Comparing versions
[At moment "[2025-08-31 (18:56)]" Script "file:/C:/JLC/XML_tests/AtiyulA/Single_project.xslt" was applied to Base file "file:/C:/JLC/XML_tests/AtiyulA/cpAu_Thevaaram-org.xml"]
ஆதியுலா: Text available on the Thevaaram.org web site
- Kaṇṇi 1
- (l1) திருமாலும் நான்முகனும் தேர்ந்துணராதங்கண்
- (l2) அருமால் உற அழலாய் நின்ற
- (tc) பெருமான்
- Kaṇṇi 2
- (l1) பிறவாதே தோன்றினான் காணாதே காண்பான்
- (l2) துறவாதே யாக்கை துறந்தான்
- (tc) முறைமையால்
- Kaṇṇi 3
- (l1) ஆழாதே ஆழ்ந்தான் அகலா தகலியான்
- (l2) ஊழால் உயராதே ஓங்கினான்
- (tc) சூழொளிநூல்
- Kaṇṇi 4
- (l1) ஓதா துணர்ந்தான் நுணுகாது நுண்ணியான்
- (l2) யாதும் அணுகாது அணுகியான்
- (tc) ஆதி
- Kaṇṇi 5
- (l1) அரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான்
- (l2) அரனாய் அழிப்பவனுந் தானே
- (tc) பரனாய
- Kaṇṇi 6
- (l1) தேவர் அறியாத தோற்றத்தான் தேவரைத்தான்
- (l2) மேவிய வாறே விதித்தமைத்தான்
- (tc) ஓவாதே
- Kaṇṇi 7
- (l1) எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள்
- (l2) அவ்வுருவாய்த் தோன்றி அருள்கொடுப்பான்
- (tc) எவ்வுருவும்
- Kaṇṇi 8
- (l1) தானேயாய் நின்றளிப்பான் தன்னிற் பிறிதுருவம்
- (l2) ஏனோர்க்குக் காண்பரிய எம்பெருமான்
- (tc) ஆனாத
- Kaṇṇi 9
- (l1) சீரார் சிவலோகந் தன்னுள் சிவபுரத்தில்
- (l2) ஏரார் திருக்கோயி லுள்ளிருப்ப
- (tc) ஆராய்ந்து
- Kaṇṇi 10
- (l1) செங்கண் அமரர் புறங்கடைக்கண் சென்றீண்டி
- (l2) எங்கட்குக் காட்சிஅருள் என்றிரப்ப
- (tc) அங்கொருநாள்
- Kaṇṇi 11
- (l1) பூமங்கை, பொய்தீர் தரணி புகழ்மங்கை,
- (l2) நாமங்கை என்றிவர்கள் நன்கமைத்த
- (tc) சேமங்கொள்
- Kaṇṇi 12
- (l1) ஞானக் கொழுந்து நகராசன் தன்மடந்தை
- (l2) தேன்மொய்த்த குஞ்சியின்மேல் சித்திரிப்ப
- (tc) ஊனமில்சீர்
- Kaṇṇi 13
- (l1) நந்தா வனமலரும் மந்தா கினித்தடஞ்சேர்
- (l2) செந்தா மரைமலர்நூ றாயிரத்தால்
- (tc) நொந்தா
- Kaṇṇi 14
- (l1) வயந்தன் தொடுத்தமைத்த வாசிகை சூட்டி
- (l2) நயந்திகழும் நல்லுறுப்புக் கூட்டிப்
- (tc) பயன்கொள்
- Kaṇṇi 15
- (l1) குலமகளிர் செய்த கொழுஞ்சாந்தம் கொண்டு
- (l2) தலமலிய ஆகந் தழீஇக்
- (tc) கலைமலிந்த
- Kaṇṇi 16
- (l1) கற்பகம் ஈன்ற கமழ்பட் டினையுடுத்துப்
- (l2) பொற்கழல்கள் கால்மேற் பொலிவித்து
- (tc) விற்பகரும்
- Kaṇṇi 17
- (l1) சூளா மணிசேர் முடிகவித்துச் சுட்டிசேர்
- (l2) வாளார் நுதற்பட்டம் மன்னுவித்துத்
- (tc) தோளா
- Kaṇṇi 18
- (l1) மணிமகர குண்டலங்கள் காதுக் கணிந்தாங்
- (l2) கணிவயிரக் கண்டிகை பொன்னாண்
- (tc) பணிபெரிய
- Kaṇṇi 19
- (l1) ஆரம் அவைபூண் டணிதிக ழும்சன்ன
- (l2) வீரந் திருமார்பில் வில்இலக
- (tc) ஏருடைய
- Kaṇṇi 20
- (l1) எண்தோட்கும் கேயூரம் பெய்துஉதர பந்தனமும்
- (l2) கண்டோர் மனம்மகிழக் கட்டுறீஇக்
- (tc) கொண்டு
- Kaṇṇi 21
- (l1) கடிசூத் திரம்புனைந்து கங்கணம்கைப் பெய்து
- (l2) வடிவுடைய கோலம் புனைந்தாங்கு
- (tc) அடிநிலைமேல்
- Kaṇṇi 22
- (l1) நந்திமா காளர் கடைகழிந்த போழ்தத்து
- (l2) வந்து வசுக்கள் இருக்குரைப்ப
- (tc) அந்தமில்சீர்
- Kaṇṇi 23
- (l1) எண்ணருங் கீர்த்தி எழுவர் இருடிகளும்
- (l2) அண்ணல்மேல் ஆசிகள் தாம் உணர்த்த
- (tc) ஒண்ணிறத்த
