் நான்கா வதாம்.
பக்கப் பொருளை விளக்கக் கூறப்படும் காரணம் அப் பொருளின் சிறப்பியல்பைக் கெடுத்து அப்பொருளையே இல்லாததாக்கிவிடும் ஏதுப்போலி இது.
எ-டு: பாவம், பொருள் பண்பு தொழில் என்பனவற்றுள் ஒன்று அன்று என்பது பக்கம்.
அது பொருள் பண்பு தொழில் என்பனவற்றின் வேறாதலால் என்பது ஏது.
கருத்தாவினுடைய பண்பும் தொழிலுமாகிய பாவத்தைக் கருத்தாவினால் கொள்ளப்படாத பண்பும் தொழிலும் என்று ஏதுவினால் சாதிப்பது சாதிக்கப்படும் பொருளின் சிறப்புக்கே மாறாதலின் இதுவும் ஓர் ஏதுப்போலியாம். பொருளையும் அதன் பண்பையும் கொண்டு உய்த்துணரப் படும் சிறப்பியல்பே தன்மிவிசேடமாகும். பாவமாகிய பொருள், பொருள் பண்பு தொழில் இவையன்று எனவே, பொருள் குணம் தொழில் இவற்றது அன்மையே பாவத்தின் சிறப்பாகிவிடும். விடவே, பாவம் என்பது இல்பொருளாய் அதன் சிறப்பையே கெடுத்தல் காண்க.
ஒரு பொருளின் இயல்பை மிகுத்துக் கூறுதல்; ஒரு பொருள் அழிந்தது என்றும், தோன்றிற்று என்றும், மூப்புற்றது என்றும் தன்மைகள் மூன்றனுள் ஒரு கூற்றின் தன்மையை மிக்கு எடுத்துரைத்தல். (மணி. 30 : 192)
சுபானுபவம்; ‘காண்டல் வாயில் மனம் தன் வேதனையோடு’. ஒரு பொருள்பற்றிக் கூறுகின்றான் தானாக அப்பொருள் பற்றி அனுபவப்பட்ட அனுபவம். (சி. சி. அளவை. 4) (L)
அராகாதி தத்துவங்களாலுண்டாகும் இன்ப துன்பங்களை ஆன்மஅறிவால் அறிகை. ‘அருந்தின்ப துன்ப முள்ளத் தறிவினுக்கு அராகம் ஆதி தரும் தன்வேதனையாம் காட்சி’ (சி. சி. அளவை. 7) (L)
தன் பொருட்டனுமானம் - சுவார்த்தாநுமானம். பிறருக்கு உரைப்பதன்றித் தான் தனக்குள் கருதி உணர்தல். மலையில் புகையை நோக்கிய அளவில் புகையுடைய அடுக்களையில் தீயிருப்பது போல மலையிலும் தீ இருத்தல் வேண்டும் என்று தனக்குள் கருதல். (சி. சி. அளவை. 4) (L)
‘ஆன்மாச்சிரயம்’ என்னும் குற்றம்; குடத்துக்குக் குடம் காரணம் என்று கூறுவது போல்வன. ஆன்மா தன்னாலே தன்னை உணரும் என்பது தன்னைப் பற்றுதல் என்னும் வழு. (சி. போ. 6-2-3 சிற்.) (L)
விசேடியம் வேறுபல பொருளிலும் சொல்லுதலைத் தடுக்காது, செஞ்ஞாயிறு என்பதில் செம்மை போல, அஃது இருப்பதென்பதைத் தெரிவிக்க வரும் விசேடணம்.
ஞாயிறு விசேடியம் (-விசேடிக்கப்படுவது); செம்மை விசேடணம் கருஞாயிறு போன்றவை இல்லாமையால், செம்மை என்பது ஞாயிற்றினது இயற்கையடைமொழியாக நின்றவாறு. வெண்தயிர், சுடுதீ, தண்மதியம் என்பவற்றுள், வெண்மை, சுடுதல், தண்மை என்பனவும் அன்ன (நன். 284 விருத்தி.)
தத்துவ சம்பந்தம் உடையது.
‘தாத்துவிக சகலப் பிரபஞ்சத்தையும்’ (சி. சி. 1-30 ஞானப்.) (L)
தாலம் - பனை; பீஜம் - விதை. பனை முந்தியதோ, விதை முந்தியதோ என்று வாதிடும் நெறி.
ஆன்மா, நல்வினை தீவினைச் செயல்களால், பற்பல உடல் களில் பிறக்கிறது; உடம்பு எடுத்தாலொழிய ஆன்மா நல்வினை தீவினைகளைச் செய்தல் இயலாது - என்ற இரு கருத்துக்களும் தாலபீஜ நியாயமாக விளங்குகின்றன. இவை போல்வன இந்நெறிக்கு எடுத்துக்காட்டாம்.
தாலீ - பாத்திர விசேடம்; புலாகம் - சோற்று அவிழ். ஒரு பானைச் சோற்றுக்கு ஓர் அவிழை எடுத்துப் பதம் பார்ப்பது போல, ஒருவர் நிகழ்த்தும் பலவகைச் செயல்களுள் ஒன்றனைக் கண்டு அதனைக் கொண்டு அவர் செயல்கள் யாவும் இங்ஙனம் இருக்குமென்று முடிவு செய்யும் நெறி இந்நியாயம் ஆகும். (L)
திட்டாந்தப் போலி. (மணி. 29 : 326); அது காண்க.
இயைபில்லாத உதாரணம்: ‘பக்கப் போலியும் ஏதுப் போலியும் திட்டாந்தப் போலியும் ஆம்’- இது சாதன்மியம், வைதன்மியம் என இரண்டு வகைப்படும். அவை ஒவ்வொன் றும் ஐவைந்து வகைப்படும். விளக்கத்தை அவ்வத் தலைப்புக் களுள் காண்க. (மணி. 29- 146) (L)
உதாரணம். ‘வகையமை அடுக்களைபோல் திட்டாந்தம்.’ பக்கப் பொருள் - இம்மலையில் நெருப்புளது; ஏது- புகை யுடைமையான்; எடுத்துக்காட்டு - அடுக்களை போல. (மணி. 29 : 6)
தருக்கநூலிற் கூறப்படும் பிருதிவி (-நிலம்) அப்பு (-நீர்), தேயு (-தீ), வாயு (-காற்று), ஆகாயம், காலம், திக்கு, ஆன்மா, மனம் ஆகிய மூலப் பொருள்கள். (L)
உதாரணம் போலி - பொருத்தமில்லா உதாரணம். இது சாதன்மிய திட்டாந்தப் போலி, வைதன்மிய திட்டாந்தப் போல என இருவகைத்து. ஒவ்வொன்றும் ஐந்து ஐந்து உட்பிரிவுகளைக் கொண்டது. (மணி. 29 : 325 - 339)
உதாரணம்; ‘இம்மலையில் புகையுள்ளது, அடுக்களை போல’ என்னுமிடத்தே, அடுக்களை என்பது திருட்டாந்தம் எனப்படும் எடுத்துக்காட்டு. (L)
த்ருணம் - புல்; அரணி - கட்டை; மணி - சூரியகாந்தக் கல்.
சூரியகாந்தக் கல்லினைக் கொண்டு சூரியனுடைய கிரணங் களைக் குவியச்செய்தும், உலர்ந்த புல்லில் தீப்பற்றச் செய் தும், அரணி மரக்கட்டையினைத் தேய்த்தும் தீயை உண்டாக்க முடியும். சூரிய காந்தக்கல், உலர்ந்தபுல், மரக்கட்டை இம்மூன்றும் தீமூட்டிப் பயன்படுத்த உதவுவன. இவையின்றிச் சில இடங்களில் வேறுவகையிலும் தீப்பற்று வதுண்டு.
நல்லாசிரியரை அடுத்துப் பல சாத்திரங்களையும் தெளிவுறப் பயின்று செய்யுள் இயற்றப் பழகியவரே பொதுவாகக் காவியங்கள் இயற்றும் ஆற்றலைப் பெறுவர். நல்லாசிரியரை அடுத்தோ, சாத்திரங்கள் முறையாகப் பயின்றோ, செய்யுள் இயற்றப் பழகியோ அறியாதவர்கூட ஒரோவழி அழகான காவியங்கள் இயற்றுவதனைக் காண்கிறோம். இங்ஙனம் வழக்கமான காரணம் எதுவுமின்றிக் காரியம் ஒரோவழி நிகழ்வதனை உலர்ந்தபுல் அரணிக்கட்டை சூரியகாந்தக்கல் நெறி என்பது இந்நியாயமாகும்.
ஏதுப்போலி; ‘தீய ஏது’ (மணி. 29 - 191, 192). பக்கப் பொருளை நிறுவுதற்குக் காட்டும் காரணம் பொருத்தம் அற்றதாக இருப்பது ஏதுப்போலி. இஃது அசித்தம், அநைகாந்திகம், விருத்தம் என மூவகைப்படும். அசித்தம் நான்கு உட்பிரிவு களையும், அநைகாந்திகம் ஆறு உட்பிரிவுகளையும், விருத்தம் நான்கு உட்பிரிவுகளையும் உடையது. இவற்றின் விளக்கம் தனித்தனித் தலைப்புக்களிற் காண்க.
பக்கப் போலி; ‘தீய பக்கமும் தீய ஏதுவும்’ (மணி. 29 : 143 - 153). நிறுவுதற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட செய்தி ‘பக்கம்’ எனப்படும். அச்செய்தி தவறானதாக இருந்தால் ‘பக்கப் போலி’ எனப்படும். பக்கப்போலி பிரத்தியக்க விருத்தம் முதலாக அப்பிரசித்த சம்பந்தம் ஈறாக ஒன்பது வகைப்படும். விளக்கம் அவ்வத் தலைப்பினுள் காண்க.
சபக்கம் (-ஒத்த பொருள்) முன்னரே தெரிந்து துணிந்த இடம். (L)
கஞ்சத்தாளம் அமைத்த இசையொடு பாடுமிடத்து தலைவ னது இயற்பெயரைப் பிளந்து பாடுதலானும் குரலை உயர்த் துதல் தாழ்த்துதல் செய்தலானும் அப்பெயர் புலனாகாத வாறு அமையும் குற்றம். (யா. வி. பக். 562)
தூணா - தூண்; நிகனனம் - ஆட்டுதல். தூணை நடும்போது அதனை ஆட்டிஆட்டி உறுதிப்படுத்துவதனைப் போல ஒரு செய்தியை, அதன் தொடர்புடையனவற்றையெல்லாம் பலபடியாக அசைத்துப்பார்த்து விளக்கி அச்செய்தியை நிலைநாட்டும் நெறி இந்நியாயம் ஆகும். (L)
நுண்மையான அருந்ததி நட்சத்திரம் காட்ட அதனருகே யுள்ள பெரிய நட்சத்திரத்தைக் காட்டிக் குறிப்பிடுதல் போல, நுண்பொருளை விளக்க அதன் தொடர்பான பருப்பொரு ளைக் கொண்டு குறிப்பிட்டுணரும் செய்தி. (L)
தேகளி - இடைகழி; தீபம் - விளக்கு. இடைகழியில் வைத்த விளக்கு அதன் வெளிப்புறத்தது ஆகிய வாசல் பகுதியிலும், உட்புறத்ததாகிய உள்வீட்டுப் பகுதியிலும் ஒளி வீசிப் பயன் படுதல் போல, ஒரு பொருள் தான் இடையிலிருந்து முன்னும் பின்னும் பயின்று வரும் நெறி இந்நியாயம் ஆகும். (L)
இது பொருள்கோள் வகையால் தாப்பிசைப் பொருள்கோள் எனவும், அணிவகையால் இடைநிலைத் தீவகம் எனவும் வழங்கும்.
பரிச்சேதம் மூன்றனுள் (வஸ்து, காலம், தேசம் இவற்றால் அளவிடுதல்) இடத்தால் அளவிடுதல். (L)
பிரமாண ஆபாசம் எட்டனுள் ஒன்று; ஆராயாது ஒன்றனை மற்றொன்றாகத் துணிதல். செண்டுவெளியில் நிற்கும் தறியினை மகன் எனத் துணிதல் போல்வது. ‘தேராது தெளிதல் செண்டு வெளியில், ஓராது தறியை மகனென உணர்தல்’ (மணி. 27: 67-68)
காரணகாரிய சம்பந்தம் அஃதாவது நெல்வித்தின் முளையும், முளையில் தாளும், அத்தாளிலிருந்து நெல்லும் எனத் தோன்றி நிலவும் இந்நிகழ்ச்சிகளால் அக்காரண காரியங் களை நெல் என்று வழங்குவதாம். (மணி. 30 : 200, 201).
பீசாங்குர நியாயமாக ஒன்றனை யொன்று பின்பற்றுதல். அஃதாவது காரண காரியத் தொடர்ச்சியால் காலம் மூன்றினும் சோர்வறத் தோன்றியும் வளர்ந்தும் கெட்டும் வருதல். (சிவ. சித். பர. 71).
அளபெடைத் தொடை அமைந்த பாட்டினுள் பாட்டுடைத் தலைவன் பெயர் சார்த்தி அளபெடுப்பத் தொடுப்பது. அத் தலைவன் பெயர்க்கு அடைசார்த்தி அவ்வடை அளபெடை யோடு ஒன்ற வரினும் தொடையானந்தமாம்.
எ-டு : ‘வாஅ வழுதி மதுரை மறுகினிற்
போஒ பகைமுனைப் போர்’.
பாட்டுடைத் தலைவனது (குடிப்) பெயர் அளபெடை சார வந்தது; மிகப்பெரிய தொடை ஆனந்தமாகிய வழு.
‘வாஅம் புரவி வழுதியோ டெம்மிடைத்
தோஒம் நுவலுமிவ் வூர்.’
இதனுள் வழுதிக்கு அடையாகிய புரவி அளபெடை சார வந்தது; இதுவும் தொடை ஆனந்தமாகிய வழு. (யா. வி. பக். 562,563).
ந
இடமலைவு காலமலைவு கலைமலைவு உலகமலைவு நியாயமலைவு ஆகமமலைவு என்ற அறுவகை மலைவுகளும் பொதுவாக உலகவழக்கினுள் ஏற்கத்தக்கன அல்ல எனினும், நாடக வழக்கில் இல்பொருளாய்ப் புகழ்ச்சியிடத்துப் புனைந்துரை வகையால் கூறப்படலாம் என்று வழுவமைக்கப் பட்டுள்ளன. (தண்டி. 125)
நாஸ்தி; ஒன்றற்கு உள்ளதான ஒருபொருள் மற்றொன்றற்கு இல்லாதது ஆதல்; மனைவியான காலத்து மகள் ஆகாமை போல. (L)
எழுத்து வழு, சொல் வழு, பொருள் வழு, யாப்பு வழு என்பன
எழுத்து வழு -
எழுத்ததிகாரச் செய்தியொடு மாறுபடுவது.