- Kaṇṇi 24
- (l1) பன்னிருவர் ஆதித்தர் பல்லாண் டெடுத்திசைப்ப
- (l2) மன்னும் மகதியன்யாழ் வாசிப்பப்
- (tc) பொன்னியலும்
- Kaṇṇi 25
- (l1) அங்கி கமழ்தூபம் ஏந்த யமன்வந்து
- (l2) மங்கல வாசகத்தால் வாழ்த்துரைப்பச்
- (tc) செங்கண்
- Kaṇṇi 26
- (l1) நிருதி முதலோர் நிகழ்கலன்கள் ஏந்த
- (l2) வருணன் மணிக்கலசந் தாங்கத்
- (tc) தெருவெலாம்
- Kaṇṇi 27
- (l1) வாயு நனிவிளக்க மாமழை நீர்தெளிப்பத்
- (l2) தூயசீர்ச் சோமன் குடையேடுப்ப
- (tc) மேவியசீர்
- Kaṇṇi 28
- (l1) ஈசானன் வந்தடைப்பை கைக்கொள்ள அச்சுனிகள்
- (l2) வாயார்ந்த மந்திரத்தால் வாழ்த்துரைப்பத்
- (tc) தூய
- Kaṇṇi 29
- (l1) உருத்திரர்கள் தோத்திரங்கள் சொல்லக் குபேரன்
- (l2) திருத்தகு மாநிதியஞ் சிந்தக்
- (tc) கருத்தமைந்த
- Kaṇṇi 30
- (l1) கங்கா நதியமுனை உள்ளுறுத்த தீர்த்தங்கள்
- (l2) பொங்கு கவரி புடைஇரட்டத்
- (tc) தங்கிய
- Kaṇṇi 31
- (l1) பைந்நாகம் எட்டும் சுடரெடுப்பப் பைந்தறுகண்
- (l2) கைந்நாகம் எட்டும் கழல்வணங்க
- (tc) மெய்ந்நாக
- Kaṇṇi 32
- (l1) மேகம் விதானமாய் மின்னெலாஞ் சூழ்கொடியாய்
- (l2) மோகத் துருமு முரசறையப்
- (tc) போகம்சேர்
- Kaṇṇi 33
- (l1) தும்புரு நாரதர்கள் பாடத் தொடர்ந்தெங்கும்
- (l2) கொம்புருவ நுண்ணிடையார் கூத்தாட
- (tc) எம்பெருமான்
- Kaṇṇi 34
- (l1) விண்ணார் பணிய உயர்ந்த விளங்கொளிசேர்
- (l2) வெண்ணார் மழவிடையை மேல்கொண்டாங்கு
- (tc) எண்ணார்
- Kaṇṇi 35
- (l1) கருத்துடைய பாரிடங்கள் காப்பொத்துச் செய்யத்
- (l2) திருக்கடைகள் ஏழ்கடந்த போதில்
- (tc) செருக்குடைய
- Kaṇṇi 36
- (l1) சேனா பதிமயில்மேல் முன்செல்ல யானைமேல்
- (l2) ஆனாப்போர் இந்திரன் பின்படர
- (tc) ஆனாத
- Kaṇṇi 37
- (l1) அன்னத்தே ஏறி அயன்வலப்பால் கைபோதக்
- (l2) கன்னவிலும் திண்டோள் கருடன்மேல்
- (tc) மன்னிய
- Kaṇṇi 38
- (l1) மால்இடப்பாற் செல்ல மலரார் கணைஐந்து
- (l2) மேல்இடப்பால் மென்கருப்பு வில்இடப்பால்
- (tc) ஏல்வுடைய
- Kaṇṇi 39
- (l1) சங்கணையும் முன்கைத் தடமுலையார் மேல்எய்வான்
- (l2) கொங்கணையும் பூவாளி கோத்தமைத்த
- (tc) ஐங்கணையான்
- Kaṇṇi 40
- (l1) காமன் கொடிப்படைமுன் போதக் கதக்காரி
- (l2) வாமன் புரவிமேல் வந்தணைய
- (tc) நாமஞ்சேர்
- Kaṇṇi 41
- (l1) வேழ முகத்து விநாயகனை உள்ளுறுத்துச்
- (l2) சூழ்வளைக்கைத் தொண்டைவாய்க் கெண்டையொண்கண்
- (tc) தாழ்கூந்தல்
- Kaṇṇi 42
- (l1) மங்கை எழுவருஞ் சூழ மடநீலி
- (l2) சிங்க அடலேற்றின் மேற்செல்லத்
- (tc) தங்கிய
- Kaṇṇi 43
- (l1) விச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர்
- (l2) அச்சா ரணர்அரக்க ரோடுஅசுரர்
- (tc) எச்சார்வும்
- Kaṇṇi 44
- (l1) சல்லரி தாளம் தகுணிதம் தத்தளகம்
- (l2) கல்லலகு கல்ல வடமொந்தை
- (tc) நல்லிலயத்
- Kaṇṇi 45
- (l1) தட்டழி சங்கம் சலஞ்சலந் தண்ணுமை
- (l2) கட்டழியாப் பேரி கரதாளம்
- (tc) கொட்டும்
- Kaṇṇi 46
- (l1) குடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ்
- (l2) இடமாம் தடாரி படகம்
- (tc) இடவிய
- Kaṇṇi 47
- (l1) மத்தளம் துந்துபி வாய்ந்த முரு டிவற்றால்
- (l2) எத்திசை தோறும் எழுந்தியம்ப
- (tc) ஒத்துடனே
- Kaṇṇi 48
- (l1) மங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும்
- (l2) கிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத்
- (tc) தங்கிய
- Kaṇṇi 49
- (l1) ஆறாம் இருதுவும் யோகும் அருந்தவமும்
- (l2) மாறாத முத்திரையும் மந்திரமும்
- (tc) ஈறார்ந்த
- Kaṇṇi 50
- (l1) காலங்கள் மூன்றும் கணமும் குணங்களும்
- (l2) வால கிலியரும் வந்தீண்டி
- (tc) மேலை
- Kaṇṇi 51
- (l1) இமையோர் பெருமானே போற்றி எழில்சேர்
- (l2) உமையாள் மணவாளா போற்றி
- (tc) எமைஆளும்
- Kaṇṇi 52
- (l1) தீயாடி போற்றி சிவனே அடிபோற்றி
- (l2) ஈசனே எந்தாய் இறைபோற்றி
- (tc) தூயசீர்ச்
- Kaṇṇi 53
- (l1) சங்கரனே போற்றி சடாமகுடத் தாய்போற்றி
- (l2) பொங்கரவா பொன்னங் கழல்போற்றி
- (tc) அங்கொருநாள்
- Kaṇṇi 54
- (l1) ஆய விழுப்போர் அருச்சுனன் ஆற்றற்குப்
- (l2) பாசுபதம் ஈந்த பதம்போற்றி
- (tc) தூய
- Kaṇṇi 55
- (l1) மலைமேலாய் போற்றி மயானத்தாய் வானோர்
- (l2) தலைமேலாய் போற்றிதாள் போற்றி
- (tc) நிலைபோற்றி
- Kaṇṇi 56
- (l1) போற்றிஎனப் பூமாரி பெய்து புலன்கலங்க
- (l2) நாற்றிசையும் எங்கும் நலம்பெருக
- (tc) ஏற்றுக்
- Kaṇṇi 57
- (l1) கொடியும் பதாகையும் கொற்றக் குடையும்
- (l2) வடிவுடைய தொங்கலுஞ் சூழக்
- (tc) கடிகமழும்
- Kaṇṇi 58
- (l1) பூமாண் கருங்குழலார் உள்ளம் புதிதுண்பான்
- (l2) வாமான ஈசன் வரும்போழ்திற்
- (tc) சேமேலே
- Kaṇṇi 59
- (l1) வாமான ஈசன் மறுவில்சீர் வானவர்தம்
- (l2) கோமான் படைமுழக்கம் கேட்டலுமே
- (tc) தூமாண்பில்
- Kaṇṇi 60
- (l1) வானநீர் தாங்கி மறைஓம்பி வான்பிறையோ
- (l2) டூனமில் சூலம் உடையவாய்
- (tc) ஈனமிலா
- Kaṇṇi 61
- (l1) வெள்ளை யணிதலால் வேழத் துரிபோர்த்த
- (l2) வள்ளலே போலும் வடிவுடைய
- (tc) ஒள்ளிய
- Kaṇṇi 62
- (l1) மாட நடுவில் மலர்ஆர் அமளியே
- (l2) கூடிய போர்க்கள மாக்குறித்துக்
- (tc) கேடில்
- Kaṇṇi 63
- (l1) சிலம்பு பறையாகச் சேயரிக்கண் அம்பா
- (l2) விலங்கு கொடும்புருவம் வில்லா
- (tc) நலந்திகழும்
- Kaṇṇi 64
- (l1) கூழைபின் தாழ வளைஆர்ப்பக் கைபோந்து
- (l2) கேழ்கிளரும் அல்குலாம் தேர்உந்திச்
- (tc) சூழொளிய
- Kaṇṇi 65
- (l1) கொங்கைமாப் பொங்கக் கொழுநர் மனம்கவர
- (l2) அங்கம் பொருதசைந்த ஆயிழையார்
- (tc) செங்கேழ்நற்
- Kaṇṇi 66
- (l1) பொற்கலசத் துள்ளால் மணிநீர் முகம்சேர்த்தி
- (l2) நற்பெருங் கோலம் மிகப்புனைந்து
- (tc) பொற்புடைய
- Kaṇṇi 67
- (l1) பேதை முதலாகப் பேரிளம்பெண் ஈறாக
- (l2) மாதரவர் சொல்லார் மகிழ்ந்தீண்டிச்
- (tc) சோதிசேர்
- Kaṇṇi 68
- (l1) சூளிகையும் சூட்டும் சுளிகையும் கட்டிகையும்
- (l2) வாளிகையும் பொற்றோடும் மின்விலக
- (tc) மாளிகையின்
- Kaṇṇi 69
- (l1) மேல்ஏறி நின்று தொழுவார் துயர்கொண்டு
- (l2) மால்ஏறி நின்று மயங்குவார்
- (tc) நூலேறு
- Kaṇṇi 70
- (l1) தாமமே தந்து சடாதாரி நல்கானேல்
- (l2) யாமமேல் எம்மை அடும்என்பார்
- (tc) காமவேள்
- Kaṇṇi 71
- (l1) ஆம்என்பார் அன்றென்பார் ஐயுறுவார் கையெறிவார்
- (l2) தாம்முன்னை நாணோடு சங்கிழப்பார்
- (tc) பூமன்னும்
- Kaṇṇi 72
- (l1) பொன்னரி மாலையைப் பூண்பார்அப் பூண்கொண்டு
- (l2) துன்னரி மாலையாச் சூடுவார்
- (tc) முன்னம்
- Kaṇṇi 73
- (l1) ஒருகண் எழுதிவிட் டொன்றெழுதா தோடித்
- (l2) தெருவம் புகுவார் திகைப்பார்
- (tc) அருகிருந்த
- Kaṇṇi 74
- (l1) கண்ணாடி மேற்பஞ்சு பெய்வார் கிளியென்று