எ-டு: ‘தேமான் இதணத்தேம் நாமாக நம்புனத்தே
வாமான்பின் வந்த மகன்’
தேமா என்பதே சொல். தேமா என்பதற்கு னகரச்சாரியை கொடுத்துத் ‘தேமான்’ என்று கூறியது எழுத்ததிகாரச் செய்தியொடு மாறுபடுவதால் எழுத்து வழுவாம்.
சொல் வழு -
சொல்லதிகாரத்துக் கூறப்பட்ட இலக்கணத்தொடு மாறு கொள்வது.
எ-டு : ‘அடிசில் பருகி அணிஆர்த்துப் போந்தான்’
அடிசில் - பொதுப்பெயர்; பருகி- சிறப்புவினை.
பொதுச்சொல்லுக்குப் பொதுவினையே கூறல் வேண்டு மாதலின், அடிசில் உண்டான் என்றோ, கைதொட்டான் என்றோ கூறுதலே வழாநிலை; ‘அடிசில் பருகி’ என்று சிறப்புவினையை இணைத்தல் வழுவாம்.
அணி என்னும் பொதுப்பெயரை அணிந்து என்னும் பொது வினையால் கூறுதலே வழாநிலை; அணி ஆர்த்து என்று சிறப்புவினையை இணைத்தல் வழுவாம்.
பொருளதிகாரக் கருத்துக்களொடு மாறுகொள்வது.
தலைவியின் களவொழுக்கம் பற்றித் தான் ஐயுற்ற கருத்தை உறுதிசெய்துகொள்வதற்காக அவளிடம் தோழி,
‘பண்டிப் புனத்துப் பகலிடத் தேனலுள்
கண்டிக் களிற்றை அறிவன்மன் - திண்டிக்
கதிரன் பழையனூர்க் கார் நீலக் கண்ணாய்!
உதிரம் உடைத்திதன் கோடு’
என்று கூறி ‘நடுங்க நாடு’வது, “தோழி தலைவியை நடுங்க நாடல் கூடாது” என்ற பொருளதிகாரக் கருத்தொடு மாறுபட்ட பொருள் வழுவாம்.
இனி, பொருளற்ற செய்திகளைக் கூறுவதும் பொருள் வழுவாம்.
எ-டு : ‘வாளை மேய்ந்த வளைகோட்டுக் குதிரை
கோழிலை வாழைக் கொழுமடல் உறங்கும்
ஊரன் செய்த கேண்மை
தேரை வாயினும் பெரிதா கின்றே’
என இல்லாத - பொருந்தாத - செய்திகளாகிய கொம்புடைய குதிரை, அது வாளை மீனை உண்டல், அது வாழை மடலில் போய்ப் படுத்துறங்கல், தேரைவாய் பெரிதாயிருத்தல் என்பன ஈண்டுக் கூறப்பட்டுள்ளவாறு.
யாப்பிலக்கணச் செய்தியொடு மாறுபடுவது.
எ-டு : ‘குமண! வாழி! குமண! உமணர்
உப்பிற் றேய்க, நின் பகையே! யான்சில
பெருமை வேண்டி வந்தேன்
நீ நின் பெருமை வேண்டின் தா.’
இப்பாட்டு முதலில் எடுத்துக்கொண்ட ஓசையிற் கெட்டுப் பின்பகுதி உரைநடை போலப் பரவிக் கட்டுரையால் வந்தமை யின் யாப்புவழுவாயிற்று; ஈற்றடி யிறுதியும் அசையாக நின்றமையும் யாப்புவழுவாம். (யா. வி. பக். 422-424)
அனுமான உறுப்பு ஐந்தனுள் இறுதியாயது (தருக்க.சங்.); முடிவு என்னும் பொருளது.
பக்கம் - இம்மலையில் நெருப்புள்ளது; ஏது-புகை உண்மை யால்; எடுத்துக்காட்டு அடுக்களை போல; உபநயம்-எங்கெங் கெங்குப் புகையுண்டோ, அங்கங்கு நெருப்புண்டு; நிகமனம்- ஆதலால் இம் மலையிலும் நெருப்பு உண்டு என்பது.
விபக்கம், எதிர்க்கட்சி (சி.சி.அளவை.9)
1. தருக்க நூல். 2. சட்ட நூல் (யாழ்.அக.) 3. ஒழுக்க நூல் (L)
சமய நூல்கள் பொருள்பலவற்றையும் துணிந்து கூறும் வகையில், காண்டல் போன்ற அளவைகளைப் பற்றிக் கூறியுள்ள உண்மைகள் நியாயம் எனப்படும். ஒவ்வொரு சமயத்தவரும் தத்தமக்கென ஓர் உண்மையைக் கொண்டு அதன் முடிவைத் துணிந்து கூறுவர். இத்தகைய கொள்கை களில் மாறுபாடு தோன்றச் செய்திகளைக் கூறுதல், நியாய மலைவு என்ற குற்றமாகும்.
எ-டு: ‘ஆய பொருள்கள் கணந்தோ(று) அழியுமெனத்
தூய அசோகின் முனியுரைத்த(து)-ஆய்(வு)அன்றோ?
காதலர் நீங்க எழும்காம வெங்கனல்வாய்
மாதர் உயிர்தாங்கும் ஆறு.’
“அசோகின் முனியான அருகக் கடவுள், “தோன்றும் பொருள் யாவும் கணந்தோறும் அழியும்” என்று கூறியது உண்மையன்றோ? ஏனென்றால், தலைவன் பிரிந்து சென்ற தால் எழும் காமத்தீயில் அழியாமல் தலைவி இன்னும் உயிருடன் இருக்கிறாளே!” - என்று பொருள் படும் இப் பொருட்கண், “கணம்தோறும் பொருள் அழியும்” என்பது போதிமுனி புத்தன் கூறியது; அசோகமுனி அருகன் கூறிய தன்று ஆதலின் இது நியாய மலைவு ஆயிற்று. (தண்டி. 123)
அளவைகளின் கருத்துக்கு மாறுபட்டது புகழ்ச்சியிடத்து ஏற்கத் தக்கது.
எ-டு : ‘வானாகி மண்ணாகி மறிகடலாய் மாருதமாய்த்
தேனாகிப் பாலாம் திருமாலே! - ஆன்ஆயா!
வெண்ணெய் விழுங்க நிறையுமோ மேலொருநாள்
மண்ணை உமிழ்ந்த வயிறு’
“வானமும் நிலமும் கடலும் காற்றும் தேனும் பாலுமாகி எனக்கு இன்பம் தரும் திருமாலே! மாடுகளை மேய்த்த ஆயனே! பண்டு அகத்திட்ட உலகங்களை ஊழித்தொடக்கத் தில் வெளிப்படுத்திய உன் வயிறு வெண்ணெயை உண்டத னால் நிறைந்துவிடுமா?” என்று பொருள்படும் இப்பாடற்- கண், ஐம்பூதங்களும் ஆயினான் எனவும், வெண்ணெயை விழுங்கினான் எனவும், மண்ணை உமிழ்ந்தான் எனவும் ஒருவனைப் பற்றிக் கூறுதல் நியாயமலைவாய், எல்லாம் வல்ல இறைவனுடைய புகழாதலின் அலங்காரம் ஆயிற்று. (தண்டி. 125-5)
பொருளின் உண்மை மாத்திரம் உணரும் உணர்வு. (L)
ஒரு வரிசையாக முன்னே வைத்தவற்றிற்கு நேர்வகையில் சேரும் வரிசையாகவே பின்னரும் வரிசையை அமைக்காமல் வரிசை பிறழ அமைப்பது ஒரு செய்யுட்குற்றம்; அதுவே உய்த் துணரும் வகையில் பெறப்பட்டால் வழுவாகாது அமையும்.
எ-டு : ‘தெற்கும் குடக்கும் வடக்கும் குணக்குமே
நிற்கும் திறத்(து) உலகை நீ(டு)அளிக்கும்-பொற்பினார்
ஈரெண் கலையோன், வருணன்; இரவி, யமன்
யாரும் புகழியல்பி னார்.’
இது வழு. தெற்கிலும் மேற்கிலும் வடக்கிலும் கிழக்கிலு மிருந்து உலகினைக் காக்கும் திசைக்காவலர்கள் சந்திரன், வருணன், சூரியன், இயமன் என்னுமிவர் என்ற கருத்தமைந்த இப்பாடற்கண், நிரலாக முன் வைத்துள்ள தெற்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு என்னும் திசைகளிலிருந்து காப்போர் முறையே இயமன், வருணன், சந்திரன், இந்திரன், என இருத்தல் வேண்டும்; அவ்வாறு நிரல்நிறை முறையாக இராமையின் இது வழுவாம்.
‘குடபால் வடபால் குணபால்தென் பாலென்(று)
அடைவே திசைநான்(கு); அவற்றுள்-இடையிரண்டும்
நன்மைபுரி வோர்நயந்(து) நோக்குப; ஏனைய
அன்மைபுரி வோர்க்கே ஆம்.’
இது வழுவில்லாதது. மேற்கு வடக்கு கிழக்கு தெற்கு எனும் நாற்றிசையுள் இடையேயுள்ள வடக்கும் கிழக்கும் நலம் புரிவோர் கொள்வன; ஏனையிரண்டும் தீக்கருமம் புரிவோர் கொள்வன என்று பொருள்படும் இப்பாடற்கண், ‘இடை யிரண்டும்’ ‘ஏனைய’ என்னும் சொற்களால் நிரல்நிறை உய்த்தறியும் வகையில் இருப்பதால் இது வழுவாகாதாயிற்று. (தண்டி. 109, 110)
ப
யாண்டுத் தீ இல்லை, ஆண்டுப் புகையும் இல்லை என்பது போல, துணிபொருள் ஏதுவின் மறுதலையுரை.
செய்தியை எதிர்மறைமுகத்தால் வற்புறுத்தும் வைதன்மிய திட்டாந்த விளக்கமாம். (மணி. 29 : 67 உரை)
துணிபொருட்கு இடனாயுள்ள பக்கத்தினது தன்மை.
எ-டு : பக்கம்-இம்மலை; பக்க தன்மம்-இம்மலை நெருப் புடையது எனல். (மணி. 29:71 உரை)
தருக்கத்தில் பக்கத்தின் ஆபாசம்; அஃதாவது பக்க தன்மம் பொருந்தாமலிருத்தல். அது பிரத்தியக்க விருத்தம் முதல் அப்பிரசித்த சம்பந்தம் ஈறாக ஒன்பது வகைப்படும். (மணி. 29 : 143 - 153)
1. அனுமானத்தின் உறுப்பினுள், மலை நெருப்புடைத்து என்றது போன்ற பிரதிஞ்ஞா வசனம் (மணி. 29 : 59)
2. துணிபொருள் உள்ள இடம் (சி. சி. அளவை. 9)
3. கூறு, ‘அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்’ (தொ. பொ. 75 நச்.) (L)
துணிபொருளுக்குரிய இடமின்மையால் உண்டாம் பிரமாணாபாசம். (சைவப். பக். 25) (L)
பஞ்ச அவயவம்; தருக்க சாத்திரத்தில் வரும் மேற்கோள், ஏது, எடுத்துக் காட்டு, உபநயம், நிகமனம், என்பன. (சி.சி. அளவை. 11 சிவாக்) (L)
‘பக்கப் போலி’; அது காண்க. (L)
திரவியம், குணம், கருமம்; சாமானியம், விசேடம், சமவாயம், அபாவம் என நியாய சாத்திரத்தில் வழங்கும் எழுவகைப் பொருள்கள். (L)
பிறர் உணர்தற் பொருட்டெழுந்த அனுமானம். (தருக்கசங். பக். 106 நீலகண்.) (L)
பரார்த்தானுமிதி -
பரார்த்தானுமானத்தால் உண்டாம் அறிவு. (L)
பரிமாணம் (2) -
அளவு (பி. வி. 29).
பாரம்பரிய நியாயம் -
வேறுகாரணம் கூறும் வாய்ப்பின்றி, ஒருசெயல் தொன்று தொட்டுப் பரம்பரையாக நிகழ்ந்து வருவது. ஒன்றனையே காரணமாகக் கொண்டு, அச்செயலைத் தொடர்ந்து நடத்தும் நெறி இந்நியாயம் ஆகும்.
பாரி சேடப் பிரமாணம் -
எஞ்சுதலைக் கொள்ளுதலாகிய அளவை. (சி. போ. பா. 110 புதுப்.) (L)
பாரிசேடம் -
பாரிசேடப் பிரமாணம்; பாரிசேட அனுமானமும் அது.
பிசிபடுமொழி -
செய்யுட் குற்றங்களுள் ஒன்று. (யா. வி. பக். 565)
பிட்டபேஷண நியாயம் -
பிட்டம்-மாவு, பேஷணம்-பிசைதல்.
பிசைந்துதீர்ந்த மாவைப் பின்னும் பிசைதலைப் போல முற்கூறப்பட்டதனையே திரும்பத் திரும்பக் கூறும் நெறி இந்நியாயமாகும் (L)
பித்திகா மார்ச்சால நியாயம் -
பித்திகை-மதில்; மார்ச்சாலம்-பூனை.
மதில்மேல் இருக்கும் பூனை மதிலின் வெளிப்புறம் குதிக்குமா உட்புறம் குதிக்குமா என்பது உறுதியாக முடிவுசெய்ய இயலாத தொன்றாதல் போல, ஒரு செயலின் விளைவு நன்றாக முடியுமா தீதாக முடியுமா என்று உறுதி செய்ய முடியாமல் ஐயுறவாக இருக்கும் நிலையைக் காட்டும் நெறி இந்நியாயமாகும்.
பிபீலிகா கதி நியாயம் -
பிபீலிகா-எறும்பு; கதி-இயக்கம்.