- (l2) பண்ணாடிச் சொற்பந்துக் குற்றுரைப்பார்
- (tc) அண்ணல்மேற்
- Kaṇṇi 75
- (l1) கண்ணென்னும் மாசாலங் கோலிக் கருங்குழலார்
- (l2) திண்ணம் நிறைந்தார் திறந்திட்டார்
- (tc) ஒண்ணிறத்த
- Kaṇṇi 76
- (l1) பேதைப் பருவம் பிழையாதாள் வெண்மணலால்
- (l2) தூதைச் சிறுசோ றடுதொழிலாள்
- (tc) தீதில்
- Kaṇṇi 77
- (l1) இடையாலும் ஏக்கழுத்தம் மாட்டாள் நலஞ்சேர்
- (l2) உடையாலும் உள்உருக்க கில்லாள்
- (tc) நடையாலும்
- Kaṇṇi 78
- (l1) கௌவைநோய் காளையரைச் செய்யாள் கதிர்முலைகள்
- (l2) வெவ்வநோய் செய்யுந் தொழில்பூணாள்
- (tc) செவ்வன்நேர்
- Kaṇṇi 79
- (l1) நோக்கிலும் நோய்நோக்கம் நோக்காள் தன் செவ்வாயின்
- (l2) வாக்கிற் பிறர்மனத்தும் வஞ்சியாள்
- (tc) பூக்குழலும்
- Kaṇṇi 80
- (l1) பாடவம் தோன்ற முடியாள் இளவேய்த்தோள்
- (l2) ஆடவர் தம்மை அயர்வுசெய்யாள்
- (tc) நாடோறும்
- Kaṇṇi 81
- (l1) ஒன்றுரைத் தொன்றுன்னி ஒன்றுசெய் தொன்றின்கண்
- (l2) சென்ற மனத்தினாளாஞ் சேயிழையாள்
- (tc) நன்றாகத்
- Kaṇṇi 82
- (l1) தாலி கழுத்தணிந்து சந்தனத்தால் மெய்பூசி
- (l2) நீல அறுவை விரித்துடுத்துக்
- (tc) கோலஞ்சேர்
- Kaṇṇi 83
- (l1) பந்தரில் பாவைகொண் டாடுமிப் பாவைக்குத்
- (l2) தந்தையார் என்றொருத்தி தான்வினவ
- (tc) அந்தமில்சீர்
- Kaṇṇi 84
- (l1) ஈசன் எரியாடி என்ன அவனைஓர்
- (l2) காய்சின மால்விடைமேல் கண்ணுற்றுத்
- (tc) தாய்சொன்ன
- Kaṇṇi 85
- (l1) இக்கணக்கு நோக்காள் இவள்போல்வாள் காமநூல்
- (l2) நற்கணக்கின் மேற்சிறிதே நாட்செய்தாள்
- (tc) பொற்புடைய
- Kaṇṇi 86
- (l1) பேரொளிசேர் காட்சிப் பெதும்பைப் பிராயத்தாள்
- (l2) காரொளிசேர் மஞ்ஞைக் கவினியலாள்
- (tc) சீரொளிய
- Kaṇṇi 87
- (l1) தாமரை ஒன்றின் இரண்டு குழைஇரண்டு
- (l2) காமருவு கெண்டைஓர் செந்தொண்டை
- (tc) தூமருவு
- Kaṇṇi 88
- (l1) முத்தம் முரிவெஞ் சிலைசுட்டி செம்பவளம்
- (l2) வைத்தது போலும் மதிமுகத்தாள்
- (tc) ஒத்தமைந்த
- Kaṇṇi 89
- (l1) கங்கணம் சேர்ந்திலங்கு கையாள் கதிர்மணியின்
- (l2) கிங்கிணி சேர்ந்த திருந்தடியாள்
- (tc) ஒண்கேழ்நல்
- Kaṇṇi 90
- (l1) அந்துகில் சூழ்ந்தசைந்த அல்குலாள் ஆய்பொதியில்
- (l2) சந்தனம் தோய்ந்த தடந்தோளாள்
- (tc) வந்து
- Kaṇṇi 91
- (l1) திடரிட்ட திண்வரைக்கண் செய்த முலையாள்
- (l2) கடல்பட்ட இன்னமுதம் அன்னாள்
- (tc) மடல்பட்ட
- Kaṇṇi 92
- (l1) மாலை வளாய குழலாள் மணம்நாறு
- (l2) சோலை இளங்கிளிபோல் தூமொழியாள்
- (tc) சாலவும்
- Kaṇṇi 93
- (l1) வஞ்சனை செய்து மனங்கவரும் வாட்கண்ணுக்
- (l2) கஞ்சனத்தை யிட்டங் கழகாக்கி
- (tc) எஞ்சா
- Kaṇṇi 94
- (l1) மணிஆரம் பூண்டாழி மெல்விரலிற் சேர்த்தி
- (l2) அணிஆர் வளைதோள்மேல் மின்ன
- (tc) மணியார்ந்த
- Kaṇṇi 95
- (l1) தூவெண் மணற்கொண்டு தோழியரும் தானுமாய்க்
- (l2) காமன் உருவம் வரவெழுதிக்
- (tc) காமன்
- Kaṇṇi 96
- (l1) கருப்புச் சிலையும் மலர் அம்பும் தேரும்
- (l2) ஒருப்பட்டு உடன்எழுதும் போழ்தில்
- (tc) விருப்பூரும்
- Kaṇṇi 97
- (l1) தேனமருங் கொன்றையந்தார்த் தீர்த்தன் சிவலோகன்
- (l2) வானமால் ஏற்றின்மேல் வந்தணையத்
- (tc) தானமர
- Kaṇṇi 98
- (l1) நன்றறிவார் சொன்ன நலந்தோற்றும் நாண்தோற்றும்
- (l2) நின்றறிவு தோற்றும் நிறைதோற்றும்
- (tc) நன்றாகக்
- Kaṇṇi 99
- (l1) கைவண்டும் கண்வண்டும் ஓடக் கலைஓட
- (l2) நெய்விண்ட பூங்குழலாள் நின்றொழிந்தாள்
- (tc) மொய்கொண்ட
- Kaṇṇi 100
- (l1) மங்கை இடம்கடவா மாண்பினாள் வானிழிந்த
- (l2) கங்கைச் சுழியனைய உந்தியாள்
- (tc) தங்கிய
- Kaṇṇi 101
- (l1) அங்கை கமலம் அடிகமலம் மான்நோக்கி
- (l2) கொங்கை கமலம் முகம்கமலம்
- (tc) பொங்கெழிலார்
- Kaṇṇi 102
- (l1) இட்டிடையும் வஞ்சி இரும்பணைத்தோள் வேய்எழிலார்
- (l2) பட்டுடைய அல்குலும் தேர்த்தட்டு
- (tc) மட்டுவிரி
- Kaṇṇi 103
- (l1) கூந்தல் அறல்பவளம் செய்யவாய் அவ்வாயில்
- (l2) ஏய்ந்த மணிமுறுவல் இன்முத்தம்
- (tc) வாய்ந்தசீர்
- Kaṇṇi 104
- (l1) வண்டு வளாய வளர்வா சிகைசூட்டிக்
- (l2) கண்டி கழுத்திற் கவின்சேர்த்திக்
- (tc) குண்டலங்கள்
- Kaṇṇi 105
- (l1) காதுக் கணிந்து கனமே கலைதிருத்தித்
- (l2) தீதில் செழுங்கோலஞ் சித்திரித்து
- (tc) மாதராள்
- Kaṇṇi 106
- (l1) பொற்கூட்டிற் பூவையை வாங்கி அதனோடும்
- (l2) சொற்கோட்டி கொண்டிருந்த ஏல்வைக்கண்
- (tc) நற்கோட்டு
- Kaṇṇi 107
- (l1) வெள்ளி விலங்கல்மேல் வீற்றிருந்த ஞாயிறுபோல்
- (l2) ஒள்ளிய மால்விடையை மேல்கொண்டு
- (tc) தெள்ளியநீர்
- Kaṇṇi 108
- (l1) தாழுஞ் சடையான் சடாமகுடம் தோன்றுதலும்
- (l2) வாழுமே மம்மர் மனத்தளாய்ச்
- (tc) சூழொளியான்
- Kaṇṇi 109
- (l1) தார்நோக்கும் தன்தாரும் நோக்கும் அவனுடைய
- (l2) ஏர்நோக்கும் தன்ன தெழில்நோக்கும்
- (tc) பேரருளான்
- Kaṇṇi 110
- (l1) தோள்நோக்கும் தன்தோளும் நோக்கும் அவன்மார்பின்
- (l2) நீள்நோக்கம் வைத்து நெடிதுயிர்த்து
- (tc) நாண்நோக்காது
- Kaṇṇi 111
- (l1) உள்ளம் உருக ஒழியாத வேட்கையாம்
- (l2) வெள்ளத் திடையழுந்தி வெய்துயிர்த்தாள்
- (tc) ஒள்ளிய
- Kaṇṇi 112
- (l1) தீந்தமிழின் தெய்வ வடிவாள் திருந்தியசீர்
- (l2) வாய்ந்த மடந்தைப் பிராயத்தாள்
- (tc) ஏய்ந்தசீர்
- Kaṇṇi 113
- (l1) ஈசன் சிலையும் எழில்வான் பவளமும்
- (l2) சேய்வலங்கை வேலும் திரள்முத்தும்
- (tc) பாசிலைய
- Kaṇṇi 114
- (l1) வஞ்சியும் வேயும் வளர்தா மரைமொட்டும்
- (l2) மஞ்சில்வரும் மாமதிபோல் மண்டலமும்
- (tc) எஞ்சாப்
- Kaṇṇi 115
- (l1) புருவமும் செவ்வாயும் கண்ணும் எயிறும்
- (l2) உருவ நுசுப்பும்மென் தோளும்
- (tc) மருவினிய
- Kaṇṇi 116
- (l1) கொங்கையும் வாண்முகமு மாக்கொண்டாள் கோலஞ்சேர்
- (l2) பங்கயப் போதனைய சேவடியாள்
- (tc) ஒண்கேழல்
- Kaṇṇi 117
- (l1) வாழைத்தண் டன்ன குறங்கினாள் வாய்ந்தசீர்
- (l2) ஆழித்தேர்த் தட்டனைய அல்குலாள்
- (tc) ஊழித்
- Kaṇṇi 118
- (l1) திருமதியம் மற்றொன்றாம் என்று முகத்தை
- (l2) உருவுடைய நாண்மீன்சூழ்ந் தாற்போல்
- (tc) பெருகொளிய
- Kaṇṇi 119
- (l1) முத்தாரம் கண்டத் தணிந்தாள் அணிகலங்கள்
- (l2) மொய்த்தார வாரம் மிகப்பெருகி
- (tc) வித்தகத்தால்
- Kaṇṇi 120
- (l1) கள்ளும் கடாமுங் கலவையுங் கைபோந்திட்டு
- (l2) உள்ளும் புறமுஞ் செறிவமைத்துத்
- (tc) தெள்ளொளிய
- Kaṇṇi 121
- (l1) காளிங்கம் சோதி கிடப்பத் தொடுத்தமைத்த
- (l2) தாளின்பத் தாமம் நுதல்சேர்த்தித்
- (tc) தோளெங்கும்
- Kaṇṇi 122
- (l1) தண்ணறுஞ் சந்தனம்கொண் டப்பிச் சதிர்சாந்தை
- (l2) வண்ணம் பெறமிசையே மட்டித்தாங்
- (tc) கொண்ணுதலாள்
- Kaṇṇi 123
- (l1) தன்அமர் தோழியர்கள் சூழத் தவிசேறிப்
- (l2) பின்னும்ஓர் காமரம் யாழமைத்து
- (tc) மன்னும்
- Kaṇṇi 124