ஒரு மரத்துச்சியின்மீது ஏறிய எறும்பு, அவ்வுச்சியிலிருக்கும் பழத்தினை, உச்சியில் ஏறியவுடன் எளிமையில் சுவைத்து உண்ண முடிவதில்லை; காற்றில் மரக்கிளை அசைவதால் உச்சியில் ஏறிய தன் இயக்கத்துக்கு இடையூறாகத் தான் கீழே வீசப்படக்கூடும் என்ற அச்சத்தால் மரக்கிளையை இறுகப் பற்றிச் சிறிதுசிறிதாக மிக்க முயற்சியுடன் அக்கிளைஉச்சிப் பழத்தை வலியப் பற்றிக்கொள்ளும் வாய்ப்பினை அறிந்து பற்றிப் பின் கீழே விழும் வாய்ப்பின்றி அப்பழத்தைச் சுவைக்கின்றது. மேம்பட்டவன் வேதபுராண அறநூல்கள் வகுத்த வழியிலே அரிதின் முயன்று வாழ்க்கையைப் பிறழா மல் சோர்வடையாமல் நடத்தினால் அவ்வாழ்க்கையது இறுதியில் அவனுக்கு இறைஅருளாகிய பேரின்பம் கிட்டும் என்பது போல்வனவற்றை விளக்க உதவும் இந்நெறி, சலிப்பின்றி அரிதின் முயன்று நினைத்த பேற்றினை எய்துதலைக் குறிக்கும் நெறியாகும். (L)
பிபீலிகா-எறும்பு
எறும்புகள் தொடர்ந்து செல்வது போலக் காரணகாரியங் களைத் தொடர்ந்து முறைப்பட எண்ணிச் செயலைத் தவறாது துணியும் நெறி இந்நியாயமாகும். (L)
காட்சியளவை; கண்முதலிய ஐம்பொறிகளாலும் உணர்ந்து பொருளினது உண்மையைத் துணிவது. அளவை ஆறனுள் ஒன்று. (L)
உண்மைப் பிரமாணமன்றிப் போலியாக வருவது. ‘பிரமாண ஆபாசம்’ என்பதும் அது. (L)
நியாய அளவைகளால் பொருளை நிச்சயம் செய்தல் வேண்டும் என்னும் கொள்கை. (L)
பிரமாணத்தால் அளந்தறியப்படும் பொருள். பிரமேயம் - அளக்கப்படும் பொருள். (வீ.சோ. 86 உரை)
பிரவாகம்-வெள்ளநீர்; ஈசுவரம்-இறைத்தன்மை.
(வெள்ளம் ஓடும்போது, முதல் தொகுதி நீர் அப்பாற்பட, அவ்விடத்து அடுத்த தொகுதி இடம் பெறுவது போல, ஒருவரிடத்தை மற்றவர் கொண்டு செயற்படல் இதன் விளக்கமாகும்.)
ஓரான்மா முக்தன் ஆனால் இறைவன் அவனிடம் தன் அதிகாரங்களை ஒப்படைத்துத் தான் பாரம் நீங்கினவனாக, அம்முக்தனும் பின் ஒருவன் முக்தனானால் அவனிடத்தில் தன் அதிகாரத்தை ஒப்படைத்துத் தன் பாரம் நீங்குவது போலத் தந்தை தன்பொறுப்பை மகனிடமும், அவன் தந்தையானால் தன்பொறுப்பை தன்மகனிடமும், ஒப்படைப் பது போன்று அதிகாரங்கள் ஏற்ற காலங்களில் ஒருவரிட மிருந்து மற்றவருக்குக் கிட்டுதலைக் கூறும் நெறி இந்நியாய மாகும். (L)
பிராம்மணர்-அந்தணர். வசிட்டர்-அவருள் மேம்பட்ட ஒருவர்.
“பிராமணர் வந்தனர்; வசிட்டனும் வந்தான்” என்றால், வசிட்டன் பிராமணருள் மேம்பட்ட தலைமை உடைமை பற்றிப் பிரித்துத் தனியே விதந்து கூறப்படுதல் போல, ஓரினப் பொருள்களுள் ஒன்றனைத் தலைமை பற்றி வேறாக எடுத்துக் கூறிச் சிறப்பிக்கும் நெறி இந்நியாயமாகும். (L)
ஒன்றாத பொருளையுடைய தொடரால் ஆகிய பா வழு. (இ. வி. 691)
செய்யுளில் உள்ள சொற்றொடர்கள் ஒன்றனோடு ஒன்று இணையாது பிரிந்து நிற்பது வழு. இதுவே கள்ளுண்டார், பித்தர் குழந்தைகள் கூற்றாய் வரின் வழுவாகாது.
எ-டு : ‘கொண்டல் மிசைமுழங்கக் கோபம் பரந்தனவால்;
தெண்திரைநீ ரெல்லாம் திருமுனியே - உண்டுமிழ்ந்தான்;
வஞ்சியார் கோமான் வரவொழிக; மற்றிவளோர்
பஞ்சியார் செஞ்சீ றடி’
“மேகம் முழங்க இந்திரகோபப் பூச்சிகள் எங்கும் பரவின; கடல் முழுதையும் அகத்தியனே உண்டுமிழ்ந்தான்; வஞ்சியை யுடைய சோழமன்னன் வாராதிருப்பானாக; இவள் செம் பஞ்சிக்குழம்பு ஊட்டிய சிவந்த சிறிய அடிகளையுடையவள்” என்பது பொருள். இப்பாடற்கண், வாக்கியங்கள் தொடர் பின்றிப் பிரிந்து நின்று பொருட்பொருத்தம் இன்மையால் இது வழுவாயிற்று.
எ-டு : ‘காமன் உருவம் கரந்தேன்யான்; காங்கேயன்
வீமன் எதிரே விலங்குமே; - தாமரைமேல்
மால்பொழிய வந்தார் அருகர்; மதுவுடனே
பால்பொழியும் இவ்வூர்ப் பனை.’
“மன்மதனுடைய உருவத்தில் நான் ஒளிந்துகொண்டேன்; வீடுமன் வீமனுக்குத் தோற்றோடுவான்; தாமரைமேல் அருகர் பெருமையுடன் தோன்றினார்; இவ்வூரில் பனைகள் கள்ளொடு பால் பொழிகின்றன” என்று பொருள்படும் இப் பாடற்கண் வரும் வாக்கியங்கள் பொருத்தமும் தொடர்பும் இல்லாதன. ஆயின், இது கள்ளுண்டவன் கூற்றாய் வருதலின் வழுவாகாது. (தண்டி. 101, 102.)
பரார்த்தானுமானம். (சி.சி. அளவை. 8. சிவாக்) (L)
பரார்த்தானுமிதி.
யாப்பருங்கல விருத்தியுரைகாரர் உரையில் எடுத்தாண்ட குற்றங்களுள் ஒன்று; சொல் கருதிய பொருளைக் குறிக்காது வேறு பொருள் பயப்பக் கூறுவது. (‘நந்தும் தேயம்’ என்பது வளரும் நாடு என்று பொருள்படுவதனோடு, அழியும் நாடு எனவும் பொருள்படுவது.) (யா. வி. பக். 565)
அழிவுபாட்டபாவம்; ‘முன்னின்மையொடு பின் இன்மை யன்றி’ (வேதா. சூ. 35) (L)
அணுபரிணாமவாதம் (யாழ். அக.)
பீஜம் - விதை; அங்குரம் - முளை.
விதை முந்தியதோ முளைந்தியதோ என்பது போல, எது முந்தியது என்று அறுதியிட்டுக் கூறமுடியாத நெறி இந் நியாயமாகும்.
புணர்ப்பு வழு -
யாப்பருங்கல விருத்திஉரைகாரர் சுட்டும் செய்யுட் குற்றங்களுள் ஒன்று; சொற்களிடைச் சந்தியில் தோன்றும் பிழைபாடு. (யா. வி. பக். 565)
புறப்பக்கம் -
உலகியல் செய்திகளை யொட்டிய அனுமானம்.
பூர்வ(க்) காட்சியனுமானம் -
முன் அனுபவித் தறிந்ததை அடிப்படையாகக் கொண்டு அறுதியிடுவதாகிய அனுமானம்; மலருண்மையை வாசத் தாலறிதல் போல்வது.
பூர்வானுமானம் -
பூர்வக் காட்சியனுமானம்; அது காண்க.
(மணி. 27; 36 உரைக்குறிப்பு)
பொதுவனுமானம் -
ஒன்று உள்ளது கொண்டு அதனொடு காணப்படும் வேறொன்று உளது என்று கொள்ளும் அனுமான வகை. (சி. போ. 1 பாண்டிப்.)
பொருள் ஆனந்தம் -
பாட்டுடைத் தலைமகன் நாட்டின்கண் யாதானும் ஒன் றனைச் சிறப்பித்துச் சொல்லலுற்றவிடத்தே, அத்திணைக் குரிய இறைச்சிப்பொருளை ஊறுபடச் சாவவும் கெடவும் சொல்லுவதும்,
புகழ்தலுற்றவிடத்தே, ஆகாத பெற்றியால் மங்கலம் அழியச் சொல்லுவதும், மங்கலமாகிய உவமையால் மங்கல மில்லாத உபமேயத்தை உவமிப்பதும், தலைமகனோடு உவமிக்கப் பட்டதற்கு இடையூறுபடச் சொல்லுவதும் என இவை முதலாக உடையன.
எ-டு : ‘களங்கொள் தோகையின் கதுப்பிகுத்து அசைஇ
விலங்குமலைத்
தமர்ந்த சேயரி நாட்டத் (து)
இலங்குவளை
விறலியர் நிற்புறம் சுற்றி’ (மலைபடு
44-46)
கூத்தரை நன்னனிடத்து ஆற்றுப்படுப்பவன்,
“மலைமேல் வழியிற்செல்லும் கூத்தப்பெண்டிர், பீலி விரித்துப் பல மயில் இருந்தாற்போல, வழிவந்து அசைந்த வருத்தத்தால் தத்தம் கேசங்களை எடுத்து முடிக்கமாட்டா ராய் விரித்திருப்பர்” என்று புகழ்தலுற்றான்; பெண்சாதிகள் ஊறுபட்டு அழுகை நிகழ்ந்தவிடத்து மயிர் விரித்திருப்பர்; அவ்வகை மங்கல மில்லாத மயிர் விரியைப் பாட்டுடைத் தலைவன் நாட்டோடும் புகழ்ந்தமையின், இப்பாடற் பகுதி பொருள் ஆனந்தம். (ஆயின், இவ்வாறு சான்றோர் செய் யுட்கு, பிற்காலத்தார் தாமே வகுத்துக்கொண்டனவாகிய இவ்வானந்தக் குற்றங்கள் பொருந்தா என்பது உரையாசிரியர் நச்சினார்க்கினியர் கருத்து.) (யா. வி. பக். 559)
பொருள்வழு -
நால்வகை வழுக்கள் - நோக்குக.
பொருளானந்தம் -
இறைச்சியினும், புகழ்ச்சியினும் உவமையிலும் பிறவற்றிலும் ஊறு பயப்பப் பாடும் ஆனந்தக்குற்றம். (யா. வி. பக். 558, 559)
போதப்பிரகாரம் -
உத்தேசம், இலக்கணம், பரீக்கை (-பரீட்சை) என்ற தருக்க வாதப்பிரிவு.
ம
மர்க்கடம் - குரங்கு; கிசோரம் - குட்டி.
குரங்குக்குட்டி தன் தாய்க்குரங்கைத் தன் முயற்சியால் தானே பற்றிக்கொண்டு பிடிநெகிழாமல் அதனுடன் யாண்டும் இயங்குவது போல, ஒருவன் தன் முயற்சியில் நம்பிக்கை யொடு, சான்றோர்களைத் தேடித் துணைக்கொண்டு அவர்களைவிடாது பற்றிக்கொண்டு செயற்படும் நெறி இந்நியாய மாகும்.
இஃது எளியது வலியதைப் பற்றி நிற்கும் நெறியாகும். இது மர்க்கட நியாயம் எனவும்படும்.
இடம், காலம், கலை, உலகம், (-உலகியல்), நியாயம், ஆகமம் எனப்பட்ட அறுவகை மலைவுகளும் நாடக வழக்கிற் சில காரணங்களால் பொருந்தும் என்று அமைத்துக் கொள்ளப் படுதல். (தண்டி. 125)
மார்ச்சாரம் - பூனை, கிசோரம் - குட்டி.
பூனை தன் குட்டிகள் தன்னைப் பற்றிக்கொண்டு தன்னுடன் இயங்கும் ஆற்றல் அற்றனவாயிருப்ப, அவற்றிடத்துக் கொண்ட பரிவால் தானே அவற்றைப் பற்றிச் சென்று காத் தளித்தல் போல, வலியவன் எளியவனிடம் பரிவுகொண்டு தானே சென்று அவனைப் பற்றி அவனைப் பாதுகாத்து அளிக்கும் நெறி இந்நியாயமாகும்.
செய்யுட்குப் பொருந்தாத குற்றங்களாக வகுத்த வழுக்கள் ஒன்பதும் மலைவுகள் ஆறும் எடுத்துரைத்து, அவை அமைதி பெறும் இடமும் உண்டென விளக்கும் பதினைந்தனுள் ஒன்று.
முன் சொன்னதற்கு மாறுபடக் கூறுதல் இவ்வழுவாம். ஆயின் அதுவே, காமம் அச்சம் போன்ற மெய்ப்பாடுகள் கைம்மிகுந்த மக்களால் கூறப்படுமிடத்தே வழுவாகாது அமைதி பெறும்.
“அரசே! உனக்குப் பகைவனே இல்லை; இந்நாடும் உனதே. ஆகவே நீ பகைவர்களை இயமன்கொள்ளும் வகையால் சினந் தழித்துவிட்டு உலகினை ஆளுவாயாக!” என்ற பொரு ளமைந்த பாடற்கண், முன்னர்ப் பகையே இல்லை என்று கூறிப் பின்னர்ப் பகைவரை அழித்து உலகினை ஆளுமாறு கூறுவது மாறுபடுபொருள்மொழியாகி வழுவாயிற்று.
“என்னொடு போரிடப் பாண்டவர்கள் அஞ்சாரோ? நான் பாஞ்சாலியை விடமாட்டேன். ஐயோ! கூற்றுவனைப் போன்ற வீமன் எதிர்நின்று போரிட என்னால் இயலுமோ?” என்ற பொருளமைந்த பாடற்கண், முன்னடிகளில் போர்க்குத் தான் அஞ்சாமையைக் கூறியவன், பின்னடிகளில் வீமன் போர்க்குத் தான் தோற்கும் நிலையினைக் கூறினமையால் மாறுபடுபொருள் மொழியாம்; ஆயினும் அச்சமிகுதியால் சொன்ன கூற்று ஆதலின், இது வழுவமைதியாயிற்று. (தண்டி. 103, 104)
ஆன்மா புத்திதத்துவத்தில் நின்று சவிகற்பமாய் அறியும் அறிவு. (சி. சி. அளவை 6 மறைஞான.) (L)
இல்பொருள். எ-டு : யாமை மயிர்க்கம்பலம், முயற்கோடு.