- (l1) விடவண்ணக் கண்டத்து வேதியன்மேல் இட்ட
- (l2) மடல்வண்ணம் பாடும் பொழுதுஈண்டு
- (tc) அடல்வல்ல
- Kaṇṇi 125
- (l1) வேல்வல்லான் வில்வல்லான் மெல்லியலார்க் கெஞ்ஞான்றும்
- (l2) மால்வல்லான் ஊர்கின்ற மால்விடையின்
- (tc) கோல
- Kaṇṇi 126
- (l1) மணியேறு கேட்டாங்கு நோக்குவாள் சால
- (l2) அணிஏறு தோளானைக் கண்டாங்
- (tc) கணியார்ந்த
- Kaṇṇi 127
- (l1) கோட்டி ஒழிய எழுந்து குழைமுகத்தைக்
- (l2) காட்டி நுதல்சிவப்ப வாய்துலக்கி
- (tc) நாட்டார்கள்
- Kaṇṇi 128
- (l1) எல்லாரும் கண்டார் எனக்கடவுள் இக்காயம்
- (l2) நல்லாய் படுமேற் படுமென்று
- (tc) மெல்லவே
- Kaṇṇi 129
- (l1) செல்ல லுறும்சரணம் கம்பிக்கும் தன்னுறுநோய்
- (l2) சொல்லலுறும் சொல்லி உடைசெறிக்கும்
- (tc) நல்லாகம்
- Kaṇṇi 130
- (l1) காண லுறும்கண்கள் நீர்மல்கும் காண்பார்முன்
- (l2) நாண லுறும்நெஞ்சம் ஒட்டாது
- (tc) பூணாகம்
- Kaṇṇi 131
- (l1) புல்லலுறும் அண்ணல்கை வாரான் என் றிவ்வகையே
- (l2) அல்ல லுறும்அழுந்தும் ஆழ்துயரால்
- (tc) மெல்லியலாள்
- Kaṇṇi 132
- (l1) தன்உருவம் பூங்கொன்றைத் தார்கொள்ளத் தான்கொன்றைப்
- (l2) பொன்உருவங் கொண்டு புலம்புற்றாள்
- (tc) பின்னொருத்தி
- Kaṇṇi 133
- (l1) செங்கேழ்நல் தாமரைபோல் சீறடியாள் தீதிலா
- (l2) அங்கேழ் அரிவைப் பிராயத்தாள்
- (tc) ஒண்கேழ்நல்
- Kaṇṇi 134
- (l1) திங்களும் தாரகையும் வில்லும் செழும்புயலும்
- (l2) தங்கொளிசேர் செவ்வாயும் உண்மையால்
- (tc) பொங்கொளிசேர்
- Kaṇṇi 135
- (l1) மின்ஆர்வான் காட்டும் முகவொளியாள் மெய்ம்மையே
- (l2) தன்ஆவார் இல்லாத் தகைமையாள்
- (tc) எந்நாளும்
- Kaṇṇi 136
- (l1) இல்லாரை எல்லாரும் எள்குவர் செல்வரை
- (l2) எல்லாரும் செய்வர் சிறப்பென்னும்
- (tc) சொல்லாலே
- Kaṇṇi 137
- (l1) அல்குற்கு மேகலையைச் சூழ்ந்தாள் அணிமுலைமேல்
- (l2) மல்கிய சாந்தொடு பூண்புனைந்து
- (tc) நல்கூர்
- Kaṇṇi 138
- (l1) இடைஇடையே உள்ளுருகக் கண்டாள் எழிலார்
- (l2) நடைபெடை அன்னத்தை வென்றாள்
- (tc) அடியிணைமேல்
- Kaṇṇi 139
- (l1) பாடகம் கொண்டு பரிசமைத்தாள் பன்மணிசேர்
- (l2) சூடகம் முன்கை தொடர்வித்தாள்
- (tc) கேடில்சீர்ப்
- Kaṇṇi 140
- (l1) பொன்அரி மாலை தலைக்கணிந்து பூண்கொண்டு
- (l2) மன்னும் கழுத்தை மகிழ்வித்தாள்
- (tc) பொன்னனாள்
- Kaṇṇi 141
- (l1) இன்னிசை வீணையை வாங்கி இமையவர்தம்
- (l2) அண்ணல்மேல் தான்இட்ட ஆசையால்
- (tc) முன்னமே
- Kaṇṇi 142
- (l1) பாடல் தொடங்கும் பொழுதில் பரஞ்சோதி
- (l2) கேடிலா மால்விடைமேல் தோன்றுதலும்
- (tc) கூடிய
- Kaṇṇi 143
- (l1) இன்னிசையும் இப்பிறப்பும் பேணும் இருந்தமிழும்
- (l2) மன்னிய வீணையையுங் கைவிட்டுப்
- (tc) பொன்னனையீர்
- Kaṇṇi 144
- (l1) இன்றன்றே காண்ப தெழில்நலங் கொள்ளேனேல்
- (l2) நன்றன்றே பெண்மை நமக்கென்று
- (tc) சென்றவன்தன்
- Kaṇṇi 145
- (l1) ஒண்களபம் ஆடும் ஒளிவாள் முகத்திரண்டு
- (l2) கண்களபம் ஆடுவபோல் கட்டுரைத்தும்
- (tc) ஒண்கேழ்நல்
- Kaṇṇi 146
- (l1) கூந்தல் அவிழ்க்கும் முடிக்கும் கலைதிருத்தும்
- (l2) சாந்தம் திமிரும் முலையார்க்கும்
- (tc) பூந்துகிலைச்
- Kaṇṇi 147
- (l1) சூழும் அவிழ்க்கும் தொழும்அழும் சோர்துயருற்
- (l2) றாழும் அழுந்தும் அயாவுயிர்க்கும்
- (tc) சூழொளிய
- Kaṇṇi 148
- (l1) அங்கை வளைதொழுது காத்தாள் கலைகாவாள்
- (l2) நங்கை இவளும் நலம்தோற்றாள்
- (tc) அங்கொருத்தி
- Kaṇṇi 149
- (l1) ஆரா அமுதம் அவயவம் பெற்றனைய
- (l2) சீரார் தெரிவைப் பிராயத்தாள்
- (tc) ஓரா
- Kaṇṇi 150
- (l1) மருளோசை யின்மழலை வாய்ச்சொலால் என்றும்
- (l2) இருள்சீர் புலரியே ஒப்பாள்
- (tc) அருளாலே
- Kaṇṇi 151
- (l1) வெப்பம் இளையவர்கட் காக்குதலால் உச்சியோ
- (l2) டொப்பமையக் கொள்ளும் உருவத்தாள்
- (tc) வெப்பந்தீர்ந்
- Kaṇṇi 152
- (l1) தந்தளிர்போற் சேவடியும் அங்கையும் செம்மையால்
- (l2) அந்திவான் காட்டும் அழகினாள்
- (tc) அந்தமில்
- Kaṇṇi 153
- (l1) சீரார் முகம்மதியம் ஆதலால் சேயிழையாள்
- (l2) ஏரார் இரவின் எழில்கொண்டாள்
- (tc) சீராரும்
- Kaṇṇi 154
- (l1) கண்ணார் பயோதரமும் நுண்ணிடையும் உண்மையால்
- (l2) தண்ணிளங் காரின் சவிகொண்டாள்
- (tc) வண்ணஞ்சேர்
- Kaṇṇi 155
- (l1) மாந்தளிர் மேனி முருக்கிதழ்வாய் ஆதலால்
- (l2) வாய்ந்த இளவேனில் வண்மையாள்
- (tc) மாந்தர்
- Kaṇṇi 156
- (l1) அறிவுடையீர் நின்மின்கள் அல்லார்போம் என்று
- (l2) பறையறைவ போலும் சிலம்பு
- (tc) முறைமையால்
- Kaṇṇi 157
- (l1) சீரார் திருந்தடிமேல் சேர்த்தினாள் தேர்அல்குல்
- (l2) ஓரா தகலல் உறாதென்று
- (tc) சீராலே
- Kaṇṇi 158
- (l1) அந்துகிலும் மேகலையும் சூழ்ந்தாள் அணிமுலைகள்
- (l2) மைந்தர் மனங்கவரும் என்பதனால்
- (tc) முந்துறவே
- Kaṇṇi 159
- (l1) பூங்கச்சி னால்அடையப் பூட்டுறீஇப் பொற்றொடியால்
- (l2) காம்பொத்த தோளிணையைக் காப்பேவி
- (tc) வாய்ந்தசீர்
- Kaṇṇi 160
- (l1) நற்கழுத்தை நல்ஆரத் தால்மறைத்துக் காதுக்கு
- (l2) விற்பகரும் குண்டலங்கள் மேவுவித்து
- (tc) மைப்பகரும்
- Kaṇṇi 161
- (l1) காவியங் கண்ணைக் கதம்தணிப்பாள் போலத்தன்
- (l2) தாவிய அஞ்சனத்தை முன்னூட்டி
- (tc) யாவரையும்
- Kaṇṇi 162
- (l1) ஆகுலம் ஆக்கும் அழகினாள் அன்னமும்
- (l2) கோகிலமும் போலும் குணத்தினா
- (tc) ளாகிப்
- Kaṇṇi 163
- (l1) பலகருதிக் கட்டிக் கரியவாய்க் கோடி
- (l2) அலர்சுமந்து கூழைய வாகிக்
- (tc) கலைகரந்
- Kaṇṇi 164
- (l1) துள்யாதும் இன்றிப் புறங்கமழ்ந்து கீழ்த்தாழ்ந்து
- (l2) கள்ஆவி நாறும் கருங்குழலாள்
- (tc) தெள்ளொளிய
- Kaṇṇi 165
- (l1) செங்கழுநீர்ப் பட்டுடுத்துச் செங்குங் குமம்எழுதி
- (l2) அங்கழுநீர்த் தாமம் நுதல்சேர்த்திப்
- (tc) பொங்கெழிலார்
- Kaṇṇi 166
- (l1) பொற்கவற்றின் வெள்ளிப் பலகை மணிச்சூது
- (l2) நற்கமைய நாட்டிப் பொரும்பொழுதில்
- (tc) விற்பகரும்
- Kaṇṇi 167
- (l1) தோளான் நிலைபேறு தோற்றம் கேடாய்நின்ற
- (l2) தாளான் சடாமகுடம் தோன்றுதலும்
- (tc) கேளாய
- Kaṇṇi 168
- (l1) நாணார் நடக்க நலத்தார்க் கிடையில்லை
- (l2) ஏணார் ஒழிக எழிலொழிக
- (tc) பேணும்
- Kaṇṇi 169
- (l1) குலத்தார் அகன்றிடுக குற்றத்தார் வம்மின்
- (l2) நலத்தீர் நினைமின்நீர் என்று
- (tc) சொலற்கரிய
- Kaṇṇi 170
- (l1) தேவாதி தேவன் சிவனாயின் தேன்கொன்றைப்
- (l2) பூவார் அலங்கல் அருளாது
- (tc) போவானேல்
- Kaṇṇi 171
- (l1) கண்டால் அறிவன் எனச்சொல்லிக் கைசோர்ந்து
- (l2) வண்டார்பூங் கோதை வளந்தோற்றாள்
- (tc) ஒண்டாங்கு
- Kaṇṇi 172
- (l1) பெண்ணரசாய்த் தோன்றிய பேரிளம் பெண்மையாள்
- (l2) பண்ணமரும் இன்சொற் பணிமொழியாள்
- (tc) மண்ணின்மேல்
- Kaṇṇi 173