(சித். பிர. பக். 82)
தருக்க சாத்திரத்தில் சொல்லப்படும் ஒரு குற்றம்; முற்கூறிய தற்கு மாறுபடக் கூறுதல். (தொ. சொ. 1 சேனா.)
செய்யுட்கு விலக்கப்பட்ட குற்றங்களுள் ஒன்று. (யா. வி. பக். 565.) (L)
இது செய்யுட் குற்றங்களுள் ஒன்று; பொருட் சிறப்பின்றியே கூறியதை மீண்டும் கூறுதலாகிய வழு. இவ்வழுவும், விரைவு பற்றியோ, வேறு பொருட்சிறப்புப் பற்றியோ வருமாயின், வழுவாகாது அமைத்துக் கொள்ளப்பெறும்.
எ-டு : ‘அங்கம் இலாத அநங்கன் அமர்புரியும்
வெங்கணையும் காக்குங்கொல், வேல்வேந்தர் - தங்கோன்,
நிலைஆர்த் தொடைதந்தோன், நேரிழைக்காய் முன்ஓர்
மலையால் கடல்கடைந்த மால்?’
எனக்குத் தன்பால் காதல் மீதூர எனக்குத் தன் ஆத்தி மாலையை அணியத் தந்தவனும், திருமகளுக்காகப் பாற்கட லினையே கடைந்த திருமாலின் அம்சமும் மன்னர் மன்னனும் ஆன சோழமன்னன், உறுப்புக்களே இல்லாத மன்மதன் என்மீது எய்யும் கொடிய அம்புகளையும் அவை என்னைக் கொடுமை செய்யாதவாறு காப்பானோ? என்ற பொரு ளமைந்த இப்பாடற்கண், ‘அங்கம் இல்லாத’ என்று அடை கொடுத்துப் பின் ‘அநங்கன்’ அப்பொருளையே யுடைய சொல்லை யமைத்தது இவ்வழுவாம்.
இனி, அச்சமும் விரைவும் பற்றி வந்தமையால், வழுவமைதி ஆமாறு:
எ-டு : ‘ஒருவர் ஒருவர் வடநாட் டரசர்
அருவர் அருவர்வர(வு) அஞ்சித் - தெருமந்து
தீத்தீத் தீ என்றயர்வர், சென்னி படைவீரர்
போய்க்கலிங்கர் நாடழித்த போது.
சோழநாட்டுப் படைவீரர் படையெடுத்துச் சென்று கலிங்க நாட்டை அழித்தபோது, வடநாட்டரசர் ஒவ்வொருவரும், “அருவர் (-தமிழர்) அருவர்” என்று அவர்களது வருகைக்கு அஞ்சி, மனமும் கலங்கித் “தீ, தீ, தீ” என்று சொல்லிக் கொண்டு தளர்ச்சியடைவர் என்ற பொருளமைந்த இப்பாடற்கண், “அருவர் அருவர்” “தீத்தீத்தீ” என்று வந்தவை விரைவு பற்றி வந்தமையின் அமைதியாயின.
தெலுங்குமொழியில் தீ என்ற சொல்லுக்கும் ஒதுங்குக என்று பொருள் இருப்பது தெரிவதால், தீத்தீத்தீ என்னும் அடுக்குத் தொடர்க்கு, ஒதுங்குக என்று பொருள்படும் சொல் மும் முறை அடுக்கி வந்தவாறு பொருள் கொள்க. (தண்டி. 105, 106).
ய
யதி வழு; அது காண்க.
செய்யுட் குற்றம் ஒன்பதனுள் ஒன்று; ஓசை கொண்டு தளையறுக்குமிடத்தே அறுத்தற்கு அரியதாய் வேறுபட வரும் தன்மைத்து இவ்வழு.
எ-டு : ‘மாடு பயிலும் வரைஆளி மால்யானைக்
கோடுபுய்த்(து) உண்டுழலும் கொள்கைத்தாம் - காடு
அரிதாம் இயல்பிற்(று); அரையிருட்கண் வாரல்;
பெரிதாகும் ஐய பிழை.’
தலைவ! மலையின் நாற்புறமும் சுற்றி ஏறி யாளி, பெரிய யானைகளுடைய கொம்புகளைப் பறித்து ஊனைத் தின்று திரியும் இயல்பினையுடைய காடு கடந்து வரற்கு மிக அரிது; இத்தகு காட்டில் நள்ளிரவில் வரவேண்டா; வரின் பேரேதம் விளையக் கூடும்” என்ற கருத்தமைந்த இப்பாடற்கண், இரண்டாமடி ஈற்றுச்சீர் ‘காடு’ என்றிருப்பது யதிவழு. சந்தி சேர்த்தால் ‘காடரிதாம்’ என ஆகித் தனிச்சொல் சீராக நிரம்பாமல் ‘கா’ எனவே நிற்கும்.
வகையுளியாகப் பிரித்துக் கூறுமிடத்தே, யதிவழு அமைக்கப் படும்.
எ-டு : ‘மேவிவாழ் வார்மேல் அருள்நீங்கா(து) ஆகு(ம்); மலர்த்
தேவிநீங் காள்செம்பொன் தோள்இணைகள்; - கோவின்நனி
சென்னிவிடா மாலின்அடி; வேலின் நுதி நீலநிறக்
கன்னிவிடாள்; ஈகைவிடா கை!’
குடிமக்கள்மீது மன்னன் அருள் நீங்காது; திருமகள் அரசனுடைய தோள்களை விட்டு நீங்காள்; அவன் தலையும் திருமாலினைப் பணிவதை விடாது; கொற்றவை அவனுடைய வேல்நுனியை விட்டு நீங்காள்; அவன் கைகள் ஈகையை ஒருபோதும் விடா என்ற இப்பாடற்கண், ‘மேவி வாழ்வார்,’ ‘தேவி நீங்காள்’ என்று சீர்பிரிப்பின் வெண்டளை கெட்டு ஓசை சிதையுமாதலின், ‘மேவிவாழ் வார்மேல்,’ ‘தேவிநீங் காள்செம்பொன்’ என்று வகையுளி மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு யதிவழு வகையுளியால் அமைக்கப்பட்டது. (தண்டி. 114.)
முன் தொடுக்கப்பட்ட சிறப்புடை மொழியின் பின்னர்ப் பாட்டுடைத் தலைவன் பெயர் நிறீஇ, அதன்பின்னே சிறப்புடைமொழி நிறீஇ, சிறப்பிக்கப்படுவதனை இவ்வாறு இடர்ப்படுத்துக் கூறுவது.
எ-டு : ‘ஊகத்தினான் மல்கு சோலை உளியன் உயர்வரைவாய்’
என்று தொடங்கும் பாடற்கண், இம்முதலடியில் ‘உளியன்’ எனப் பாட்டுடைத் தலைவன் பெயர் நடுவே வந்து இடர்ப் படுத்தியவாறு. “கருங்குரங்குகளால் நிறைந்த சோலைகளை யுடைய (உளியினது) உயர்ந்த மலையிடத்தில்” என்னும் இவ் வடிக்கண், ‘சோலைகளை யுடைய மலை’ என முடிக்கப்படு வதன் இடையே தலைவன் பெயர் வந்து மயக்குறுத்தியமை காண்க. (யா. வி. பக். 561, 562)
நால்வகை வழு - நோக்குக.
தார்க்கிகர்; தருக்கம் வல்லுநர்.
சாத்திர ஆதாரங்களை ஏற்காமல் தன் அறிவாற்றல் கொண்டு ஒருவன் வாதம் செய்தல்.
ல
லீட் - நக்குதல்.
நக்கியதனையே திரும்பவும் நக்குவதுபோல் ஒரே முறையி லேயே பலகாலும் செயற்படும் நெறி இந்நியாயமாகும்.
வ
ஒரு சங்கத்துள் ஒருவர்தாம் அறியாதவற்றை மற்றவருடைய உதவியால் அறிந்துகொள்ளுதல் போலும் நெறி. (சி. சி. 3, 4 சிவாக்.)
பிரிபொருள் சொற்றொடர் (-ஒன்றாத பொருளையுடைய செய்யுள்), மாறுபடுபொருள்மொழி - (முன்மொழிந்ததற்கு மாறுபடத் தோன்றி வரும் மொழியுடைய செய்யுள்), மொழிந்தது மொழிதல் (-கூறியது கூறி அதனால் வேறுபட ஒரு பொருளை விளக்காத செய்யுள்), கவர்படு பொருள் மொழி (- ஒரு பொருளைத் தெளிவுற உணர்த்துதற்குப் பொருந் திய சொல் அதனை ஐயுறுமாறு பலபொருள் மேலும் நிற்பது), நிரல்நிறைவழு (-ஒருவரிசை முன்வைத்து, பின்வருவது அதற்கு மாறுபட வைப்பது), சொல்வழு (-சொல்லிலக்கணத் தொடு மாறுபட்டு வழுவி வரும் சொற்களைப் புணர்ப்பது), யதிவழு (-(ஓசை கொண்டு தளை அறுக்குமிடத்து அறுத்தற்கு அரிதாய் வேறுபட வருவது), செய்யுள்வழு (-செய்யுளிலக் கணத்தொடு பொருந்தாத இயல்பிற்றாக வருவது), சந்திவழு (-(எழுத்திலக்கணத்திற் கூறிய சந்தியொடு மாறுபட்ட இயல்பிற்றாக வருவது) என்பன (இ. வி. 691)
பிரிபொருள் சொற்றொடர் முதலிய வழு ஒன்பதும் பெரும்பான்மையும் குற்றமாகச் சிறுபான்மை ஓரோவிடத் துக் குணமாதலும், இடமலைவு முதலிய ஆறும் ஒருதலை யாகவே குற்றமாய்ப் புகழ்ச்சியிடத்துப் புனைந்துரையாகப் புணர்க்கவல்ல புலவரால் சிறுபான்மை மொழியப்படுதலு மாகிய வேறுபாடு நோக்கி ஒன்பதுவகை வழுவும் ஆறுவகை மலைவும் தனித்தனியே கூறப்பட்டன. (இ. வி. 691 உரை.)
‘புகையுள்ள இடத்துத் தீயுண்டு’ என்பது போலப் பொருள் களின் பிரிவின்மையைக் குறிக்கும் நியாயம். (அபி.சிந்.)
இஃது ஏதுப் போலியின் மூவகையில் அநைகாந்திக ஏதுப் போலியின் ஆறு கூறுகளுள் நான்காவதாகும். அஃதாவது கூறப்படும் ஏதுவானது மாறுபட்டுள்ள பொருள்களில் ஒன்றில் பொருந்தி, ஒத்த பொருள் எல்லாவற்றிலும் பொருந்தி இருக்கை.
எ-டு : பக்கச்சொல் - ஒரு செயலிடைத் தோன்றுவது ஏது - நிலைபேறு இன்மையின்
விளக்கமும் எடுத்துக்காட்டும் - எவ்வெப் பொருள் செய லிடைத் தோன்றுமோ அவ்வப் பொருள் நிலைபேறுடைய தன்று, குடம்போல. இதற்கு மறுதலை விளக்கம் - எவ்வெப் பொருள்கள் செயலிடைத் தோன்றுவன அல்லவோ, அவைநிலைபேறுடையன, ஆகாயமும் மின்னலும் போல என்று கூறின்,
ஆகாயம் நிலைபேறுடையதாயும் மின்னல் நிலைபேறு அற்றதாயும் உள்ளமையின், செயலிடைத் தோன்றாத மின்னலுக்கும் நிலைபேறு உண்மை உணரப்படுதலின்,
செயலிடைத்தோன்றுவது என்பது நிலைபேறில்லா எல்லாப் பொருள்களுக்கும், நிலைபேறுடைய பொருள்களுள் ஒன்றற்கும் பொருந்துவதால்,
‘மின்னல்போல் நிலைபேறின்றாய்ச் செயலிடைத்தோன் றாதோ, குடம் போல நிலைபேறு இன்றாய்ச் செயலிடைத் தோன்றுமோ’ என்ற ஐயப்படுதலின்,
இஃது ஏதுப்போலி ஆயிற்று.
விபக்கம் - இனம் அல்லாப் பொருள்; ஏகதேசம்- ஒரு பகுதி; விருத்தி - இருத்தல்; சபக்கம் - ஒத்த இனமான பொருள்; வியாப்தி - வியாபித்திருத்தல். (மணி. 29: 243 - 253)
அனுமான உறுப்புள் துணிபொருள் இல்லா இடம். (மணிமே. 29 : 124)
இது திட்டாந்தப் போலிவகைகளாகிய சாதன்மிய திட்டாந்த ஆபாசம், வைதன்மிய திட்டாந்த ஆபாசம் என்ற இரண்ட னுள் முதல் வகையின் கூறுகள் ஐந்தனுள் இறுதியாகும்.
அந்நுவயம் - கூட்டம், உடன் நிகழ்ச்சி. விபரீதம் - மாறுபடுதல்.
நெருப்பும் புகையும் ஆகிய இரண்டனுள் நெருப்பில் புகை அடங்கியிருத்தலின் நெருப்பு வியாபகம். புகை வியாப்பியம் ஒன்றின் ஒன்று அடங்கி உடன் நிகழும் பொருள்களுள் அடங்கிக் குறைவற உடன்நிகழ்வது வியாப்பியம். அடங்காது மற்றதை அகத்திட்டு மிக்கு இருப்பது வியாபகம். வியாப்பிய மாகிய புகை வியாபகமாகிய நெருப்பு இருப்பதைக் காட்டும். ஆனால் வியாபகமாகிய நெருப்பு இருப்பதால் வியாப்பிய மாகிய புகை இருக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது. பழுக்கக் காய்ச்சிய இரும்பில் நெருப்பு உண்டு; ஆனால் புகை இல்லை. வியாபகத்தின் அந்நுவயத்தால் வியாப்பிய மாகிய பொருளைத் துணிவது விபரீத அந்நுவயமாகும்.
“இவ்விடத்தில் நெருப்பு உண்டு, புகை இருப்பதனால்” என்று கூறுவதே முறையானது.
“இவ்விடத்தில் புகை உண்டு. நெருப்பு இருப்பதனால்” என்று கூறுவது மாறுபட்டதாய் விபரீத அந்நுவயமாகும்.
“யாதொரு பொருள் பண்ணப்படுவதோ, அது நிலைபேறு இல்லாதது” என்று கூறுவதே முறை. அதை விடுத்து யாதொரு பொருள் நிலைபேறு இல்லாததோ, அது பண்ணப்படுவது” என்று கூறின், பண்ணப்படாத பொருள்க ளாகிய மின்னல் முதலியவற்றில் நிலைபேறின்மை காணப் படுதலின், அது முறை யன்று, இம்முறையன்மையே விபரீத அந்நுவயம் எனப்பட்ட திட்டாந்தப் போலியாம். (மணி. 29 : 393 - 401; அனுமா. 43)
இது திட்டாந்தப் போலிவகை இரண்டனுள் வைதன்மிய திட்டாந்தப் போலியின் கூறுகள் ஐந்தனுள் இறுதியாகும்.
இஃது ஒத்த பக்கம் அல்லாத ஒவ்வாப் பக்கத்து விளக்கத் தொடரினைத் தலைதடுமாறச் சொல்லுதலாம்.
எ-டு : ஒலி நிலைபேறுடையது, வடிவு உடைமையால்.
“யாதொரு பொருள் நிலைபேறுடையது, அது வடிவுடையது” என்பது பக்க விளக்கம். இதற்கு ஒவ்வாப் பக்க விளக்கமாக,
யாதொரு பொருள் நிலைபேறுடையதன்று, அது வடிவும் உடையதன்று என்று கூறவேண்டும்; அதனை விடுத்து யாதொரு பொருளிடத்து வடிவு இல்லையோ, அது நிலை பேறும் உடைத்தன்று என்று மாற்றிச் சொல்லுவது, ஒவ்வாப் பக்கச் செய்தியை மாறுபடுத்திக் கூறுவதால் விபரீத வியதி ரேகமாம். வியதிரேகம் - ஒவ்வாப் பொருள்; விபரீதம் - மாறுபடுத்தல். (மணி. 29 : 466 - 468)
வைதன்மிய திட்டாந்தப் போலி ஐந்தனுள், வெதிரேக வாக்கியத்தை மாறுபடச் சொல்லுதல்.
(மணிமே. 29 : 460 அனுமா. 47.)
‘வைதன்மிய திட்டாந்தப் போலி’ காண்க.
விம்பம் - பிம்பம். பிரதிவிம்பம் - கண்ணாடி முதலியவற்றில் காணும் அதன் நிழல். ஒரு பொருளின் நிழல் கண்ணாடி முதலியவற்றில் பல திறப்பட்டுக் காணப்படுவது போல, ஒரே மூலப்பொருள் பலவாகக் காட்சி வழங்கும் திறத்தைக் கூறும் நெறி இந்நியாயமாகும். (L)
ஓர் உருவமும் அதன் பிரதிபிம்பமும் போல வேற்றுமைப் பட்டிருந்தும் ஒன்றியிருக்குந் தன்மை. (L)
உடன் நில்லாத நிலை; அஃதாவது வேற்றுமை.
சாத்தியம் இல்லாத இடத்து ஏது இருப்பதாகத் தருக்கமுறை மாறுபடக் கூறுதல். வியபிசாரம் என்பதும் அது.
எ-டு : பழுக்கக் காய்ச்சிய இரும்பில் நெருப்பு இருப்பதால் புகை உண்டு என்றல். (L)
ஏதுப்போலிகளுள் ஒன்று.
ஏதுப்போலியின் மூவகைகளுள் மூன்றாவது விருத்தம் எனப்படும். இவ்விருத்த ஏதுப்போலி தர்ம சொரூப விபரீத சாதனம், தர்மி சொரூப விபரீத சாதனம், தர்ம விசேட விபரீத சாதனம், தர்மி விசேட விபரீத சாதனம் என நால்வகைப்படும். அவற்றின் விளக்கம் தனித்தனித் தலைப்பில் காண்க. (மணி. 29 : 275 - 80)
ஏதுப்போலியின் அசித்தம், அநைகாந்திகம், விருத்தம் என்ற மூவகையில் அநைகாந்திகத்தின் உட்பிரிவு ஆறனுள் ஆறாவதாகிய ஏதுப்போலி இது. இது திருந்திய ஏது அன்றாய் மாறுபட்ட ஏதுவுக்கும் இடம் கொடுப்பதாகும்.
வைசேடிகன் ஒருவன், “ஒலி நிலையற்றது, செயற்பாட்டால் தோன்றுதலின், பானை சட்டி இவற்றைப் போல” - என்று குறித்தவிடத்து,
அவனை மறுத்து வாதிக்கும் மீமாஞ்சகன் ஒருவன், “ஒலி நிலை பேறுடையது, கேட்கப்படுதலின், சத்ததத்துவம் போல” என்று குறிப்பிட்டால்,
கேட்கப்படுதல் என்ற ஏது சத்ததத்துவம் ஒன்றனைத்தவிர ஏனைய இணையான பொருள் எதனிடத்தும் இன்மையா னும், செயற்பாட்டால் தோன்றும் குடம் முதலிய பல பொருள்களிடத்தும் நிலைபேறின்மை காணப்படுதலானும்,
மீமாஞ்சகன் கூறும் திருந்தா ஏது ஒன்று, வைசேடிகன் கூறும் திருந்திய ஏதுவும் உடன் இருக்க அமைவதாய், ‘ஒலி நிலைபேறுடையது’ என்பதனைக் காரணமும் எடுத்துக்காட் டும் தந்து நிறுவ இயலாததாய் உள்ள நிலையில்,
வைசேடிகன் கூறும் ‘ஒலி நிலையற்றது’ என்ற பொருளைச் சாதித்து, வாதியாகிய மீமாஞ்சகன் கூறும் ‘ஒலி நிலை பேறுடையது’ என்ற பொருளைச் சாதியாமையின்,
மாறுபட்ட காரணமாய், இருதிறத்தும் உதவுதலின் விருத்த வியபிசாரி என்ற ஏதுப்போலியாயிற்று. விருத்தம் - மாறுபாடு. வியபிசாரி - உரிய இடத்தை விடுத்துப் பிறிதோரிடமும் சுட்டுதல். (மணி. 29: 267 - 274)
விஷம் - நஞ்சு; கிருமி - அதில் உண்டாகும் புழு.
நஞ்சினில் தோன்றிய புழு, அதனைத் தனக்கு நஞ்சு என்று கருதாது உணவாக உட்கொண்டு உயிர் வாழ்வது போல, தீயவற்றிலேயே பலகாலும் பழகியவர்களுக்கு அவை தீமை பயப்பனவாகத் தோன்றாமல், தமக்கு இயல்பானவையாகவே தோன்றும் நெறி இந்நியாயமாகும். (L)
விஷம் - நஞ்சு; விருக்கம் - விருட்சம் - மரம்.
தான் வளர்த்த நச்சு மாமரத்தை அது தனக்கும் மற்றவருக்கும் தீமைதருவது ஒன்று என்று அறிந்திருந்தும், அதை வெட்டி அழிக்கத் தனக்கு முழுஉரிமை இருந்தும், தான் அதனை அழிக்க விரும்பாதவாறு போல, தான் ஆக்கிய ஒன்று தனக்கும் மற்றவருக்கும் தீமை பயப்பது வெளிப்படையாக அறியப்பட்டபோதிலும் தான் அதனை அழிக்கக் கூடாது என்று கொள்ளும் கொள்கையை எடுத்து இயம்பும் நெறி இந்நியாயமாகும். (L)
‘தாம் வளர்த்ததோர், நச்சு மாமரம் ஆயினும் கொலார்’
(திருவா. 5 : 96)
வீசம் - பீஜம் ; விருக்கம் - மரம்.
பீஜவிருக்ஷ நியாயம் என்ப.
வித்து முந்தியதோ மரம் முந்தியதோ என்று விவாதிப்பது போல முடிவற்ற விவாதம் பற்றிக் கூறும் நெறி இந்நியாய மாகும். (L)
வீசி - அலை; தரங்கம் - கடல்.
கடல்அலைகள் ஒன்றன்பின் ஒன்று தொடர்ந்து வருதலைப் போலச் செய்திகள் ஒன்றன்பின் ஒன்று இடைவிடாது தொடர்ந்து கூறும் நெறி இந்நியாயமாகும் (இலக். அக.) (கடல்அலைகள் போல ஒலிஅலைகள் இடைவிடாது தொடர்ந்து வருவது முதலியவற்றைக் கொள்க.)
வேதமாகிய ஆகமஅளவை. (L)
சாத்தியாவியாவிருத்தி, சாதனாவியாவிருத்தி, உபயாவியா விருத்தி, அவ்வெதிரேகம், விபரீத வெதிரேகம் என ஐவகைப் பட்ட போலியான வைதன்மிய திட்டாந்தம். (ஆபாசம் - போலி.) (மணி. 29 : 334 , 345)
இஃது எடுத்துக்காட்டுப் போலிவகை. இரண்டாகிய ஒத்த இணையான பொருளின் எடுத்துக்காட்டுப்போலி, ஒவ்வாப் பொருளின் எடுத்துக்காட்டுப்போலி என்பவற்றுள் ஒவ்வாப் பக்க எடுத்துக்காட்டுப் போலியாகும். இதன் உட்பிரிவுகள் சாத்தியாவியாவிருத்தி, சாதனாவியாவிருத்தி, உபயாவியா விருத்தி, அவ்வியதிரேகம், விபரீத வியதிரேகம் என்ற ஐந்தாம். அவற்றைத் தனித்தனித் தலைப்புள் காண்க.
வைதன்மியம் - ஒவ்வாமை.
வைதன்மியதிட்டாந்தம் - ஒவ்வாப் பொருளை எடுத்துக் காட்டாகத் தருதல். இதனை ‘வைதன்மிய திட்டாந்த ஆபாசம்’ எனவும் வழங்குப. (மணி. 29 : 331 - 335)
சாத்தியம் எய்தாவிடத்தில் ஏதுவும் இன்மையைக் குறிக்கும் திட்டாந்தம். (மணி. 29 : 140)
ஹ
ஹேமம் - பொன்; அரவிந்தம் - தாமரை; பரிமளம் - மணம்.
பொன்னால் செய்யப்பட்டதால் விலையுயர்ந்த தாமரை மலர், இயல்பான தாமரைமலரின் மணத்தையும் பெற்றால் பெரிதும் சிறப்புறுதல் போலச் சிறந்ததொருபொருள் வேறொரு பொருளால் சிறப்புறுதல். நன்கு கற்றவன் சொல்வன்மையும் பெற்றாற் போல்வனவற்றை உணர்த்தும் நெறி இந்நியாயமாகும். (L)
ஹோள - ஹோளிப்பண்டிகை; அதிகரணம் - ஆதாரம்.
ஹோளிப் பண்டிகையைக் கொண்டாடச் சாத்திரவிதி ஏதும் இல்லை எனினும் பல காலமாக அது கொண்டாடப்பட்டு வருவதனால் சம்பிரதாயத்தை ஒட்டி அதனை ஏற்பது போல, பாவைநோன்பு நோற்க வேதவிதியின்று எனினும் அதனைக் கொண்டாடுதல் போல, சிஷ்டாசாரத்துக்கு முதலிடம் கொடுத்துப் பின்பற்றும் நெறி இந்நியாயமாகும். (L)
இத்தமிழ்ப் பொருளிலக்கணப்
பேரகராதியில்
எடுத்தாண்ட
இலக்கிய இலக்கண
நூல்களின்
பட்டியல்
(அகரவரிசை)
அகநானூறு சங்கஇலக்கியம். பாகனேரி தன வைசிய இளைஞர் தமிழ்ச்சங்க வெளியீடு, 1943 - ’ 44.
அகராதி நிகண்டு ஆசிரியர் சிதம்பர ரேவணசித்தர். தமிழ்ச் சங்க முத்திராசாலை, மதுரை, 1921.
அணியிலக்கணம் ஆசிரியர் திருத்தணிகை விசாகப் பெருமாளையர். திருநெல்வேலி தென்னிந்தியச் சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழக வெளியீடு, சென்னை, 1941.
அபிதான சிந்தாமணி ஆசிரியர், ஆ. சிங்காரவேலு முதலி யார். தமிழ்ச்சங்கப் பிரசுரம், மதுரை, 1910.
அம்பிகாபதிக் கோவை ஆசிரியர் அம்பிகாபதி. பதிப்பா சிரியர் பொன். இராமனாதன் செட்டியார். தி.தெ.சை.நூ. கழக வெளியீடு. சென்னை, 1968.
அரிசமயதீபம் ஆசிரியர் கீழையூர்ச் சடகோப தாசர். செங்கல்வராயநகர் ஆர்ப னேஜ் அச்சுக் கூடம், சென்னை, 1903.
அழகரந்தாதி ஆசிரியர் பிள்ளைப் பெருமாளை யங்கார், வை.மு. கோபாலகிருஷ்ண மாசாரியார் கம்பெனி, சென்னை-5, 1966.
அறநெறிச்சாரம் ஆசிரியர் முனைப்பாடியார்.
அறுவகை இலக்கணம் ஆசிரியர் வண்ணச்சரபம் தண்ட பாணி சுவாமிகள். ‘இலக்கணத் தொகை - யாப்பு, பாட்டியல்’ நூலுள் ஒரு பகுதியாக அச்சிடப்பட்டுள் ளது. 1978
அனுமான விளக்கம் ஆசிரியர் திருநாராயண ஐயங்கார், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1905.
ஆசாரக்கோவை ஆசிரியர் பெருவாயின் முள்ளியார்.
ஆசிரிய நிகண்டு ஆசிரியர் ஆண்டிப்புலவர். பதிப்பா சிரியர் வீ. சொக்கலிங்கம், தஞ்சைச் சரசுவதிமகால் வெளியீடு 1975.
ஆராய்ச்சித் தொகுதி ஆசிரியர் மு. இராகவையங்கார். 1938.
ஆழ்வார்கள் காலநிலை ஆசிரியர் மு. இராகவையங்கார்.
ஆளுடைய பிள்ளையார்
திருக்கலம்பகம் நம்பியாண்டார் நம்பிகள் அருளி யது; பதினோராம் திருமுறை. திருப் பனந்தாள் காசிமடம் வெளியீடு 1950.
இரகுவம்சம் ஆசிரியர் அரசகேசரி. பதிப்பாசிரியர் பொன்னம்பலப்பிள்ளை, யாழ்ப்ப hணம் வித்தியாநுபாலன யந்திர சாலை 1887.