- (l1) கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
- (l2) ஒண்டொடி கண்ணே வுளவென்று
- (tc) பண்டையோர்
- Kaṇṇi 174
- (l1) கட்டுரையை மேம்படுத்தாள் கண்ணாடி மண்டலம்போல்
- (l2) விட்டிலங்கு நல்லுகிர்சேர் மெல்விரலாள்
- (tc) கட்டரவம்
- Kaṇṇi 175
- (l1) அஞ்சப் பரந்தகன்ற அல்குலாள் ஆய்நலத்த
- (l2) வஞ்சிக் கொடிநுடங்கு நுண்ணிடையாள்
- (tc) எஞ்சாத
- Kaṇṇi 176
- (l1) பொற்செப் பிரண்டு முகடு மணிஅழுத்தி
- (l2) வைத்தன போல வளர்ந்தே நீதி
- (tc) ஒத்துச்
- Kaṇṇi 177
- (l1) சுணங்கும் சிதலையுஞ் சூழ்போந்து கண்டார்க்
- (l2) கணங்கும் அமுதமுமாய்த் தோன்றி
- (tc) இணங்கொத்த
- Kaṇṇi 178
- (l1) கொங்கையாள் கோலங்கட் கெல்லாம்ஓர் கோலமாம்
- (l2) நங்கையாள் நாகிளவேய்த் தோளினாள்
- (tc) அங்கையால்
- Kaṇṇi 179
- (l1) காந்தட் குலம்பழித்தாள் காமவேள் காதலாள்
- (l2) சாந்தம் இலங்கும் அகலத்தாள்
- (tc) வாய்ந்துடனே
- Kaṇṇi 180
- (l1) ஏய்ந்து குவிந்து திரண்டு மறிந்திருபால்
- (l2) தேய்ந்து துடித்தச் செழும்பவளம்
- (tc) காய்ந்திலங்கு
- Kaṇṇi 181
- (l1) முத்தமும் தேனும் பொதிந்து முனிவரையும்
- (l2) சித்தம் திறைகொள்ளும் செவ்வாயாள்
- (tc) ஒத்து
- Kaṇṇi 182
- (l1) வரிகிடந் தஞ்சனம் ஆடி மணிகள்
- (l2) உருவம் நடுவுடைய வாகிப்
- (tc) பெருகிய
- Kaṇṇi 183
- (l1) தண்ணங் கயலுஞ் சலஞ்சலமும் தோன்றுதலால்
- (l2) வண்ணங் கடலனைய வாட்கண்ணாள்
- (tc) ஒண்ணிறத்த
- Kaṇṇi 184
- (l1) குண்டலஞ்சேர் காதினாள் கோலக் குளிர்மதிய
- (l2) மண்டலமே போலும் மதிமுகத்தாள்
- (tc) வண்டலம்ப
- Kaṇṇi 185
- (l1) யோசனை நாறும் குழலாள் ஒளிநுதல்மேல்
- (l2) வாசிகை கொண்டு வடிவமைத்தாள்
- (tc) மாசில்சீர்ப்
- Kaṇṇi 186
- (l1) பாதாதி கேசம் பழிப்பிலாள் பாங்கமைந்த
- (l2) சீதாரி கொண்டுதன் மெய்புகைத்தாள்
- (tc) மாதார்ந்த
- Kaṇṇi 187
- (l1) பண்கவரும் சொல்லார்பல் லாண்டேத்தப் பாயொளிசேர்
- (l2) வெண்கவரி வெள்ளத் திடையிருந்து
- (tc) ஒண்கேழ்நல்
- Kaṇṇi 188
- (l1) கண்அவனை அல்லாது காணா செவியவன
- (l2) தெண்ணருஞ்சீர் அல்ல திசைகேளா
- (tc) அண்ணல்
- Kaṇṇi 189
- (l1) கழலடி யல்லது கைதொழா அஃதால்
- (l2) அழலங்கைக் கொண்டான்மாட் டன்புஎன்
- (tc) றெழிலுடைய
- Kaṇṇi 190
- (l1) வெண்பா விரித்துரைக்கும் போழ்தில் விளங்கொளிசேர்
- (l2) கண்பாவு நெற்றிக் கறைக்கண்டன்
- (tc) விண்பால்
- Kaṇṇi 191
- (l1) அரிஅரணஞ் செற்றாங் கலைபுனலும் பாம்பும்
- (l2) புரிசடைமேல் வைத்த புராணன்
- (tc) எரிஇரவில்
- Kaṇṇi 192
- (l1) ஆடும் இறைவன் அமரர்குழாம் தற்சூழ
- (l2) மாட மறுகில் வரக்கண்டு
- (tc) கேடில்சீர்
- Kaṇṇi 193
- (l1) வண்ணச் சிலம்படி மாதரார் தாம்உண்ட
- (l2) கண்ணெச்சில் எம்மையே ஊட்டுவான்
- (tc) அண்ணலே
- Kaṇṇi 194
- (l1) வந்தாய் வளைகவர்ந்தாய் மாலும் அருந்துயரும்
- (l2) தந்தாய் இதுவோ தகவுஎன்று
- (tc) நொந்தாள்போல்
- Kaṇṇi 195
- (l1) கட்டுரைத்துக் கைசோர்ந்து அகமுருகி மெய்வெளுத்து
- (l2) மட்டிவரும் பூங்கோதை மால்கொண்டாள்
- (tc) கொட்டிமைசேர்
- Kaṇṇi 196
- (l1) பண்ணாரும் இன்சொற் பணைப்பெருந்தோள் செந்துவர்வாய்ப்
- (l2) பெண்ஆர வாரம் பெரிதன்றே
- (tc) விண்ணோங்கி
- Kaṇṇi 197
- (l1) மஞ்சடையும் நீள்குடுமி வாள்நிலா வீற்றிருந்த
- (l2) செஞ்சடையான் போந்த தெரு
- (tc)