இராமநாடகம் ஆசிரியர் அருணாசலக் கவிராயர். சென்னைப் பூமகள் விலாச அச்சுக் கூடம், 1934.
இலக்கணக் கட்டுரைகள் ஆசிரியர் வே. வேங்கடராஜுலு ரெட்டியார். சென்னைப் பல்கலைக் கழக வெளியீடு, 1937.
இலக்கணக் கொத்து ஆசிரியர் சாமிநாததேசிகர். பதிப்பா சிரியர் தி.வே. கோபாலையர். தஞ்சைச் சரசுவதிமகால் வெளியீடு, 1973.
இலக்கணத் தொகை பதிப்பாசிரியர் ச.வே. சுப்பிரமணியன்.
- யாப்பு-பாட்டியல் தமிழ்ப் பதிப்பகம், அடையாறு, சென்னை, 1978.
இலக்கண விளக்கம் ஆசிரியர் திருவாரூர் வைத்தியநாத தேசிகர். பதிப்பாசிரியர் தி.வே.கோபா- லையர். தஞ்சைச் சரசுவதிம கால் வெளியீடு, 1968 - 72.
இலக்கியச் சொல்லகராதி ஆசிரியர் குமாரசாமிப் பிள்ளை. சென்னைபட்டணம். வித்தியா நுபாலன யந்திரசாலை, (1914).
இறையனார் அகப்பொருள் ஆசிரியர் இறையனார் பதிப் பாசிரியர் பவானந்தம் பிள்ளை. சென்னை, 1916.
இன்னா நாற்பது ஆசிரியர் கபிலதேவர். பதிப் பாசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை. சென்னை, 1944.
ஈட்டி எழுபது ஆசிரியர் ஒட்டக் கூத்தர்.
ஈடு முப்பத்தாறாயிரப் படி ஆசிரியர் நம்பிள்ளை. ஜீயர் அரும்
பதவுரையோடு
பதிக்கப்பட்டுள்ளது. பதிப்பாசிரியர் சே.
கிருஷ்ணமா சாரியார்.
உத்தரகாண்டம் ஆசிரியர் ஒட்டக்கூத்தர். சென்னை குயப்பேட்டை வித்தியாரத்நாகர அச்சியந்திரசாலை, 1911.
உபதேச காண்டம் ஆசிரியர் குகநேரியப்ப நாவலர். சென்னை, கலா ரத்நாகர அச்சுக் கூடம், 1887.
ஐங்குறு நூறு சங்க இலக்கியம். உ.வே. சா. நூல் நிலைய வெளியீடு, அடையாறு, சென்னை, 1944.
ஐந்திணை எழுபது ஆசிரியர் மூவாதியார். பதிப் பாசிரியர் இ.வை. அனந்தராமையர். சென்னை, 1931.
ஐந்திணை ஐம்பது ஆசிரியர் மாறன் பொறையனார். தமிழ்ச் சங்க முத்திராசாலை, மதுரை 1912.
கணக்கதிகாரம் ஆசிரியர் காரியார். சென்னை, சூலை நிரஞ்சன விலாச அச்சியந் திரசாலை, 1927.
கந்தபுராணம் ஆசிரியர் கச்சியப்ப சிவாசாரியார் சுவாமிகள். திருப்பனந்தாள் காசி மடம் வெளியீடு, 1952.
கப்பற்கோவை சென்னை அரசு கீழ்க்கலைச் சுவடிகள் வெளியீடு, சென்னை, 1958.
கம்பராமாயணம் ஆசிரியர் கம்பநாட்டாழ்வார். கம்பன் கழகம் சென்னை, 1977.
கயாதரம் ஆசிரியர் கயாதரர். சென்னை சர்வ கலாசாலை வெளியீடு. 1939.
கலித்தொகை சங்கஇலக்கியம். பாகனேரி த.வை. இளைஞர் தமிழ்ச்சங்க வெளியீடு, 1938.
கலைசைச் சிலேடை ஆசிரியர் தொட்டிக்கலை சுப்பிர மணிய முனிவர். தஞ்சை, கல்யாண சுந்தரம் முத்திராசாலை, 1908.
களவழி நாற்பது ஆசிரியர் பொய்கையார். ந.மு. வேங் கடசாமி நாட்டார் உரை. தி.தெ. சை.நூ. கழக வெளியீடு. சென்னை, 1942.
களவியற் காரிகை பதிப்பாசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை. சென்னை. 1931.
காசிக் கலம்பகம் ஆசிரியர் குமரகுருபர் சுவாமிகள். குமரகுருபரர் பிரபந்தத் திரட்டு : திருப்பனந்தாள் காசிமடம் வெளி யீடு, 1961.
காஞ்சிப் புராணம் ஆசிரியர் சிவஞான சுவாமிகள். பதிப்பாசிரியர் அருணை வடிவேல் முதலியார். காஞ்சிபுரம் மெய் கண்டார் கழகம், 1937.
குவலயானந்தம் தமிழில் மொழிபெயர்த்தவர் மீனாட்சி சுந்தரக் கவிராயர். செங் கல்வராய நாயக்கர். ஆர்பனேஜ் அச்சுக் கூடம், சென்னை, 1895.
குற்றாலத் தலபுராணம் ஆசிரியர் திரிகூடராசப்பக் கவி ராயர். பதிப்பாசிரியர் மு. அருணா சலக் கவிராயர்.
குறுந்தொகை சங்க இலக்கியம். உ.வே.சா. பதிப்பு. சென்னை, 1935.
கைந்நிலை ஆசிரியர் புல்லங்காடர். பதிப் பாசிரியர் இ.வை. அனந்தராமையர். சென்னை, 1931.
கோயிலொழுகு பதிப்பாசிரியர் புத்தூர்க் கிருஷ்ண சாமி ஐயங்கார். திருச்சி, 1990.
சங்கத்தகராதி தமிழ்ச் சொல்லகராதி எனவும்படும். அது காண்க.
சதுரகராதி ஆசிரியர் வீரமாமுனிவர். சன்மவி ராக்கினி மாதாகோயில் அச்சுக் கூடம், புதுவை, 1872.
சந்திராலோகம் தமிழில் மொழிபெயர்த்துப் பதிப் பித்தவர் முத்துசாமி ஐயங்கார். செந் தமிழ்ப் பிரசுரம், மதுரை, 1909.
சிந்தாந்தப் பிரகாசிகை ஆசிரியர் சிவஞான சுவாமிகள். மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, 1913.
சிந்தாந்த மரபு கண்டன ஆசிரியர் சிவஞானசுவாமிகள். சிதம்
கண்டனம் பரம் சித்தாந்த வித்தியாநுபாலன யந்திரசாலை, விஜய ஆண்டு கார்த் திகை (1893)
சிதம்பரச் செய்யுட்கோவை குமரகுருபரர் பிரபந்தத் திரட்டு : திருப்பனந்தாள் காசிமடம் வெளி யீடு, 1961.
சிதம்பரப் பாட்டியல் ஆசிரியர் பரஞ்சோதியார். பதிப் பாசிரியர் சி. இராமாநுiஜயங்கார், செந்தமிழ்ப் பிரசுரம், மதுரை, 1932.
சிந்தாமணி நிகண்டு ஆசிரியர் வல்லவை க. வைத்திய லிங்கம்; பதிப்பாசிரியரும் அவரே. சென்னை லக்ஷ்மி விலாச அச்சுக் கூடம், தாது ஆண்டு சித்திரை (1936).
(சிந். யாப்.) சிந்துப்
பாடல்களின் யாப்பு ஆசிரியர் இரா. திருமுருகன், பாவலர் பண்ணை, புதுவை. (1993).
சிலப்பதிகாரம் ஆசிரியர் இளங்கோவடிகள். உ.வே.சா. நூல்நிலைய வெளியீடு, அடையாறு, சென்னை. 1955.
சிவஞானசித்தியார் ஆசிரியர் அருணந்தி சிவாசாரியார்.
சுபக்கம் : சிவஞான முனிவருரை
பரபக்கம் : ஞானப் பிரகாசருரை
: மறை ஞான தேசிகருரை
சென்னை - சிவஞானபோத யந்திர சாலை,
சர்வதாரி ஆண்டு வைகாசி (1888)
விரோதி ஆண்டு ஆனி (1889)
சாதாரண ஆண்டு மார்கழி (1910)
சிவஞானபோதம் ஆசிரியர் மெய்கண்ட தேவநாய னார். சிவஞான முனிவர் சிற்றுரை யும் விளக்க வுரையும் : தி.தெ.சை.நூ. கழக வெளியீடு, சென்னை. 1953.
வசனாலங்காரதீபம் : சென்னை சைவ வித்தியாநுபாலன யந்திர சாலை, நள ஆண்டு சித்திரை (1916)
பாண்டிப் பெருமாளுரை : திருவா வடுதுறை ஆதீன வெளியீடு, மன்மத ஆண்டு ஐப்பசி (1955).
சிவதருமோத்தரம் ஆசிரியர் மறைஞானசம்பந்தர். திரு நெல்வேலிப் பதிப்பு, 1897.
சிவப்பிரகாசம் ஆசிரியர் உமாபதி சிவம், திருவாவடு துறை ஆதீன வெளியீடு, 1953.
சிறிய திருமடல் திருமங்கையாழ்வார் அருளியது. நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பதிப்பு, 1962.
சீகாளத்தி புராணம்
(காளத்தி புராணம்) ஆசிரியர்கள் துறை மங்கலம் சிவப் பிரகாச சுவாமிகள், கருணைப் பிரகாச சுவாமிகள், வேலைய சுவாமிகள் - என மூவர். சிவப் பிரகாசர் இயற்றிய இறுதி இரண்டு சருக்கங்கள் : சிவப்பிரகாச சுவா மிகள் பிரபந்தத் திரட்டு - பொம்மிய பாளையமடம், சிவஞான பாலைய சுவாமிகள் ஆதீன வெளியீடு, 1944.
சீவக சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவர், உ.வே.சா. நூல் நிலைய வெளியீடு, அடையாறு, சென்னை, 1949.
சுவாமி (சாமி) நாதம் ஆசிரியர் சுவாமி (சாமி) கவிராயர். பதிப்பாசிரியர் செ.வை. சண்முகம். அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடு, அண்ணாமலை நகர், 1975.
சூடாமணி நிகண்டு ஆசிரியர் மண்டலபுருடர். பதிப்பா சிரியர் ஆறுமுக நாவலர், 1934.
சூத்திர விருத்தி ஆசிரியர் சிவஞானசுவாமிகள். ‘தொல்காப்பிய முதற்சூத்திர விருத்தி’ எனவும்படும். ஆறுமுக நாவலர் (நான்காம்) பதிப்பு. இரத்தாக்ஷி ஆண்டு மாசி (1924), சென்னப்பட்டணம் வித்தியாநுபா லன யந்திரசாலையில் பதிப்பிக்கப் பட்டது.
செந்தமிழ்(ப் பத்திரிகை) மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடு.
செய்யுளிலக்கணம்
சேது புராணம் ஆசிரியர் நிரம்ப அழகிய தேசிகர். ஆறுமுகநாவலர் பதிப்பு அக்ஷய ஆண்டு (1926)
சேந்தன் திவாகரம் ஆசிரியர் திவாகரர். தி.தெ.சை.நூ. கழக வெளியீடு. சென்னை, 1958.
சைவப் பிரகாசனம் ஆசிரியர் சங்கரபண்டிதர். சிவகாமி அச்சியந்திரசாலை, சென்னை -1, அக்ஷயஆண்டு மாசி (1927)
சோணசைல மாலை சிவப்பிரகாச சுவாமிகள் பிரபந்தத் திரட்டு: பொம்மியபாளைய மடம் சிவஞான பாலைய சுவாமிகள் ஆதீன வெளியீடு, 1944.
ஞானவாசிட்டம் தமிழில் மொழி பெயர்த்த ஆசிரியர் ஆளவந்தார் முனிவர் உரை, சென்னை - 1890.
ஞானாமிர்தம் ஆசிரியர் வாகீசமுனிவர். தமிழ்ச் சங்க முத்திராசாலை, மதுரை, 1904.
தக்கயாகப் பரணி ஆசிரியர் ஒட்டக்கூத்தர், உ.வே.சா. நூல் நிலைய வெளியீடு, அடை யாறு, சென்னை - 1960.
தஞ்சைவாணன் கோவை ஆசிரியர் பொய்யாமொழிப் புலவர். தி.தெ.சை.நூ. கழக வெளியீடு, 1960.
தத்துவப் பிரகாசம் ஆசிரியர் தத்துவப் பிரகாச சுவாமிகள். யாழ்ப்பாணம் சோதிடப் பிரகாச யந்திரசாலை, நந்தன ஆண்டு மார்கழி (1892).
தமிழ்ச்சொல்லகராதி சங்கத்தகராதி எனவும்படும். தமிழ்ச் சங்கத்துப் பிரசுரம், மதுரை, 1923.
தமிழ்நாவலர் சரிதை The Caxton Press, Madras, 1921.
தமிழ்நெறி விளக்கம் உ.வே.சா. பதிப்பு, சென்னை, 1947.
தமிழ்ப்புலவர் அகராதி ஆசிரியர் ந.சி. கந்தையாபிள்ளை, நூற்பதிப்புக் கழக வெளியீடு, சென்னை, 1960.
தமிழ் வரலாறு ஆசிரியர் ரா. இராகவையங்கார், அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு, அண்ணாமலை நகர், 1979.
தருக்க கௌமுதி ஆசிரியர் சிவப்பிரகாச சுவாமிகள்
தருக்க சங்கிரகம் மொழிபெயர்ப்பு ஆசிரியர் சிவ ஞான முனிவர். சென்னப்பட்டனம் வித்தியா நுபாலன யந்திரசாலை, ரௌத்திரி ஆண்டு சித்திரை (1920).
தருக்க பரிபாஷை சிவப்பிரகாசசுவாமிகள் பிரபந்தத் திரட்டு: சிவஞான பாலைய சுவாமிகள் ஆதீன வெளியீடு, 1944.
தனிப்பாடல் திரட்டு சென்னை அரசு கீழ்க்கலைக் சுவடிகள் நூலகம், சென்னை, 1960.
தாயுமானவர் பாடல் பி. இரத்தின நாயகர் ஸன்ஸ், திரு மகள் அச்சியந்திர சாலை,சென்னை 1953.
திணைமாலை நூற்றைம்பது ஆசிரியர் கணிமேதாவியார். தி.தெ. சைநூ. கழக வெளியீடு, சென்னை, 1936.
திரிகடுகம் ஆசிரியர் நல்லாதனார், தி.தெ.சை.நூ. கழக வெளியீடு, சென்னை, 1951.
திருக்குறள் ஆசிரியர் திருவள்ளுவர், ஆறுமுக நாவலர் பதிப்பு, 1917.
திரு(ச்சிற்றம்பல)க் மாணிக்கவாசகர் அருளியது. சென்னை
கோவையார் அரசு கீழ்க்கலைச் சுவடிகள் நூலக வெளியீடு, சென்னை, 1951.
திருச்செந்தூர் முருகன் ஆசிரியர் பகழிக்கூத்தர். பதிப் பாசிரியர்.
பிள்ளைத்தமிழ் பு.சி. புன்னைவனநாத முதலியார். தி.தெ.சை.நூ கழக வெளியீடு சென்னை, 1957.
திருப்பதிக் கோவை ஆசிரியர் திருக்குருகைப் பெருமாள் கவிராயர். செந்தமிழ்ப் பிரசுரம், மதுரை, 1932.
திருப்பள்ளியெழுச்சி தொண்டரடிப் பொடி ஆழ்வார் அருளியது. நாலாயிர திவ்வியப் பிரபந்த வெளியீடு, 1962.
திருப்புகழ் ஆசிரியர் அருணகிரிநாதர், பாகங்கள் I, II, III : சென்னை, 1909, 1901, 1926.
திருப்போரூர்ச் சந்நிதி ஆசிரியர் சிதம்பர சுவாமிகள்.
முறை புரசை நற்றமிழ் விலாச அச்சியந்திர சாலை, சென்னை, 1907.
திருவரங்கக் கலம்பகம் ஆசிரியர் பிள்ளைப்பெருமாளை யங்கார். வை.மு. சடகோபராமநுஜா சாரியார் உரை, சென்னை, 1953.
திருவாசகம் மாணிக்கவாசக சுவாமிகள் அருளி யது. சென்னை அரசு கீழ்க்கலைச் சுவடிகள் நூலக வெளியீடு. சென்னை, 1954.
திருவாய்மொழி நம்மாழ்வார் அருளியது. நாலாயிர திவ்வியப் பிரபந்த வெளியீடு, 1962.
திருவாரூர்க் கோவை ஆசிரியர் எல்லப்ப நயினார். உ.வே.சா. பதிப்பு, சென்னை, 1941.
திருவாலவாயுடையார் ஆசிரியர் பெரும்பற்றப்புலியூர் நம்பி.
திருவிளையாடற் புராணம் உ.வே.சா. பதிப்பு. சென்னை, 1927.
திருவிருத்தம் நம்மாழ்வார் அருளியது. நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பதிப்பு, 1962.
திருவிளையாடற் புராணம் ஆசிரியர் பரஞ்சோதி முனிவர். தி.தெ. சை.நூ. கழக வெளியீடு, சென்னை, 1931.
திருவேங்கடச் சதகம் ஆசிரியர் திவ்வியக்கவி நாராயண பாரதி. மணவாள நாராயணச் சதகம் எனவும் படும். மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, 1905.
திருவேங்கடத் தந்தாதி ஆசிரியர் பிள்ளைப் பெருமா ளையங்கார். வை. மு. சடகோபரா மாநு ஜாசாரியார் உரை.
திவாகர நிகண்டு ஆசிரியர் திருவாசகரர் மனோன் மணி விலாச அச்சுக் கூடம், சென்னை, 1904.
தென்னூல் இலக்கியப் ஆசிரியர் ச. பாலசுந்தரம், தாமரை
படலம் வெளியீட்டகம், தஞ்சாவூர் (1991)
தேவாரம் தொகுதிகள் I,II சம்பந்தர், அப்பர், சுந்தரர் என்னும் இம் மூவர் முதலிகளால் அருளப் பட்ட பாசுரங்களின் தொகை. பதிப் பாசிரியர் தி.வே. கோபாலையர், புதுவை ஃபிரெஞ்சிந்தியக் கலை நிறுவனம், 1984, 85.
தொகையகராதி ஆசிரியர் சு.அ. இராமசாமிப் புலவர், தி.தெ.சை.நூ., கழக வெளியீடு, சென்னை, 1969.
தொண்டைமண்டலச் சதகம் ஆசிரியர் படிக்காகப் புலவர். மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, 1913.
தொல்காப்பியச் சண்முக ஆசிரியர் அரசஞ்சண்முகனார்,
விருத்தியின்முதற் பகுதி பதிப்பாசிரியர் வா.கோபாலசாமி
யாகிய பாயிரவிருத்தி ரகுநாத ராஜாளி. தஞ்சை வித்தியா விநோதினி முத்திராசாலை, 1905.
தொல்காப்பியச் சூத்திர
விருத்தி ‘சூத்திரவிருத்தி’ காண்க.
தொல்காப்பியம்
எழுத்ததிகாரம் இளம்பூரணருரை : தி.தெ.சை.நூ. கழக வெளியீடு, சென்னை, 1964. தமிழ்மண் பதிப்பகம், சென்னை, 2003.
நச்சினார்க்கினியருரை : தி.தெ.சை.நூ. கழக வெளியீடு, ஆங்கிரஸ ஆண்டு (1932)
சொல்லதிகாரம் சேனாவரையருரை : தி.தெ.சை.நூ. கழக வெளியீடு, சென்னை, உருத் ரோத்காரி ஆண்டு (1923)
பொருட்படலம் ச. சோமசுந்தரபாரதியார் புத்துரை (அகத்திணையியல், புறத்திணை யியல், மெய்ப்பாட்டியல் என்பன மூன்றற்கும்) மதுரை, 1942.
பொருளதிகாரம் 1. இளம்பூரணருரை : தி.தெ.சை.நூ. கழக வெளியீடு, சென்னை, 1956. தமிழ்மண் பதிப்பகம், சென்னை, 2003.
2. குழந்தையுரை : வேலா பதிப்பகம், ஈரோடு, 1968.
3. ச. பாலசுந்தரம் இயற்றிய காண்டி கையுரை : தாமரை வெளியீட்டகம், தஞ்சை 1989 (முதல் இரண்டு இயல்கள், அடுத்த ஐந்து இயல்கள்), 1991 (இறுதி இரண்டு இயல்கள்).
4. நச்சினார்க்கினியருரை : (முதல் ஐந்து இயல்கட்கு) சி. கணேசையர் உரை விளக்கக் குறிப்புக்களுடன், சுன்னாகம் பதிப்பு, 1948.
5. பேராசிரியருரை (பின் நான்கு இயல்கட்கு) சி. கணேசையர் உரை விளக்கக் குறிப்புக்களுடன் சுன் னாகம் பதிப்பு, 1943.
6. செய்யுளியல் - நச்சினார்க்கினி யருரை. தி.தெ.சை.நூ. கழக வெளி யீடு, சென்னை, 1965. தமிழ்மண் பதிப்பகம், சென்னை, 2003.
தொன்னூல் விளக்கம் ஆசிரியர் வீரமாமுனிவர். பதிப்பா சிரியர் ச.வே. சுப்பிரமணியன். தமிழ்ப் பதிப்பகம், அடையாறு, சென்னை, 1978.
நம்பியகப்பொருள் ஆசிரியர் நாற்கவிராசநம்பி. க.ரா.
அல்லது அகப்பொருள் கோவிந்தராஜ முதலியார் எழுதிய
விளக்கம் குறிப்புரை முதலியவற்றொடு தி.தெ. சை.நூ. கழக வெளியீடு, சென்னை, 1958.
நல்லாப்பிள்ளை பாரதம் ஆசிரியர் நல்லாப் பிள்ளை. முத்து ராமலிங்கத் தேவர் அச்சிட்டது. சிதம்பர முதலி வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1911.
நவநீதப் பாட்டியல் ஆசிரியர் நவநீத நடனார், உ.வே.சா. நூல் நிலைய வெளியீடு, சென்னை, 1944.
நளவெண்பா ஆசிரியர் புகழேந்தி, உ.வே.சா. நூல் நிலைய வெளியீடு, சென்னை, 1960.
நற்றிணை சங்க இலக்கியம், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயருரை. தி.தெ. சை.நூ. கழக வெளியீடு, சென்னை, 1952.
நன்னூல் ஆசிரியர் பவணந்தி முனிவர்.
காண்டிகையுரை : வை. மு. சடகோ பராமநுஜாசாரியார். பதிப் பாசிரியர் சே. கிருஷ்ணமாசாரியார், சென்னை, 1947.
சங்கரநமச்சிவாயர் விருத்தியுரை, உ.வே.சா. பதிப்பு, சென்னை, 1935.
சிவஞான முனிவர் விருத்தியுரை, தருமபுரம் ஆதீன வெளியீடு, 1957.
மயிலைநாதருரை, உ.வேசா. பதிப்பு, சென்னை, 1918.
நாச்சியார் திருமொழி ஆண்டாள் அருளியது. நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பதிப்பு, 1962.
நாடகவியல் ஆசிரியர் வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார். உரையாசிரியர் பல ராமையர், திருநெல்வேலிப் பதிப்பு, 1934.
நாமதீப நிகண்டு ஆசிரியர் கல்லிடை நகர் சிவசுப்பிர மணியக் கவிராயர், பதிப்பாசிரியர் 5. வையாபுரிப் பிள்ளை (பழைய உரையும் புத்துரையும்), சென்னை, 1930.
நாலடியார் ஆசிரியர்கள் சமண முனிவர்கள். தி.சு. பாலசுந்தரனார் உரை. தி.தெ. சை.நூ. கழக வெளியீடு, சென்னை, 1945.
நாலாயிர திவ்வியப் ஆழ்வார்கள் அருளிய பாசுரங்களின்
பிரபந்தம் திரட்டு, மயிலை மாதவதாசன் பதிப்பு, சென்னை, 1962.
நான்மணிக்கடிகை ஆசிரியர் விளம்பிநாகனார், இள வழகனாருரை, தி.தெ.சை.நூ. கழக வெளியீடு, சென்னை, 1950.
நான்முகன் திருவந்தாதி திருமழிசையாழ்வார் அருளியது, நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பதிப்பு, 1962.
நீதிநெறி விளக்கம் குமரகுருபரர் பிரபந்தத் திரட்டு : திருப்பனந்தாள் காசி மடம் வெளி யீடு, 1961.
நீலகேசி பதிப்பாசிரியர் ஏ. சக்கிரவர்த்தி நயீனார் கும்பகோணம், 1936.
நெல்லை வருக்கக்கோவை ஆசிரியர் வீரை அம்பிகாபதி என்ப; 16 ஆம் நூற்றாண்டு.
நேமிநாதம் ஆசிரியர் குணவீரபண்டிதர். பதிப் பாசிரியர் க.ரா. கோவிந்தராஜ முதலியார். தி.தெ.சை.நூ கழக வெளியீடு, சென்னை, 1945.
நைடதம் ஆசிரியர் அதிவீரராமபாண்டியர், சென்னை வித்தியாரத்நாகர அச்சுக் கூடம், 1910.
பத்துப்பாட்டு சங்க இலக்கியம் (பத்துப் பாடல் களின் தொகை). நச்சினார்க்கினிய ருரை. உ.வே.சா நூல் நிலைய வெளி யீடு, அடையாறு, சென்னை, 1956.
பதிற்றுப்பத்து சங்க இலக்கியம். பழைய உரை குறிப்புரைகளோடு உ.வே.சா. பதிப்பு, சென்னை, 1941.
பரத சாஸ்திரம் ஆசிரியர் அரபத்த நாவலர், சென்னைத் தண்டையார்பேட்டை லக்ஷ்மி விலாச அச்சுக்கூடம், 1876.
பரிபாடல் சங்க இலக்கியம், பரிமேலழகருரை, உ.வே.சா பதிப்பு, சென்னை, 1935.
பழமொழி நானூறு ஆசிரியர் முன்றுறை அரையனார், பதிப்பாசிரியர் மா. இராச மாணிக்கம் பிள்ளை, தி.தெ.சை.நூ. கழக வெளியீடு, சென்னை, 1954.
பன்னிரு பாட்டியல் ஆசிரியர் பொய்கையார் முதலி யோர். பதிப்பாசிரியர் ரா.இராக வையங்கார், செந்தமிழ்ப் பிரசுரம், மதுரை, 1951.
பாண்டிக் கோவை பதிப்பாசிரியர் வே. துரைசாமி, ஸ்டார் பிரசுரம், சென்னை, 1957.
பாயிரவிருத்தி ‘தொல்காப்பியச் சண்முக விருத்தி’ காண்க.
பிங்கல நிகண்டு ஆசிரியர் பிங்கல முனிவர். பதிப் பாசிரியர் சிவன்பிள்ளை. சென்னை இந்து தியலாஜிகல் யந்திரசாலை, 1890.
பிரபஞ்ச விசாரம் சபாரத்தின முதலியார், வேப்பேரி செங்கல்வராய நாயகர் ஆர்பனேஜ் அச்சுக்கூடம், சென்னை, 1918.
பிரபந்த தீபிகை ஆசிரியர் முத்துவேங்கட சுப்பையர். பதிப்பாசிரியர் பாஸ்கர ஐயர். செந் தமிழ்ப் பத்திரிகை, மதுரை, 1918, 19.
பிரபந்த மரபியல் பதிப்பாசிரியர் மு. அருணாசலம், தமிழ்நாடு அரசு வெளியீடு, சென்னை - 1976.
பிரபுலிங்கலீலை சிவப்பிரகாச சுவாமிகள் பிரபந்தத் திரட்டு, சிவஞான பாலைய சுவாமி கள் ஆதீன வெளியீடு, 1944.
பிரபோத சந்திரோதயம் ஆசிரியர் மாதைத் திருவேங்கட நாதர், பெரியகுளம் மீனாம்பிகை அச்சியந்திர சாலை, பரிதாபி ஆண்டு (1912).
பிரயோக விவேகம் ஆசிரியர் சுப்பிரமணிய தீக்கிதர், பதிப்பாசிரியர் தி.வே.கோபாலையர், தஞ்சைச் சரசுவதிமகால் வெளியீடு, 1973.
புறத்திரட்டு பதிப்பாசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை, சென்னை 1938.
புறநானூறு பழைய உரையுடன் உ.வே.சா. பதிப்பு, சென்னை, 1938.
புறப்பொருள் வெண்பா ஆசிரியர் ஐயனாரிதனார், சாமுண்டி
மாலை தேவருரை, உ.வே.சா. பதிப்பு, சென்னை, 1953.
பெரிய திருமொழி திருமங்கையாழ்வார் அருளியது, நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பதிப்பு, 1962.
பெரிய திருவந்தாதி நம்மாழ்வார் அருளியது, நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பதிப்பு, 1962.
பெரிய புராணம் ஆசிரியர் சேக்கிழார் சுவாமிகள், திருப்பனந்தாள் காசிமடம் வெளி யீடு, 1974.
பெரியாழ்வார் திருமொழி பெரியாழ்வார் அருளியது, நாலா யிர திவ்வியப் பிரபந்தப் பதிப்பு, 1962.
பெருங்கதை ஆசிரியர் கொங்குவேளிர், உ.வே.சா. நூல்நிலையப் பதிப்பு, சென்னை, 1968.
பெரும்பொருள் விளக்கம் சீவக. பாடல் 187 உரையில் உரையா சிரியர் நச். இந்நூலைப் ‘பெரும் பொருள்’ என்று குறிப்பிட்டுள் ளார்.
பெருமாள் திருமொழி குலசேகரப் பெருமாள் அருளியது, நாலாயிரத் திவ்வியப் பிரபந்தப் பதிப்பு, 1962.
பேரகத்தியத் திரட்டு பதிப்பாசிரியர் எஸ். பவானந்தம் பிள்ளை, எஸ்.பி.சி.கே. பிரஸ், வேப்பேரி, சென்னை, 1912.
பொதிகை நிகண்டு ஆசிரியர் கல்லிடைநகர் சாமிநாதக் கவிராயர், பதிப்பாசிரியர், எஸ். வையாபுரிப்பிள்ளை, சென்னை -1, 1934.
பொருள்தொகை நிகண்டு ஆசிரியர் சுப்பிரமணிய பாரதியார், செந்தமிழ்ப் பிரசுரம், மதுரை, 1920.
மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச்சாத்தனார், உ.வே.சா. பதிப்பு, சென்னை, 1931.
மதங்க சூளாமணி ஆசிரியர் விபுலானந்த சுவாமிகள், செந்தமிழ்ப் பிரசுரம், மதுரை, 1926.
மதுரைக்கலம்பகம் குமரகுருபரர் பிரபந்தத்திரட்டு, திருப்பனந்தாள் காசிமடம் வெளி யீடு, 1961.
மதுரைக்கோவை ஆசிரியர் வேப்பத்தூர்ச் சங்கர நாராயணர், பதிப்பாசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை, சென்னை-1, 1934
மாணிக்கவாசகர் பதிப்பாசிரியர் ச.வே. சுப்பிர
குவலயானந்தம் மணியன், சென்னை, 1961.
மாறன் அகப்பொருள் ஆசிரியர் திருக்குருகைப் பெரு
மாள் கவிராயர், பதிப்பாசிரியர்
கி. இராமாநுஜையங்கார், செந் தமிழ்ப்
பிரசுரம், மதுரை, 1932.
மாறன் அலங்காரம் ஆசிரியர் திருக்குருகைப் பெரு
மாள் கவிராயர், காரி இரத்தினக் கவிராயருரை. பதிப்பாசிரியர்
திரு நாராயணையங்கார் செந்தமிழ்ப் பிரசுரம்,
மதுரை, 1915.
மாறன் பாப் பாவினம் ஆசிரியர் திருக்குருகைப்
பெரு
மாள் கவிராயர் பதிப்பாசிரியர்
கி. இராமாநுஜையங்கார் செந்
தமிழ்ப் பிரசுரம், மதுரை 1932.
மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆசிரியர் உ.வே.சாமிநாதையர், உ.வே.சா. பதிப்பு.
பாகம் - 1, சென்னை, 1933.
பாகம் - 2, சென்னை, 1940.
மீனாட்சியம்மை குமரகுருபரர் பிரபந்தத்திரட்டு :
பிள்ளைத் தமிழ் திருப்பனந்தாள் காசிமடம் வெளி யீடு, 1961.
முத்துவீரியம் ஆசிரியர் முத்துவீர உபாத்தியாயர், திருப்பாற்கடல் நாதன் உரை, சென்னை, 1889.
முத்தொள்ளாயிரம் தமிழ்ச்சங்கம் பதிப்பு.
முதுமொழிக் காஞ்சி ஆசிரியர் மதுரைக் கூடலூர்கிழார், தி.தெ. சை.நூ. கழக வெளியீடு, சென்னை, 1955.
மூதுரை ஆசிரியர் ஒளவையார்.
மேருமந்திர புராணம் ஆசிரியர் வாமன முனிவர், சாது அச்சுக் கூடம், சென்னை, 1922.
யாப்பருங்கலக் காரிகை ஆசிரியர் அமிதசாகரர், குணசா கரருரை (ந. மு. வே. பதிப்பு) தி.தெ. சை. நூ. கழக வெளியீடு, சென்னை, 1940.
யாப்பருங்கலம் ஆசிரியர் அமிதசாகரர், விருத்தி யுரையோடு இந்நூல் யாப்பருங்கல விருத்தி எனவும் பெயர் பெறும், பதிப்பாசிரியர் புலவர் இரா. இளங் குமரன், தி.தெ.சை.நூ. கழக வெளி யீடு, சென்னை, 1973.
யாழ்ப்பாண அகராதி ஆசிரியர் ந. கதிரைவேற்பிள்ளை.
வண்ணத்தியல்பு ஆசிரியர் வண்ணச்சரபம் தண்ட பாணி சுவாமிகள், ‘இலக்கணத் தொகை - யாப்பு, பாட்டியல்’ நூலுள் ஒரு பகுதியாக அச்சிடப்பட்டுள் ளது. பதிப்பாசிரியர் ச.வே. சுப்பிர மணியன், தமிழ்ப்பதிப்பகம், அடை யாறு, சென்னை, 1978.
வளையாபதி
விசார சந்திரோதயம் ஆசிரியர் ஸ்ரீ பீதாம்பர ஸ்ரீ. தஞ்சை ஸ்ரீ வித்தியா விநோதினி முத்திரா சாலை, சௌமிய ஆண்டு (1910)
விதானமாலை ஆசிரியர் நாராயண சுவாமிகள். மதராஸ் ரிப்பன் அச்சியந்திர சாலை, 1900.
விநாயக புராணம் ஆசிரியர் கச்சியப்ப முனிவர், கணேச அச்சியந்திர சாலை, 1900.
விருத்தப்பாவியல் ஆசிரியர் வீரபத்திர முதலியார். பதிப்பாசிரியர் E.N. தணிகாசல முத லியார். B.N. அச்சகம், மௌண்ட் ரோடு, சென்னை, 1939.
வில்லிபாரதம் ஆசிரியர் வில்லிப்புத்தூர் ஆழ்வார். வை.மு. கோபாலாகிருஷ்ணமாசாரி யார் உரை. வை. மு. கோ. கம்பெனி, சென்னை - 5, 1957 - 63.
விவேக சிந்தாமணி ஆர். ஜி. பதி. கம்பெனி பிரசுரம், சென்னை, 1967.
விறலிவிடுதூது ஆசிரியர் சுப்பிரதீபக்கவிராயர். பதிப்பாசிரியர் ராய. சொக்கலிங்கன். காரைக்குடி, காந்தி ஆண்டு 80 (1949).
வீரசோழியம் ஆசிரியர் பொன்பற்றி புத்தமித்திர னார். பெருந்தேவனாருரை. பவா னந்தர் கழக வெளியீடு. சென்னை, 1942.
வெங்கைக் கலம்பகம் சிவப்பிரகாச சுவாமிகள் பிரபந்தத் திரட்டு.
பொம்மிய பாளைய மடம் சிவ ஞான பாலையசுவாமிகள் ஆதீன வெளியீடு, 1944.
வெண்பாப் பாட்டியல் ஆசிரியர் வச்சணந்தி தேவமுனிவர்.
(வச்சணந்திமாலை) கொ. இராமலிங்கத் தம்பிரான்
உரை. தி.தெ.சை.நூ. கழக வெளியீடு,
சென்னை -
1936.
வேதாந்த சூளாமணி சிவப்பிரகாசசுவாமிகள் பிரபந்தத் திரட்டு: சிவஞானபாலைய சுவாமிகள் ஆதீன வெளியீடு, 1944.
வேதாந்த பரிபாஷை ஆசிரியர் தர்மராஜதீக்ஷித சுவாமி கள், சென்னை கமர்ஷியல் அச் சியந்திர சாலை, 1907.
பண்டித வித்துவான்
தி.வே. கோபாலையர் பற்றி...
பிறப்பு : 22. 01. 1925
தந்தையார் : வேங்கடராம ஐயர்
தாயார் : இலக்குமி அம்மாள்
உடன் பிறந்தார் : தம்பியர் நால்வர், தங்கையர் இருவர்
மக்கள் : மகள் ஒருத்தி, மகன் ஒருவன்
கல்வித் தகுதி : S.S.L.C. 1940
வித்துவான் 1945
முதல் தகுதி - 1000
ரூபாய் பரிசு
B.O.L. 1951
முதல் தகுதி- இலாசரசு பதக்கம்
பண்டிதம் 1953
முதல் தகுதி - 100 ரூபாய்
பரிசு
B.O.L.(Hons.) 1958
முதல் தகுதி -
அரங்கையா செட்டி பரிசு
பணி : 15 ஆண்டு உயர்நிலைப் பள்ளியில்
15
ஆண்டு தமிழ்க் கல்லூரியில்
1979 முதல் பிரஞ்சுக் கலை நிறுவனத்தில்
எழுதிய நூல்கள் : தொல்காப்பியச் சேனாவரையம் வினாவிடை விளக்கம் (1994)
கம்ப ராமாயணத்தில் முனிவர்கள் (1994)
கம்ப ராமாயணத்தில் தம்பிமார்கள் 2 தொகுதிகள் (1995, 1996)
கம்ப ராமாயணத்தில் தலைமைப் பாத்திரங்கள் (1998)
கம்ப
ராமாயணப் படலச் சுருக்கம்
பால
காண்டம் (1999)
அயோத்தியா காண்டம்
(1999)
சுந்தர காண்டம் (1999)
உயுத்த காண்டம் (2000)
சீவக
சிந்தாமணியின் இலம்பகச் சுருக்கம்
(நச்சினார்க்கினியர் உரையை எஞ்சாமல் உட்கொண்டு
எழுதப்பட்டது) (2002)
பதிப்பித்த நூல்கள் : (மாணாக்கர் தாமே பயில்வதற்குத் தேவையான விரிவான விளக்கங்களுடன்)
இலக்கண விளக்கம் - எழுத்ததிகாரம்
(1970)
6இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம் (1971) இலக்கண விளக்கம் - பொருளதி காரம் (1972) அகத்திணையியல் 2 தொகுதிகள் (1972) புறத்திணையியல் (1972)
அணியியல்
(1973)
செய்யுளியல் (1974)
பாட்டியல் (1974)
இலக்கணக் கொத்து உரை (1973)
பிரயோக விவேக உரை (1973)
திருஞான சம்பந்த தேவாரம் - சொற் பிரிப்பு நிறுத்தக் குறிகளுடன் (1984)
திருநாவுக்கரசர் தேவாரமும், சுந்தர மூர்த்தி சுவாமிகள் தேவாரமும் - சொற் பிரிப்பு, நிறுத்தக் குறிகளுடன் (1985)
தேவார ஆய்வுத் துணை தேவாரம் பற்றிய விரிவான செய்திகளுடன் (1991)
மொழிபெயர்ப்
புக்குத் துணை : S.R. பாலசுப்பிரமணியன் அவர்களின் ஆங்கில நூலின் சோழர் காலக் கலைப்பணி - தமிழ் ஆக்கம்
ஆலன்டேனியலுவின் ‘மணிமேகலை’ ஆங்கில மொழிபெயர்ப்பு
சேனாரையத்தின் பிரெஞ்சு மொழி ஆக்கம்
வெளிவர
வேண்டியவை : வீரசோழிய உரை - விரிவான விளக்கங்களுடன் (1988)
திருமங்கை மன்னனுடைய ஆறு பிரபந்தங்களுக்கும் மணிப்பிரவாள நடையில் வரையப்பட்ட பெரிய வாச்சான் பிள்ளை அவர்களின் உரைக்குத் தெளிவான தமிழாக்கம் - தேவையான விளக்கங்களுடன் (1993)
மாறன் அலங்காரம் - பழைய உரையுடன், தேவைப்படும் விரிவான விளக்கங்ளுடன் (1995)
மாறன் அகப்பொருளும் திருப்பதிக் கோவையும் - புதிதாக எழுதப்பட்ட உரை விளக்கங்களுடன் (1998)
இலைமறை கனிகள் - இலக்கணக் கட்டுரைகள் - புதுச்சேரி மாத இதழாகிய தெளி தமிழில் வெளிவந்தவை (2002)
& & &
மெய்ப்பாடு
1
2
15
14
3
4
13
12
5
6
11
10
7
8
9
32
17
18
31
30
19
20
29
28
21
22
27
26
23
24
25
48
33
34
47
46
35
36
45
44
37
38
43
42
39
40
41
64
49
50
63
62
51
52
61
60
53
54
59
58
55
56
57
80
65
66
79
78
67
68
77
76
69
70
75
74
71
72
73
96
81
82
95
94
83
84
93
92
85
86
91
90
87
88
89
112
97
98
111
110
99
100
109
108
101
102
107
106
103
104
105
128
113
114
127
126
115
116
125
124
117
118
123
122
119
120
121
144
129
130
143
142
131
132
141
140
133
134
139
138
135
136
137
160
145
146
159
158
147
148
157
156
149
150
155
154
151
152
153
176
161
162
175
174
163
164
173
172
165
166
171
170
167
168
169
192
177
178
191
190
179
180
189
188
181
182
187
186
183
184
185
208
193
194
207
206
195
196
205
204
197
198
203
202
199
200
201
224
209
210
223
222
211
212
221
220
213
214
219
218
215
216
217
240
225
226
239
238
227
228
237
236
229
230
235
234
231
232
233
256
241
242
255
254
243
244
253
252
245
246
251
250
247
248
249
272
257
258
271
270
259
260
269
268
261
262
267
266
263
264
265
288
273
274
287
286
275
276
285
284
277
278
283
282
279
280
281
304
குறிப்புக்கள்
289
290
குறிப்புக்கள்
303
302
291
292
பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர் பற்றி...
301
300
293
294
299
298
295
296
297
320
305
306
319
318
307
308
317
316
309
310
315
314
311
312
313